Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்)
4 posters
Page 1 of 1
தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்)
திரைப்பட நடிகரோ, பிரபல இசைக் கலைஞரோ, அரசியல் பிரமுகரோ, ஆன்மிகவாதியோ பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்ட பிறகு, தனது செயல்கள் தனிப்பட்ட விஷயம் என்றும் அதில் மற்றவர்கள் தலையிட முடியாது, கூடாது என்றும் கூறுவது ஏற்புடையதல்ல. மக்கள் மன்றத்தின் அங்கீகாரத்தையும், பேராதரவையும் பெறுவதில் பெருமிதம் கொள்ளும் இவர்கள், தங்களுக்கு சில வரம்புகள் உண்டு என்பதையும், பொது இடங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
சிறிது நாள்களுக்கு முன்பு, ஷாருக் கான் தனது நண்பரை இரவு விருந்தில் கன்னத்தில் அறைந்ததாகப் பிரச்னை எழுந்தது. பிறகு, அவர் "செல்லமாகத் தட்டினேன். இது வெறும் விளையாட்டு' என்று அந்த நண்பரை அணைத்துக்கொண்டு பேட்டி அளித்தார். இப்போது குடித்துவிட்டு வான்கடே ஸ்டேடியத்தில் காவலர்கள் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகளுடன் தகராறு. தகராறு செய்த ஷாருக்கானை போலீஸ் கைது செய்து வழக்குப் பதிவு செய்திருந்தால், இது குறித்து யாரும் கவலைப்படப்போவதில்லை.
ஆனால், "வான்கடே ஸ்டேடியத்துக்குள் ஷாருக் கான் 5 ஆண்டுகளுக்கு நுழையவே கூடாது. அது ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, வேறு போட்டியாக இருந்தாலும் சரி' என்று மத்திய அமைச்சரும், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான விலாஸ்ராவ் தேஷ்முக் தண்டனை அறிவித்திருக்கிறார்.
ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகர் குடித்துவிட்டு வந்து, காவலர்களிடமும் , விளையாட்டரங்க அதிகாரிகளிடமும் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி ரகளையில் ஈடுபட்டால், அவருக்கும் இதே தீர்ப்பை வழங்குவார்களா? ஷாருக்கானின் நடவடிக்கை கேலிக்கூத்து என்றால், அதைவிட பெரிய கேலிக்கூத்து இத்தகைய பதில்களும் கட்டப்பஞ்சாயத்துகளும்.
தரக்குறைவான வார்த்தைகளால் தங்களைத் திட்டியதாக மும்பை கிரிக்கெட் சங்க அலுவலர்கள்
காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்ட பின்னர், அந்தப் புகாரை விசாரிக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. ஆனால், மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் சொல்கிறார்: 5 ஆண்டுகளுக்கு அவர் வான்கடே ஸ்டேடியத்துக்குள் நுழையக்கூடாது என்று! இது தண்டனையா இல்லை சட்டத்தின் நடவடிக்கை பாயாமல் இருக்க கிரிக்கெட் சங்கம் எடுத்திருக்கும் சாதுர்யமான முடிவா?
ஆடுகளத்தில் குற்றமிழைக்கும் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே மஞ்சள் அட்டை காட்டுவது கால்பந்து போட்டிகளில் வழக்கம். கிரிக்கெட் போட்டிகளில், குறிப்பிட்ட தொடரில் அந்த வீரர் விளையாடக்கூடாது என்று கிரிக்கெட் வாரியம் தண்டனை தரும். ஷாருக் கான் குடித்துவிட்டுத் தகராறில் ஈடுபட்டது என்ன விளையாட்டா, 5 ஆண்டுகளுக்கு ஸ்டேடியத்துக்குள் நுழைவதற்குத் தடை விதிக்க?
"அவர் குடித்துவிட்டு வந்தது உண்மை. அவர் ஸ்டேடியத்துக்கு வெளியே குடித்துவிட்டு வந்தார். குடித்து விட்டு ஸ்டேடியத்துக்குள் நுழையத் தடை ஏதும் இல்லை. அவர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார் என்று மட்டுமே புகார் ஆகியுள்ளது' என்று மும்பை போலீஸ் துணை ஆணையர் கூறுவது உண்மையானால், அத்தகைய குற்றத்துக்குத் தண்டனை வழங்க வேண்டியது நீதிமன்றமே தவிர, மும்பை கிரிக்கெட் சங்கம் அல்ல.
5 ஆண்டுகள் ஸ்டேடியத்துக்குள் நுழையக்கூடாது என்று ""தீர்ப்பு'' சொல்லும் உரிமையை மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு யார் கொடுத்தது? கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி வரும் ஒரு நுகர்வோருக்கு 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்க தனி அமைப்புக்கு உரிமை உள்ளதா? இப்படி இன்னும் பல கேள்விகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.
தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் மட்டுமே இத்தகைய தடைகளை, அதாவது, யாரை உள்ளே அனுமதிப்பது, அனுமதிக்கக் கூடாது என்பதைத் தீர்மானிக்க முடியும். 5 ஆண்டுகளுக்கு ஸ்டேடியத்திற்குள் நுழையக்கூடாது எனும் நாட்டாமைத் தீர்ப்பு சரி என்றால், வான்கடே ஸ்டேடியம் பொது நோக்கத்துக்கானது அல்ல, தனிநபர் சொத்து என்பதாக பொருள்படும். வான்கடே ஸ்டேடியம் மக்கள் சொத்து.
மும்பை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் நிலையில், இது குறித்து விசாரித்து வழக்குப் பதிவு செய்வது காவல் துறையின் கடமை. இதற்கு நீதிமன்றம் விதிக்கும் அபராதத்தைச் செலுத்த வேண்டியவர் ஷாருக் கான். காவல்துறை, நீதித்துறை செய்ய வேண்டிய பணியை, மும்பை கிரிக்கெட் சங்கம் தனக்குத் தானே எடுத்துக்கொள்வது தவறான முன்னுதாரணம்.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சமுதாயத்தில் பிரபலமாக உள்ள பாடகி, நடிகை, நடிகர் போதைப் பொருள் உட்கொண்டு ரகளை செய்யும்போதும், குடிபோதையில் வாகனம் ஓட்டும்போதும் நீதிமன்றம் அவர்களுக்கு எந்தவொரு சாதாரண மனிதருக்கும் என்ன தண்டனை விதிக்குமோ அதையே விதிக்கின்றது. அத்தகைய சட்டத்தின் தண்டனையை நீதிமன்றம் ஷாருக்கானுக்கு வழங்கட்டுமே. மும்பை கிரிக்கெட் சங்கத்தின் நாட்டாமைத் தீர்ப்பை அங்கீகரிக்க முடியாது!
ஒரு கிரிக்கெட் சங்கம், விளையாட்டு தொடர்பாக வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் விளையாடுவதற்கு மட்டும்தான் தடை விதிக்க முடியும். தடைவிதிக்கப்பட்ட அந்த வீரர், ஸ்டேடியத்துக்குள் வரக்கூடாது என்று சொல்லும் அதிகாரம் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு இருக்க முடியாது.
திரைப்படத்தில் கதாநாயகர்களாக இருப்பதால் வாழ்க்கையிலும் கதாநாயகனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், தனக்கு எப்போதும் கதாநாயகனுக்கான முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு நடிகர் சமூகத்தில் பிரச்னைக்குரிய நபராக மாறுகிறார். இதைத்தான் தற்போது நடிகர் ஷாருக் கான் விவகாரத்திலும் நாம் காண முடிகிறது.
தினமணி
சிறிது நாள்களுக்கு முன்பு, ஷாருக் கான் தனது நண்பரை இரவு விருந்தில் கன்னத்தில் அறைந்ததாகப் பிரச்னை எழுந்தது. பிறகு, அவர் "செல்லமாகத் தட்டினேன். இது வெறும் விளையாட்டு' என்று அந்த நண்பரை அணைத்துக்கொண்டு பேட்டி அளித்தார். இப்போது குடித்துவிட்டு வான்கடே ஸ்டேடியத்தில் காவலர்கள் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகளுடன் தகராறு. தகராறு செய்த ஷாருக்கானை போலீஸ் கைது செய்து வழக்குப் பதிவு செய்திருந்தால், இது குறித்து யாரும் கவலைப்படப்போவதில்லை.
ஆனால், "வான்கடே ஸ்டேடியத்துக்குள் ஷாருக் கான் 5 ஆண்டுகளுக்கு நுழையவே கூடாது. அது ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, வேறு போட்டியாக இருந்தாலும் சரி' என்று மத்திய அமைச்சரும், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான விலாஸ்ராவ் தேஷ்முக் தண்டனை அறிவித்திருக்கிறார்.
ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகர் குடித்துவிட்டு வந்து, காவலர்களிடமும் , விளையாட்டரங்க அதிகாரிகளிடமும் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி ரகளையில் ஈடுபட்டால், அவருக்கும் இதே தீர்ப்பை வழங்குவார்களா? ஷாருக்கானின் நடவடிக்கை கேலிக்கூத்து என்றால், அதைவிட பெரிய கேலிக்கூத்து இத்தகைய பதில்களும் கட்டப்பஞ்சாயத்துகளும்.
தரக்குறைவான வார்த்தைகளால் தங்களைத் திட்டியதாக மும்பை கிரிக்கெட் சங்க அலுவலர்கள்
காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்ட பின்னர், அந்தப் புகாரை விசாரிக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. ஆனால், மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் சொல்கிறார்: 5 ஆண்டுகளுக்கு அவர் வான்கடே ஸ்டேடியத்துக்குள் நுழையக்கூடாது என்று! இது தண்டனையா இல்லை சட்டத்தின் நடவடிக்கை பாயாமல் இருக்க கிரிக்கெட் சங்கம் எடுத்திருக்கும் சாதுர்யமான முடிவா?
ஆடுகளத்தில் குற்றமிழைக்கும் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே மஞ்சள் அட்டை காட்டுவது கால்பந்து போட்டிகளில் வழக்கம். கிரிக்கெட் போட்டிகளில், குறிப்பிட்ட தொடரில் அந்த வீரர் விளையாடக்கூடாது என்று கிரிக்கெட் வாரியம் தண்டனை தரும். ஷாருக் கான் குடித்துவிட்டுத் தகராறில் ஈடுபட்டது என்ன விளையாட்டா, 5 ஆண்டுகளுக்கு ஸ்டேடியத்துக்குள் நுழைவதற்குத் தடை விதிக்க?
"அவர் குடித்துவிட்டு வந்தது உண்மை. அவர் ஸ்டேடியத்துக்கு வெளியே குடித்துவிட்டு வந்தார். குடித்து விட்டு ஸ்டேடியத்துக்குள் நுழையத் தடை ஏதும் இல்லை. அவர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார் என்று மட்டுமே புகார் ஆகியுள்ளது' என்று மும்பை போலீஸ் துணை ஆணையர் கூறுவது உண்மையானால், அத்தகைய குற்றத்துக்குத் தண்டனை வழங்க வேண்டியது நீதிமன்றமே தவிர, மும்பை கிரிக்கெட் சங்கம் அல்ல.
5 ஆண்டுகள் ஸ்டேடியத்துக்குள் நுழையக்கூடாது என்று ""தீர்ப்பு'' சொல்லும் உரிமையை மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு யார் கொடுத்தது? கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி வரும் ஒரு நுகர்வோருக்கு 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்க தனி அமைப்புக்கு உரிமை உள்ளதா? இப்படி இன்னும் பல கேள்விகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.
தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் மட்டுமே இத்தகைய தடைகளை, அதாவது, யாரை உள்ளே அனுமதிப்பது, அனுமதிக்கக் கூடாது என்பதைத் தீர்மானிக்க முடியும். 5 ஆண்டுகளுக்கு ஸ்டேடியத்திற்குள் நுழையக்கூடாது எனும் நாட்டாமைத் தீர்ப்பு சரி என்றால், வான்கடே ஸ்டேடியம் பொது நோக்கத்துக்கானது அல்ல, தனிநபர் சொத்து என்பதாக பொருள்படும். வான்கடே ஸ்டேடியம் மக்கள் சொத்து.
மும்பை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் நிலையில், இது குறித்து விசாரித்து வழக்குப் பதிவு செய்வது காவல் துறையின் கடமை. இதற்கு நீதிமன்றம் விதிக்கும் அபராதத்தைச் செலுத்த வேண்டியவர் ஷாருக் கான். காவல்துறை, நீதித்துறை செய்ய வேண்டிய பணியை, மும்பை கிரிக்கெட் சங்கம் தனக்குத் தானே எடுத்துக்கொள்வது தவறான முன்னுதாரணம்.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சமுதாயத்தில் பிரபலமாக உள்ள பாடகி, நடிகை, நடிகர் போதைப் பொருள் உட்கொண்டு ரகளை செய்யும்போதும், குடிபோதையில் வாகனம் ஓட்டும்போதும் நீதிமன்றம் அவர்களுக்கு எந்தவொரு சாதாரண மனிதருக்கும் என்ன தண்டனை விதிக்குமோ அதையே விதிக்கின்றது. அத்தகைய சட்டத்தின் தண்டனையை நீதிமன்றம் ஷாருக்கானுக்கு வழங்கட்டுமே. மும்பை கிரிக்கெட் சங்கத்தின் நாட்டாமைத் தீர்ப்பை அங்கீகரிக்க முடியாது!
ஒரு கிரிக்கெட் சங்கம், விளையாட்டு தொடர்பாக வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் விளையாடுவதற்கு மட்டும்தான் தடை விதிக்க முடியும். தடைவிதிக்கப்பட்ட அந்த வீரர், ஸ்டேடியத்துக்குள் வரக்கூடாது என்று சொல்லும் அதிகாரம் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு இருக்க முடியாது.
திரைப்படத்தில் கதாநாயகர்களாக இருப்பதால் வாழ்க்கையிலும் கதாநாயகனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், தனக்கு எப்போதும் கதாநாயகனுக்கான முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு நடிகர் சமூகத்தில் பிரச்னைக்குரிய நபராக மாறுகிறார். இதைத்தான் தற்போது நடிகர் ஷாருக் கான் விவகாரத்திலும் நாம் காண முடிகிறது.
தினமணி
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்)
ஐ ஜி பிரமோத் குமார் கூட பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவலர்களிடம் கலாட்டா செய்கிறார். அவரை 5 வருடம் கோர்ட்டுக்கு உள்ள போக கூடாதுன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்களோ?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்)
ஆமாம் ஜெயிலுக்கு போக கூடாதுன்னு சொல்வாங்களோ?அசுரன் wrote:ஐ ஜி பிரமோத் குமார் கூட பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவலர்களிடம் கலாட்டா செய்கிறார். அவரை 5 வருடம் கோர்ட்டுக்கு உள்ள போக கூடாதுன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்களோ?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்)
போலீஸ் ஸ்டேஷனுக்கே வரக் கூடாதுன்னு சொன்னா - ஐஞ்சு வருஷ லீவில சுகமா சுத்தி வருவாரு பிரபு...மகா பிரபு wrote:ஆமாம் ஜெயிலுக்கு போக கூடாதுன்னு சொல்வாங்களோ?அசுரன் wrote:ஐ ஜி பிரமோத் குமார் கூட பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவலர்களிடம் கலாட்டா செய்கிறார். அவரை 5 வருடம் கோர்ட்டுக்கு உள்ள போக கூடாதுன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்களோ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்)
இது தண்டனை இல்லை !! சட்டத்தின் நடவடிக்கை பாயாமல் இருக்க கிரிக்கெட் சங்கம் எடுத்திருக்கும் சாதுர்யமான முடிவுதான்!!!
பத்மநாபன்- பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
Re: தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்)
ரேஸ்கல்ஸ் என்னா வேல பாத்துருக்கானுங்க...பத்மநாபன் wrote: இது தண்டனை இல்லை !! சட்டத்தின் நடவடிக்கை பாயாமல் இருக்க கிரிக்கெட் சங்கம் எடுத்திருக்கும் சாதுர்யமான முடிவுதான்!!!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்)
இது நல்லா இருக்கே..யினியவன் wrote:போலீஸ் ஸ்டேஷனுக்கே வரக் கூடாதுன்னு சொன்னா - ஐஞ்சு வருஷ லீவில சுகமா சுத்தி வருவாரு பிரபு...மகா பிரபு wrote:ஆமாம் ஜெயிலுக்கு போக கூடாதுன்னு சொல்வாங்களோ?அசுரன் wrote:ஐ ஜி பிரமோத் குமார் கூட பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவலர்களிடம் கலாட்டா செய்கிறார். அவரை 5 வருடம் கோர்ட்டுக்கு உள்ள போக கூடாதுன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்களோ?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: தலையங்கம்: நாட்டாமைத் தீர்ப்பு! (ஷாருக்கான் விவகாரம்)
ஊகும் - பண நாயகம் - அங்க சொன்னத மறந்துட்டீங்க...புரட்சி wrote: ஜன நாயகம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» சமச்சீர் கல்வி தீர்ப்பு - தினமணி தலையங்கம்
» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
» இந்திய கொடியை பறக்க விட்ட விவகாரம்: கோலியின் பாகிஸ்தான் ரசிகரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்
» அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி
» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
» இந்திய கொடியை பறக்க விட்ட விவகாரம்: கோலியின் பாகிஸ்தான் ரசிகரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்
» அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|