ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசு என்னும் மனிதர்

+6
கே. பாலா
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
hega
அசுரன்
shineson
10 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இயேசு என்னும் மனிதர் - Page 3 Empty இயேசு என்னும் மனிதர்

Post by shineson Fri May 18, 2012 7:57 pm

First topic message reminder :

"ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்" என்று தனது இரண்டாவது பத்தியில் இருந்து சலிப்பூட்டக் கூடிய வகையில் பெயர்களாகவே அந்நூல் தொடர்கிறது. இக்காலத்தில் அந்நூல் நாவலாக வெளிவந்திருக்குமானால் அதை எழுதியவர் கூட அது விற்பனையாகும் என்று நம்பியிருக்க மாட்டார். ஆனால், இன்று உலக அளவில் அதிகமாக விற்பனையாகும் நூல் அது. காரணம்? அது ஒரு மத நூல். மதமானது எத்தனை அபத்தமானதாய் இருந்தாலும் அதன் மூலம் மனிதனுக்குக் கிடைக்கும் போதை அலாதியானது.

இந்நூலை எழுதியவர்கள் ஏன் இப்படி ஆரம்பததிலேயே பெயர்களை அடுக்குகிறார்கள்? அவர்கள் அப்படி செய்வதற்கும் காரணம் இருந்தது. தங்களின் தலைவன் ஒரு தச்சனின் மகன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? அதற்குப் பதிலாக அவர் அரசகுலத்தவர் என்றால்? அதற்காக ஒரு வம்ச வரலாறை எழுதினால்? அரசகுலத்தவர்களில் வந்து கேட்பதற்கு எவனாவது மிஞ்சியிருக்கிறானாக்கும்? அந்தக் காலத்தில் வேறு எத்தனையோ கலகக்காரர்களும் கிளம்பியிருந்தார்கள். அவர்கள் தங்களது சில தொண்டரடிப் பொடிகளுடன் ரோமப்பேரரசுக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தார்கள். பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவும் ஒன்று. அவ்வளவு தான். அக்கால யூதர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

சரி, இயேசு அரசகுலத்தவர் என்று சொல்லியாயிற்று. அது போதாதே. அவரைப் பிற மனிதர்களிடமிருந்து வேறுபட்டவராகக் காண்பிக்க வேண்டும். என்ன செய்வது? கன்னிப்பெண்கள் கர்ப்பமான கதைகளை அவர்கள் தங்களைச் சூழ்ந்திருந்த நாகரிகங்களிலிருந்து கேள்விப்பட்டிருக்க வேண்டும். இயேசு கன்னிமரியாளுக்குப் பிறந்தார் என்ற அடுத்த கற்பனை உருவாகிறது.

(சமீபத்தில் மரணமடைந்த வடகொரிய தலைவரான கிம் ஜோங் இல்-லின் பிறப்பையும், வாழ்க்கையையும், இறப்பையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கற்பனைகள் சூழ்ந்திருந்தன)

அடுத்ததாக வருகிறது இயேசுவின் அறிமுகக் காட்சி. நமது இப்போதைய தமிழ் திரைப்படங்களில் அதிகமாகக் கவனம் எடுக்கப்படும் கதாநாயகனின் அறிமுகக் காட்சி.. இந்த அறிமுகக் காட்சியில் யோவான்ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் போது ஆவியானவர் புறாவைப் போல் இறங்குகிறாராம். இது அவர்களுக்குப் போதவில்லை. அதனால் வானத்திலிருந்து ஒரு சத்தம் வேறு உண்டாகி "இவர் என்னுடைய நேசகுமாரன். இவர் மேல் பிரியமாயிருக்கிறேன்" என்று சொல்லிற்றாம்.

பின்பு அவர் பாலைவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிசாசினால் சோதிக்கப்படுகிறார் என்று கற்பனைகள் நீள்கின்றன.

அதிகமான மக்களால் பின்பற்றப்படும் இயேசு, ஒரு மலைக்கு அவர்களை அழைத்துச் சென்று சொற்பொழிவாற்றுகிறார். மூன்று அத்தியாயங்களுக்கு இந்த சொற்பொழிவு நீள்கிறது. அந்த மலைச் சொற்பொழிவு கூட அவரே நிகழ்த்தியதா, இல்லையென்றால் அவரைப் பின்பற்றியவர்கள் இட்டுக் கட்டியதா என்று தெளிவாக அறிய முடியவில்லை.
அடுத்ததாக இயேசு நிகழ்த்தும் அற்புதங்களும், அக்கால மத அறிவுஜீவிகளான பரிசேயர், சதுசேயர் ஆகியோரோடு இயேசு நிகழ்த்தும் விவாதங்களும், மக்களுக்கு ஆற்றும் உரைகளும் என இன்னும் சில அத்தியாயங்கள் நீள்கின்றன.

இறுதியில் அக்கால யூத மதவாதிகள் அவரை ரோமப் பேரரசின் ஆளுநரிடத்தில் ஒப்படைத்து அவருக்கு மரண தண்டனை அளிக்கும்படி கோருகின்றனர். அவர்களைத் திருப்திப்படுத்த விரும்பிய அவனும் அவரைச் சிலுவையில் அறைய உத்தரவிடுகிறான். இறுதியாக அனைத்து புனைவுகளுக்கும் கிரீடம் வைத்தது போல் ஒரு மிகுபுனைவு. இயேசு இறந்து மூன்று நாளில் உயிர்த்தெழுந்தாராம்.

இக்காலத்தில் கிறிஸ்தவ கோட்பாடுகள் என்று அறியப்படுபவை அனைத்தும் இயேசுவின் சீடர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் எழுதிய கடிதங்களில் இருந்து உருவானவையே. மலைச் சொற்பொழிவை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கிறேன் என்று எந்த கிறிஸ்தவராவது சொல்ல முடியுமா?

இப்படிப்பட்ட கற்பனைகளுக்கும், கோட்பாடுகளுக்குமிடையில் உண்மையை எங்கே போய்த் தேடுவது? உண்மையான இயேசு, மனிதராய் வாழ்ந்த இயேசு புதிய ஏற்பாட்டின் எந்த பக்கத்தில் இருக்கிறார்?

உண்மையான இயேசு என்னும் யூதர் தனது இனவெறி என்னும் முகத்தை அபூர்வமாக ஒருமுறை வெளிப்படுத்துகிறார். மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தன்னை நாடி வந்த வேற்றினப் பெண்ணை நாய் என்றும், யூதர்களைப் பிள்ளைகள் என்றும் அவர் அழைக்கிறார். இப்படிப்பட்ட அபூர்வமான இடங்களைத் தவிர பிற இடங்களில் இயேசுவின் முகத்தைக் காண்பது கஷ்டமாகத் தான் இருக்கிறது. அக்காலத்தில் எழுதப்பட்ட மதசார்பற்ற நூல் எதுவும் இயேசுவைப் பற்றி சரியாகக் குறிப்பிடுவதில்லை. நாக் ஹம்மாடியில் கிடைத்துள்ள பழைய சுவிசேஷ சுருள்கள் இயேசுவின் மனித முகத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் ஒரு சாதாரண கிறிஸ்தவன் இயேசுவின் முகத்துக்குப் பின்னாலிருக்கும் ஒளிவட்டத்தை அகற்ற விரும்புவதில்லை. எனவே இயேசுவின் உண்மையான வரலாறு கற்பனைக்குவியலுக்குள்ளே கேட்பாரில்லாமல் கிடக்கிறது.
(இயேசு வரப்போகிறார் என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தேயு 16:28- ஐ வாசிக்கவும்)


வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
shineson
shineson
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010

http://shine.son2@gmail.com

Back to top Go down


இயேசு என்னும் மனிதர் - Page 3 Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by hega Sat May 19, 2012 12:43 am

தம்மை சுற்றியிருந்த சீஷர்களை பார்த்து இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

எனும் சம்பவமானது மனுதராய் இவ்வுலகில் பிறந்து அவர்தம் பிள்ளைகள் பாவம் போக்கிட தம்மையே சிலுவையில் ஒப்புகொடுத்து மூன்றாம் நாளுயிர்த்தாலும் மனுஷகுமாரனாய் வந்தவர் தம்முடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கும் வரை யோவான் மரிப்பதில்லை என்று சொல்லாமல் மரணத்தை ருசி பார்ப்பதில்லை என்றும் நான் வருமளவும் இவனிருக்க எனக்கு சித்தமானால் உனக்கு என்ன என்றுமே சொன்னார்.

இங்கே அவர் தம்முடைய ராஜ்ஜியத்தில் பிரவேசித்து என சொல்லபட்ட ராஜ்யம் பலத்துடன் வருவதைக் காணும் நாள்' என்று சொல்லப்படுவது "பெந்தெகொஸ்தே தினமன்று பரிசுத்த ஆவி வந்திறங்கியதைக் காணும் நாள்" என கிறிஸ்தவர்களாகிய் நாங்கள் நம்புகிறோம்.

அதாவது மனுஷகுமாரன் தன்னுடைய ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிக்கும் நாளில் பரிசுத்த ஆவியாவர் ஊற்றப்ப்டுவதையும் அந்நாளில் தெரிந்து கொள்ளபட்ட சி்லருக்கே இயேசு காட்சி கொடுத்ததையும் அப்போஸ்தலர் முதலாம் நிருபம் தெளிவாக்குகிறது.

பைபிளில் பல விடயங்கள் உவமைகளாக பேசப்பட்டிருக்கிறது. அவை எல்லாமே மறைபொருளாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இயேசு கிறிஸ்துவானவர் தம் ராஜ்ஜியத்தில் பிரவேசித்தபின் பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து சீஷர்களை வழி நடத்தினார். அவர்களில் பல்ர் இரத்தசாட்கிகளாய் மரித்தார்கள். அவரின் சிஷரான தோமா இந்தியாவிற்கு வந்தது வரலாறு சொல்லும் உண்மை.

தோமா உட்பட பல சீஷர்கள் இரத்தசாட்சிகளாக மரித்தார்கள். இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமான் சிஷனான யோவானையும் கொல்லும்படி பார்த்து பின்பு முடியாததால் அவர் பத்முதீவுக்கு நாடுகடத்தப்படுகிறார்.

பத்மூ தீவில் யோவானுக்கு இயேசு தரிசனமாகி பல வெளிப்படுத்தல்களை கொடுப்பதாக வெளி 1, 5 ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அவையாவுமே மறை பொருளாயே கொடுக்கப்ட்டது. உள்ளான இதயத்தோடு ஆராய்ந்து பார்த்தால் அதன் உண்மை புரியும். அல்லது புரிய வைக்கபடும் . இந்த பதிவுகள் கூட தங்கள் அகக்கண் திறக்கப்ட பரிசுத்த ஆவியானவரால் ஏவப்ட்ட பதிவாயிருக்கலாம். காதுள்ளவன் கேட்ககடவன்.

உங்கள் பதிவிற்கான் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான முன் அறிகுறிகள் அடுத்து தொடர்கிறேன்..



avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் - Page 3 Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by அசுரன் Sat May 19, 2012 12:57 am

அருமையான விளக்கங்கள் ஹேகா! நாங்களும் படிச்சிக்கிறோம்... அருமையிருக்கு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் - Page 3 Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by hega Sat May 19, 2012 1:02 am

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை.

மத்தேயு 24:36 அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

அவரின் வருகைக்கு முன்னாக முக்கியமாக நடைபெற வேண்டியவை.
மத்தேயு 24:14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.


பூலோகமெங்கும் இயேசுவின் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும் அது நிறைவேரும்போதுதான் அவரால் வரமுடியும். காலம் நிறைவேறியபோது இயேசு மனிதனாக பூமிக்கு வந்தார் அதுபோல் அவரின் இரண்டாம் வருகைக்கும் ஒரு செயலின் நிறைவேறுதல் நடைபெற வேண்டும். அதற்காகத்தான் அவரின் ஊழியக்காரர்களை அவர் எல்லா திசைகளிலும் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்.

கிட்டதட்ட உலகின் பல் தடைசெய்யபட்ட இடங்களுக்கும் மொழியறியா எழுத்தறியா தீவுகள் ,காட்டுவாசிகளுக்கும்கூட் இன்று பைபிள் குறித்து அறிவிக்கபட்டுகொண்டிருக்கிறது. ஆனால் அவை இன்னும் முழுமைபடுத்தபடவில்லை. ஒருவருமே நானறியவிலலியே என சொல்ல முடியாதபடி இன்னும் பல இடங்களுக்கு வேதம் அறிவிக்கபட வேண்டும். உலகின் பல இடங்களுக்கு இன்னும் சரியான பயணம செய்வதே கடினம்.இருந்தும் இயேசு கிறிஸ்துவினால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிரமங்களுக்கு மத்தியிலும் அவ்விடங்களுக்கு செல்கிறார்கள். ஆனாலும் இன்னும் செல்ல வேண்டிய சொல்ல வேண்டியவை அதி விரைவாய் நடைபெறுவதை நிங்கள் உங்கள் கண்முண்ணே காணும் பத்தில் இருவர் இரட்சிக்கபட்ட சாட்சிகளாய் உங்கள் முன்னே துண்டு பிரசுரங்களோடு நிற்பதை கொண்டு அறிந்திடலாம்.


avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் - Page 3 Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by hega Sat May 19, 2012 1:17 am

முன் அறிவிப்புக்கள் அல்லது அறிகுறிகள்

மத்தேயு 24 , 4 --14

4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;

5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

6. யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.

7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.

8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
பாருங்கள் இதுவரை நாம் காண்பவை ஆரம்பம் மட்டும் தான்..தொடர்ந்து படியுங்கள்.


9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.

10 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.

11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

12 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.

13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் - Page 3 Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by hega Sat May 19, 2012 1:30 am

நான் எதுவுமே சொல்லவில்லை.. உங்களை நீங்களே ஆராய்ந்தரியுங்கள். ஏனெனில் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

மாயா உலகம் அழிவு எது இதுவென இன்னும் பல செய்திகளை நாம் அறியலாம். ஆனாலும்


மததேயு 24 ல் சொல்வதை மேலும் பாருங்கள்

32 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.

33 அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.


34 இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

35 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
36 அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
இந்த சம்பவம்வரலாறு என்பதை மெய்ப்பித்து விட்டார்களல்லவா.
38 எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,

39 ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.

44 நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்


இரண்டாம் வருகைக்குரிய முன் அறிவிப்புகளில் குறித்து அரசியல் ரிதியான மாற்றங்கள் என்ன வென்பதை பைபிள் என்ன சொல்லி இருக்கிறது என அடுத்து பார்க்கலாம்.
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் - Page 3 Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by hega Sat May 19, 2012 2:24 am

அரசியல் ரிதியான முன் அறிகுறிகள் குறித்த பகிர்வுக்கு முன்னால் ஏற்கனவே தாங்கள் இட்ட பதிவிற்காக விளக்கத்தை தொடர்கிறேன்.

shineson wrote:தாங்கள் கூறுவதில் இருக்கும் பிழை - மத்தேயுவும் யோவானும் தனிப்பட்ட சுவிசேஷகர்கள். அவர்கள் குறிப்பிடுவது வெவ்வேறு நிகழ்வுகள். மட்டுமல்லாமல் "மெய்யாகவே" என்று மத் 16:28ல் இயேசு தீவிரமாகவே குறிப்பிடுகிறார்.

ரெம்ப நல்லது.

இயேசு என்றொருவர் இருந்தார் அவர் இப்பூலகின் பாவம் போக்க வந்தார். எப்படி யார் மூலம் வந்தார் எனும் தங்கள் முதல் பதிவிற்கான சந்தேக வினாக்களுக்கு அடுத்து வரும் பதிவுகளில்பதிவிடுகிறேன்.

ஆனால் இந்த மெய்யாகவே என சொன்னார் என்பதன் மூலமும் , மத்தேயுவும், யோவானும் சுவிஷேஷகர்கள் என்பதன் மூலமும் அப்படிபட்டவர்களும் அச்சம்பவங்களும் நிஜமென்பதை தாங்கள் ஒப்புகொள்கிறீர்கள் தானே.

இன்றைக்கு கிறிஸ்தவரென சொல்லிகொள்பவர்கள் பலரே கூட இதை நம்புவதில்லை. விசுவாசிப்பதில்லை எனும் போது தாங்கள் நம்புவது குறித்து மிக்க மகிழ்ச்சி .

ஒன்று தெரியுமா.. கடவுள் இல்லையென சொல்பவர்கள் கடவுளோடு அனுதினமும் உறவாடுவது போல் கடவுளை நம்புபவர்கள் உறவாடுவதில்லை.

கடவுள் இருக்கிறார் என்பவர்கள் தமக்கு கஷ்டம்வரும் போது தான் பெரும்பாலும் கடவுளை தேடுவார்கள் . நினைப்பார்கள்.

கடவுள் இல்லையென சொல்பவர்களோ இல்லையென சொல்லியே அனு நினமும் அவரையே பூஜ்ஜிக்கிறீர்கள் என்பது கண்டு மகிழ்ச்சி



Last edited by hega on Sat May 19, 2012 3:43 am; edited 1 time in total
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் - Page 3 Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by hega Sat May 19, 2012 2:45 am

shineson wrote:"மேற்க்குறிப்பிட்டவைகளை படித்த பின்பும், நீங்கள் இவரின் பதிவில் விதண்டா வாதம் இல்லை என்று கருதுகிறீர்களா?"

உண்மையைச் சொல்வதை எப்போதிலிருந்து விதண்டாவாதம் என்று தமிழ்நாட்டில் எப்போதிலிருந்து கூறத் தொடங்கினார்கள்? நீங்கள் சிவப்பிட்டுக் காட்டியிருக்கும் விஷயங்கள் தவறென்று வாதிடத் தயாராக இருக்கிறீர்களா?

தாயாளன் ஐயா சிவப்பால் குறித்த முதல் வசனம் .

மதமானது எத்தனை அபத்தமானதாய் இருந்தாலும் அதன் மூலம்
மனிதனுக்குக் கிடைக்கும் போதை அலாதியானது.


இப்பதிவின் மூலம் நான் யாரையும் சுட்டவோ தாக்கவோ இல்லையென முதலில் சொல்லி கொள்கிறேன்.

இன்றைய உலகம் கட்டுகோப்பானதாய் ஒரு இலக்கோடு வாழ இந்த மத நம்பிக்கைதான் காரணம். அது மட்டும் நம்மிடம் இல்லையானால் இன்றைக்கு மிருகங்களுக்கும் நமக்கும் வித்தியாசம்தெரிந்தே இருக்காது.

மதமானது போதை தருவதாயிருந்தாலும் அது மனிதனை நல்வழிபடுத்தி கட்டுகோப்பான வாழ்க்கை வாழ கற்பிக்கிறது. ஒருவர் மீது அன்பு செலுத்த, விட்டு கொடுக்க, புரிந்து கொள்ள, மன்னிக்க, நல் வார்த்தைகள் பேச, கணணியமாய் நடக்க, முக்கியமாய் தன்னை போல் பிறரையும் நேசிககும் படி கடவுள் பயமானது மனிதனையும் மனிதத்தையும் காத்து வழி நடத்துகிறது.

ஆனால் கடவுள் இல்லை யென் சொல்வோர் பலர் வாழ்வு கட்டுபாடற்றதாய், காட்டுபிராண்டிதனமாய், அன்பில்லாததாய், தூஷணங்களை தயங்காது உச்சரிப்பதாய், சக சகோதரிகளை மதிக்காததாய், மொத்தத்தில் மனிதத்தையே தொலைத்த்தாய் இருப்பதை இன்றல்ல பல்லாண்டுகளாய் கடவுள் இல்லையென சொல்வோர் பலர் வாழ்விலிருந்தே நாம் கண்கிறோம். உதாரணங்களுக்காக ஏன் தங்கள் பதிவுகளையும் கூட இங்கே என்னால் சுட்டிகாட்ட முடியும்.

அப்படிபட்ட சக மனிதனை நேசிக்காதவனாய் இருந்து கடவுள் இல்லையென சொல்வதை காட்டிலும் கடவுள் உண்டென அனு நிதமும் பூஜிக்கும் கடவுள் போதையால் மூழ்கி இருப்பது நல்லது தானே.

மதமானது அபந்தமானதா. பந்தமானதா என்பதை அவரவர் தன தீர்மானிக்க வேண்டும்.





avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் - Page 3 Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by hega Sat May 19, 2012 3:08 am

இயேசு கன்னிமரியாளுக்குப் பிறந்தார் என்ற அடுத்த கற்பனை உருவாகிறது

கன்னிமரியாளின் கருவில் இயேசு உதித்தார் என்பதை கற்பனை கட்டுகதை என்பீர்களானால் இன்றைய ரெஸ்ட் ரியுப் குழ்ந்தை பெறும் கன்னித் தாய் குறித்து என்ன சொல்வீர்கள்.

கிட்டதட்ட 2000 ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னால் சர்வவல்லமை படைத்தவர் என சொல்லபட்ட கடவுளால் அது இயலாததகுமா.. ..

மகாபாரத்தில் குந்தி தேவிக்கு கர்ணன் பிறந்தார் என சொள்ளபடுவதை பார்க்கும் போது எல்லா மத புராணங்களும் இந்த ரெஸ்ட் ரியுப் பேபி சாத்தியம் என்பதை ஒப்புக்கும் போது அது எப்படி கற்பனையாகும்.
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் - Page 3 Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by சார்லஸ் mc Sat May 19, 2012 3:18 am

சகோதாி.ஹேகா அவா்களுக்கு எனது மனமாா்ந்த நல் வாழ்த்துக்கள். நண்பாின் கேள்விகளுக்கு நல்ல அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீா்கள். இயேசு என்னும் மனிதர் - Page 3 154550 இயேசு என்னும் மனிதர் - Page 3 678642

தொடருங்கள். தங்களைப் போன்றோா் ஈகரையில் இருப்பது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

நிா்வாகக் குழுவில் இருக்கும் திரு.சுந்தா்ராஜ் தயாளன் அவா்களுக்கும், திரு. அசுரன் அவா்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இயேசு என்னும் மனிதர் - Page 3 154550

திரு.தயாளன் ஐயா கூறியது போல பதிவிட்டவா் எந்த நோக்கத்தில் பதிவிட்டிருந்தாலும் சாி, நக்கலாக பதிவிட்டிருந்தாலும்சாி. க‌ேள்வி வந்து விட்டது. நம்மால் இயன்ற அளவு விளக்கமளிப்போம். சில சமயம் இப்படிப்பட்ட பதிவா்களை தேவன் அனுமதிப்பது - ஈகரையில் உள்ள பலா் சுவிஷேசம் அறியட்டுமே என்ற தேவ சித்தமாகக் கூட இருக்கலாமல்லவா?

அனைவரும் சத்தியத்தை அறியும்படி கொடுக்கப்பட்ட அறிய வாய்ப்பாக தேவனால் உண்டானது என இதை எடுத்துக் கொள்வோம். தொடருங்கள் தங்கள் பதிவை சகோதாி. என்னால் இயன்ற பதிலை தருகிற‌ேன். இயேசு என்னும் மனிதர் - Page 3 154550 இயேசு என்னும் மனிதர் - Page 3 678642


இயேசு என்னும் மனிதர் - Page 3 154550இயேசு என்னும் மனிதர் - Page 3 154550இயேசு என்னும் மனிதர் - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இயேசு என்னும் மனிதர் - Page 3 154550இயேசு என்னும் மனிதர் - Page 3 154550இயேசு என்னும் மனிதர் - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் - Page 3 Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by hega Sat May 19, 2012 3:36 am

m
shineson wrote:அப்படி அவரு சொல்லும்போது, அங்க இருந்தது யாரு? அவரோட சீடர்கள், அவரோட சமகாலத்தவர்கள். சரிதானே? அவங்க எல்லாம் செத்து மண்ணோட மண்ணா மக்கிப் போயி 2000 வருஷமாச்சு. ஆனா அவரு இன்னும் வரல. இதுக்கு என்னப்பா அர்த்தம்?

இயேசு ஏன் இன்னும் வரவில்லை....
இயேசு எப்போ வருவார்.......

நான் அல்ல பைபிள் சொன்ன பதில்களை நான் பதிவிட்டு விட்டேன்.. இதுவெல்லாம் கற்பனை அல்ல.. நிருபிக்கபட்ட உண்மைகள்.

மேலும் தங்கள் முதல் பதிவிலிருக்கும் இயேசுவின் வரலாறு, பிறப்பு, யூதர் , யூதரல்லாதவர், குறித்த சந்தேகங்களுக்கு இயலுமானால், தேவையேற்படின் மட்டுமே நாளை பதில் இடுகிறேன்.

வாய்க்குள்ளே போகிறது மனிதனை தீட்டுபடுத்தாது.. வாயிலிருந்து புறப்படுவதே மனிதனை தீட்டுபடுத்தும். வாயிலிருந்து புறப்படுபவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டு வருவதால் வீணான வார்த்தைகள், சிந்தனைகள, எண்ணங்களை தவிர்ப்போம்.நம்மை நேசிப்பது போல் நம் சக மனிதரையும் நேசிக்க முயல்வோம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதித்து நல்வழிப்படுத்துவாராக.

நன்றி.
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

இயேசு என்னும் மனிதர் - Page 3 Empty Re: இயேசு என்னும் மனிதர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum