ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளப் புடைப்பு நோய்- Varicose Veins

Go down

நாளப் புடைப்பு நோய்- Varicose Veins  Empty நாளப் புடைப்பு நோய்- Varicose Veins

Post by முஹைதீன் Fri May 18, 2012 1:48 pm

Copy From :இணையத் தமிழ் உலகம் © 2012

நாளப் புடைப்பு நோய்- Varicose Veins

நாளப் புடைப்பு நோய்- Varicose Veins  Varicoseveins3
நான் சிறுவனாக இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு உறவுப் பெண்மணி இருந்தாள். ஒரு நாள் அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தரையில் அமர்ந்து கொண்டு தனது கெண்டைக் கால்களைத் தடவிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.




முகத்தில் வாட்டம்!


சேலை முழங்கால் வரை உயர்ந்திருந்தது.


எதைத் தடவுகிறார் எனப் பார்த்தபோது பால் போன்ற வெண்மையான அவரது அழகான மொழுமொழுவென்ற கால்கள் இரண்டிலும் கமபளிப் பூச்சிகள் சுருண்டு திரண்டு கிடப்பது போல கருநீலத்தில் வீக்கங்கள் படர்ந்திருந்தன.


பார்க்க அருவருப்பாக இருந்தது. விளையாடப் போன நான் போன போக்கிலேயே திரும்பி ஓடி வந்துவிட்டேன்.


அப்பொழுது அவரது வயிற்றில் இருந்த குழந்தை பிறந்த சில காலத்தின் பின் அவரது கால்களில் வீக்கம் காணமல் மறைந்து விட்டிருந்தது.


இன்னொருவர் பற்றிய நினைவும் வருகிறது. நல்ல உயரமான, வாட்டசாட்டமான நடுத்தர வயது மனிதர். அவரது முழங்காலுக்குக் கீழ் இரண்டு கால்களிலும் சிறு பாம்புகள் சுருண்டு கிடந்து நெளிவது போல நாளங்கள் வீங்கிக் கிடக்கும்.

கணுக்காலடியில் பெரிய புண். நீண்ட நாட்களாக மாறாது கிடந்தது.

நாளப் புடைப்பு நோய்- Varicose Veins  Venousulcer


அது என்ன என வருத்தம் அவரது மகனிடம் கேட்டேன். ஏதோ நரம்பு வீக்கமாம். அவனுக்குத் தெளிவாகப் புரியவில்லை.


இப்பொழுது அவர் காலமாகிவிட்டார். ஆனால் பிற்பாடு அவரது மகனுக்கும் அதே வருத்தம் வந்தபோது நானே வைத்திய ஆலோசனை வழங்கியுள்ளேன்.





இன்று சுமார் நாற்பது வருடங்களுக்குப் பின்னர் அவர்களை மீள நினைந்து பார்க்கும்போது அவை நாளப் புடைப்புக்கள் அதாவது Varicose Veins என்பது தெரிகிறது. வரிக்கோஸ் வெயின்ஸ் என்பது திரண்டு சுருண்ட நாள வீக்கங்கள் ஆகும்.


நாளங்கள் எனப்படுபவை இரத்தக் குழாய்கள். இருதயத்திலிருந்து ஒட்சி ஏற்றப்பட்ட (சுத்திகரிக்கப்பட்ட) குருதியை உடல் உறுப்புகளுக்கு எடுத்து வருபவை நாடிகள் (Artery) எனப்படும். உடல் உறுப்புகளால் உபயோகிக்கப்பட்ட குருதியை மீண்டும் இருதயத்திற்கு எடுத்துச் செல்பவை நாளங்கள் (Veins) எனப்படும்.




இது எத்தகைய நோய்




இவை பொதுவாக முழங்காலுக்குக் கீழே பிற்புறமாக கெண்டைப் பகுதியில் ஏற்படும். தொடையின் உட்புறமாகவும் தோன்றலாம். தோலின் கீழாக தடித்து சுருண்டு வீங்கி, நீல நிறத்தில் அல்லது கரு நீல நிறத்தில் தோன்றும் இவை நாளங்களில் உள்ள வால்வுகள் சரியாக இயங்காததாலேயே ஏற்படுகின்றன. நாளங்களில் உள்ள வால்வுகள் ஒரு வழிப் பாதை போலச் செயற்படுகின்றன.


நாளப் புடைப்பு நோய்- Varicose Veins  Varicosetamil


அதாவது கீழிருந்து மேலாக இருதயத்தை நோக்கி இரத்தத்தைப் பாய அனுமதிக்கின்றன. ஆனால் மேலிருந்து கீழ் வர அனுமதிக்கமாட்டா. ஆயினும் இந்த வால்வுகள் சரியானபடி இயங்க முடியாதபோது இரத்தம் வழமைபோலப் பாய முடியாமல், நாளங்களில் தேங்கி வீக்கமடையும். இப்படித்தான் நாளப் புடைப்புக்கள் தோன்றுகின்றன.




சாதாரணமாக நாளப் புடைப்புக்கள் எந்தவித துன்பத்தையும் கொடுப்பதில்லை. மற்றவர்கள் பார்வைக்கு அசிங்கமாகத் தோன்றும் என்ற உணர்வுதான் பெரும்பாலும் சிகிச்சையை நாட வைக்கும்.


ஆயினும் சற்று அதிகமானால் கால்கள் பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். சற்று வலிக்கவும் செய்யலாம்.


கெண்டைக் காலில் தசைப் பிடிப்பும் ஏற்படுவதுண்டு.


நீண்ட காலம் தொடர்ந்தால் கால்களின் கீழ்ப் பகுதிகளில் வீக்கமடைந்த நாளங்களைச் சுற்றி தோல் கருமையடைந்து அரிப்பும் ஏற்படக் கூடும்.


கால் வீக்கமும் ஏற்படக் கூடும்.


மாறாத புண்களும் தோன்றலாம். இந்த நாளப் புடைப்புகளில் காயப்பட்டு இரத்தம் வெளியேற ஆரம்பித்தால் உங்களால் நிறுத்துவது கஸ்டம்.





நாளப் புடைப்பு நோய் யாருக்கு வரும்?




நாளப் புடைப்பு நோய் யாருக்கு வேண்டுமானால் வரலாம்.


ஆனால் பொதுவாக 30 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்களையே பெரிதும் பாதிப்பதைக் காண்கிறோம்.


பரம்பரையில் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். ஒருவருக்கு இந் நோய் இருக்குமாயின் அவர்களது நெருங்கிய உறவினர்களில் இருப்பதற்கான சாத்தியம் இரண்டு மடங்கு அதிகமாகும். கட்டுரையின் ஆரம்பத்தில் தகப்பனுக்கும் மகனுக்கும் இந்நோய் வந்ததை ஞாபகப்படுததலாம்.


அதே போல ஆண்களை விட பெண்களுக்கு வருவதற்கான சாத்தியமும் இரண்டு மடங்கு அதிகமாகும்.


அதிலும் முக்கியமாக கர்ப்பணியாக இருக்கும்போது அதிகம் தோன்றுவதுண்டு. இதற்குக் காரணம் வயிற்றில் வளரும் கருவானது தாயின் தொடைகளினூடாக வயிற்றுக்கள் வரும் நாளங்களை அழுத்துவதால் இரத்த ஓட்டம் பாதிப்புற்று நாளப் புடைப்பை ஏற்படுத்துவதேயாகும்.


கர்ப்ப காலத்திலும், பெண் பிள்ளைகள் வயசிற்கு வரும் காலங்களிலும், மாதவிடாய் முற்றாக நிற்கும் காலங்களிலும் பெண்களது உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்கள் பின்பு அவர்களுக்கு நாளப் புடைப்பு உண்டாவதற்கு காரணமாகலாம் என நம்பப்படுகிறது.


நீங்கள் அதீத எடையுடையவராக இருந்தால் உங்கள் உடலில் உள்ள அதிக கொழுப்பானது நாளங்களை அழுத்தி நாளப் புடைப்பு நோயை ஏற்படுத்தலாம். கொலஸ்டரோல், பிரஸர், நீரிழிவு போன்ற நோய்களுக்கும் அதீத எடைக்கும் தொடர்பு இருப்பதை ஏற்கனவே அறிவீர்கள். எனவே உடற் பயிற்சிகளாலும், நல்ல உணவுப் பழக்கங்களாலும் எடையை சரியான அளவில் பேணுங்கள்.


நீண்ட நேரம் ஒரே நிலையில் நிற்பதும், உட்கார்ந்திருப்பதும் கூட நாளப் புடைப்பை ஏற்படுத்தலாம்.


முக்கியமாக காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு, அல்லது மடித்துக் கொண்டு உட்காரும்போது நாளங்கள் கடுமையாக உழைத்தே இரத்தத்தை மேலே செலுத்த வேண்டியிருக்கும். இதனால் அவை நாளடைவில் பலவீனப்பட்டு நாளப் புடைப்பு உண்டாகலாம்.




வைத்தியர்கள் கண்ணால் பார்தவுடனேயே இது என்ன நோய் என்பது தெரிந்துவிடும் என்பதால் பெரும்பாலும் மேலதிக பரிசோதனைகள் எதுவும் தேவைப்படாது. ஆயினும் சில தருணங்களில் டொப்ளர் ஸ்கான் (Doppler UltraSound)போன்ற பரிசோதனைகள் செய்ய நேரலாம்.




நீங்கள் செய்யக் கூடியது என்ன?

நாளப் புடைப்பு நோய்- Varicose Veins  Varicoseveins2n


இதனைத் தணிக்க நீங்கள் செய்யக் கூடியது என்ன?


நீண்ட நேரம் ஒரேயடியாக நிற்பதைத் தவிருங்கள். நீண்ட நேரம் நிற்க நேர்ந்தால் சற்று உட்கார்ந்தோ அல்லது கால்களைச் சற்று மடித்து நீட்டிப் பயிற்சி செய்து நாள இரத்த ஓட்டத்தைச் சீர்ப்படுத்துங்கள்.


நாளப் புடைப்பு உள்ளவர்கள் கால்களைத் கீழே தொங்க விட்டபடி உட்கார்ந்திருப்பது நல்லதல்ல. சிறிய ஸ்டூல் போன்ற ஏதாவது ஒன்றில் கால்களை உயர்த்தி நீட்டி வைத்திருங்கள்.


தூங்கும்போது ஒரு தலையணை மேல் கால்களை உயர்த்தி வைத்தபடி தூங்குங்கள். உங்கள் இருதயம் இருக்கும் நிலையை விட உயரமாக உங்கள் கால்கள் இருந்தால் காலிலுள்ள இரத்தம் சுலபமாக மேலேறும். அதனால் வீக்கமும் வேதனையும் குறையும்.


சுலபமான உடற் பயிற்சிகள் உங்கள் தசைகளின் இழுவைச் சக்தியை அதிகரிக்கும். இது நாளங்களின் ஊடான இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தி நாளப் புடைப்பைக் குறைக்க உதவும்.அத்துடன் உங்கள் உடலிலுள்ள மேலதிக எடையைக் குறையுங்கள். நீங்கள் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடையும் இரத்த ஓட்டத்தைச் சீர்ப்படுத்துவதுடன், நாளங்களின் மேல் அதீத எடையினால் உண்டாகும் அழுத்தத்தையும் குறைக்கும்.


நாளப் புடைப்பினால் ஏற்படும் வேதனையையும் வீக்கத்தையும் குறைக்க அவற்றைச் சுற்றி பண்டேஜ் அணிவது உதவியாக இருக்கும். இதற்கென தயாரிக்கப்பட்ட விசேடமான பண்டேஜ்கள் மருந்தகங்களில் கிடைக்கும். முழங்காலுக்கு கீழ் மட்டும் அணியக் கூடியதும், தொடைவரை முழக் கால்களையும் மூடக் கூடியதாக அணியக் கூடியதும் போன்று பல வகைகளில் கிடைக்கும்.


வைத்தியரின் ஆலோசனையுடன் உங்களுக்கு ஏற்றதை உபயோகிக்க வேண்டும்.


இவற்றை பொதுவாக காலையில் படுக்கையிலிருந்து எழுந்து நடமாட முன்னரே அணிய வேண்டும். நடமாடும் நேரம் முழவதும் அணிந்திருந்து இரவு படுக்கைக்குக் போகும் போதே கழற்ற வேண்டும்.


இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக வயிறு, அரைப்பகுதி, தொடை ஆகியவற்றைச் சுற்றி இறுக்கமான ஆடைகளை அணிந்தால் நாளப்புடைப்பு மோசமாகக் கூடும்.




சிகிச்சை முறைகள்




பல வகையான சிகிச்சை முறைகள் உள்ளன.


நோயின் தன்மைக்கும், நோயாளியின் தேவைகளுக்கும் ஏற்ப இவை மாறுபடும்.


மிக இலகுவானது ஊசி மூலம் நோயுற்ற நாளங்களை மூடச் செய்வதாகும். நோயாளி நிற்க வைத்து நாளத்தினுள் ஊசி மருந்தைச் செலுத்துவார்கள். மருந்து அவ்விடத்தில் உள்ள நோயுற்ற நாளங்களை கட்டிபடச் செய்து அடைத்து மூடும்.


மூடச் செய்வது என்று சொன்னவுடன் பயந்து விடாதீர்கள். புடைத்த நாளங்களை மூடச் செய்வதால் இரத்தச் சுற்றோற்டம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. அருகில் உள்ள சிறு நாளங்கள் ஊடாக அது திசை திருப்பப்பட்டு இடையூறின்றித் தொடரும். ஊசி போட்ட பின் இறுக்கமான பன்டேஸ் போட்டுவிடுவார்கள்.


இச் சிகிச்சை பொதுவாக சிறிய நாளப் புடைப்புகளுக்கும், மிகச் சிறிய சிலந்திவகைப் அடைப்புகளுக்கும் (Spider Veins) பொருந்தும்.


பல வகையான சத்திர சிகிச்சைகள் நாளப்புடைப்பு நோயைக் குணப்படுத்தச் செய்யப்படுகின்றன.


லேசர் (Laser) சிகிச்சையானது சிறிய நாளப்புடைப்புகளை ஒளிச் சக்தி மூலம் கரையச் செய்யும்.


அகநோக்கிக் குழாய் (Endoscopy) மூலம் செய்யப்படும் சத்திர சிகிச்சையின் போது சிறிய துவாரம் ஊடாக செலுத்தப்படும் குழாயுடன் இணைந்த கமரா மூலம் நோயுற்ற வால்வுகளை நேரடியாகப் பார்த்து, அதனுடன் இணைந்த நுண்ணிய உபகரணம் மூலம் நோயுற்ற வால்வுகளை மூடச் செய்வதாகும்.


வேறும் பல சத்திர சிகிச்சை முறைகள் உள்ளன.





சிகிச்சையின் பின்னர் உங்கள் பிரச்சனைகள் தீரும். நாளாந்த நடவடிக்கைகளில் நீங்கள் வழமை போல ஈடுபடலாம். ஆயினும் தொடர்ந்தும் சில நாட்களுக்கு பன்டேஸ் அணிய நேரலாம். கால் வீக்கம், தசைப்பிடிப்பு, தோல் அரிப்பு, தோல் கருமை படர்தல் போன்ற இறிகுறிகள் ஏற்கனவே இருந்திருந்தால் அவை குணமாக சற்றுக் கூடிய காலம் எடுக்கும்.

Copy From :இணையத் தமிழ் உலகம் © 2012






ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum