புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_c10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_m10சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 13, 2012 11:22 am

சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   392478_406958369337391_308092902557272_1214910_1041531213_n

தமிழ்ச் சினிமாவில் பல படங்களில் இந்தக் கதை அமைந்து இருக்கும்.ஏழைக் கதாநாயகன் அல்லது வில்லனால் ஏழையாக்கப்பட்ட கதாநாயகன்"நானும் உன்னைப் போல பணக்காரனாகி,உன்னையும் உன் திமிரையும் அடக்கலைன்னா நான் என் பேரை மாத்திக்கிறேன்!" என்று ஆக்ரோஷமாக கூறி சென்னைக்கு ரயிலேறுவார்.

ஒரு வழியாக சினிமா இலக்கணத்திற்கே உரியவாறு செல்வந்தரின் அபிமானத்தைப் பெற்று மிகப் பெரிய கோடீஸ்வரராகவும் மாறுவார்.

அப்புறம் கிராமத்திற்கு திரும்பி,தாம் சவால் விட்ட வில்லனை வாய் பிளக்க வைத்து,கூடவே தனது காதலியை-அநேகமா வில்லனின் மகள்- மணந்து கொள்வதுடன் படம் சுபமாக முடியும்.

இந்த வகையறா கதைகள் நம் சினிமாக்களில் அரதப்பழசாகிப் போனாலும்,அது சென்னையை தாண்டி, தமிழகத்தின் கடைகோடி கிராமத்து இளைஞன் வரை தாக்கத்தை ஏற்படுத்த தவறியதில்லை.

இந்தக் கதைகளின் தாக்கத்தில் மெட்ராசுக்கு ரயிலேறியவர்கள் கணக்கிடலங்காது;இது 70, 80 களின் நிலை என்றால்,தற்போது தொலைக்காட்சிகள் மற்றும் இதர இணையங்கள் வாயிலாக சகலத்தையும் அறிந்துகொண்டு அசால்டாக ரயிலேறிவிடுகிறார்கள் சென்னைக்கு!

இதுபோன்று பிழைப்புத் தேடி வருபவர்களால் சென்னை மாநகரத்தின் மக்கள் தொகை 45 லட்சமாக உயர்ந்துள்ளது.இவர்களைத் தவிர ரேஷன் கார்டு இல்லாத நிலையில் வசிப்பவர்கள் எண்ணிக்கை பல லட்சம் இருக்கும்.

புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்கு வேலை காரணமாக வந்து செல்பவர்கள்... தற்காலிகமாக சென்னைக்கு வந்து பணிபுரிபவர்கள் என்று நாளுக்கு நாள் மக்கள் தொகையின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி பெருகிக் கொண்டே போகிறது.

சென்னையின் பூர்வீகக் குடிகளாக சொந்த வீடு உள்ளவர்கள், நல்ல வசதி படைத்தவர்கள். தனியார்துறையிலோ அரசுத்துறையிலோ நல்ல சம்பளத்தில் உள்ளவர்கள்தான் வசதியான வீடுகளில் நல்ல நல்ல அப்பார்ட்மெண்டுகளில் வசிக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் என்ஜினீயரிங் கல்வி முடித்த 50 லட்சம் பேர்களில், 30 லட்சம் பேர் வேலைக்காக சென்னையில் வந்து இறங்கி விட்டனர். வேலை கிடைத்ததும் 4 மாணவர்கள் கூட்டாக சேர்ந்து 6 ஆயிரம் ரூபாய் தரக்கூடிய அப்பார்ட்மென்ட்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து குடியேறுகிறார்கள்.

அரசு சார்பாக வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கும் வாடகையைக் கண்காணிக்க எந்தவித அமைப்பும் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். பேராசை பிடித்த இவர்களும் புரோக்கர் கோமாளிகளும் ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரர்களும் செயற்கையான ஒரு பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றனர்.

அதன் வாய்க்கு வந்த வாடகை, அபரிமிதமான அட்வான்ஸ் என்று நடுத்தர வர்க்கத்தினரை போட்டுத்தாக்குகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர், தங்கள் வருமானத்தில் இரண்டில் ஒரு பகுதியை வாடகையாகக் கொடுத்தால்தான் நல்ல வீடுகளில் வசிக்க முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

இது ஒருபுறம் இருக்க புறநகர் ரயில்களிலும்,மாநகர பேருந்திலும் நெரிசலில் பயணித்து வேலைக்கு சென்று,வீடு திரும்புவதற்குள் உடல் சக்கையாகிவிடுகிறது.

ஆப்புதனை அசைத்து விட்ட குரங்கைப் போல் இந்த சென்னை நகர வாழ்க்கையை விட்டு விடவும் முடியாமல், ஒட்டிக் கொள்ளவும் முடியாமல் நாட்கள் ஓடிக் கொண்டிருக்கும்.

சொந்த கிராமத்தில் நிலபுலன்கள் இருக்க, பட்டப்படிப்பு படித்து இருக்கும் ஒரு காரணத்திற்காகவே நகர வாழ்க்கை என்னும் சிலுவையை சுமந்து திரியும் அவல நிலை. வீடு, காடு, சாதிசனம் எல்லாமும் வேண்டும்; மகன் மட்டும் பேண்ட் போட்ட ஒயிட்காலர் ஜாப் பார்க்க வேண்டும் அதுவும் சென்னை,கோவை போன்ற பெரு நகரத்தில் வேலை வேண்டும் என்னும் முரண்பட்ட சிந்தனையே இதற்குக் காரணம்.

கிராமங்களில் சுய தொழிலுக்கென மத்திய,மாநில அரசுகள் அநேக நலத்திட்டங்களை வழங்கி வந்தாலும் இளைஞர்கள் அவற்றைப்பற்றி தெரிந்து கொள்ள அக்கறைக்காட்டுவதில்லை; அப்படியே அறிந்து கொள்ளலாம் என்று வருபவர்களையும் அதிகாரிகள் முறையாக வழிநடத்துவதில்லை.

கூடவெ உள்ளூரில் இருந்தால் சதா சர்வகாலமும் டாஸ்மாக்கில் குடித்து விட்டு வம்பு செய்து கொண்டு கிடப்பதும் இவர்களை சென்னைக்கு வேலைக்கு அனுப்புவதற்கு ஒரு காரணமாக கிராமப்புற பெற்றோர்களால் சொல்லப்படுகிறது.விவசாய வேலைகள் செய்வதை விரும்பாத ஒரு இளையதலைமுறை உருவாகி வருவதும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு புலம் பெயர்ந்து வருபவர்களுக்கு இந்த ஊர் மற்றும் இதன் வாழ்க்கை முறை தங்களுக்கு மிகவும் சிரமம் என்பது புரிந்து விடுகிறது.ஆனால் ”மெட்ராஸ் வரைக்கும் பொழைக்கப் போயிட்டு அங்க முடியாம இங்க வந்துட்டாங்க..!” என்ற வசைச் சொல்லுக்கு பயந்தே பலர் இந்த மாநகர வாழ்க்கையை சகித்து கொள்கிறார்கள்.

கிராமங்களில், அதன் அருகாமையில் உள்ள நகரங்களில் பணிபுரிய வாய்ப்புகள் இருந்தும் கடினமான இந்த வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.காரணம் சொந்த ஊர் பகுதியில் 4 ஆயிரம் ரூபாய் சம்பளம்.சென்னையில் அதே வேலைக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்ற மயக்கத்தில் வேலை பார்க்கிறார்கள்.

உண்மையில் சொந்த ஊரில் மாதம் ஆயிரம் ரூபாய் சேமிக்க முடிந்த அவரால் சென்னையில் மாதம் ஆயிரம் ரூபாய் கடனாளியாகி, போனஸைக்கூட சேர்ந்த கடன்களுக்குக் கொடுத்து விட்டு மறுபடியும் செக்குமாடு போல் தன் அலுவலகத்துக்கு வழக்கமான தனது புலம்பலுடன் புறப்பட்டு செல்வார்.

இதில் சில கணவன் மனைவியர், பெரியவர்கள் எவர் துணையும் இல்லாமல் சென்னையில் தங்களின் பிள்ளைகளை வளர்க்க வேண்டுமானால், அவர்கள் படும் துயரங்கள் சொல்லி முடியாது. சொந்த மண்ணில் தாய் தந்தையர் அரவணைப்பில், சித்தப்பா சித்தி மாமா அத்தை தாத்தா பாட்டி என்று வளர வேண்டிய குழந்தைகள் யாருமற்றவர்கள் போல் பக்கத்து பிளாட் குழந்தைகளுடன் ஒட்டியும் ஒட்டாமலும் வளர்கிறார்கள்.

வாணியம்பாடியின் வானம்பாடி கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் கூறியது போல் ”இவர்கள் தன்னை விற்று விட்டு எதை வாங்கப் போகிறார்கள்?” என்பதைத்தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

ஒரு மனிதன் பரிபூரணமான மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமானால் ஏழு விஷயங்கள் அவசியம் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். 1. சொந்த ஊர் 2. தாய் தந்தையர் மற்றும் உறவினர்கள் 3. சொந்த வீடு 4. நண்பர்கள் 5. பணம் 6. கேளிக்கை நிகழ்ச்சிகள் திருவிழாக்கள், திருமண விழாக்கள் 7. ஆரோக்கியமான உடல் நலம்.

இந்த ஏழு விஷயங்கள் இருந்தால் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்.அப்போது நம் சிந்தனை வளம் மேம்பட்டு இருக்கும்.நம் மனநலமும் காக்கப்படும்.ஓஷோவின் பொன் வாக்கியமான வாழ்க்கையைக் கொன்டாட முடியும்.இல்லாவிட்டால் கவலை படுவதிலேயே நம் வாழ்க்கை முடிந்து போய் இருப்பதைத்தான் உணர முடியும்.

நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொண்ட இரண்டு நண்பர்கள் இப்படி பேசிக் கொண்டார்கள்.”சென்னையில் ஏதோ சாதிக்கப் போறேன்னு புறப்பட்டியே என்ன சாதிச்சே?” என்று ஒருவன் கேட்டான். அதற்கு அந்த நண்பன் பதில் சொன்னான்,” சென்னையிலே இருக்கிறதே ஒரு சாதனை தான்!” என்று.இது நகைச்சுவைக்காக சொல்லப்பட்ட பதில் அல்ல; அப்பட்டமான யதார்த்தத்தின் வெளிப்பாடு!

- கதிரேசன்

முக-நுள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 12:54 pm

மிக நல்லப் பதிவு...யதார்த்தமும் அதுதானே?...
படங்கள் அருமை பிரசன்னா...பகிர்விற்கு நன்றி...



சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   224747944

சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Rசென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Aசென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Emptyசென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Rசென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 13, 2012 1:09 pm

சென்னைல இருப்பதே சாதனை தான் -
அதுவும் என்னைப் போன்று புழலில் இருப்பது
அதனினும் பெரும் சாதனை தான் - நல்ல பகிர்வுக்கு நன்றி பிரசன்னா.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 1:13 pm

கொலவெறி wrote:சென்னைல இருப்பதே சாதனை தான் -
அதுவும் என்னைப் போன்று புழலில் இருப்பது
அதனினும் பெரும் சாதனை தான்
- நல்ல பகிர்வுக்கு நன்றி பிரசன்னா.

ஆம் அது புழலுக்கு வந்த சோதனை...



சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   224747944

சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Rசென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Aசென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Emptyசென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Rசென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 13, 2012 1:15 pm

ரா.ரா3275 wrote:ஆம் அது புழலுக்கு வந்த சோதனை...
சோதனை கண்டு வேதனை கொள்ளாது
சோதனை வென்று சாதனை படைப்போம்...




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 13, 2012 1:18 pm

கொலவெறி wrote:
சோதனை கண்டு வேதனை கொள்ளாது
சோதனை வென்று சாதனை படைப்போம்...
சோதனை உங்களுக்கில்லை எங்களுக்கு ஜாலி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 1:21 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:ஆம் அது புழலுக்கு வந்த சோதனை...
சோதனை கண்டு வேதனை கொள்ளாது
சோதனை வென்று சாதனை படைப்போம்...

உங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது யாரு?...
அவர கூப்ட்டு அடி போடணும்...
இப்டி கொழப்பி கொழப்பி எழுதுறதே உங்களுக்கு வேலையாப் போச்சு...



சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   224747944

சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Rசென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Aசென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Emptyசென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   Rசென்னையிலே இருக்கிறதே சாதனைதான்!...   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 13, 2012 1:25 pm

முரளிராஜா wrote:சோதனை உங்களுக்கில்லை எங்களுக்கு ஜாலி
அதை சமாளித்து வென்று சாதனை செய்ய நீங்கள்
துணியாதது கண்டு வேதனை வருகிறது முரளி...




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 13, 2012 1:27 pm

கொலவெறி wrote:
அதை சமாளித்து வென்று சாதனை செய்ய நீங்கள்
துணியாதது கண்டு வேதனை வருகிறது முரளி...
நான் எதுக்கு துணிஞ்சேன் இதுக்கு துணியறதுக்கு அழுகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 13, 2012 1:28 pm

ரா.ரா3275 wrote:உங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது யாரு?...
அவர கூப்ட்டு அடி போடணும்...
இப்டி கொழப்பி கொழப்பி எழுதுறதே உங்களுக்கு வேலையாப் போச்சு...
நாங்க தமிழே படிக்கலியே...

எனக்கு சொல்லித் தர துணிவு யாருக்கும் இல்லியே... புன்னகை

(இவனுக்கு சொல்றதுக்கு சொல்லாமலே இருக்கலான்னு நெனச்சு ஓடிட்டாங்க) புன்னகை

படிக்காத வருத்தம் நிறைய இருக்கு
ஆனா படிச்சு இதனினும் உங்களை படுத்துற
வேதனையை காட்டிலும் குறைவு தான் ராரா... புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக