புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_vote_rcap 
18 Posts - 49%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_vote_rcap 
16 Posts - 43%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_vote_rcap 
2 Posts - 5%
VENKUSADAS
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_vote_rcap 
18 Posts - 49%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_vote_rcap 
16 Posts - 43%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_vote_rcap 
2 Posts - 5%
VENKUSADAS
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_vote_lcapபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_voting_barபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4


   
   

Page 12 of 19 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 154550


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 07, 2012 5:07 pm

38. சகரியா

அ) பின்னணி:


ஆசிரியர்: சகரியா

காலம்: ஏறக்குறைய கி.மு.520-515

எப்போது எழுதப்பட்டது:

செருபாபேல் மற்றும் ஆகாயின் கீழ் ஆலயம் கட்டப்பட்டது. வரவிருக்கும் மேசியாவின் காலத்தையும், தேவனுடைய ஆட்சி நிறைவுபெறும் காலத்தையும் குறித்த வெளிப்பாட்டை சகரியாவிற்கு அளித்தது.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: சகரியா

எபிரேயு: “சகரியா” (Zechariah) “தேவன் நினைவு கூறுகிறார்”

கிரேக்கு: “சகரியாஸ்” (Zacharias) “சகரியா”

கருப்பொருள்:

தேவனுடைய பராமரிப்பையும், இஸ்ரவேலின் இறுதி வெற்றியையும் குறித்து மீதியானவர்களுக்கு மீண்டுமாக உறுதியளித்தல்.

நோக்கம்:

செருபாபேலின் கீழ் தொடர்ந்து நடைபெறும் ஆலயக்கட்டுமான வேலையை ஊக்குவித்தல்; முடிவான வெற்றியை அடையவும் எதிர்பார்ப்போடு, கர்த்தருக்காக நீதியுள்ள வாழ்க்கை வாழும்படி ஊக்குவித்தல்.

முக்கியவசனம்:

சகரியா: 8:3 - “யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்தது போலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 07, 2012 5:24 pm

39. மல்கியா

அ) பின்னணி:


ஆசிரியர்: மல்கியா (இப்பெயரின் பொருள் “தூதுவர்” என்பதால், இப்புத்தகத்தின் ஆசிரியர் மல்கியாவல்ல என்று சிலர் உணர்கிறார்கள்.

காலம்: ஏறக்குறைய கி.மு.433-420

எந்நிலையில் எழுதப்பட்டது:

தேவனுடைய மக்கள் தங்களுடைய மன உறுதியின்மை மற்றும் சோர்வின் காரணமாக, அவரது கட்டளைகளுக்குக் கீழ்படிவது பயனற்றது என்று கூறி , முறுமுறுத்துக் கொண்டு அவர் கட்டளைகளை கைக் கொண்டனர். அவருடைய அன்பை சந்த‌ேகித்தனர். அப்போது இது எழுதப்பட்டது.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: மல்கியா

எபிரேயு: “மலாகையா” () “என்னுடைய தூதுவன்”

கிரேக்கு: “மலாகையாஸ்” () “மல்கியா”

கருப்பொருள்: பாசுத்தமான வாழ்க்கை வாழுவதன் மூலம், தேவனிடம் நிச்சயத்தோடும், உண்மையோடும் திரும்புதல்.

நோக்கம்:

ஆராதனையில் தூய்மை, வாழ்க்கையில் பரிசுத்தம் மற்றும் கொடுப்பதில் உதாரத்துவம் ஆகியவற்றிடம் தேவனுடைய மக்கள் மீண்டும் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தல்.

முக்கியவசனம்:

மல்கியா: 3:7 - “நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக் கொள்ளாமல், அவைகளை விட்டு விலகிப் போனீர்கள்; என்னிடத்திற்கு திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்கு திரும்புவேன் என்று ச‌ேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jun 07, 2012 6:03 pm

பழைய ஏற்பாடு - சுருக்கமான தொகுப்பு


தெய்வீக வெளிப்பாடு:
அ) பொதுவானவை: (ஆதியாகமம்: 1:11)

1. சிருஷ்டிப்பின் மூலமாக (புறம்பானது; ரோமர்: 1:18-21 பார்க்கவும்)

2. மனசாட்சியின் மூலமாக (உள்ளானது; ரோமர்: 2:12-16 பார்க்கவும்)

ஆ) விசேஷித்தவை: (ஆதியாகமம்: 12 - மல்கியா: 4)

1. உடன்படிக்கையின் மூலமாக:

- “நான் உங்கள் தேவனாயிருப்ப‌ேன்”

- “நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்”

- “நான் உங்களில் வாசமாயிருப்ப‌ேன்”

2. கட்டளையின் மூலமாக:

1. தீர்க்கதரிசிகளால் - தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்துதல்

2. ஆசாரியர்களால் - தேவனுடைய எதிர்பார்ப்புகளை சுட்டிக்காட்டுதல்

3. ராஜாக்களால் - தேவனுடைய பிரதிநிதிகளாக ஆளுகை செய்தல்



மனிதனுடைய மறுமொழி:



(நியாயாதிபதிகள் - எஸ்தர், ஏசாயா - மல்கியா)

1. ஆவிக்குரிய - விக்கிரக ஆராதனை (“நீர் எங்களுடைய தேவனில்லை” ... பல தெய்வ வழிபாடு)

2. தனிப்பட்டது - ஒழுக்கமின்மை, முரண்பாடு (“நாங்கள் உம்முடைய ஜனங்களாக இருப்பதில்லை” ... பல மனைவிகள்)

3. சமுதாயத்திற்குரியது - நோ்மையின்மை மற்றும் ஒழுக்கச் சீர்கேடு (“நீர் எங்களில் வாசமாயிருப்பதில்லை” ... பல பாவங்கள், துயரங்கள்)



வாக்களிக்கப்பட்ட நம்பிக்கை:

1. உன்னதமான தீர்க்கதரிசி - பரலோகத்தின் மனுஷகுமாரன் (உபாகமம்: 18:15-18; தானியேல்: 7:13,14)

2. பரிபூரணமான ஆசாரியர் - பாடனுபவிக்கும் ஓர் ஊழியர் (ஏசாயா: 9:6,7; 11:1-5 )


பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 154550
பழைய ஏற்பாடு 39 புத்தகங்களின் சுருக்கமான விளக்கம் முடிந்தது. அடுத்தது புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களின் சுருக்கமான விளக்கம் குறித்து பார்க்கப் போகிறோம். வாசித்து வரும் நமது உறவுகள் தொடர்ந்து வாசிக்கும்படி அன்புடன் கேட்கிற‌ேன்.


பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 154550


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 08, 2012 7:13 am

“வேதாகமத்தின் மொத்த பொருள் இயேசு; அதன் திரண்டக் கருத்து இயேசுவே”
ஆதியாகமத்தில் இயேசு - “ஸ்திரியின் வித்து”

யாத்திராகமத்தில் இயேசு - “முன் நிழலான தேவ ஆட்டுக்குட்டி”

லேவியராகமத்தில் இயேசு - “இயேசு பிரதான ஆசாரியர்”

எண்ணாகமத்தில் இயேசு - ““யாக்கோபிலிருந்து உதித்த நட்சத்திரம்”

உபாகமத்தில் இயேசு - “தீர்க்கதரிசி”

யோசுவாவில் இயேசு - “தேவனுடைய சேனாதிபதி”

நியாயாதிபதிகளில் இயேசு - “யெகோவா”

ரூத்தில் இயேசு - “நமது உறவினரும் இரட்சகரும்”

சாமுவ‌ேலில் இயேசு - “பிதாவும் தாவீதின் வித்தும்”

ராஜாக்களிலும், நாளாகமங்களிலும் இயேசு - “அரசர்களுக்கு அரசர்”

எஸ்தரில் இயேசு - “மத்தியஸ்தர்”

யோபுவில் இயேசு - “நமது உயிர்த்தெழுந்த இரட்சகர்”

சங்கீதங்களில் இயேசு - “தேவனுடைய குமாரன்”

நீதிமொழிகளில் இயேசு - “தேவனுடைய செல்லப்பிள்ளை”

பிரசங்கியில் இயேசு - “எல்லாவற்றிற்கும் மேலானவர்”

உன்னதப்பாட்டில் இயேசு - “முற்றிலும் அன்புமயமானவர்”

ஏசாயாவில் இய‌ேசு - “அபிஷேகம் பண்ணப்பட்டவரும், மகிமையுள்ள இரட்சகரும்”

எரேமியாவில் இயேசு - “நமது நீதிபரர்”

புலம்பலில் இயேசு - “ துக்கமுள்ள மனிதர்”

எசேக்கிய‌ேலில் இயேசு - “அரசரும், ஆசாரியரும்”

தானியேலில் இயேசு - “மேசியாவும், அரசரும்”

ஓசியாவில் இய‌ேசு - விழுந்து போனவர்களை இரட்சிப்பவர்”

யோவேலில் இயேசு - “உலகை அசைக்கிறவர்”

ஆமோஸில் இயேசு - ““கடிந்து மீட்டுக்கொள்பவர்”

ஒபதியாவில் இயேசு - “அரசாங்கத்துக்கு அதிபதி”

யோனாவில் இயேசு - “எழும்பின தீர்க்கதரிசி

மீகாவில் இய‌ேசு - “பெத்லஹேமில் உதித்த ராஜா”

நாகூமில் இயேசு - “நற்செய்தியைக் கொண்டு வருபவர்”

ஆபகூக்கில் இயேசு - “சிலுவை தழும்புள்ள மனிதர்”

செப்பனியாவில் இயேசு - “மீட்டுக் கொள்ளும் இரட்சகர்”

ஆகாயில் இயேசு - “மக்களுடைய ஆசை”

சகரியாவில் இயேசு - “எளிமையும் தாழ்மையுமானவர்”

மல்கியாவில் இயேசு - “நீதியின் சூரியன்”

புதிய ஏற்பாட்டில்...

மத்தேயுவில் இயேசு - “இம்மானுவேல்”

மாற்குவில் இயேசு - “வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்”

லூக்காவில் இய‌ேசு - “மன்னிக்கும் எஜமானர்”

யோவானில் இயேசு - “சிருஷ்டிகர், இரட்சகர்”

அப்போஸ்தலரில் இயேசு - “பரமேறிய பிதா”

ரோமரில் இயேசு - “அநீதியானவர்களுக்கு நீதிபதி”

1கொரிந்தியரில் இய‌ேசு - “உயிர்த்தெழுதலின் நம்பிக்கை”

2கொரிந்தியரில் இயேசு - “ஆழ்ந்த அன்பு”

கலாத்தியரில் இய‌ேசு - “இரட்சிக்கும் கிருபை”

எபேசியரில் இயேசு - “சபையின் தலைவர்”

பிலிப்பியரில் இயேசு - “உயிர்த்தெழுந்த ஜீவனின் வல்லமை”

கொலோசெயரில் இய‌ேசு - “முதற்பலனானவர்”

1தெசலோனிக்க‌ேயரில் இயேசு - “மரித்தவர்களை எழுப்பும் ஒலி”

2தெசலோனிக்கேயரில் இயேசு - “பாவிகளால் அஞ்சப்படத்தக்கவர்”

1தீமோத்தேயுவில் இயேசு - “பரிசுத்தவான், போற்றப்படத்தக்கவர், மனிதர்களுக்கு மத்தியஸ்தர்”

தீத்துவில் இயேசு - “உலகத்தின் ஆசீர்வாத நம்பிக்கை”

பிலமோனில் இயேசு - “நமது பிரதான ஆசாரியர்”

1பேதுருவில் இயேசு - “குற்றமில்லா தேவ ஆட்டுக்குட்டி”

2பேதுருவில் இயேசு - “நமது இதயங்களின் விடிவெள்ளி”

யோவான் நிருபங்களில் இயேசு - “ஜீவனுள்ள வார்த்தை”

யூதாவில் இய‌ேசு - “இரட்சகரான தேவன்”

வெளிப்படுத்தலில் இயேசு - “திரும்பி வரப்போகிற இராஜாதி ராஜா”



பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 154550 வேதாகமத்தின் நடுநாயகம் இயேசு இரட்சகரே பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 154550


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 08, 2012 9:44 am

யூதர்களின் வாயிலாக...
பழைய உடன்படிக்கை (பழைய ஏற்பாடு) என்பது தேவன் ஆபிரகாமுக்கு முன்பும் (ஆதியாகமம்: 6:18), ஆபிரகாமின் நாட்களிலும், சீனாய் மலையின் அடிவாரத்தில் மோசேயின் மூலமாகவும், இஸ்ரவேலுடன் செய்த உடன்படிக்கை பழைய உடன்படிக்கை ஆகும்.

இந்த உடன்படிக்கையின் மூலம் தேவன் இஸ்ரவேல் மக்களுடன் சிறப்பான தொடர்பு கொண்டிருந்தார். இஸ்ரவேலர் ஒரு புது உடன்படிக்கையை நம்பி எதிர்பார்த்து இருந்தார்கள். (எரேமியா: 31:31-34; மத்தேயு: 26:28).

இப் புது உடன்படிக்கை இயேசு கிறிஸ்துவின் மூலம் வந்தது. 1கொரிந்தியர்: 11:25 ல் அப்போஸ்தலனாகிய பவுல் பழைய - புதிய உடன்படிக்கையைக் குறித்து எழுதியிருக்கிறார்; பேசியிருக்கிறார்.

பழைய, புதிய உடன்படிக்கைகளுக்கிடையுயேள்ள வேறுபாட்டை எபிரேய நிருப ஆக்கியோன் குறிப்பிடுகிறார். (எபிரேயு: 8:13).

யூதர்கள் இதுகாறும் பயன்படுத்தி வரும் அதே பழைய ஏற்பாட்டு ஆகமங்களைத்தான் கிறிஸ்தவர்களும், பழைய ஏற்பாட்டு ஆகமங்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மோசேயின் காலத்திலிருந்து இதுவரை யூதர்கள் எபிரேய மொழியில் எழுதப்பட்ட ‌ அதே வேதாகமங்களையே பயன்படுத்தி வருகிறார்கள்.

தற்காலம் நமது கையிலிருக்கும் பழைய ஏற்பாட்டு வேதாகமம், மூலமொழியாகிய எபிரேய மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகும்.

பின்னர் கி.மு.2 ம் நூற்றாண்டில் கிரேக்க மொழியில் திருத்தப்பட்ட பழைய ஏற்பாட்டு ஆகமங்களோடு சில தள்ளுபடி ஆகமங்களும் சோ்த்து இணைக்கப்பட்டன. ஆனால் அந்த தள்ளுபடி ஆகமம் பண்டைய காலத்திலிருந்து யூதர்கள் பயன்படுத்தி வந்த எபிரேய மொழியில் எழுதப்பட்டது. இருப்பினும், அது பழைய ஏற்பாட்டு வ‌ேதாகமத்தில் ஒருக்காலும் இடம் பெற்றதே இல்லை. யூதர்கள் தள்ளுபடி ஆகமத்தை ஒருக்காலும் பரிசுத்த சத்திய வேதாகமாக கருதவில்லை. அவை எக்காலத்திலும் தள்ளுபடி ஆகமங்களாகவே யூதர்களால் தள்ளப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

எனவே, இப்பொழுது நமது கையில் இருக்கும் வேதாகமம் நம் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட அசல் பரிசுத்த வ‌ேதாகமம்.

பழைய ஏற்பாடு தரும் யூத வரலாற்றுக்கும், உலக வரலாறு தரும் யூத வரலாற்றுக்கும் முழு ஒற்றுமை உண்டு. எள்ளளவும் வேற்றுமையில்லை. தொல்பொருள் ஆராய்ச்சி தரும் தகவல், பழைய ஏற்பாடு தரும் தகவலோடு பரிபூரணமாய் ஒத்துள்ளது; இம்மியளவும் வேறுபாடு இல்லை.

பழைய ஏற்பாட்டு வரலாறும், யூதர்களின் வரலாறும் ஒன்றாகவே திகழ்கிறது. எனவே, பழைய ஏற்பாட்டு வரலாறு மாந்தரின் நம்பிக்கைக்குரியது. நாம் அதை பரிபூரணமாய் நம்பி பற்றிக் கொள்ள வேண்டும்.

யூதர்கள் எதிர்பார்த்து இருந்த மேசியாதான் உலக இரட்சகர் இயேசு. யூதர்களின் வழியாகவே உலகத்திற்கு இரட்சிப்பு (மீட்பு) வந்துள்ளது. யூத குலத்தில் வந்துதித்த இறைவன் இய‌ேசு இரட்சகரே இவ்வையகத்து இரட்சகராவார்.

பழைய ஏற்பாட்டு மேசியாவாகிய கிறிஸ்துவின் வருகையைப் புதிய ஏற்பாடு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. (யோவான்: 5:38). அந்த மேசியா மூலம் அடையும் இரட்சிப்பின் மார்க்கத்தை பழைய ஏற்பாடு போதிக்கிறது. (ரோமர்: 3:21; 2தீமோத்தேயு: 3:15).

கிறிஸ்து தாமே பழைய ஏற்பாட்டை உபயோகித்தார். அப்போஸ்தலரும் பழைய ஏற்பாட்டை பயன்படுத்தினர்.


ஒரே பொருள்
இறைவனும் இரட்சகருமாகிய இய‌ேசு கிறிஸ்துவின் படம் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தல் ஆகமம் வரை, இந்த 66 ஆகமங்களில் வரையப்பட்டு இருப்பதைக் காணலாம். இந்த பரிசுத்த வேதாகமம் முழுவதும் இயேசு என்னும் ஒரே ஆளை படம் பிடித்துக் காட்டுகிறது.

இயேசு தான் வேதாகமத்தின் திறவு கோல்; இயேசு தான் வேதாகமத்தின் வரலாறு; இயேசுதான் வேதாகமத்தின் ஒரே ஒப்பற்ற பொருள்; இயேசு தான் வேதாகமத்தின் நடுமையப் பொருள்; இயேசுதான் வ‌ேதாகமத்தின் உயிர்துடிப்பு.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 08, 2012 9:52 am

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 29495040539194282385910


உலக சரித்திரத்தையே இரண்டாகப் பிரித்தவர் இயேசு.


பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 38967535614229775704810


ஆண்டவராகிய இய‌ேசு கிறிஸ்து நமக்காக மரித்தார்.

ஆண்டவராகிய இய‌ேசு கிறிஸ்து நமக்காக உயிர்ததெழுந்தார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக மீண்டும் வரப் போகிறார்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 12 64663182145945228732100

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 08, 2012 1:48 pm

புதிய ஏற்பாட்டு பின்னணியை விளங்கிக் கொள்ள...
புதிய ஏற்பாட்டை விளங்கிக் கொள்ள அதன் பினனணியை முதலில் அறிந்து கொள்ள வ‌ேண்டும். இந்த பின்னணியம் பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய மல்கியாவுக்கும், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமாகிய மத்தேயுவுக்கும் இடைப்பட்ட சுமார் 400 ஆண்டு கால சரித்திர பின்னணியமாகும். இதை இடைப்பட்ட காலம் என்று கூறலாம்.

புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களை கற்றுக் கொள்ளுமுன் இந்த பின்னணியங்களை சுருக்கமாக காண்போம்:


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 08, 2012 2:08 pm

பழைய ஏற்பாடு தரும் கடைசி சரித்திரக் குறிப்புகள்...
எஸ்றா, நெகேமியா பழைய ஏற்பாட்டின் கடைசி சரித்திரப் புத்தகங்களாகும். அவை யூத மக்களைக் குறித்த கீழ்க்காணும் சரித்திரக் குறிப்புகளோடு முடிவடைகின்றன.

- கி.மு.537 வரை உலக வல்லரசாய் விளங்கிய பாபிலோன் பேரரசை பொ்சிய மன்னனாகிய கோரேசு முறியடித்து மேதிய - பொ்சிய பேரரசு உலக வல்லரசாய் மாற வகை செய்தான். அதன் மூலம் பாபிலோனில் சிறையிருந்த யூதர் கி.மு.536 ல் எருசலேமுக்குத் திரும்பி வந்து தேவாலயத்தைக் கட்டினர். கோரேஸ் மன்னன் இதற்கு அனுகூலமாயிருந்தான். இந்த சரித்திரக் குறிப்புகளை எஸ்றா : 1 - 6 அதிகாரங்களிலும் ஆகாய் மற்றும் சகரியா புத்தகங்களிலும் வாசிக்கிறோம்.

- எஸ்றா கி.மு.457 ல் எருசலேமுக்குத் திரும்பி வந்து சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதருக்கு நியாயப்பிரமாணத்தைப் போதித்தான். (எஸ்றா: 7 - 10 அதிகாரங்கள்).

- கி.மு.445 ல் நெகேமியா எருசல‌ேமுக்கு வந்து முன்பு நேபுகாத்ந‌ேச்சாரால் இடிக்கப்பட்ட எருசலேமின் மதில்களை பழுது பார்த்துக் கட்டினான். இதைத் தொடர்ந்த காலத்தில் மல்கியா தீர்க்கதரிசி மார்க்க சீர்திருத்த செய்திகளைக் கொடுத்தான். (இக் குறிப்புகளை நெகேமியா மற்றும் மல்கியா புத்தகங்களில் வாசிக்கலாம்)


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 08, 2012 2:27 pm

மனதில் கொள்ள வ‌ேண்டிய முக்கிய குறிப்புகள்
சிறைப்பட்டுச் சென்ற யூதர்கள், தாங்கள் சொந்த தேசத்துக்குத் திரும்பி வர அனுமதிக்கப்பட்ட போதிலும், மேதிய - பொ்சிய ஆட்சிக் காலத்தில் அனைத்த யூதர்களும் யூதாவுக்கு திரும்பி வரவில்லை. செருபாப‌ேல், எஸ்றா, நெகேமியா ஆகியோர் வெவ்வேறு காலக் கட்டங்களில் (கி.மு.536,457,445) யூதாவுக்குத் திரும்பி வந்த போது அவர்களுடன் ஒரு சிலரே திரும்பி வந்தனர்.

70 ஆண்டுகால சிறையிருப்பு கி.மு.536 ல் முடிவடைந்து விட்டபடியால், பல யூதர் பாபிலோனிலேயே தங்கி விட்டனர். பிறர், மேதிய-பொ்சிய ஆளுகைக்குட்பட்ட பல தேசங்களுக்கும் சிதறிச் சென்றனர். இவர்களையும், பின்பு கி.பி. 70 ம் ஆண்டில் எருசலேம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிதறிச் சென்ற யூதரையுமே “சிதறியிருக்கிற 12 கோத்திரங்கள்” என அழைக்கிறோம்.

மேற்கண்ட சரித்திர சம்பவங்களுடன் பழைய ஏற்பாடு முற்றுப் பெறுகிறது. இதைத் தொடர்ந்து 400 ஆண்டு சரித்திர சம்பவங்கள் வேதாகமத்தில் பழைய புதிய ஏற்பாடுகளில் எழுதப்படவில்லை.

இந்த 400 ஆண்டுகால யூத சரித்திரம் “தள்ளுபடி ஆகமங்கள்” என்று அழைக்கப்படும் யூத இலக்கியங்களில் காணக் கிடைக்கிறது.

“இருண்ட காலம் அல்லது ஆகமங்களுக்கு இடைப்பட்ட காலம்” என அழைக்கப்படும் இந்த குறிப்பிட்ட 400 ஆண்டு காலத்தில் 4 முக்கிய சரித்திரக் குறிப்புகளைப் பார்க்கிறோம்.

1. பொ்சியரின் காலம் - கி.மு.450-330

2. கிரேக்கரின் காலம் - கி.மு.330-166

3. மக்கபேயர் மற்றும் ஹாஸ்மோனியரின் காலம் - கி.மு.166-63

4. ரோமரின் காலம் - கி.மு.63 முதல் தொடர்ந்த காலம்.

நமது ஆண்டவர் இயேசு மேசியாவாக, உ‌லக இரட்சகராக வந்து அவதரிக்கத் தெரிந்து கொண்ட யூதகுலம் மேற்கண்ட 4 காலங்களில் கடந்து சென்ற பல்வேறு நிலைகளை குறித்து இனி காண்போம்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jun 08, 2012 4:50 pm

1. பொ்சியரின் காலம்: (கி.மு.450-330)

பொ்சியாவின் ஆட்சியில் யூதர் விடுவிக்கப்பட்டது குறித்து மேலே கண்டோம். தங்கள் காரியங்களை தாங்களே கவனித்துக் கொள்ளும் சுயாதீன ஆட்சி நிலையை யூதருக்கு கொடுத்து பொ்சியர் ஆட்சி செய்தமையால், யூதர் பிரதான ஆசாரியரின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டு, ம‌ேலான அதிகாரத்தில் பொ்சியருக்கு கீழ்ப்பட்டிருந்தனர். நெகேமியாவின் நாட்களுக்குப்பின் பல ஆண்டுகள் இந்நிலை தொடர்ந்தது.


தொடரும்...


Sponsored content

PostSponsored content



Page 12 of 19 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக