புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
21 Posts - 70%
heezulia
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
1 Post - 3%
viyasan
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_m10தலையாலங்கானத்துப் பெரும் போர் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையாலங்கானத்துப் பெரும் போர்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 12, 2012 12:13 am

First topic message reminder :

தலையாலங்கானத்துப் பெரும் போர் (கி.வா.ஜகந்நாதன் எழுதியது)
௧) 1 )

ரசன் போருக்குப் புறப்பட்டுவிட்டான். இவ்வளவு இளம்பிராயத்தில் யார் போருக்குச் சென்றிருக்கிறார்கள்? இளமையில் அரசுக்கட்டிலில் ஏறிய அரசர்கள் உண்டு. ஆனால் இவன் இன்னும் பிள்ளைப் பருவம் தாண்டவில்லை; அதற்குள் வில்லை ஏந்திக் கொண்டான். என்ன வீரம்! என்ன வீரம்!

‘இவனுடைய அறிவையும் குலப்பெருமையையும் எப்படிப் பாராட்டுவது! இவன் முன்னோர்கள் போருக்குப் புறப்பட்டால் இதோ இந்த நகரத்தின் வாசலில் உள்ள குளிர்ந்த பொய்கையில் மூழ்குவார்கள். வேப்பந்தளிரைச் சூடிக்கொள்வார்கள். இவனும் அந்த மரபு தவறாமல் செய்கிறானே!

மூதூர் வாயிலிற் பனிக்கயத்தில் மூழ்கினான். பொதுவிடத்தில் உள்ள வேம்பின் தளிரை அணிந்தான். மத்த யானை புறப்பட்டது போலப் புறப்பட்டு விட்டானே! இவனை எதிர்க்க வந்த பகைவர்கள் ஒருவரா, இருவரா? பலர் அல்லவா?

அவர்கள் அனைவரையும் இன்றைப் பொழுதுக்குள் இவன் அழித்துவிட முடியுமா? சிலர் எஞ்சுவார்களே? என்று புலவர்கள் பாராட்டினார்கள். இடைக்குன்றூர்கிழார் என்னும் புலவர் இந்த நிகழ்ச்சிகளை அப்படியே கவியில் வைத்துப் பாடினார்.

மூதூர் வாயிற் பனிக்கயம் மன்னி
மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
த்ண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மன்னரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ? பகல்தவச் சிறிதே!


(தொடரும்)




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 21, 2012 10:35 pm

௫) 5 )
பாண்டி நாட்டுப்படைக்கு நெடுஞ்செழியனே தலைமை வகித்தான். அவனுடைய வீரத்தைக்கண்டு படைவீரர் அத்தனைப்பேரும் ஊக்கமுற்றனர். “வீட்டில் இனிதாகப் பொழுது போக்கவேண்டிய இளம்பருவத்தினனாகிய இவனே நேரில் போர்க்களத்தில் வந்து அஞ்சாமல் நின்று போர் செய்யும்போது, இவனுக்காக உயிரையும் வழங்கி வெற்றி வாங்கித்தரவேண்டியது நம் கடமை” என்ற உணர்ச்சி அவர்களுக்கு மேலோங்கி நின்றது.

முதல் போரில் சோழனது படை கை விஞ்சியது போலத் தோன்றியது. ஆயினும் தொடர்ந்து தாக்குவதற்கு அப்படைக்குத் துணைப்படை உதவி செய்யவில்லை. இருப்பினும் வெற்றி தோல்வி யார் பங்கில் என்று சொல்ல முடியாத நிலையே நீடித்தது. சோழன் இரண்டு காரியங்களைச் செய்து வந்தான். தன் படைக்குத் தலைமை பூண்டு போர் செய்ததோடு மற்ற நண்பர்களையும் அவ்வப்போது ஊக்கி வந்தான். அந்தப்போரில் அவர்களுக்கு தன்னளவு ஊற்றம் இல்லையென்ற எண்ணம் அவன் உள்ளத்தினூடே இருப்பதை இந்தச் செயலால் அவன் வெளிப்படுத்திக் கொண்டான்.

வேளிர் படைகள் பாண்டியன் படையை எதிர்த்து நிற்கும் ஆற்றலை இழந்தன. சமயம் பார்த்து நெடுஞ்செழியன் சிங்கவேறு போல் பாய்ந்தான். இது கன்னிப்போராக இருப்பினும் அவனுடைய போர்த்திறமை கணத்துக்குக் கணம் நண்பர்களுக்கு வியப்பையும் பகைவர்களுக்கு அச்சத்தையும் ஊண்டாக்கியது.

மெல்ல மெல்லப் பாண்டிப்படை முன்னேறியது. வேளிர் படையிற் சிலர் படையை விட்டே ஓடிப்போயினர். அதுகண்ட மற்றவர்களுக்கும் சோர்வு உண்டாயிற்று.

எருமையூரன் படைவீரர்களுக்குதான் முதல் முதலில் சோர்வு உண்டாயிற்று. “நம்முடைய ஊர் எங்கே? பாண்டியனுக்கும் நமக்கும் என்ன பகை? சோழனுக்கும் நமக்கும் என்ன உறவு? நம்முடைய தலைவர் பைத்தியக்காரத்தனமாக இந்தச் சோழன் பேச்சைக் கேட்டு ஏமாந்து போய்விட்டார். பாண்டியன் தோல்வியுற்றாலும் அவன் நாட்டை நம்மால் ஆளமுடியுமா? சோழனுக்குத்தானே அது காணியாகும்?

(தொடரும்)




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon May 21, 2012 11:03 pm

நன்று



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 27, 2012 7:13 pm

௬) 6 )
பல நாடுகள் இடைப்பட்டு நாம் வாழ்கிறோம். சில பொருளை அள்ளிக்கொண்டு போகலாம். அவை எத்தனை நாளைக்கு உதவும்? இப்படி அவர்களுக்குள் ஊக்கக்குறைவு தலைநீட்டியது. இந்த எண்ணம் புலிகடிமால் படையில் உள்ளவர்களுக்கும் அடுத்தபடி தோன்றியது. தமக்கு நன்மை ஏதும் இல்லை என்ற எண்ணம் உண்டாகி விட்டால் பிறகு போரில் எப்படி ஊக்கம் தொடர்ந்து இருக்க முடியும்?

அங்கங்கே பகைப் படைகளில் உள்ள வீரர்கள் கைவாங்கினர். சோழன் மட்டும் துணிவோடு நின்றான். சேரனுக்குக் கூட ஊக்கம் குன்றிவிட்டது. சோழப் பெரும்படையே நெடுநேரம் பாண்டியன் படையின் முன் நின்று பொருத்தது. கடைசியில் அதுவும் பின் வாங்கியது.

பாண்டியன் படையின் ஆற்றலும் ஒற்றுமையும், நெடுஞ்செழியனது வீரமும் அன்பும் வெற்றியை உண்டாக்கின. அச்செழியன் கன்னிப்போரில் வெற்றிமகளைக் கைப்பற்றினான். எங்கே பார்த்தாலும் வெற்றி ஆரவாரந்தான். சோழன் அடிபணிந்தான். சேரன் ஓடிப்போனான். மற்ற வேளிரும் இருந்த இடம் தெரியாமல் ஒளிந்து கொண்டார்கள்.

தலையாலங்கானத்துப் பெரும்போர் என்று அப்போரை வழங்குவர். வென்றவரும் அதை மறக்காமல் பாராட்டினார்கள்; தோற்றவர்களும் மறக்கவில்லை.

நெடுஞ்செழியன், சோழனும் பிறரும் பணிந்து அளித்த பொருள்களுடனும், அங்கங்கே வாரிக் கொண்ட பண்டங்களுடனும் மதுரைக்கு வந்து வெற்றிவிழாக் கொண்டாடினான். புலவர்கள் அவன் புகழைப் பாடினார்கள். அவன் அவர்களுக்குத் தான் பெற்ற பொருள்களை வழங்கினான். பாணர்களும், பிற கலைஞர்களும் பலவகைப் பரிசில்களைப் பெற்றனர்.

போர் செய்த வீரர்களுக்குப் பல பண்டங்களை மன்னன் வழங்கினான். படைத்தலைவர்களுக்கு ஏனாதி, நம்பி என்ற சிறப்புப் பட்டங்களை வழங்கினான். அமைச்சர்களுக்குக் காவிதி என்னும் பட்டத்தை அளித்தான்.

(தொடரும்)


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon May 28, 2012 9:57 am

சாமி wrote: தலையாலங்கானத்துப் பெரும்போர் என்று அப்போரை வழங்குவர். வென்றவரும் அதை மறக்காமல் பாராட்டினார்கள்; தோற்றவர்களும் மறக்கவில்லை.

தோற்றவர்களும் மறக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய வெற்றி !!!

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Jul 07, 2012 8:57 pm

சாமி !
இந்த தலையாலங்கானம் என்ற இடம் இப்போது எங்கு உள்ளது ?
உங்களுக்கு தெரியுமா?

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Sun Jul 08, 2012 1:38 pm

தமிழ் மன்னர்களின் வீரம் பற்றி அறிய முடிந்தது நன்றி ... நெடுஞ்செழியனின் வீரம் வியப்பில் ஆழ்த்தியது ...பதிவுக்கு நன்றி ... சூப்பருங்க



சுகுமார் அர்ச்சுனன்

[You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 11, 2012 4:26 pm

ஆரூரன் wrote:சாமி ! இந்த தலையாலங்கானம் என்ற இடம் இப்போது எங்கு உள்ளது ?
உங்களுக்கு தெரியுமா?

மதுரையில் இருந்து சுமார் 15 கி.மீ (சிவகங்கை போகும் வழியில்) தொலைவில் உள்ளது என்று கேள்விப்பட்டுள்ளேன். அதே பெயரில்தான் இன்னும் உள்ளதா என்று தெரியவில்லை.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக