Latest topics
» கருத்துப்படம் 05/10/2024by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயேசு என்னும் மனிதர்
+6
கே. பாலா
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
hega
அசுரன்
shineson
10 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
இயேசு என்னும் மனிதர்
First topic message reminder :
"ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்" என்று தனது இரண்டாவது பத்தியில் இருந்து சலிப்பூட்டக் கூடிய வகையில் பெயர்களாகவே அந்நூல் தொடர்கிறது. இக்காலத்தில் அந்நூல் நாவலாக வெளிவந்திருக்குமானால் அதை எழுதியவர் கூட அது விற்பனையாகும் என்று நம்பியிருக்க மாட்டார். ஆனால், இன்று உலக அளவில் அதிகமாக விற்பனையாகும் நூல் அது. காரணம்? அது ஒரு மத நூல். மதமானது எத்தனை அபத்தமானதாய் இருந்தாலும் அதன் மூலம் மனிதனுக்குக் கிடைக்கும் போதை அலாதியானது.
இந்நூலை எழுதியவர்கள் ஏன் இப்படி ஆரம்பததிலேயே பெயர்களை அடுக்குகிறார்கள்? அவர்கள் அப்படி செய்வதற்கும் காரணம் இருந்தது. தங்களின் தலைவன் ஒரு தச்சனின் மகன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? அதற்குப் பதிலாக அவர் அரசகுலத்தவர் என்றால்? அதற்காக ஒரு வம்ச வரலாறை எழுதினால்? அரசகுலத்தவர்களில் வந்து கேட்பதற்கு எவனாவது மிஞ்சியிருக்கிறானாக்கும்? அந்தக் காலத்தில் வேறு எத்தனையோ கலகக்காரர்களும் கிளம்பியிருந்தார்கள். அவர்கள் தங்களது சில தொண்டரடிப் பொடிகளுடன் ரோமப்பேரரசுக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தார்கள். பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று. அவ்வளவு தான். அக்கால யூதர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.
சரி, இயேசு அரசகுலத்தவர் என்று சொல்லியாயிற்று. அது போதாதே. அவரைப் பிற மனிதர்களிடமிருந்து வேறுபட்டவராகக் காண்பிக்க வேண்டும். என்ன செய்வது? கன்னிப்பெண்கள் கர்ப்பமான கதைகளை அவர்கள் தங்களைச் சூழ்ந்திருந்த நாகரிகங்களிலிருந்து கேள்விப்பட்டிருக்க வேண்டும். இயேசு கன்னிமரியாளுக்குப் பிறந்தார் என்ற அடுத்த கற்பனை உருவாகிறது.
(சமீபத்தில் மரணமடைந்த வடகொரிய தலைவரான கிம் ஜோங் இல்-லின் பிறப்பையும், வாழ்க்கையையும், இறப்பையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கற்பனைகள் சூழ்ந்திருந்தன)
அடுத்ததாக வருகிறது இயேசுவின் அறிமுகக் காட்சி. நமது இப்போதைய தமிழ் திரைப்படங்களில் அதிகமாகக் கவனம் எடுக்கப்படும் கதாநாயகனின் அறிமுகக் காட்சி.. இந்த அறிமுகக் காட்சியில் யோவான்ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் போது ஆவியானவர் புறாவைப் போல் இறங்குகிறாராம். இது அவர்களுக்குப் போதவில்லை. அதனால் வானத்திலிருந்து ஒரு சத்தம் வேறு உண்டாகி "இவர் என்னுடைய நேசகுமாரன். இவர் மேல் பிரியமாயிருக்கிறேன்" என்று சொல்லிற்றாம்.
பின்பு அவர் பாலைவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிசாசினால் சோதிக்கப்படுகிறார் என்று கற்பனைகள் நீள்கின்றன.
அதிகமான மக்களால் பின்பற்றப்படும் இயேசு, ஒரு மலைக்கு அவர்களை அழைத்துச் சென்று சொற்பொழிவாற்றுகிறார். மூன்று அத்தியாயங்களுக்கு இந்த சொற்பொழிவு நீள்கிறது. அந்த மலைச் சொற்பொழிவு கூட அவரே நிகழ்த்தியதா, இல்லையென்றால் அவரைப் பின்பற்றியவர்கள் இட்டுக் கட்டியதா என்று தெளிவாக அறிய முடியவில்லை.
அடுத்ததாக இயேசு நிகழ்த்தும் அற்புதங்களும், அக்கால மத அறிவுஜீவிகளான பரிசேயர், சதுசேயர் ஆகியோரோடு இயேசு நிகழ்த்தும் விவாதங்களும், மக்களுக்கு ஆற்றும் உரைகளும் என இன்னும் சில அத்தியாயங்கள் நீள்கின்றன.
இறுதியில் அக்கால யூத மதவாதிகள் அவரை ரோமப் பேரரசின் ஆளுநரிடத்தில் ஒப்படைத்து அவருக்கு மரண தண்டனை அளிக்கும்படி கோருகின்றனர். அவர்களைத் திருப்திப்படுத்த விரும்பிய அவனும் அவரைச் சிலுவையில் அறைய உத்தரவிடுகிறான். இறுதியாக அனைத்து புனைவுகளுக்கும் கிரீடம் வைத்தது போல் ஒரு மிகுபுனைவு. இயேசு இறந்து மூன்று நாளில் உயிர்த்தெழுந்தாராம்.
இக்காலத்தில் கிறிஸ்தவ கோட்பாடுகள் என்று அறியப்படுபவை அனைத்தும் இயேசுவின் சீடர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் எழுதிய கடிதங்களில் இருந்து உருவானவையே. மலைச் சொற்பொழிவை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கிறேன் என்று எந்த கிறிஸ்தவராவது சொல்ல முடியுமா?
இப்படிப்பட்ட கற்பனைகளுக்கும், கோட்பாடுகளுக்குமிடையில் உண்மையை எங்கே போய்த் தேடுவது? உண்மையான இயேசு, மனிதராய் வாழ்ந்த இயேசு புதிய ஏற்பாட்டின் எந்த பக்கத்தில் இருக்கிறார்?
உண்மையான இயேசு என்னும் யூதர் தனது இனவெறி என்னும் முகத்தை அபூர்வமாக ஒருமுறை வெளிப்படுத்துகிறார். மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தன்னை நாடி வந்த வேற்றினப் பெண்ணை நாய் என்றும், யூதர்களைப் பிள்ளைகள் என்றும் அவர் அழைக்கிறார். இப்படிப்பட்ட அபூர்வமான இடங்களைத் தவிர பிற இடங்களில் இயேசுவின் முகத்தைக் காண்பது கஷ்டமாகத் தான் இருக்கிறது. அக்காலத்தில் எழுதப்பட்ட மதசார்பற்ற நூல் எதுவும் இயேசுவைப் பற்றி சரியாகக் குறிப்பிடுவதில்லை. நாக் ஹம்மாடியில் கிடைத்துள்ள பழைய சுவிசேஷ சுருள்கள் இயேசுவின் மனித முகத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் ஒரு சாதாரண கிறிஸ்தவன் இயேசுவின் முகத்துக்குப் பின்னாலிருக்கும் ஒளிவட்டத்தை அகற்ற விரும்புவதில்லை. எனவே இயேசுவின் உண்மையான வரலாறு கற்பனைக்குவியலுக்குள்ளே கேட்பாரில்லாமல் கிடக்கிறது.
(இயேசு வரப்போகிறார் என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தேயு 16:28- ஐ வாசிக்கவும்)
"ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்" என்று தனது இரண்டாவது பத்தியில் இருந்து சலிப்பூட்டக் கூடிய வகையில் பெயர்களாகவே அந்நூல் தொடர்கிறது. இக்காலத்தில் அந்நூல் நாவலாக வெளிவந்திருக்குமானால் அதை எழுதியவர் கூட அது விற்பனையாகும் என்று நம்பியிருக்க மாட்டார். ஆனால், இன்று உலக அளவில் அதிகமாக விற்பனையாகும் நூல் அது. காரணம்? அது ஒரு மத நூல். மதமானது எத்தனை அபத்தமானதாய் இருந்தாலும் அதன் மூலம் மனிதனுக்குக் கிடைக்கும் போதை அலாதியானது.
இந்நூலை எழுதியவர்கள் ஏன் இப்படி ஆரம்பததிலேயே பெயர்களை அடுக்குகிறார்கள்? அவர்கள் அப்படி செய்வதற்கும் காரணம் இருந்தது. தங்களின் தலைவன் ஒரு தச்சனின் மகன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? அதற்குப் பதிலாக அவர் அரசகுலத்தவர் என்றால்? அதற்காக ஒரு வம்ச வரலாறை எழுதினால்? அரசகுலத்தவர்களில் வந்து கேட்பதற்கு எவனாவது மிஞ்சியிருக்கிறானாக்கும்? அந்தக் காலத்தில் வேறு எத்தனையோ கலகக்காரர்களும் கிளம்பியிருந்தார்கள். அவர்கள் தங்களது சில தொண்டரடிப் பொடிகளுடன் ரோமப்பேரரசுக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தார்கள். பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று. அவ்வளவு தான். அக்கால யூதர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.
சரி, இயேசு அரசகுலத்தவர் என்று சொல்லியாயிற்று. அது போதாதே. அவரைப் பிற மனிதர்களிடமிருந்து வேறுபட்டவராகக் காண்பிக்க வேண்டும். என்ன செய்வது? கன்னிப்பெண்கள் கர்ப்பமான கதைகளை அவர்கள் தங்களைச் சூழ்ந்திருந்த நாகரிகங்களிலிருந்து கேள்விப்பட்டிருக்க வேண்டும். இயேசு கன்னிமரியாளுக்குப் பிறந்தார் என்ற அடுத்த கற்பனை உருவாகிறது.
(சமீபத்தில் மரணமடைந்த வடகொரிய தலைவரான கிம் ஜோங் இல்-லின் பிறப்பையும், வாழ்க்கையையும், இறப்பையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கற்பனைகள் சூழ்ந்திருந்தன)
அடுத்ததாக வருகிறது இயேசுவின் அறிமுகக் காட்சி. நமது இப்போதைய தமிழ் திரைப்படங்களில் அதிகமாகக் கவனம் எடுக்கப்படும் கதாநாயகனின் அறிமுகக் காட்சி.. இந்த அறிமுகக் காட்சியில் யோவான்ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் போது ஆவியானவர் புறாவைப் போல் இறங்குகிறாராம். இது அவர்களுக்குப் போதவில்லை. அதனால் வானத்திலிருந்து ஒரு சத்தம் வேறு உண்டாகி "இவர் என்னுடைய நேசகுமாரன். இவர் மேல் பிரியமாயிருக்கிறேன்" என்று சொல்லிற்றாம்.
பின்பு அவர் பாலைவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிசாசினால் சோதிக்கப்படுகிறார் என்று கற்பனைகள் நீள்கின்றன.
அதிகமான மக்களால் பின்பற்றப்படும் இயேசு, ஒரு மலைக்கு அவர்களை அழைத்துச் சென்று சொற்பொழிவாற்றுகிறார். மூன்று அத்தியாயங்களுக்கு இந்த சொற்பொழிவு நீள்கிறது. அந்த மலைச் சொற்பொழிவு கூட அவரே நிகழ்த்தியதா, இல்லையென்றால் அவரைப் பின்பற்றியவர்கள் இட்டுக் கட்டியதா என்று தெளிவாக அறிய முடியவில்லை.
அடுத்ததாக இயேசு நிகழ்த்தும் அற்புதங்களும், அக்கால மத அறிவுஜீவிகளான பரிசேயர், சதுசேயர் ஆகியோரோடு இயேசு நிகழ்த்தும் விவாதங்களும், மக்களுக்கு ஆற்றும் உரைகளும் என இன்னும் சில அத்தியாயங்கள் நீள்கின்றன.
இறுதியில் அக்கால யூத மதவாதிகள் அவரை ரோமப் பேரரசின் ஆளுநரிடத்தில் ஒப்படைத்து அவருக்கு மரண தண்டனை அளிக்கும்படி கோருகின்றனர். அவர்களைத் திருப்திப்படுத்த விரும்பிய அவனும் அவரைச் சிலுவையில் அறைய உத்தரவிடுகிறான். இறுதியாக அனைத்து புனைவுகளுக்கும் கிரீடம் வைத்தது போல் ஒரு மிகுபுனைவு. இயேசு இறந்து மூன்று நாளில் உயிர்த்தெழுந்தாராம்.
இக்காலத்தில் கிறிஸ்தவ கோட்பாடுகள் என்று அறியப்படுபவை அனைத்தும் இயேசுவின் சீடர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் எழுதிய கடிதங்களில் இருந்து உருவானவையே. மலைச் சொற்பொழிவை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கிறேன் என்று எந்த கிறிஸ்தவராவது சொல்ல முடியுமா?
இப்படிப்பட்ட கற்பனைகளுக்கும், கோட்பாடுகளுக்குமிடையில் உண்மையை எங்கே போய்த் தேடுவது? உண்மையான இயேசு, மனிதராய் வாழ்ந்த இயேசு புதிய ஏற்பாட்டின் எந்த பக்கத்தில் இருக்கிறார்?
உண்மையான இயேசு என்னும் யூதர் தனது இனவெறி என்னும் முகத்தை அபூர்வமாக ஒருமுறை வெளிப்படுத்துகிறார். மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தன்னை நாடி வந்த வேற்றினப் பெண்ணை நாய் என்றும், யூதர்களைப் பிள்ளைகள் என்றும் அவர் அழைக்கிறார். இப்படிப்பட்ட அபூர்வமான இடங்களைத் தவிர பிற இடங்களில் இயேசுவின் முகத்தைக் காண்பது கஷ்டமாகத் தான் இருக்கிறது. அக்காலத்தில் எழுதப்பட்ட மதசார்பற்ற நூல் எதுவும் இயேசுவைப் பற்றி சரியாகக் குறிப்பிடுவதில்லை. நாக் ஹம்மாடியில் கிடைத்துள்ள பழைய சுவிசேஷ சுருள்கள் இயேசுவின் மனித முகத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் ஒரு சாதாரண கிறிஸ்தவன் இயேசுவின் முகத்துக்குப் பின்னாலிருக்கும் ஒளிவட்டத்தை அகற்ற விரும்புவதில்லை. எனவே இயேசுவின் உண்மையான வரலாறு கற்பனைக்குவியலுக்குள்ளே கேட்பாரில்லாமல் கிடக்கிறது.
(இயேசு வரப்போகிறார் என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தேயு 16:28- ஐ வாசிக்கவும்)
வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
Re: இயேசு என்னும் மனிதர்
கருத்துக்கள் இட்ட அன்பு உறவுகள் ஜானி, சார்லஸ் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
சத்தியத்துக்கு செவியை விலக்கி கட்டுக்கதைகளுக்கு சாய்ந்து போகும் காலம் வரும். நாம் அறிந்ததை உலகறிய செய்வதில் தவறில்லையே.
மதிப்புக்குரிய தயாளன் ஐயா தங்கள் வார்த்தையை மீறியதற்காய் மன்னிக்கவும்.
சத்தியத்துக்கு செவியை விலக்கி கட்டுக்கதைகளுக்கு சாய்ந்து போகும் காலம் வரும். நாம் அறிந்ததை உலகறிய செய்வதில் தவறில்லையே.
மதிப்புக்குரிய தயாளன் ஐயா தங்கள் வார்த்தையை மீறியதற்காய் மன்னிக்கவும்.
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: இயேசு என்னும் மனிதர்
[quote="shineson"]"ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்" என்று தனது இரண்டாவது பத்தியில் இருந்து சலிப்பூட்டக் கூடிய வகையில் பெயர்களாகவே அந்நூல் தொடர்கிறது. இக்காலத்தில் அந்நூல் நாவலாக வெளிவந்திருக்குமானால் அதை எழுதியவர் கூட அது விற்பனையாகும் என்று நம்பியிருக்க மாட்டார். ஆனால், இன்று உலக அளவில் அதிகமாக விற்பனையாகும் நூல் அது. காரணம்? அது ஒரு மத நூல். மதமானது எத்தனை அபத்தமானதாய் இருந்தாலும் அதன் மூலம் மனிதனுக்குக் கிடைக்கும் போதை அலாதியானது.
இந்நூலை எழுதியவர்கள் ஏன் இப்படி ஆரம்பததிலேயே பெயர்களை அடுக்குகிறார்கள்? அவர்கள் அப்படி செய்வதற்கும் காரணம் இருந்தது. தங்களின் தலைவன் ஒரு தச்சனின் மகன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? அதற்குப் பதிலாக அவர் அரசகுலத்தவர் என்றால்? அதற்காக ஒரு வம்ச வரலாறை எழுதினால்? அரசகுலத்தவர்களில் வந்து கேட்பதற்கு எவனாவது மிஞ்சியிருக்கிறானாக்கும்? அந்தக் காலத்தில் வேறு எத்தனையோ கலகக்காரர்களும் கிளம்பியிருந்தார்கள். அவர்கள் தங்களது சில தொண்டரடிப் பொடிகளுடன் ரோமப்பேரரசுக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தார்கள். பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று. அவ்வளவு தான். அக்கால யூதர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.
இதற்கான விளக்கம் இதுதான்:
வம்ச அட்டவணை என இதை யூதா்கள் கூறுவாா்கள். உலகில் வாழும் ஒவ்வொரு யூதனுக்கும் வம்ச அட்டவணை இருக்கும். இருக்க வேண்டும். திருமண காாியம் மற்றும் யூத மத காாியம்
என வரும்போது வம்ச அட்டவணை அவா்களுக்கு தேவைப்பட்டது.
ஆதாமில் ஆரம்பித்து இப்பொழுது வரை உள்ள யூதன் வரை வம்ச அட்டவனையை சாியாக பராமாித்து வருவாா்கள். தாய் வழியாக கணக்கெடுத்தாலும் சாி, தகப்பன் வழியாகக் கணக்கெடுத்தாலும் சாி ஆதாமில் தொடங்கினால் இப்பொழுதுள்ள யூதனில் முடியும். இப்பொழுதுள்ள யூதனின் தாய் வழி ஆரம்பித்தால் அதுவும் ஆதாமில் சென்று முடியும்.
இப்படி யூதா்கள் தங்கள் இனத்தை, வம்ச அட்டவனையை பாதுகாத்து வருவதை பாிசுத்த வேதாகமத்திலிருந்து அறியலாம்.
ஆதாரம்:
1. மத்தேயு: 1:1-17 - வரை - தகப்பன் வழி வம்ச அட்டவணை
2. லூக்கா: 3:23-38 - வரை - தாய் வழி வம்ச அட்டவணை
யூதா்களின் ஆரம்பம் ஆபிரகாமிலிருந்து ஆரம்பமாகிறது.
ஆதாமின் மூலமாக மக்கள் பெருகி உலகம் முழுவதும் பரவி, பற்பல ஜாதிகளாக உருவெடுத்து பலுகி பெருகி விருத்தியடைந்தபோது, உண்மை தெய்வத்தை ஜனங்கள் மறந்து அவரை தேடாதே போனாா்கள். எனவே, உண்மை தெய்வத்தை தேடும் ஒரு மனிதனை தேவன் கண்டு பிடித்தாா். அவா்தான் ஆபிரகாம். அவா் தேவனுக்கு சொந்தமானவா் என்பதையும், அவரது பின்வரும் சந்ததியும் தேவனுக்கு சொந்தமான சந்ததி என அறியும்படிக்கும், தேவன் அவா்களில் ஒவ்வொரு ஆண்மகனையும் விருத்த சேதனம் (சுன்னத் - கத்னா) பண்ண வைத்தாா். காரணம்? இவா்கள் தேவனுக்கு சொந்தமானவா்கள் என அடையாளப்படுத்தவே.
அதுமட்டுமல்ல, வம்ச அட்டவணை இல்லாதவன் யூதனல்ல என்ற ஒரு கட்டுப்பாடு அக்காலத்தில் இருந்தது. தங்கள் இனம் மற்ற இனங்களோடு கலந்த விடக்கூடாது. அதனால் தேவன் ஏற்படுத்திய பாிசுத்த சந்ததி கலப்பினமாக மாறிவிடக்கூடாது என யூதா்கள் கருதினா். பாபிலோனுக்கு 70 ஆண்டுகள் சிறையிருப்புக்கு போன யூதா்கள், அங்குள்ள பாபிலோனிய மற்றும் பாரசீக பெண்களை திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளை பெற்று கலந்து கொண்டனா். அப்படிப்பட்டவா்களுக்கு வம்ச அட்டவனை இல்லை. எனவே, வம்ச அட்டவனை இல்லாதவா்கள் யூத சமுதாயத்தினின்று தள்ளப்பட்டு, சமாாியா் என அழைக்கப்பட்டனா்.
அக்காலங்களில் யூதா்களில் பிறந்த யாராயிருந்தாலும் வம்ச அட்டவணை இல்லாதிருந்தால் அவா்கள் யூத சமுதாயத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டாா்கள். புறக்கணிக்கப்பட்டவா்களுக்கு வாழ்வதற்கு இஸ்ரேல் தேசத்தில் சமாாியா என்ற பகுதியில் இடம் ஒதுக்கி தரப்பட்டது.
இஸ்ரேல் 3 பகுதிகளாக பிாிக்கப்பட்டிருந்தது.
1. வடக்கு பகுதிக்கு - கலிலேயா
2. தெற்கு பகுதிக்கு - யூதேயா
3. இவையிரண்டுக்கும் மத்தியில் உள்ள பகுதி - சமாாியா
வம்ச அட்டவணை இல்லாதவா்கள் சமாாியா பகுதியில் வாழ்ந்து வந்தாா்கள்.
பின்னாட்களில்...
மோசேயின் காலத்தில் தனி நாடு பிரயாணம் மேற்கொண்டு யோசுவாவின் நாட்களில் இஸ்ரேல் தேசம் உருவானது. அதில் யூதா்கள் வாழ்ந்து வந்தனா். தீா்க்கதாிசி சாமுவேலின் நாட்களில் யூதா்கள் தங்களுக்கு ராஜா வேண்டுமென்று கேட்டபோது தேவன் சவுலை ராஜாவாக ஏற்படுத்தினாா். பின்பு தாவீது, அவரது மகன் சாலமோன் ஆட்சி செய்தனா். சாலமோனின் மகன் ரெகோபெயாமின் நாட்களில் இஸ்ரேல் வடக்கு ராஜயம், தெற்கு ராஜயம் என 2 ஆக பிாிந்தது.
வடக்கு ராஜ்யத்தில் 20 ராஜாக்களும், தெற்கு ராஜ்யத்தில் 21 ராஜாக்களும் தோன்றி யூதா்கள் ஆளுகை செய்து வந்தனா்.
சாித்திரம் இப்படி இருக்க ...நிற்க.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தச்சு குடும்பத்தில் பிறந்தாா் என அழுத்தமாக பதிவிட்டவா் கூறியுள்ளாா்.
அதை எந்த ஒரு தீா்க்கதாிசியும், சீஷனும் மறைக்கவில்லை, மறுக்கவுமில்லை. அதனால் எந்த ஒரு இழப்பும் அவமானமும் இல்லை. தீா்க்கதாிசனம் நிறைவேறும்படி அவா் தாவீதின் வம்சத்தில் பிறக்கவேண்டியதாயிருந்தது. பிறந்தாா்.
இயேசு இவ்வுலகிற்கு மனித அவதாரம் எடுப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “அவா் தாவீதின் வம்சத்தில் தோன்றூா் ” எனஅவரைப்பற்றி பல காலகட்டங்களில் பல்வேறு தீா்க்கதாிசிகள் தீா்க்கதாிசனம் கூறியுள்ளனா்.
பெருமைக்காக வம்ச அட்டவணையை எழுதினால் அக்கால யூதா்கள் அதை அனுமதித்திருப்பாா்களா? பொய்யாக எழுதினால் அக்கால யூதா்கள் கண்டுபிடித்து சமாாியாவிற்கெ அனுப்பியிருக்க மாட்டாா்களா? வம்ச அட்டவணை தவறாக இருக்கும் பட்சத்தில், இயேசுவின் 8 ம் நாளில் விருத்த செதனம் பண்ண தேவாலயத்திற்குள்ளேயே யூதா்கள் அனுமதித்து இருக்க மாட்டாா்களே?! ஜெபாலயத்தில் ஏசாயாவின் ஏட்டுச்சுருளை வாசிக்க அனுமதித்து இருக்க மாட்டாா்களே. இன்னும் எத்தனை எத்தனை கேள்விகள் இருக்கிறது தொியுமா?
வேத புத்தகம் வியாபாரத்திற்காக வெளியிடப்பட்ட புத்தகம் அல்ல. நம் வாழ்வை வழிநடத்திட, ஆசீா்வதிக்கப்பட தேவனால் அருளப்பட்ட விலைமதிப்பற்ற வேத புத்தகம் அது.
அது போதை அல்ல. குழப்பத்தில் உள்ளோரை தெளிவிக்கும் ஜீவ புத்தகம். பைபிள் தவறு என்று சொன்ன எத்தனையோ பெரை மாற்றி, ஆண்டவருக்கே சேவை செய்ய வைத்த ஜீவபுத்தகம் இது என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் அறிவான்.
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான் என்பது சலிப்பூட்டக்கூடியது அல்ல. நம்முன்னோா்களை நினைவுகூா்வது மகிழ்ச்சிக்கூியது.
தொடரும்... தங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் வரும் நண்பரே...
இந்நூலை எழுதியவர்கள் ஏன் இப்படி ஆரம்பததிலேயே பெயர்களை அடுக்குகிறார்கள்? அவர்கள் அப்படி செய்வதற்கும் காரணம் இருந்தது. தங்களின் தலைவன் ஒரு தச்சனின் மகன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? அதற்குப் பதிலாக அவர் அரசகுலத்தவர் என்றால்? அதற்காக ஒரு வம்ச வரலாறை எழுதினால்? அரசகுலத்தவர்களில் வந்து கேட்பதற்கு எவனாவது மிஞ்சியிருக்கிறானாக்கும்? அந்தக் காலத்தில் வேறு எத்தனையோ கலகக்காரர்களும் கிளம்பியிருந்தார்கள். அவர்கள் தங்களது சில தொண்டரடிப் பொடிகளுடன் ரோமப்பேரரசுக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தார்கள். பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று. அவ்வளவு தான். அக்கால யூதர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.
இதற்கான விளக்கம் இதுதான்:
வம்ச அட்டவணை என இதை யூதா்கள் கூறுவாா்கள். உலகில் வாழும் ஒவ்வொரு யூதனுக்கும் வம்ச அட்டவணை இருக்கும். இருக்க வேண்டும். திருமண காாியம் மற்றும் யூத மத காாியம்
என வரும்போது வம்ச அட்டவணை அவா்களுக்கு தேவைப்பட்டது.
ஆதாமில் ஆரம்பித்து இப்பொழுது வரை உள்ள யூதன் வரை வம்ச அட்டவனையை சாியாக பராமாித்து வருவாா்கள். தாய் வழியாக கணக்கெடுத்தாலும் சாி, தகப்பன் வழியாகக் கணக்கெடுத்தாலும் சாி ஆதாமில் தொடங்கினால் இப்பொழுதுள்ள யூதனில் முடியும். இப்பொழுதுள்ள யூதனின் தாய் வழி ஆரம்பித்தால் அதுவும் ஆதாமில் சென்று முடியும்.
இப்படி யூதா்கள் தங்கள் இனத்தை, வம்ச அட்டவனையை பாதுகாத்து வருவதை பாிசுத்த வேதாகமத்திலிருந்து அறியலாம்.
ஆதாரம்:
1. மத்தேயு: 1:1-17 - வரை - தகப்பன் வழி வம்ச அட்டவணை
2. லூக்கா: 3:23-38 - வரை - தாய் வழி வம்ச அட்டவணை
யூதா்களின் ஆரம்பம் ஆபிரகாமிலிருந்து ஆரம்பமாகிறது.
ஆதாமின் மூலமாக மக்கள் பெருகி உலகம் முழுவதும் பரவி, பற்பல ஜாதிகளாக உருவெடுத்து பலுகி பெருகி விருத்தியடைந்தபோது, உண்மை தெய்வத்தை ஜனங்கள் மறந்து அவரை தேடாதே போனாா்கள். எனவே, உண்மை தெய்வத்தை தேடும் ஒரு மனிதனை தேவன் கண்டு பிடித்தாா். அவா்தான் ஆபிரகாம். அவா் தேவனுக்கு சொந்தமானவா் என்பதையும், அவரது பின்வரும் சந்ததியும் தேவனுக்கு சொந்தமான சந்ததி என அறியும்படிக்கும், தேவன் அவா்களில் ஒவ்வொரு ஆண்மகனையும் விருத்த சேதனம் (சுன்னத் - கத்னா) பண்ண வைத்தாா். காரணம்? இவா்கள் தேவனுக்கு சொந்தமானவா்கள் என அடையாளப்படுத்தவே.
அதுமட்டுமல்ல, வம்ச அட்டவணை இல்லாதவன் யூதனல்ல என்ற ஒரு கட்டுப்பாடு அக்காலத்தில் இருந்தது. தங்கள் இனம் மற்ற இனங்களோடு கலந்த விடக்கூடாது. அதனால் தேவன் ஏற்படுத்திய பாிசுத்த சந்ததி கலப்பினமாக மாறிவிடக்கூடாது என யூதா்கள் கருதினா். பாபிலோனுக்கு 70 ஆண்டுகள் சிறையிருப்புக்கு போன யூதா்கள், அங்குள்ள பாபிலோனிய மற்றும் பாரசீக பெண்களை திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளை பெற்று கலந்து கொண்டனா். அப்படிப்பட்டவா்களுக்கு வம்ச அட்டவனை இல்லை. எனவே, வம்ச அட்டவனை இல்லாதவா்கள் யூத சமுதாயத்தினின்று தள்ளப்பட்டு, சமாாியா் என அழைக்கப்பட்டனா்.
அக்காலங்களில் யூதா்களில் பிறந்த யாராயிருந்தாலும் வம்ச அட்டவணை இல்லாதிருந்தால் அவா்கள் யூத சமுதாயத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டாா்கள். புறக்கணிக்கப்பட்டவா்களுக்கு வாழ்வதற்கு இஸ்ரேல் தேசத்தில் சமாாியா என்ற பகுதியில் இடம் ஒதுக்கி தரப்பட்டது.
இஸ்ரேல் 3 பகுதிகளாக பிாிக்கப்பட்டிருந்தது.
1. வடக்கு பகுதிக்கு - கலிலேயா
2. தெற்கு பகுதிக்கு - யூதேயா
3. இவையிரண்டுக்கும் மத்தியில் உள்ள பகுதி - சமாாியா
வம்ச அட்டவணை இல்லாதவா்கள் சமாாியா பகுதியில் வாழ்ந்து வந்தாா்கள்.
பின்னாட்களில்...
மோசேயின் காலத்தில் தனி நாடு பிரயாணம் மேற்கொண்டு யோசுவாவின் நாட்களில் இஸ்ரேல் தேசம் உருவானது. அதில் யூதா்கள் வாழ்ந்து வந்தனா். தீா்க்கதாிசி சாமுவேலின் நாட்களில் யூதா்கள் தங்களுக்கு ராஜா வேண்டுமென்று கேட்டபோது தேவன் சவுலை ராஜாவாக ஏற்படுத்தினாா். பின்பு தாவீது, அவரது மகன் சாலமோன் ஆட்சி செய்தனா். சாலமோனின் மகன் ரெகோபெயாமின் நாட்களில் இஸ்ரேல் வடக்கு ராஜயம், தெற்கு ராஜயம் என 2 ஆக பிாிந்தது.
வடக்கு ராஜ்யத்தில் 20 ராஜாக்களும், தெற்கு ராஜ்யத்தில் 21 ராஜாக்களும் தோன்றி யூதா்கள் ஆளுகை செய்து வந்தனா்.
சாித்திரம் இப்படி இருக்க ...நிற்க.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தச்சு குடும்பத்தில் பிறந்தாா் என அழுத்தமாக பதிவிட்டவா் கூறியுள்ளாா்.
அதை எந்த ஒரு தீா்க்கதாிசியும், சீஷனும் மறைக்கவில்லை, மறுக்கவுமில்லை. அதனால் எந்த ஒரு இழப்பும் அவமானமும் இல்லை. தீா்க்கதாிசனம் நிறைவேறும்படி அவா் தாவீதின் வம்சத்தில் பிறக்கவேண்டியதாயிருந்தது. பிறந்தாா்.
இயேசு இவ்வுலகிற்கு மனித அவதாரம் எடுப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “அவா் தாவீதின் வம்சத்தில் தோன்றூா் ” எனஅவரைப்பற்றி பல காலகட்டங்களில் பல்வேறு தீா்க்கதாிசிகள் தீா்க்கதாிசனம் கூறியுள்ளனா்.
பெருமைக்காக வம்ச அட்டவணையை எழுதினால் அக்கால யூதா்கள் அதை அனுமதித்திருப்பாா்களா? பொய்யாக எழுதினால் அக்கால யூதா்கள் கண்டுபிடித்து சமாாியாவிற்கெ அனுப்பியிருக்க மாட்டாா்களா? வம்ச அட்டவணை தவறாக இருக்கும் பட்சத்தில், இயேசுவின் 8 ம் நாளில் விருத்த செதனம் பண்ண தேவாலயத்திற்குள்ளேயே யூதா்கள் அனுமதித்து இருக்க மாட்டாா்களே?! ஜெபாலயத்தில் ஏசாயாவின் ஏட்டுச்சுருளை வாசிக்க அனுமதித்து இருக்க மாட்டாா்களே. இன்னும் எத்தனை எத்தனை கேள்விகள் இருக்கிறது தொியுமா?
வேத புத்தகம் வியாபாரத்திற்காக வெளியிடப்பட்ட புத்தகம் அல்ல. நம் வாழ்வை வழிநடத்திட, ஆசீா்வதிக்கப்பட தேவனால் அருளப்பட்ட விலைமதிப்பற்ற வேத புத்தகம் அது.
அது போதை அல்ல. குழப்பத்தில் உள்ளோரை தெளிவிக்கும் ஜீவ புத்தகம். பைபிள் தவறு என்று சொன்ன எத்தனையோ பெரை மாற்றி, ஆண்டவருக்கே சேவை செய்ய வைத்த ஜீவபுத்தகம் இது என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் அறிவான்.
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான் என்பது சலிப்பூட்டக்கூடியது அல்ல. நம்முன்னோா்களை நினைவுகூா்வது மகிழ்ச்சிக்கூியது.
தொடரும்... தங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் வரும் நண்பரே...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: இயேசு என்னும் மனிதர்
shineson wrote:
சரி, இயேசு அரசகுலத்தவர் என்று சொல்லியாயிற்று. அது போதாதே. அவரைப் பிற மனிதர்களிடமிருந்து வேறுபட்டவராகக் காண்பிக்க வேண்டும். என்ன செய்வது? கன்னிப்பெண்கள் கர்ப்பமான கதைகளை அவர்கள் தங்களைச் சூழ்ந்திருந்த நாகரிகங்களிலிருந்து கேள்விப்பட்டிருக்க வேண்டும். இயேசு கன்னிமரியாளுக்குப் பிறந்தார் என்ற அடுத்த கற்பனை உருவாகிறது.
(சமீபத்தில் மரணமடைந்த வடகொரிய தலைவரான கிம் ஜோங் இல்-லின் பிறப்பையும், வாழ்க்கையையும், இறப்பையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கற்பனைகள் சூழ்ந்திருந்தன)
மத்தேயு நற் செய்தி நூல் இயேசுகிறிஸ்துவின் வம்ச வரலாறுடன் தொடங்குகிறது. இது அவருடைய தகப்பன் (யோசேப்பின்) வம்ச வழியைக் காட்டுகிறது. யூதா்களில் தந்தை வழி வம்சத்தைப் பாா்ப்பதே பாரம்பா்யமான வழக்கம். (மத்தேயு: 1:16).
யோசேப்பு இயேசுவின் உண்மையான உடல்வழி தந்தையாக இல்லாவிட்டாலும், (மத்தேயு: 1:18 - “... மாியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவா்கள் கூடி வருமுன்னே, அவள் பாிசுத்தாவியினாலே கா்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளை தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில், கா்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்கு காணப்பட்டு : தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மாியாளை சோ்த்துக் கொள்ள ஐயப்படாதே: ” என்று சொல்லியிருப்பதை கவனிக்க வேண்டும்.
உலக அமைப்பின்படி சட்டாீதியான தகப்பன் அவரே.
மேசியா (இயேசு) ஆபிரகாமின் சந்ததியிலும் (ஆதியாகமம்: 12:3, 22:18, கலாத்தியா்: 3:16), தாவீதின் சந்ததியிலும் (2சாமுவேல்: 7:12-19, எரேமியா: 23:5) தோன்றுவாா் என்று தீா்க்கதாிசனமாக முன்பே வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
கன்னியின் வயிற்றில் இயேசு தோன்றுவாா் என்பது கற்பனை அல்ல, எந்த நாகாீகத்திலுமிருந்து கற்றுக் கொண்டதுமல்ல.
இயேசு இவ்வுலகில் தோன்றுவதற்கு முன்னே பல 100 வருடங்களுக்கு முன்பே வாழ்ந்த ஏசாயா தீா்க்கதாிசி தீா்க்கதாிசனமாக இவ்வாறு கூறியுள்ளாா்:
ஏசாயா: 7:14 - “...இதோ ஒரு கன்னிகை கா்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று போிடுவாள்”
ஏசாயா: 9:6-7 - “ நமக்கு ஒரு பாலகன் பிறந்தாா்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டாா்; கா்த்தத்துவம் அவா் தோளின்மேலிருக்கும்; அவா் நாமம் அதிசயமானவா்; ஆலோசனைக் கா்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவா் திடப்படுத்தி, அதை இது முதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கா்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும் , அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கா்த்தருடைய வைராக்கியம் இதை செய்யும்”
மத்தேயுவும் லூக்காவும் இயேசு கிறிஸ்து பாிசுத்தாவியினால் கன்னி மாியாளிடத்தில் உற்பத்தியாகி, மானிட தகப்பன் ஒருவாின் குறுக்கீடு இல்லாமல் பிறந்தவா் என கூறுகின்றனா். (மத்தேயு: 1:18; லூக்கா: 1:34,35 - “அதற்கு மாியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருசனை அறியேனே? என்றாள். தேவதூதன் அவளுக்கு பிரதியுத்திரமாக: பாிசுத்தாவி உன்மேல்வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால், உன்னிடத்தில் பிறக்கும் பாிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்”.
இவ்வசனங்கள் இயேசுகிறிஸ்தவின் கன்னிப்பிறப்பை உறுதிப்படுத்துகின்றன. இந்த வேத வசனங்களை விசுவாசிக்கிறவா்கள் ஏற்றுக் கொள்வாா்கள். ஏற்றுக் கொள்ளாதவா்கள் விசுவாசிக்க மாட்டாா்கள்.
மத்தேயு: 1:23 - ல் உள்ள “கன்னிகை” என்ற சொல், கிரேக்க சொல்: “பாா்தெனாஸ்” என்பதின் சாியான மொழி பெயா்ப்பாகும். இது கிரேக்க (செப்துவஜிந்த்) வேதாகமத்தில் ஏசாயா: 7:14 - ல் காணப்படுகிறது.
“கன்னிகை” என்பதற்கூிய எபிரேயச் சொல்லான “அல்மா” - வை ஏசாயா பயன்படுத்தும்போது , அதன் பொருள் “ திருமண வயதடைந்த ஒரு கன்னிகைப் பெண் ” என்பதாகும்.
இது கன்னித் தன்மை என்னும் பொருள் தவிர , பழைய ஏற்பாட்டில் வேறு எந்த ஒரு அா்த்தத்தையும் தரவில்லை. பயன்படுத்தப்படவுமில்லை. (ஆதியாகமம்: 24:43; உன்னதப் பாட்டு: 1:3, 6:8).
எனவே, பழைய ஏற்பாட்டில் ஏசாயாவும், புதிய ஏற்பாட்டில் மத்தேயுவும், லூக்காவும், இயெசுவின் தாயின் கன்னித் தன்மையைக் குறித்து உறுதியாக எழுதியுள்ளனா்.
ஒரு கன்னிகையிடம் இயேசு பிறந்ததன் முக்கியத்தவம் தேவைக்கு மேலாக வற்புறுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.
நம்முடைய பாவங்களுக்காக பாவ நிவா்த்தி செய்யப்பட்டு கிரயம் செலுத்தி நமக்கு இரட்சிப்பை சம்பாதித்து தர வேண்டுமானால், மீட்பரான அவா் மானிட உருவில் வெளிப்பட வேண்டும். முழுவதும் மனிதனாயிருக்க வேண்டும். முற்றிலும் தெய்வமாயிருக்க வேண்டும். (எபிரேயா்: 7:25,26). இயேசு கன்னிகையிடம் பிறந்ததுஇந்த 3 தேவைகளையும் பூா்த்தி செய்தது. அல்லது இயேசு கிறிஸ்து ஒரு மானிடனாக அவதாிக்க வேண்டுமானால், அவா் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து பிறக்க வெண்டும்.
அவா் முற்றிலும் பாிசுத்தமுள்ளவராக இருக்க வேண்டுமானால், அவா் பாிசுத்தாவியினால் உற்பத்தியாக வேண்டும். (எபிரேயா்: 4:15).
அவா் பாிசுத்தமாயிருக்க வேண்டுமானால் தேவன் அவருடைய பிதாவாயிருக்க வேண்டும். அதன் பலனாக அவருடைய கருவுறுதலானது .யற்கையான முறையல்ல. ஆனால், இயற்கை சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக முறையில் நடந்தது.
பிறக்கப்போகும் தெய்வீகக் குழந்தை “தேவ குமாரன்” என்றழைக்கப்படும் (லூக்கா: 1:35).
இயேசு கிறிஸ்து இந்த உலகில் வெளிப்பட்டிருந்தபோது, அவா் ஒரு தெய்வீக மனிதனாயிருந்தாா். அவாிடம் 2 தன்மைகள் இருந்தன.
1. தெய்வீத் தன்மை
2. பாவமற்ற மானிடத் தன்மை
இயேசு நம்மைப்போல ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்து தன்பங்களை அனுபவித்ததினால், நம்முடைய பெலவீனங்களைக் கண்டு, மனதுருகிறாா். (எபிரேயா்: 4:15,16).
அவா் பாிசுத்த தேவ குமாரனானபடியால், நம்மை பாவ அடிமைத் தனத்திலிருந்தும், சாத்தானின் வல்லமையிலிருந்தும் மீட்க வல்லமையுண்டு. (அப்பொஸ்தலா்: 26:18; கொலோசெயா்: 2:15; எபிரேயா்: 2:14, 7:25).
அவாிடத்தில் தெய்வீகத் தனமையும், மானிடத் தன்மையும் இருப்பதால் - அவா் ஒவ்வொரவருடைய பாவத்தக்கும் - நிவாரண பலியாகவும், அவரே நமக்காக பிதாவிடம் பாிந்த பேசும் மகா பிரதான ஆசாாியராகவும் இருக்கிற தகுதியை பெற்றிரக்கிறாா். (எபிரேயா்: 2:9-18, 5:1-9, 7:24-28, 10:4-12).
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: இயேசு என்னும் மனிதர்
shineson wrote:"
அடுத்ததாக வருகிறது இயேசுவின் அறிமுகக் காட்சி. நமது இப்போதைய தமிழ் திரைப்படங்களில் அதிகமாகக் கவனம் எடுக்கப்படும் கதாநாயகனின் அறிமுகக் காட்சி.. இந்த அறிமுகக் காட்சியில் யோவான்ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் போது ஆவியானவர் புறாவைப் போல் இறங்குகிறாராம். இது அவர்களுக்குப் போதவில்லை. அதனால் வானத்திலிருந்து ஒரு சத்தம் வேறு உண்டாகி "இவர் என்னுடைய நேசகுமாரன். இவர் மேல் பிரியமாயிருக்கிறேன்" என்று சொல்லிற்றாம்.
பின்பு அவர் பாலைவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிசாசினால் சோதிக்கப்படுகிறார் என்று கற்பனைகள் நீள்கின்றன.
அதிகமான மக்களால் பின்பற்றப்படும் இயேசு, ஒரு மலைக்கு அவர்களை அழைத்துச் சென்று சொற்பொழிவாற்றுகிறார். மூன்று அத்தியாயங்களுக்கு இந்த சொற்பொழிவு நீள்கிறது. அந்த மலைச் சொற்பொழிவு கூட அவரே நிகழ்த்தியதா, இல்லையென்றால் அவரைப் பின்பற்றியவர்கள் இட்டுக் கட்டியதா என்று தெளிவாக அறிய முடியவில்லை.
அடுத்ததாக இயேசு நிகழ்த்தும் அற்புதங்களும், அக்கால மத அறிவுஜீவிகளான பரிசேயர், சதுசேயர் ஆகியோரோடு இயேசு நிகழ்த்தும் விவாதங்களும், மக்களுக்கு ஆற்றும் உரைகளும் என இன்னும் சில அத்தியாயங்கள் நீள்கின்றன.
இறுதியில் அக்கால யூத மதவாதிகள் அவரை ரோமப் பேரரசின் ஆளுநரிடத்தில் ஒப்படைத்து அவருக்கு மரண தண்டனை அளிக்கும்படி கோருகின்றனர். அவர்களைத் திருப்திப்படுத்த விரும்பிய அவனும் அவரைச் சிலுவையில் அறைய உத்தரவிடுகிறான். இறுதியாக அனைத்து புனைவுகளுக்கும் கிரீடம் வைத்தது போல் ஒரு மிகுபுனைவு. இயேசு இறந்து மூன்று நாளில் உயிர்த்தெழுந்தாராம்.
இக்காலத்தில் கிறிஸ்தவ கோட்பாடுகள் என்று அறியப்படுபவை அனைத்தும் இயேசுவின் சீடர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் எழுதிய கடிதங்களில் இருந்து உருவானவையே. மலைச் சொற்பொழிவை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கிறேன் என்று எந்த கிறிஸ்தவராவது சொல்ல முடியுமா?
இப்படிப்பட்ட கற்பனைகளுக்கும், கோட்பாடுகளுக்குமிடையில் உண்மையை எங்கே போய்த் தேடுவது? உண்மையான இயேசு, மனிதராய் வாழ்ந்த இயேசு புதிய ஏற்பாட்டின் எந்த பக்கத்தில் இருக்கிறார்?
உண்மையான இயேசு என்னும் யூதர் தனது இனவெறி என்னும் முகத்தை அபூர்வமாக ஒருமுறை வெளிப்படுத்துகிறார். மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தன்னை நாடி வந்த வேற்றினப் பெண்ணை நாய் என்றும், யூதர்களைப் பிள்ளைகள் என்றும் அவர் அழைக்கிறார். இப்படிப்பட்ட அபூர்வமான இடங்களைத் தவிர பிற இடங்களில் இயேசுவின் முகத்தைக் காண்பது கஷ்டமாகத் தான் இருக்கிறது. அக்காலத்தில் எழுதப்பட்ட மதசார்பற்ற நூல் எதுவும் இயேசுவைப் பற்றி சரியாகக் குறிப்பிடுவதில்லை. நாக் ஹம்மாடியில் கிடைத்துள்ள பழைய சுவிசேஷ சுருள்கள் இயேசுவின் மனித முகத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் ஒரு சாதாரண கிறிஸ்தவன் இயேசுவின் முகத்துக்குப் பின்னாலிருக்கும் ஒளிவட்டத்தை அகற்ற விரும்புவதில்லை. எனவே இயேசுவின் உண்மையான வரலாறு கற்பனைக்குவியலுக்குள்ளே கேட்பாரில்லாமல் கிடக்கிறது.
(இயேசு வரப்போகிறார் என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தேயு 16:28- ஐ வாசிக்கவும்)
இதில் காணும் அனைத்து சந்தேகக் கேள்வி கணைகள் அனைத்தும் - தாங்கள் கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் நோக்கத்தை விட - துவேஷத்தை வெளிகாட்டும் பகுதியாக இருப்பதாகவே உணருகிறேன். நிறைய நையாண்டிகள் நக்கல்கள் தெளிவாகவே தொிகிறது. அரைகுறையாக வேதத்தை வாசித்தோ அல்லது யாரோ சொல்லிக் கொடுத்ததை ஒப்புவிக்கும் சிறு பிள்ளையை போலவோ காணப்படுகிறது.
நீங்கள் கேட்கும் எந்தக் கேள்விகளுக்கும் எங்களிடம் தெளிவான விளக்கமான பதில்கள் எப்போதும் உண்டு. அதை கண்ணியமான முறையில் அறிந்து கொள்ளும் நோக்கத்தொடு கேட்பீா்களானால் நிச்சயம் பதிலளிக்க ஒவ்வொரு கிறிஸ்தவரும் கடமைப்பட்டுள்ளனா்.
ஆனால், அது தவிா்த்து, தாங்கள் பிரபலமடைவதற்கு இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவது அழகல்ல. உணா்வுகளை பாதிக்கும் வண்ணம் எழுதி அனைவா் பாா்வையும் தன்மேல்படும்படி கவன ஈா்ப்பு செய்வது சமீப காலமாக நடந்து வருகிறது. இது தவிா்க்கப்பட வேண்டியது அவசியம்.
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு ஏற்கெனவே கிறிஸ்தவ பகுதியில் உள்ள கட்டுரைகளை வாசித்துப்பாா்க்கவும். போதுமான அளவு பதில் அங்கேயே உண்டு.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: இயேசு என்னும் மனிதர்
சர்ச்சைக்குரிய தலைப்பை .....மிக ஆரோக்கியமான விவாதமாக கொண்டு செல்லும் சகோதரி ஹேகா ,,,சகோதரர் சார்லஸ் ....இருவருக்கும் பாராட்டுக்கள் .
Re: இயேசு என்னும் மனிதர்
மிக்க நன்றி ஹேகா அக்கா மற்றும் சார்லஸ் சகோதரருக்கு ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: இயேசு என்னும் மனிதர்
ஹேகாவுக்கும், சார்லசுக்கும் வாழ்த்துகள்.
இதுபோல் ஆரோக்கியமான சர்ச்சைகள் இருப்பின் அதை என்றும் வரவேற்போம்.
இதுபோல் ஆரோக்கியமான சர்ச்சைகள் இருப்பின் அதை என்றும் வரவேற்போம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இயேசு என்னும் மனிதர்
யினியவன் wrote:ஹேகாவுக்கும், சார்லசுக்கும் வாழ்த்துகள்.
இதுபோல் ஆரோக்கியமான சர்ச்சைகள் இருப்பின் அதை என்றும் வரவேற்போம்.
ஆரோக்கியமான சர்ச்சைகள் வரவேற்க்கப்பட வேண்டியதே...இனியவன்...நான் இல்லை என்று சொல்லவில்லை.யினியவன் wrote:ஹேகாவுக்கும், சார்லசுக்கும் வாழ்த்துகள்.
இதுபோல் ஆரோக்கியமான சர்ச்சைகள் இருப்பின் அதை என்றும் வரவேற்போம்.
புரியாமல் பேசுகிறவனை புரியவைக்க முயற்சி செய்யலாம், அறியாமல் செய்கிறவனை அறிந்துகொள்ளும்படி சொல்லலாம், தெரியாமல் பேசுகிறவனை தெரிந்துகொள்ளச் செய்யலாம்...ஆனால் ஒன்றுமே தெரியாததுபோல், புரியாததுபோல், அறியாததுபோல் நடிப்பவர்களிடத்தில் எந்த ஆரோக்கியமான சர்ச்சைகளாலும் ஒரு பிரயோசனமும் ஆகப்போவதில்லை என்பது என் எண்ணம்.
அந்த வகையில் ஹேகாவும் தம்பி சார்லஸ்சும் விழலுக்கு நீரிறைக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.
ஐம்பது பதிவுகள் கூட பதியாத ஒரு புதியவர் பதியும் பதிவாக நான் இதைக் கருதவில்லை. வேன்றுமென்றே, விஷமத்தனத்துடன், ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன்தான் இந்த திரியை இவர் ஆரம்பித்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவரிடத்தில் போய் விளக்கம் சொல்லிக்கொண்டு இருப்பது, கசாப்புக்கடைக்காரனிடம் ஜீவாகாருண்யம் குறித்து விவாதிப்பதற்கு ஒப்பானது ஆகும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: இயேசு என்னும் மனிதர்
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
வேன்றுமென்றே, விஷமத்தனத்துடன், ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன்தான் இந்த திரியை இவர் ஆரம்பித்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவரிடத்தில் போய் விளக்கம் சொல்லிக்கொண்டு இருப்பது, கசாப்புக்கடைக்காரனிடம் ஜீவாகாருண்யம் குறித்து விவாதிப்பதற்கு ஒப்பானது ஆகும்.
சரியாக சொன்னீர்கள் ஐய்யா!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இயேசு என்னும் மனிதர்
எந்த ஒரு காரியத்தையும் என்னை கொண்டு கடவுள் அனுமதிக்கும் போது அதற்கும் காரணம் இருக்கும் என நான் நம்புகிறன். இந்த திரியில்பதிவுகளிட்டவர் யாரென எனக்கு தெரியாது, அது தெரிய வேண்டியதும் இல்லை.
ஆனால் அவர் குறிப்பிட்ட எந்த நோக்கத்திற்காக இப்பதிவை பதிந்தாரோஅந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதும், இப்பதிவுகளால் இன்னும் இன்னும் இயேசுவின் சுவிசேஷம் அறிவிக்கபடவே வாய்ப்பு செய்தார் என்பதும் மட்டும் நிஜமல்லவா..
“சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.” 2 தீமோத்தேயு 4:2
ஆனால் அவர் குறிப்பிட்ட எந்த நோக்கத்திற்காக இப்பதிவை பதிந்தாரோஅந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதும், இப்பதிவுகளால் இன்னும் இன்னும் இயேசுவின் சுவிசேஷம் அறிவிக்கபடவே வாய்ப்பு செய்தார் என்பதும் மட்டும் நிஜமல்லவா..
“சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.” 2 தீமோத்தேயு 4:2
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இயேசு என்னும் மனிதர்-2
» எச்சரிக்கிறார் இயேசு
» இயேசு நேசிக்கிறார்
» விடுவிக்கும் இயேசு
» இயேசு குருவா? கடவுளா?
» எச்சரிக்கிறார் இயேசு
» இயேசு நேசிக்கிறார்
» விடுவிக்கும் இயேசு
» இயேசு குருவா? கடவுளா?
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|