புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
by mohamed nizamudeen Today at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்)
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
திரைப்பட நடிகரோ, பிரபல இசைக் கலைஞரோ, அரசியல் பிரமுகரோ, ஆன்மிகவாதியோ பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்ட பிறகு, தனது செயல்கள் தனிப்பட்ட விஷயம் என்றும் அதில் மற்றவர்கள் தலையிட முடியாது, கூடாது என்றும் கூறுவது ஏற்புடையதல்ல. மக்கள் மன்றத்தின் அங்கீகாரத்தையும், பேராதரவையும் பெறுவதில் பெருமிதம் கொள்ளும் இவர்கள், தங்களுக்கு சில வரம்புகள் உண்டு என்பதையும், பொது இடங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
சிறிது நாள்களுக்கு முன்பு, ஷாருக் கான் தனது நண்பரை இரவு விருந்தில் கன்னத்தில் அறைந்ததாகப் பிரச்னை எழுந்தது. பிறகு, அவர் "செல்லமாகத் தட்டினேன். இது வெறும் விளையாட்டு' என்று அந்த நண்பரை அணைத்துக்கொண்டு பேட்டி அளித்தார். இப்போது குடித்துவிட்டு வான்கடே ஸ்டேடியத்தில் காவலர்கள் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகளுடன் தகராறு. தகராறு செய்த ஷாருக்கானை போலீஸ் கைது செய்து வழக்குப் பதிவு செய்திருந்தால், இது குறித்து யாரும் கவலைப்படப்போவதில்லை.
ஆனால், "வான்கடே ஸ்டேடியத்துக்குள் ஷாருக் கான் 5 ஆண்டுகளுக்கு நுழையவே கூடாது. அது ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, வேறு போட்டியாக இருந்தாலும் சரி' என்று மத்திய அமைச்சரும், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான விலாஸ்ராவ் தேஷ்முக் தண்டனை அறிவித்திருக்கிறார்.
ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகர் குடித்துவிட்டு வந்து, காவலர்களிடமும் , விளையாட்டரங்க அதிகாரிகளிடமும் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி ரகளையில் ஈடுபட்டால், அவருக்கும் இதே தீர்ப்பை வழங்குவார்களா? ஷாருக்கானின் நடவடிக்கை கேலிக்கூத்து என்றால், அதைவிட பெரிய கேலிக்கூத்து இத்தகைய பதில்களும் கட்டப்பஞ்சாயத்துகளும்.
தரக்குறைவான வார்த்தைகளால் தங்களைத் திட்டியதாக மும்பை கிரிக்கெட் சங்க அலுவலர்கள்
காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்ட பின்னர், அந்தப் புகாரை விசாரிக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. ஆனால், மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் சொல்கிறார்: 5 ஆண்டுகளுக்கு அவர் வான்கடே ஸ்டேடியத்துக்குள் நுழையக்கூடாது என்று! இது தண்டனையா இல்லை சட்டத்தின் நடவடிக்கை பாயாமல் இருக்க கிரிக்கெட் சங்கம் எடுத்திருக்கும் சாதுர்யமான முடிவா?
ஆடுகளத்தில் குற்றமிழைக்கும் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே மஞ்சள் அட்டை காட்டுவது கால்பந்து போட்டிகளில் வழக்கம். கிரிக்கெட் போட்டிகளில், குறிப்பிட்ட தொடரில் அந்த வீரர் விளையாடக்கூடாது என்று கிரிக்கெட் வாரியம் தண்டனை தரும். ஷாருக் கான் குடித்துவிட்டுத் தகராறில் ஈடுபட்டது என்ன விளையாட்டா, 5 ஆண்டுகளுக்கு ஸ்டேடியத்துக்குள் நுழைவதற்குத் தடை விதிக்க?
"அவர் குடித்துவிட்டு வந்தது உண்மை. அவர் ஸ்டேடியத்துக்கு வெளியே குடித்துவிட்டு வந்தார். குடித்து விட்டு ஸ்டேடியத்துக்குள் நுழையத் தடை ஏதும் இல்லை. அவர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார் என்று மட்டுமே புகார் ஆகியுள்ளது' என்று மும்பை போலீஸ் துணை ஆணையர் கூறுவது உண்மையானால், அத்தகைய குற்றத்துக்குத் தண்டனை வழங்க வேண்டியது நீதிமன்றமே தவிர, மும்பை கிரிக்கெட் சங்கம் அல்ல.
5 ஆண்டுகள் ஸ்டேடியத்துக்குள் நுழையக்கூடாது என்று ""தீர்ப்பு'' சொல்லும் உரிமையை மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு யார் கொடுத்தது? கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி வரும் ஒரு நுகர்வோருக்கு 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்க தனி அமைப்புக்கு உரிமை உள்ளதா? இப்படி இன்னும் பல கேள்விகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.
தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் மட்டுமே இத்தகைய தடைகளை, அதாவது, யாரை உள்ளே அனுமதிப்பது, அனுமதிக்கக் கூடாது என்பதைத் தீர்மானிக்க முடியும். 5 ஆண்டுகளுக்கு ஸ்டேடியத்திற்குள் நுழையக்கூடாது எனும் நாட்டாமைத் தீர்ப்பு சரி என்றால், வான்கடே ஸ்டேடியம் பொது நோக்கத்துக்கானது அல்ல, தனிநபர் சொத்து என்பதாக பொருள்படும். வான்கடே ஸ்டேடியம் மக்கள் சொத்து.
மும்பை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் நிலையில், இது குறித்து விசாரித்து வழக்குப் பதிவு செய்வது காவல் துறையின் கடமை. இதற்கு நீதிமன்றம் விதிக்கும் அபராதத்தைச் செலுத்த வேண்டியவர் ஷாருக் கான். காவல்துறை, நீதித்துறை செய்ய வேண்டிய பணியை, மும்பை கிரிக்கெட் சங்கம் தனக்குத் தானே எடுத்துக்கொள்வது தவறான முன்னுதாரணம்.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சமுதாயத்தில் பிரபலமாக உள்ள பாடகி, நடிகை, நடிகர் போதைப் பொருள் உட்கொண்டு ரகளை செய்யும்போதும், குடிபோதையில் வாகனம் ஓட்டும்போதும் நீதிமன்றம் அவர்களுக்கு எந்தவொரு சாதாரண மனிதருக்கும் என்ன தண்டனை விதிக்குமோ அதையே விதிக்கின்றது. அத்தகைய சட்டத்தின் தண்டனையை நீதிமன்றம் ஷாருக்கானுக்கு வழங்கட்டுமே. மும்பை கிரிக்கெட் சங்கத்தின் நாட்டாமைத் தீர்ப்பை அங்கீகரிக்க முடியாது!
ஒரு கிரிக்கெட் சங்கம், விளையாட்டு தொடர்பாக வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் விளையாடுவதற்கு மட்டும்தான் தடை விதிக்க முடியும். தடைவிதிக்கப்பட்ட அந்த வீரர், ஸ்டேடியத்துக்குள் வரக்கூடாது என்று சொல்லும் அதிகாரம் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு இருக்க முடியாது.
திரைப்படத்தில் கதாநாயகர்களாக இருப்பதால் வாழ்க்கையிலும் கதாநாயகனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், தனக்கு எப்போதும் கதாநாயகனுக்கான முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு நடிகர் சமூகத்தில் பிரச்னைக்குரிய நபராக மாறுகிறார். இதைத்தான் தற்போது நடிகர் ஷாருக் கான் விவகாரத்திலும் நாம் காண முடிகிறது.
தினமணி
சிறிது நாள்களுக்கு முன்பு, ஷாருக் கான் தனது நண்பரை இரவு விருந்தில் கன்னத்தில் அறைந்ததாகப் பிரச்னை எழுந்தது. பிறகு, அவர் "செல்லமாகத் தட்டினேன். இது வெறும் விளையாட்டு' என்று அந்த நண்பரை அணைத்துக்கொண்டு பேட்டி அளித்தார். இப்போது குடித்துவிட்டு வான்கடே ஸ்டேடியத்தில் காவலர்கள் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகளுடன் தகராறு. தகராறு செய்த ஷாருக்கானை போலீஸ் கைது செய்து வழக்குப் பதிவு செய்திருந்தால், இது குறித்து யாரும் கவலைப்படப்போவதில்லை.
ஆனால், "வான்கடே ஸ்டேடியத்துக்குள் ஷாருக் கான் 5 ஆண்டுகளுக்கு நுழையவே கூடாது. அது ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, வேறு போட்டியாக இருந்தாலும் சரி' என்று மத்திய அமைச்சரும், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான விலாஸ்ராவ் தேஷ்முக் தண்டனை அறிவித்திருக்கிறார்.
ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகர் குடித்துவிட்டு வந்து, காவலர்களிடமும் , விளையாட்டரங்க அதிகாரிகளிடமும் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி ரகளையில் ஈடுபட்டால், அவருக்கும் இதே தீர்ப்பை வழங்குவார்களா? ஷாருக்கானின் நடவடிக்கை கேலிக்கூத்து என்றால், அதைவிட பெரிய கேலிக்கூத்து இத்தகைய பதில்களும் கட்டப்பஞ்சாயத்துகளும்.
தரக்குறைவான வார்த்தைகளால் தங்களைத் திட்டியதாக மும்பை கிரிக்கெட் சங்க அலுவலர்கள்
காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்ட பின்னர், அந்தப் புகாரை விசாரிக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. ஆனால், மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் சொல்கிறார்: 5 ஆண்டுகளுக்கு அவர் வான்கடே ஸ்டேடியத்துக்குள் நுழையக்கூடாது என்று! இது தண்டனையா இல்லை சட்டத்தின் நடவடிக்கை பாயாமல் இருக்க கிரிக்கெட் சங்கம் எடுத்திருக்கும் சாதுர்யமான முடிவா?
ஆடுகளத்தில் குற்றமிழைக்கும் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே மஞ்சள் அட்டை காட்டுவது கால்பந்து போட்டிகளில் வழக்கம். கிரிக்கெட் போட்டிகளில், குறிப்பிட்ட தொடரில் அந்த வீரர் விளையாடக்கூடாது என்று கிரிக்கெட் வாரியம் தண்டனை தரும். ஷாருக் கான் குடித்துவிட்டுத் தகராறில் ஈடுபட்டது என்ன விளையாட்டா, 5 ஆண்டுகளுக்கு ஸ்டேடியத்துக்குள் நுழைவதற்குத் தடை விதிக்க?
"அவர் குடித்துவிட்டு வந்தது உண்மை. அவர் ஸ்டேடியத்துக்கு வெளியே குடித்துவிட்டு வந்தார். குடித்து விட்டு ஸ்டேடியத்துக்குள் நுழையத் தடை ஏதும் இல்லை. அவர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார் என்று மட்டுமே புகார் ஆகியுள்ளது' என்று மும்பை போலீஸ் துணை ஆணையர் கூறுவது உண்மையானால், அத்தகைய குற்றத்துக்குத் தண்டனை வழங்க வேண்டியது நீதிமன்றமே தவிர, மும்பை கிரிக்கெட் சங்கம் அல்ல.
5 ஆண்டுகள் ஸ்டேடியத்துக்குள் நுழையக்கூடாது என்று ""தீர்ப்பு'' சொல்லும் உரிமையை மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு யார் கொடுத்தது? கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி வரும் ஒரு நுகர்வோருக்கு 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்க தனி அமைப்புக்கு உரிமை உள்ளதா? இப்படி இன்னும் பல கேள்விகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.
தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் மட்டுமே இத்தகைய தடைகளை, அதாவது, யாரை உள்ளே அனுமதிப்பது, அனுமதிக்கக் கூடாது என்பதைத் தீர்மானிக்க முடியும். 5 ஆண்டுகளுக்கு ஸ்டேடியத்திற்குள் நுழையக்கூடாது எனும் நாட்டாமைத் தீர்ப்பு சரி என்றால், வான்கடே ஸ்டேடியம் பொது நோக்கத்துக்கானது அல்ல, தனிநபர் சொத்து என்பதாக பொருள்படும். வான்கடே ஸ்டேடியம் மக்கள் சொத்து.
மும்பை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் நிலையில், இது குறித்து விசாரித்து வழக்குப் பதிவு செய்வது காவல் துறையின் கடமை. இதற்கு நீதிமன்றம் விதிக்கும் அபராதத்தைச் செலுத்த வேண்டியவர் ஷாருக் கான். காவல்துறை, நீதித்துறை செய்ய வேண்டிய பணியை, மும்பை கிரிக்கெட் சங்கம் தனக்குத் தானே எடுத்துக்கொள்வது தவறான முன்னுதாரணம்.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சமுதாயத்தில் பிரபலமாக உள்ள பாடகி, நடிகை, நடிகர் போதைப் பொருள் உட்கொண்டு ரகளை செய்யும்போதும், குடிபோதையில் வாகனம் ஓட்டும்போதும் நீதிமன்றம் அவர்களுக்கு எந்தவொரு சாதாரண மனிதருக்கும் என்ன தண்டனை விதிக்குமோ அதையே விதிக்கின்றது. அத்தகைய சட்டத்தின் தண்டனையை நீதிமன்றம் ஷாருக்கானுக்கு வழங்கட்டுமே. மும்பை கிரிக்கெட் சங்கத்தின் நாட்டாமைத் தீர்ப்பை அங்கீகரிக்க முடியாது!
ஒரு கிரிக்கெட் சங்கம், விளையாட்டு தொடர்பாக வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் விளையாடுவதற்கு மட்டும்தான் தடை விதிக்க முடியும். தடைவிதிக்கப்பட்ட அந்த வீரர், ஸ்டேடியத்துக்குள் வரக்கூடாது என்று சொல்லும் அதிகாரம் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு இருக்க முடியாது.
திரைப்படத்தில் கதாநாயகர்களாக இருப்பதால் வாழ்க்கையிலும் கதாநாயகனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், தனக்கு எப்போதும் கதாநாயகனுக்கான முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு நடிகர் சமூகத்தில் பிரச்னைக்குரிய நபராக மாறுகிறார். இதைத்தான் தற்போது நடிகர் ஷாருக் கான் விவகாரத்திலும் நாம் காண முடிகிறது.
தினமணி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஐ ஜி பிரமோத் குமார் கூட பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவலர்களிடம் கலாட்டா செய்கிறார். அவரை 5 வருடம் கோர்ட்டுக்கு உள்ள போக கூடாதுன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்களோ?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆமாம் ஜெயிலுக்கு போக கூடாதுன்னு சொல்வாங்களோ?அசுரன் wrote:ஐ ஜி பிரமோத் குமார் கூட பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவலர்களிடம் கலாட்டா செய்கிறார். அவரை 5 வருடம் கோர்ட்டுக்கு உள்ள போக கூடாதுன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்களோ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
போலீஸ் ஸ்டேஷனுக்கே வரக் கூடாதுன்னு சொன்னா - ஐஞ்சு வருஷ லீவில சுகமா சுத்தி வருவாரு பிரபு...மகா பிரபு wrote:ஆமாம் ஜெயிலுக்கு போக கூடாதுன்னு சொல்வாங்களோ?அசுரன் wrote:ஐ ஜி பிரமோத் குமார் கூட பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவலர்களிடம் கலாட்டா செய்கிறார். அவரை 5 வருடம் கோர்ட்டுக்கு உள்ள போக கூடாதுன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்களோ?
- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
இது தண்டனை இல்லை !! சட்டத்தின் நடவடிக்கை பாயாமல் இருக்க கிரிக்கெட் சங்கம் எடுத்திருக்கும் சாதுர்யமான முடிவுதான்!!!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ரேஸ்கல்ஸ் என்னா வேல பாத்துருக்கானுங்க...பத்மநாபன் wrote: இது தண்டனை இல்லை !! சட்டத்தின் நடவடிக்கை பாயாமல் இருக்க கிரிக்கெட் சங்கம் எடுத்திருக்கும் சாதுர்யமான முடிவுதான்!!!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இது நல்லா இருக்கே..யினியவன் wrote:போலீஸ் ஸ்டேஷனுக்கே வரக் கூடாதுன்னு சொன்னா - ஐஞ்சு வருஷ லீவில சுகமா சுத்தி வருவாரு பிரபு...மகா பிரபு wrote:ஆமாம் ஜெயிலுக்கு போக கூடாதுன்னு சொல்வாங்களோ?அசுரன் wrote:ஐ ஜி பிரமோத் குமார் கூட பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவலர்களிடம் கலாட்டா செய்கிறார். அவரை 5 வருடம் கோர்ட்டுக்கு உள்ள போக கூடாதுன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்களோ?
- GuestGuest
ஜன நாயகம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஊகும் - பண நாயகம் - அங்க சொன்னத மறந்துட்டீங்க...புரட்சி wrote: ஜன நாயகம்
- Sponsored content
Similar topics
» சமச்சீர் கல்வி தீர்ப்பு - தினமணி தலையங்கம்
» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
» இந்திய கொடியை பறக்க விட்ட விவகாரம்: கோலியின் பாகிஸ்தான் ரசிகரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்
» அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி
» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
» இந்திய கொடியை பறக்க விட்ட விவகாரம்: கோலியின் பாகிஸ்தான் ரசிகரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்
» அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|