புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும் கடவுளும் Poll_c10காதலும் கடவுளும் Poll_m10காதலும் கடவுளும் Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
காதலும் கடவுளும் Poll_c10காதலும் கடவுளும் Poll_m10காதலும் கடவுளும் Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலும் கடவுளும் Poll_c10காதலும் கடவுளும் Poll_m10காதலும் கடவுளும் Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
காதலும் கடவுளும் Poll_c10காதலும் கடவுளும் Poll_m10காதலும் கடவுளும் Poll_c10 
88 Posts - 38%
i6appar
காதலும் கடவுளும் Poll_c10காதலும் கடவுளும் Poll_m10காதலும் கடவுளும் Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
காதலும் கடவுளும் Poll_c10காதலும் கடவுளும் Poll_m10காதலும் கடவுளும் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
காதலும் கடவுளும் Poll_c10காதலும் கடவுளும் Poll_m10காதலும் கடவுளும் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
காதலும் கடவுளும் Poll_c10காதலும் கடவுளும் Poll_m10காதலும் கடவுளும் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
காதலும் கடவுளும் Poll_c10காதலும் கடவுளும் Poll_m10காதலும் கடவுளும் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
காதலும் கடவுளும் Poll_c10காதலும் கடவுளும் Poll_m10காதலும் கடவுளும் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதலும் கடவுளும் Poll_c10காதலும் கடவுளும் Poll_m10காதலும் கடவுளும் Poll_c10 
2 Posts - 1%
prajai
காதலும் கடவுளும் Poll_c10காதலும் கடவுளும் Poll_m10காதலும் கடவுளும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் கடவுளும்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Oct 06, 2009 2:10 am




மதம் மற்றும், மற்ற மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுப்பதை பற்றி பார்த்தோம், இனி இந்த பதிவில் தவறாக பயன் படுத்தப்படும் மத மாற்றம் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் சொல்வதை தவிர, எந்த மதத்தையும் இழிவு படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்பதை முதலில் தெளிவு படுத்திக்கொள்கிறேன்.

எனக்கு தெரிந்த ஒரு கதையை சொல்ல விரும்புகிறேன், ஒரு ஆண் தன் மதமில்லாத ஒரு வேறு மத பெண்ணை காதலித்து பெற்றோர்களுக்கும், யாருக்கும் தெரியாமல் அரசாங்க சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்டார்கள்.

காதலும் கடவுளும் Love

திருமணத்திற்கு பிறகும், நாம் மட்டுமே புத்திசாலி என்ற நினைப்போடு அவரவர் வீட்டில் இருந்து கொண்டார்கள் (சினிமாவில் வரும் எல்லா நல்ல விசையத்தையும் விட்டு விட்டு, இது போல் சிந்தனைகளை மட்டும் எடுத்துக்கொள்வது தானே இன்று நிஜத்தில் நடக்கிறது).

இது நடந்து சில மாதங்கள் சென்ற பின் இரு வீட்டாருக்கும் விஷயம் தெரிய வர, வழக்கம் போல் இரு வீட்டிலும் பல பிரச்னைகள். சரி, நடந்தது நடந்து விட்டது, இனி என்ன செய்யலாம் என்றும் இரு வீட்டாரும் பேச முன் வரும் போது மணமகன் தரப்பு வேண்டுதல் இது.

எங்கள் மதத்தில் எனக்கு இருநூறு பவுன் முறை செய்ய தயாராய் இருப்பதால் தான், இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், அதனால் நீங்கள் அதில் பாதியாவது செய்து விட்டால் மற்றதை பேசி சரி செய்ய முடியும் என்பது கருத்து.

உண்மையில், அந்த பெண்ணை பெற்ற தகப்பனுக்கு அந்த அளவு வசதி இல்லை, அவர்கள் ஒரு நடுத்தர குடும்பம் என்பது அந்த பெண் மற்றும் பெண்ணை மணந்த ஆண் இருவருக்குமே தெரியும்.

காதலும் கடவுளும் GIRLinLOVE

எது எப்படியோ, தன்னால் செய்ய முடியாத ஒன்றை கேட்டதாலும், தன் மகள் தனக்கு தெரியாமல் வேறு மதத்தில் திருமணம் செய்து கொண்ட கோவத்திலும், தனக்கு அவ்வளவு வசதி இல்லை என்றும் இதை தன்னால் செய்ய முடியாதென்றும் சொல்ல, அங்கு ஆரபித்தது வினை.

தன் மதத்திற்கு அந்த பெண்ணை மாற்றினால் தான் வாழ முடியும் என்றும், அதற்க்கு இந்த பெண்ணின் தாய் தகப்பன் என்ற முறையில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று எழுதி தரும் படி பெற்ற தந்தையிடம் சொல்லப்பட்டது.

மத மாற்றத்தில் விருப்பம் இல்லாத அந்த தந்தை, அப்படியானால் அதன் பெயர் "விடுதலை பத்திரம்" அதை இரண்டு பக்கமும் செய்ய வேண்டும் என்று சொல்ல,வாக்கு வதம் வளர்ந்தது, இதில் அந்த பெண்ணும் பிடிவாதமாக இருக்க அந்த பெண்ணினின் வாழ்கைக்காக அந்த தகப்பன் அவர்கள் கேட்ட படி எழுதிக்கொடுத்த பின் தான் அவர்களுடன் அதன் பெண்ணால் வாழ்கையை குடும்ப ஆரம்பிக்க முடிந்தது.

இதில் பெண்ணை பெற்ற அந்த தகப்பன் எதையும் எழுதி வாங்க வில்லை, ஒரு கோபத்தில் கேட்டதோடு சரி.

இத்தகைய முட்டாள்தனமான செய்கைகளில் இன்று வரை எனக்கு புரியாதது என்ன என்றல்?

இதில் காதல் எங்கு இருக்கிறது? அல்லது காதலித்த துணையுடன் வாழ, மதம் ஒரு தடையாய் இருப்பது உண்மயான இறை நம்பிக்கையா?

தான் விரும்பி திருமணம் செய்த ஒருவருடன் குடும்பம் நடத்த, உண்மையில் எந்த மதம் அல்லது எந்த கடவுள் தடை சொல்கிறது?

காதலும் கடவுளும் RadhaKrishnarelaxingtogether

வேறு ஒரு மதத்தில் நீ காதலிக்கலாம், பதிவு திருமணம் செய்யலாம் ஆனால், குடும்பத்தில் சேரும் முன் என்னை வணங்க சொல் என்றோ!, அல்லது என்னை தவிர மற்ற யாரையும் வணங்ககூடாது என்றோ!, எந்த மதம் அல்லது எந்த கடவுள் சொல்கிறது? அப்படி இல்லை என்றால் இதில் காதல் எங்கே இருக்கிறது?

சரி, இப்படி வைத்துக்கொள்வோம், மேல் சொன்னபடி பெண்ணின் தகப்பனால் அந்த மணமகன் கேட்ட முறையை செய்ய முடிந்து இருந்தால், அப்போது இந்த மத மாற்றம் தேவை இல்லையா? அப்படி இல்லை என்றால் இதில் இறை நம்பிக்கை எங்கே இருக்கிறது?

இது எல்லாவற்றையும் தாண்டி, ஒரே ஒரு கேள்வி?

காதலின் பெயரால் விரும்பிய ஒருவரை அதுவும் பதிவு திருமணம் செய்த பின், எப்படி காதலித்தமோ அப்டியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அது காதலாகுமா? அல்லது தன் வாழ்கை துணையுடன் (பதிவு) திருமணத்திற்கு பின் குடும்பம் நடத்துவதற்காக ஒரு மதமோ, மதமாற்றமோ தேவைப்பட்டால், அது உண்மையான பக்தியாகுமா?

ஆனாலும் இத்தகைய நல்ல!!! உணர்வுக்கு நாம் வைத்துக்கொள்ளும் பெயர் தான் என் " காதல்" என் " கடவுள்" என்"மதம்".

இதுவா காதல் அல்லது இதுவா மதம், இறை நம்பிக்கை?

நான் போன பதிவில் சொன்ன படி, நம் நம்பிக்கைக்காக அல்லது சொந்த சுக, துக்கங்களுக்காக மற்றவர் நம்பிக்கையை உடைப்பதுதானே இது?

ஒருவர் விருப்பபட்டு மதம் மாறுவதில் என்ன பின் விளைவுகள் இருக்கப்போகிறது, அல்லது தனிப்பட்ட ஒருவர் மதம் மாறுவதில் மற்ற யாருடைய நம்பிக்கை கெட போகிறது என்று, எதிர் வாதம் செய்ய முடியும்? பதில் சொல்கிறேன்.

மேல்சொன்ன மாதிரியான ஒரு நிகழ்ச்சிக்கு பின், அந்த (ஆணோ அல்லது பெண்ணோ) பிறந்த குடும்பமும் அவர்கள் உடன் பிறந்தவர்களும், இன்றைய நம் சமுதாயத்தில் எவ்வாறெல்லாம் பெருமை படுத்த படுவார்கள் (கேலிக் கூத்தாக) என்பதை இங்கு நினைத்து பார்க்க வேண்டும், இது நம் எல்லோருக்கும் தெரியாத ஒரு விசயமல்ல.

இதை மட்டுமில்லாமல் இதில் தனிப்பட்ட ஒருவரை தவிர மற்ற யாருடைய நம்பிக்கை உடைகிறது என்றால், மதம் என்ன அரசியல் கட்சி அல்லது கொள்கையா? நினைத்து நினைத்து மாற்றிக்கொள்ள?

ஒரு குழந்தை பிறந்தது முதல் ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயங்களையும் பார்த்து பார்த்து பண்ணிய ஒரு ஒட்டு மொத்த குடும்பத்தில் உள்ள மற்ற எல்லாருடைய நம்பிக்கையும் இங்கு ஒருவரின் சுய நலத்துக்காக உடைகப்படுகிரதல்லவா?

மற்றும் இதனால் அந்த குடும்பத்தில் உள்ள மற்ற உடன் பிறந்தவர்களின் எதிர்கால வாழ்கை பாதிக்கப்படுமா இல்லையா? அந்த அளவு ஒரு முற்போக்கான சமுதாயத்திலா வசிக்கிறோம் நாம்!? இதை யாரவது இங்கு மறுக்கமுடியுமா?

சரி, இதன் பிறகு, இப்படி மதம் மாறிய ஒரு பெண்ணோ ஆணோ, தன் குடும்பம், சுற்றம், சொந்தத்தில் ஒரு மாற்று மத கலாச்சாரத்துடன், எப்படி எந்த ஒரு சுக அல்லது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்? அப்படி செய்தால் அந்த நிகழ்ச்சியை விட இவர்கள் அங்கு பெரிய காட்சிப்பொருளாகி விடுவார்கள் இல்லையா?

இதனால் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வாரமல் இருந்து விட்டால், தன் குடும்ப உறுப்பினர் ஒருவர் இல்லாத அந்த நிகழ்ச்சியில் மற்றவர்கள் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்?

இதனால் அந்த தாய் தந்தை குடும்பத்தினர் எப்படி கலங்காமல் இருக்க முடியும்?

இப்படி செய் என்று எந்த கடவுள் எந்த வேதத்தில் சொல்கிறது?

அல்லது உன் சொந்த நம்பிக்கை மற்றும் சுக, துக்கங்களுக்காக, நீ இத்தனை நாளும் நம்பி வந்த நம்பிக்கைக்கு புறம்பான வார்த்தையையோ செயலையோ, உன் தாய் தந்தை குடும்பத்தினர் முன் அல்லது அவர்கள் கவனிக்கும்படி செய் என்று எந்த கடவுள் எங்கு சொல்லி இருக்கிறார்?

இதைத்தான் நான் "இது கடவுளின் பெயரால் மற்றவர்களை ஏமற்றுவதாக நினைத்து, கடவுளிடம் நாம் ஏமாந்து போகும் ஒரு செயல்" என்று சொன்னேன்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நாம் ஒரு மதத்தின் நம்பிக்கைக்கு புறம்பான பாவம் அனைத்தையும் செய்து விட்டு, இன்னொரு மதத்திற்கு ஓடி விட்டால்? அது எந்த மதமாக இருந்தாலும் சரி, அந்த மதத்தின் கர்மவினையோ அல்லது இஸ்முர்-ரோ அல்லது சாத்தானின் நரகமோ நம்மை விட்டு விடுமா?

சிந்தித்து பார்த்து, இனி வரும் தலைமுறையாவது தங்கள் சுயநலத்துக்காக கடவுளையும், காதலையும் கலக்காமல் இருக்க வேண்டுகிறேன்.

காதலும் கடவுளும் Love1

இங்கு மீண்டும் சத்தம் போட்டு சொல்கிறேன் "மதம் என்பது அதன் புனித அறநெறி வழிகளை கடைப்பிடித்து நடப்பதர்க்காக மட்டுமே தவிர மற்றவர் முன் நடிப்பதர்க்காக அல்ல".

எனவே மத மாற்றம் என்னும் பாவம் தவிர்த்து, எல்லா மத நம்பிக்கைக்கும் சம மதிப்பு கொடுத்து, நம்மை மட்டுமில்லாமல் நம் வருங்கால சந்ததியையும் பாவத்தில் இருந்து காப்பாற்றி எல்லாம் வல்ல இறை அருள் பெறுவோம்.

இல்லை நான் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதி என்றால், இங்கு கடவுளின் பெயரை சொல்லி நடிக்க வேண்டி இருக்காது, ஆனால் மனிதனை மதிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
அதாவது நம்மை சுற்றி இருக்கும் மனித உறவுகளை நம்சுயநலத்துக்காக காயப்படுத்த கூடாது, மற்றும் நம் நம்பிக்கையை மற்றவர்கள் மதிப்பது போல், மற்றவர்கள் நம்பிக்கைக்கு நாம் மதிப்பு கொடுக்க தெரிந்து இருக்க வேண்டும்.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Oct 06, 2009 2:15 am

அதாவது நம்மை சுற்றி இருக்கும் மனித உறவுகளை நம்சுயநலத்துக்காக காயப்படுத்த கூடாது, மற்றும் நம் நம்பிக்கையை மற்றவர்கள் மதிப்பது போல், மற்றவர்கள் நம்பிக்கைக்கு நாம் மதிப்பு கொடுக்க தெரிந்து இருக்க வேண்டும்.

காதலும் கடவுளும் 677196 காதலும் கடவுளும் 677196 காதலும் கடவுளும் 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக