ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

+5
hega
இரா.பகவதி
ரா.ரா3275
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
9 posters

Page 15 of 19 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18, 19  Next

Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by சார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 154550


Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 6:48 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10

Post by சார்லஸ் mc Sun Jun 10, 2012 4:52 am

சனகெரிப் சங்கம் (Sanhedrin)
“சுனட்ரியான்” என்ற கிரேக்க சொல் எபிரேய மொழியில் “சன்கட்ரீன்” என்று வழக்கில் வந்துள்ளது. அது தமிழில் “சனகெரிப்” என்று மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. “சனகெரிப்” என்றால் “சங்கம்” என்று பொருள்படும். எண்ணாகமம்: 11:16 ல் மோசேயினால் தெரிந்தெடுக்கப்பட்ட 70 தலைவர்களே இம் மன்றத்தின் துவக்கம் என்று தல்மூத் (Talmud) சொல்லியுள்ளது. (தல்மூத் என்பது யூதர்கள் பின்பற்றிய பாரம்பரிய புத்தகமாகும்).

யூதர்கள் அந்நியர்களால் ஆளப்பட்ட காலத்திலிருந்து தங்களது சமய, சுக காரியங்களை கவனிப்பதற்கு ஒரு மன்றம் தேவைப்பட்டதால் அத் தேவையை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே சனகெரிப் சங்கமாகும். இதை சனகெரிப் மன்றம் என்றும் அழைக்கலாம். வேதாகமத்தில் “ஆலோசனைச் சங்கம்” எனக் கூறப்பட்டுள்ளது.

இது உயர்நீதி மன்றமாகவும், நிர்வாக மன்றமாகவும் செயலாற்றியது எனக் காண்கிறோம். 70 அங்கத்தினர்கள் கொண்ட இச் சங்கத்தில் ஆசாரியரும், சதுசேயரும், பரிசேயரும் உறுப்பினராயிருந்தார்கள். பிரதான ஆசாரியனே இம்மன்றத்தின் தலைவன்.

நியாயப்பிரமாண விதிகளை மீறிய வழக்குகள், திருமணம், விவாகரத்துகள், துர் உபதேசங்கள், வம்ச வரலாறு குறித்த விவாதங்கள், காலக் குறிப்புகள் முதலியவற்றைப் பற்றி எழுந்த சில சிக்கல்களை இம்மன்றம் தீர்த்து வைத்தது.

பாலஸ்தீனத்திற்கு வெளியே குடியிருந்து ரோமப் பேரரசின் ஆளுகைக்குட்பட்ட சிதறிப்போன யூத மக்களின் வழக்கை நேரடியாக விசாரித்து தீர்ப்புக் கூற இம்மன்றத்திற்கு உரிமையில்லை.

சமய வழக்குகள் மட்டுமல்லாது சொத்துரிமை வழக்குகள், கடன் பற்றிய வழக்குகளையும் இம்மன்றம் விசாரித்துத் தீர்ப்பு செய்தது. குற்ற வழக்குகளையும் விசாரிக்க அதற்கு உரிமை உண்டு என்றும், ஆனால், கொலைத் தீர்ப்புக் கொடுக்கும் உரிமை கிடையாது என்று யோவான்: 18:31 ன் மூலம் அறிகிறோம். எனவேதான், நமது ஆண்டவர் இயேசுவை பிலாத்துவினிடத்தில் கொண்டு போனார்கள்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 8:05 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10

Post by சார்லஸ் mc Sun Jun 10, 2012 5:04 am

யூத பிரிவுகள்

1. பரிசேயர்கள்:


புதிய ஏற்பாட்டு காலத்தில் மிகவும் செல்வாக்குள்ள எண்ணிக்கையில் அதிகமானவர்கள்தான் இந்த பரிசேயர்கள். இவா்களுடைய பெயர் “பிரிந்திருத்தல்” என்னும் மூலப் பொருளிலிருந்து வந்தது. இவர்கள் எல்லா தீமையான தொடர்புகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டு, சொல்லப்பட்ட, எழுதப்பட்ட ஒவ்வொரு நியாயப்பிரமாணத்திற்கும் கீழ்ப்படிவதற்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள்.

மக்கபேயர்களின் காலத்திற்குப் பின்பு இவர்கள் தனிக் குழுவாகத் தங்களைப் பிரித்துக் கொண்டு கி.மு. 135 ல் யூத மார்க்கத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தார்கள்.

அவர்களுடைய இறையியல் பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. அவர்கள் தேவதூதர்கள் இருப்பதையும், ஆத்துமா அழிவில்லாதது என்பதையும், உயிர்த்தெழுதல் உண்டு என்பதையும் நம்பினார்கள். சடங்காச்சார ஜெபங்களையும், உபவாசத்தையும் கைக் கொண்டார்கள். ஓய்வு நாளை மிகவும் கண்டிப்பாக ஆசரித்தார்கள். எல்லாவற்றிலும் தசமபாகம் செலுத்தினார்கள். அவர்களில் அநேகர் மாயக்காரர்களாக இருந்தாலும் அனைவரும் மாயக்காரர்கள் அல்ல. அனைவரும் சுயநீதி உடையவர்கள் அல்ல. உதாரணம்: நிக்கோதேமு.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 8:08 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10

Post by சார்லஸ் mc Sun Jun 10, 2012 7:23 am

2. சதுசேயா்கள்:

பாரம்பரியத்தின்படி சதுசேயர்கள் தங்களுடைய பெயரை , தாவீதின் நாட்களில் பிரதான ஆசாரியனாக இருந்த சாதோக் () என்பவரிடமிருந்து பெற்றனர்.

இவர்கள் நியாயப்பிரமாணத்தை மாத்திரம் வியாக்கியானப்படுத்தி, தீர்க்கதரிசனம் மற்றும் மற்ற புத்தகங்களை விட நியாயப்பிரமாணம‌ே அதிப அதிகாரம் உடையது என்று கூறினர். பரிசேயர்கள் ஆர்வமுடன் கற்ற, சொல்லிய பாரம்பரியங்களுக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

தேவதூதர்கள் மற்றும் ஆவிகள் உண்டென்பதை மறுத்தனர். மேலும் ஆத்துமா அழிவில்லாதது என்பதை அவர்கள் விசுவாசிக்கவில்லை. உயிர்த்தெழுதலையும் அவர்கள் நம்பவில்லை.

அரசியல் ரீதியாக ஆளுகை செய்யும் நபர்களுடன் ஐக்கியம் வைத்துத் தங்களுடைய செல்வாக்கையும் மதிப்பையும் தொடர்ந்து நிலை நாட்டிக் கொண்டனர். பரிசேயர்களுக்கு எதிரானவர்கள்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 12:19 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10

Post by சார்லஸ் mc Sun Jun 10, 2012 7:29 am

3. எசனேயர்கள்:

இவர்களை சந்நியாசி பிரிவினர் எனலாம். சமய நெறியைச் சரிவரக் கைக்கொள்ளும்படி சமுகத்தை விட்டு பிரிந்து வாழ்ந்தவர்கள்.

இவர்கள் “பிதகோரியா” என்ற வகுப்பாரிலிருந்து தோன்றினவர்கள். இல்லற வாழ்க்கையைத் துறந்து வாழ்ந்தவர்கள். அனைத்து சொத்துக்களையும் பொதுவாக வைத்து அனுபவித்தபடியால் அவர்களில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை. சுபாவத்தில் அமைதியானவர்கள். ஆணையிட மாட்டார்கள். ஓய்வு நாளை ஆசரித்தார்கள். இவர்களுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படியாதவர்கள‌ை சமுதாயத்தை விட்டு தள்ளி வைத்தனர்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 12:39 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10

Post by சார்லஸ் mc Sun Jun 10, 2012 7:34 am

4. செலோத்த‌ேயர்கள்:

பரிசேயர்கள், எசனேயர்களைப் போன்று இவர்கள் யூத மதப் பிரிவைச் சார்ந்தவர்கள் அல்ல. இவர்கள் தேசப்பற்றுக் கொண்ட அரசியல்வாதிகள். ரோம ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெறுவதற்கு வன்முறையே வழி என நம்புவர்கள். அப்போஸ்தலர்: 21:38 ல் சொல்லப்பட்ட கொலை பாதகர் ஒருவேளை இவர்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். இயேசுவின் சீஷர்களில் ஒருவரான சீமோன் இந்த வகுப்பைச் சோ்ந்தவர். (லூக்கா: 6:15; அப்போஸ்தலர்: 1:13).


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 12:40 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10

Post by சார்லஸ் mc Sun Jun 10, 2012 8:07 am

“தள்ளுபடி ஆகமங்கள்”
யூதர்களுடைய இலக்கியங்களுள் பிரதானமானது பழைய ஏற்பாடு. அதிலும், நியாயப்பிரமாணம் (“தோரா” என்ற மோசேயின் 5 புத்தகங்கள்) தேவனுடைய சத்தம் என்று கருதப்பட்டதால், எந்த யூதனும் அதை மாற்றக் கூடாது. பழைய , புதிய ஏற்பாடுகளுக்கிடையே உள்ள காலத்தில் “தள்ளுபடி ஆகமங்கள்” என அறியப்படும் யூதரின் இலக்கியங்கள் தோன்றின.

ஆதிகாலம் தொட்டே, இன்று நம் கையிலுள்ள பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களும் அங்கீகரிக்கப்பட்ட வேத எழுத்துக்களாய் கொள்ளப்பட்டன. ஆனால், எபிரேய வேதாகமம் (பழைய ஏற்பாடு) கிரேக்க பாஷையில் மொழிபெயர்க்கப்பட்டு "LXX" அல்லது “செப்துவஜிந்து” என்னும் வேதாகமமாய் வெளி வந்தபோது, அதில் பல புதிய நூல்களும் சோ்க்கப்பட்டு, அந்த வேதாகமம் பெரிதாகிக் கொண்டே வந்தது.

இந்த செப்துவஜிந்தில் காணப்பட்ட அனைத்து நூல்களையும், சபைப்பிதாக்களில் ஒருவராகிய ஜெரோம் என்பவர் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு “வல்கேட்” (Vulgate) என அழைக்கப்படுகிறது.

கி.பி.405 ல் மொழி பெயர்க்கப்பட்ட இந்த “வல்கேட்” மொழிபெயர்பபைத்தான் கத்தோலிக்க சபையார் இன்று பயன்படுத்துகிறார்கள். கத்தோலிக்கரது தமிழ் வேதாகமம் லத்தீன் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும். இதை புராட்டஸ்டாண்டு சபையினர் வேதமாக ஏற்றுக் கொள்ளாமல், தள்ளி விட்டபடியால் அவை “தள்ளுபடி ஆகமங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.

இப்படி தள்ளி விடப்பட்ட நூல்களிலிருந்துதான் இன்று கத்தோலிக்க சபையினர் நமது வேதாகம உபதேசங்களுக்கு முரணாக பின்பற்றி வரும் பல மார்க்கப் பழக்கவழக்கங்களும், சடங்காச்சாரங்களும், ஆராதனை முறைமைகளும் வந்தன. மரித்தோருக்காக ஜெபித்தல், பரிசுத்தவான்களை மத்தியஸ்தராக கொண்டு இயேசுவிடம் செல்லுதல், கிரியைகள் மூலம் இரட்சிப்பு போன்ற பல துர் உபதேசங்கள் இந்நூல்களின் வழியாகவே வந்தன.

இவை, எபிரேய வேதாகமத்தைப் பயன்படுத்திய யூதர்களால் அறவே அங்கீகரிக்கப்படாத நூல்களாகும். என்றாலும், கிரேக்க வேதாகமத்தை பயன்படுத்திய யூதர் அவற்றை வேதமாக அங்கீகரித்தனர். ஆதி கிறிஸ்தவர்களும் இவற்றில் சில நூல்களின் சில காரியங்களைப் பின்னணி இலக்கியங்களாக அங்கீகரித்தனர். ஆனால், சபையில் புராட்டஸ்டாண்டு இயக்கம் தோன்றிய பின்பே இவை முற்றிலும் தள்ளிவிடப்பட்டன.



“சூடோகிரிப்பா”
மேற்கண்ட தள்ளுபடி ஆகமங்கள் தவிர, புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட முதல் 100 ஆண்டுகளிலும், அதற்கு அடுத்த நூற்றாண்டிலும் “சூடோகிரிப்பா” (பொய்யான எழுத்துக்கள்) "Pseudepgrapha" என்னும் இலக்கிய தொகுப்புக்கள் தள்ளுபடி ஆகமங்களுக்கு இணையாக எழுந்தன. இவற்றை யூதரும், கிறிஸ்தவர்களும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தள்ளுபடி ஆகமங்களும், பொய்யான எழுத்துக்கள் என்று அழைக்கப்படும் ஆகமங்களும் யூத, கிறிஸ்தவ திருநூல் சட்டத்தின்படி வேத எழுத்துக்களாய் அங்கீகரிக்கப்படாவிடினும் அவற்றில் காணப்படும் பாரம்பரியக் கதைகள் பல சுவாரசியமானவைகள் என்பது அவற்றைப் படித்தால் விளங்கும்.

பல்வெறு பின்னணியங்களையும், பாரம்பரியங்களையும் சுவாரசியக் கதைகளாகவும், அறிவு புகட்டும் எழுத்துக்களாகவும் மேற்படி ஆகமங்கள் தந்தாலும், தகுந்த காரணங்களைக் கொண்டே புராட்டஸ்டாண்டு திருச்சபை இவற்றை புறக்கணித்தன அல்லது தள்ளி விட்டன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

நமது விசுவாசத்திற்கும், நம்பிக்கைக்கும், இரட்சிப்புக்கும், கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் மேற்கண்ட இவ்விரு நூல்களும் அத்தியாவசியமானவையல்ல என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 12:45 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10

Post by சார்லஸ் mc Sun Jun 10, 2012 5:32 pm

புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள்


பொதுவான முன்னுரை
இயேசு கிறிஸ்துவின் மூலம் மனுமக்களுடன் தேவாதி தேவன் ஏற்படுத்திய புதிய உடன்படிக்கையின் விபரங்கள் இப்புத்தகங்களில் அடங்கியுள்ளன என்று கூறலாம்.

தேவன் பரிசுத்த ஆவியினால் அருளிய வெளிப்பாடு புதிய உடன்படிக்கையாக இய‌ேசு கிறிஸ்துவின் வார்த்தகைளாலும் அவரைப் பற்றிய அப்போஸ்தலரின் வார்த்தைகள் மூலமாயும், நமக்குக் கிடைத்துள்ளது.

- இவை மொத்தம் 27 புத்தகங்கள்

- 8 ஆசிரியர்களால் எழுதப்பட்டவை

- கி.பி.45 க்கும் கி.பி.100 க்கும் இடைப்பட்ட 50 ஆண்டு காலங்களில் எழுதப்பட்டவை

- இதன் சரித்திரம் கி.பி. முதலாம் நூற்றாண்டு முழுமையையும் உள்ளடக்குகிறது. பின்னணியமும், கலாச்சாரமும் கி.மு.500 ஆண்டுகள் வரை எட்டிப் பார்க்கின்றன.

புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களையும்...

1. புத்தகங்கள்

2. ஆசிரியர்கள்

3. எழுதப்பட்ட காலம் - என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 12:46 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10

Post by சார்லஸ் mc Sun Jun 10, 2012 6:05 pm

1. புத்தகங்கள்
அ) சரித்திரம்:

மத்த‌ேயு, மாற்கு, லூக்கா, யோவான், அப்போஸ்தலர் நடபடிகள் ஆகிய முதல் நான்கு புத்தகங்களும் இயேசுவின் வா‌ழ்க்கையை பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டுகின்றன.

அப்போஸ்தலரின் நடபடிகள் இயேசுவின் பின்னடியார்கள் அவர் விட்டுச் சென்ற ஊழியத்தை எங்ஙனம் நிறைவேற்றினர் என்பதை விளக்குகிறது. பேதுருவின் தலைமைத்துவ ஊழியமும், பவுலின் தலைமைத்துவ ஊழியமும் விளக்கப்பட்டுள்ளன. சபைச் சரித்திரத்தின் ஆரம்பப் புத்தகம் இதுவே.

ஆ) உபதேசம்:

1 கொரிந்தியர், 2கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலேசெயர், 1தெசலோனிக்கேயர், 2தெசலோனிக்கேயர், எபிரேயர், யாக்கோபு, 1பேதுரு, 2பேதுரு, யூதா, 1யோவான் ஆகிய நிருபங்கள் கடித வடிவில் எழுதப்பட்டுள்ளன. அவை “நிருபங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.

சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் இவை. இவை எழுதப்பட்ட குறிப்பிட்ட காலங்களில் சபையில் காணப்பட்ட உபதேச விகற்ப்பங்களை சரிசெய்யவும், ஆவிக்குரிய வளர்ச்சி, மற்றும் நடைமுறை பிரச்சினைகளுக்கு ஆலோசனை தரவும் இந் நிருபங்கள் எழுதப்பட்டன. கிறிஸ்தவ விசுவாசம், நடத்தை, அறநெறி ஆகியவை இவற்றில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இ) தனிப்பட்ட கடிதங்கள்:

1தீமோத்தேயு, 2தீமோத்தேயு, தீத்து, பிலமோன், 1யோவான், 2யோவான், 3யோவான் ஆகிய புத்தகங்கள் இவ்வகையில் அடங்கும். இவை தனிப்பட்ட மனிதர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களாகும். தனிப்பட்ட மனிதருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் எப்படி அனைவரும் வாசிக்கும் நிலையில் பிரசுரமாயிற்று என்ற கேள்வி எழலாம். இந்த நிருபங்கள் தனிப்பட்ட நபர்களுக்கு எழுதப்பட்டாலும், அவர்கள் சபைப் போதகர்களாயும், மூப்பராயும் இருந்தமையால், அந்நிலையிலுள்ள அனைவருக்கும் இக்கடிதங்கள் பயன் கொடுக்கும் வகையில் இங்கு சோ்க்கப்ட்டுள்ளன எனலாம்.

ஈ) தீர்க்கதரிசனம்:

“வெளிப்படுத்தின விசேஷம்” தீர்க்கதரிசனப் புத்தகமாக புதிய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ளது.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 12:50 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10

Post by சார்லஸ் mc Sun Jun 10, 2012 6:12 pm

2. ஆசிரியர்கள்:

எபிரெயருக்கு எழுதின நிருபத்தையும் பவுல்தான் எழுதினார் என்னும் அனுமானத்தில்தான் புதிய ஏற்பாட்டின் ஆசிரியர்கள் 8 பேரென குறிப்பிட்டுள்ளோம். இவர்களுள் லூக்காவைத் தவிர மற்ற அனைவரும் யூதர்.

- மத்தேயு, பேதுரு, யோவான் ஆகியோர் அப்போஸ்தலர்கள்; இயேசுவோடு இருந்தவர்கள்.

- மாற்கு, யூதா, யாக்கோபு ஆகியோர் ஆதி சபையில் முக்கியமானவர்கள். இவர்கள் இய‌ேசுவின் நாட்களிலேயே அப்போஸ்தலரோடு நெருங்கிய தொடர்பு உடையவர்களாய் இருந்திருக்க வேண்டும்.

- லூக்காவும், பவுலும் நமதாண்டவர் இயேசுவை நேரில் தரிசிக்காவிடினும், அவருடன் இருந்தவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 12:51 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 10

Post by சார்லஸ் mc Sun Jun 10, 2012 6:30 pm

3. எழுதப்பட்ட காலம்:

புதிய ஏற்பாட்டின் புத்தகங்கள் அனைத்தும் கி.பி. முதல் நூற்றாண்டில் எழுதி முடிக்கப்பட்டு விட்டன. இந்த 100 ஆண்டு காலத்தையும் மூன்று பிரிவுகளாக பகுத்து ஒவ்வொரு புத்தகமும் எழுதப்பட்ட காலத்தை கணிப்பது அப்புத்தகங்களை விளங்கிக் கொள்ள உதவும்.

1. கி.மு. 6 - கி.பி.29 வரை

2. கி.பி.29 - கி.பி.60 வரை

3. கி.பி. 60 - கி.பி.100 வரை

1. கி.மு. 6 முதல் கி.பி.29 வரை:

இக்காலம் நமதாண்டவர் இயேசு இப்பூவுலகில் சஞ்சரித்த காலமாகும். சுவிசேஷங்களில் நான்கும் பெரும்பாலும் இந்த குறிப்பிட்ட காலத்துக்குட்பட்ட சரித்திரத்தையே எடுத்துரைக்கின்றன.

2. கி.பி.29 முதல் கி.பி.60 வரை:

பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டு, சபை பிறந்தது. ஊழியம் வளர ஆரம்பித்தது. உலகெங்கும் பரவவும் ஆரம்பித்தது. பல இடங்களில், யூதர் மற்றும் புறஜாதியர் எல்லைகளில் சபைகள் நிறுவப்பட்டன. நற்செய்தி எருசலேம் எல்லை துவங்கி ரோம் பட்டணம் வரை பரவிச் சென்றது. அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம், இக்காலத்தில் புறஜாதியார் மத்தியில் பவுல் செய்த ஊழிய விபரங்களை நமக்குத் தருகிறது. தனது பெரும்பாலான நிருபங்களை இந்த நற்செய்தி பரப்பும் பயண நாட்களில்தான் பவுல் எழுதினார். புறஜாதியர் மத்தியில் சபைகளின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி இந்நிருபங்களின் வாயிலாக நாம் அறிகிறோம்.

3. கிபி.60 முதல் கி.பி.100 வரை:

இக்கால சபை சரித்திரக் குறிப்புகள் அதிகமாக நமக்கு கிடைக்கவில்லை. இந்த மூன்றாம் கால பகுதியில் ஆரம்பத்தில் பவுலின் நிருபங்களும், பேதுருவின் நிருபங்களும் எழுதப்பட்டன. இதற்கு முந்திய காலகட்டங்களில் எழுதப்பட்ட மத்தேயு, மாற்கு, லூக்கா. யோவான் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் இக்காலத்தில் பிரசுரிக்கப்பட்டன. இவற்றில் மாற்கு எல்லாவற்றிற்கும் முந்தையது எனினும், இக்குறிப்பிட்ட காலத்தில் தான் பரவலாக பிரசுரிக்கப்பட்டது.

மேற்கண்ட புத்தகங்களின் மூலம் சில சரித்திரக் குறிப்புகள் சபையைக் குறித்து நமக்குக் கிடைக்கின்றன. இப்புத்தகங்கள் மூலம், சபையானது மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்தாபனமாய் இக்காலத்தில் மாறிவிட்டிருந்தது என்பதை நாம் அறிகிறோம். சபையில் எழுந்த தவறான உபதேச கோட்பாடுகள் குறித்தும் இந்நூல்களே நமக்குக் தெரிவிக்கின்றன. சபைக்கு வந்துவிட்ட உபத்திரவம் பற்றியும் இப்புத்தகங்களின் வாயிலாக நாம் அறிகிறோம்.


தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 12:54 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 15 Empty Re: பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 19 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18, 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum