ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்)

4 posters

Go down

முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Empty முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்)

Post by kirikasan Tue May 15, 2012 11:18 pm

படித்தேன் குடித்தேன் பழமாய் சுவைத்தேன்
பழகும் விதத்தில் பூவாய்தேன்
வடித்தேன் அளித்தேன் வகையில் மாறி
வளர்ந்தேன் அறியா வளைந்திட்டேன்
அடித்தேன் உடைத்தேன் அறமும் உறவும்
எனத்தான் இல்லா இளமைத்தேன்
முடித்தேன் , முயலேன் ,முள்ளை வைத்தே
முனையேன் இனியும் முயலா,தேன்

எடுத்தேன் தமிழை இனித்தேன் சொரியும்
எனத்தான் எண்ணி அளித்தேன் சொல்
அடுத்தென் கவிகள் அனைத்தும் ஏதென்
றறியேன் அதற்கு முகமேதான்
கெடுத்தே கொள்ளா இயல்பென் கவிதை
குறைத்தேன் எனவும் குறைதோன்றா
கொடுப்பேன் கிடப்பேன் குலவும்தமிழில்
கடப்பேன் துயரம் கனியும்தேன்

இடம்தேன் தமிழின் எழில் தேன்காவென்
றுணர்ந்தேன் எதைநான் மலர்வித்தேன்
விடம்தேன் என்று வெளிவைத்தேனா
விருந்தேன் விரும்பா விளைவும் ஏன்
குடம்தேன்கொட்டக் குழவிக் கொடுக்காய்
குடைந்தே னாயின் குறைவேண்டேன்
கடந்தேன் கனலும் கடலும் குளித்தேன்
கவிதை மழையும் காணுந்தேன்

படர்ந்தேன் ஆயின் பந்தல்மீது
பிணைந்தேன் எனவே கொடியாவேன்
அடர்ந்தே மாவின் அழிகுருவிச்சை
ஆகேன் அகந்தை அகம்கொள்ளேன்
நடந்தேன் எனிலும் நல்லோர் பாதை
நடப்பேன் அன்பே நிலைகொண்டேன்
புடந்தான் இட்டோர் பொன்னாவேன் மண்
போகா இருப்பேன் பிறிதாகேன்

************


Last edited by kirikasan on Wed May 16, 2012 7:19 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Empty Re: முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்)

Post by சிவா Wed May 16, 2012 12:03 am

தமிழையும், உங்கள் செயலையும் தேனான வரிகளால் சுவையாகப் படைத்துள்ளீர்கள் அண்ணா! அன்பு மலர்


முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Empty Re: முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்)

Post by T.N.Balasubramanian Wed May 16, 2012 7:17 am

முதிர்ந்(தேன்)தோன்,
மகிழ்ந்தேன் ,
வாழ்த்துக்கள். அன்பு மலர்

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Empty Re: முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்)

Post by kirikasan Wed May 16, 2012 5:52 pm

சிவா wrote:தமிழையும், உங்கள் செயலையும் தேனான வரிகளால் சுவையாகப் படைத்துள்ளீர்கள் அண்ணா! அன்பு மலர்
T.N.Balasubramanian wrote:முதிர்ந்(தேன்)தோன்,
மகிழ்ந்தேன் ,
வாழ்த்துக்கள். அன்பு மலர்

ரமணியன்.

பெருமதிப்புக்குரிய சிவா தங்களுக்கும்
ரமணியன் ஐயா, தங்கள் இருவருக்கும் என் அன்புவணக்கங்களும் நன்றிகளும்

உரைப்பேன் எதையோ உள்ளுள்நின்று
உணரா, உளறி உலைபொங்க
கரைப்பேன் பாகைக் கரைவேன் நானும்
காகம்போலும் கரையோடும்
திரைபோ லுலைவேன் திருந்தேன் தினமும்
தருவேன் தொல்லை தமிழாலே
உரைப்பேன் கவிதை ஓவென்றலறி
உள்ளே இனிமை உடைத்தாக

நன்றிகள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Empty Re: முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்)

Post by பிளேடு பக்கிரி Wed May 16, 2012 6:35 pm

படித்தேன்.. சுவைத்தேன்.. சூப்பருங்க சூப்பருங்க



முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Empty Re: முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்)

Post by kirikasan Wed May 16, 2012 7:15 pm

பிளேடு பக்கிரி wrote:படித்தேன்.. சுவைத்தேன்.. சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றிகள்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Empty தெரியவில்லை புரியவில்லை

Post by kirikasan Wed May 16, 2012 7:17 pm

௨. தெரியவில்லை புரியவில்லை

தெத்தத் தெத்தத் தெரிதெரி தெரிதெரி
தெரியவேதெரியாது
எத்தெத் திசைதனில் இருளும் விடியும்
எதுவுமே தெரியாது
தத்தத் தருதரு தருதரு தரணியில்
தருவது எவர் பாடு
தலைகால் புரியா ஆடும் உயிர்கள்
தவறிடும் நிலைகூறு

சித்தம் மறுகிச் சிதைவுறும் மனதும்
சேர்வது எதனூடு
சத்தம்குன்றிச் சலனமும் அற்றே
சரிவதின் நிழலூடு
உத்தம நிலையில் உயிரின் கீதம்
உடைபடும் நிலையாது
அத்தம் கொள்ளும் அறிவின் மந்தம்
அனைத்தும் அதனூடு

சுற்றுசூழல் எதுவும் காணச்
சோர்வுறும் நிலையேது
அற்றும் வாழ்வில் அந்தம் என்னில்
அதனின் பொருள் ஈது
முற்றும் போனால் முடிவின் எல்லை
முன்வரும் போலுணர்வு
கற்கள் வைத்த பாதையின் முடிவை
காணும் நிலைப்பாடு

சொற்கள் கூறும் மனதில் வெறுமை
தோன்றுவ தெதனூடு
சற்றும் குறையா விதியும் உடலை
சித்திர வதைசெய்து
நிற்கும் போது கற்பனை என்ன
நினவெழும் ஒருகாடு
விற்றல் வாங்கும் உலகும் ஏனோ
வினைகள் புறப்பாடு

என்ன இன்னும் இருந்தாய் போதும்
எழுநட எனும்போது
பின்னும்வார்த்தை பேசும்பொருளும்
பிதற்றிடும் நிலைப்பாடு
மின்னும் உயிரும் மேலா கீழா
மயங்கிடும் நினைவோடு
இன்னுமின்னும் எகிறும் வார்த்தை
இதைவிடப் பொருளேது

தெள்ளெனும்நீரில் கல்லை எறிந்தால்
தொலையும் பிம்பங்கள்;
கள்ளின் நிறமும் பாலும் ஒன்றாய்
காணும் மாயைகள்
உள்ளம்மீது இல்லைக் குற்றம்
எழுதும் வார்த்தைகள்
தள்ளும் போது மலையில் உருளத்
தலைகீழ் தெரியும் கொள்

காலச் சக்கரம் உருளும் போது
காட்சிகள் மாறுவதும்
நீலக் கருமை மேகம் மறைத்து
நிற்கும் நிலைமாறி
கோலம் மாற்றம் கொண்டே விண்ணின்
கோடி ஒளிதெரியும்
ஞால வாழ்வின் முடிவும்காண
நாளை புரிந்துவிடும்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Empty Re: முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum