Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்பூஷியஸ் தத்துவங்கள்.........
2 posters
Page 1 of 1
கன்பூஷியஸ் தத்துவங்கள்.........
"நீ நேசிக்கும் ஒரு வேலையைத் தெரிவு செய்தால், உன் வாழ்க்கையில் ஒரு நாள் கூட நீ வேலை செய்ய வேண்டி வராது.” - கன்பூஷியஸ்.
"உலகில் மௌனம்தான்..., மிகப்பெரிய ஆயுதம்".-கன்பூஷியஸ்
"சிறிய விசயங்களில் பொறுமை காட்டாவிட்டால் ,பெரிய காரியங்கள் கெட்டுப்போகும்".- கன்பூஷியஸ்
சீன குரு என்பதே ஸின் குரு என்றாகி ஜென் குரு என மருவியது என்றும் சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.புகழ்பெற்ற சீனக் குரு கன்பூஷியஸ்.இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இன்றுவரை அவரது பொன்மொழிகள் உலகெங்கும் போற்றப்படுகின்றன. எளிய குடிசைகள் எளிமையாக வாழ்ந்த அவரிடம் பாடம் கற்க ஏராளமான பிரபுக்கள், மன்னர்கள் தங்களுடைய பிள்ளைகளை அனுப்பி வைத்தனர்.கன்பூஷியஸிடம் பாடம் கற்றவன் என்ற தகுதியே அந்நாளில் அரசுரிமை பெறும் தகுதிகளில் மிக முக்கியமான ஒன்றாக விளங்கியது.ஒரு நாள் குரு குலத்தில் கன்பூஷியஸ் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.ஒரு மாணவன் எழுந்தான்.குருவே! என்னை அரசு அதிகாரியாக நியமிக்கப் போகிறார்கள். எனக்குத் தங்கள் அறிவுரை...?உடனே பலன்கள் ஏற்பட வேண்டுமென்று அவசரப்படாதே. குறுகிய கால, அற்ப லாபங்களை எதிர்பார்க்காதே. முதலாவது தவறு உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் மதிப்பு இழக்க வைக்கும். இரண்டாவது தவறு பெரும் சாதனைகளைக் கோட்டை விடச் செய்யும்.அரசு அதிகாரி என்ற முறையில் என்னிடம் என்ன குறைகள் இருக்கக் கூடாது? பாரபட்சம், அவசரப்பட்டு முடிவெடுத்தல், சுயநலம், பிடிவாதம்.இளவரசன் ஒருவன் எழுந்தான்.குருவே! முன்னோர்களின் ஆவிகளுக்கு எப்படி நம் கடமைகளைச் செய்வது? உயிருடன் இருப்பவர்களுக்கு முதலில் உன் கடமைகளைச் செய். ஆவிகளைப் பிறகு கவனிக்கலாம்.ஆட்சி சிறப்பானதாயிருக்க எவை எவை தேவை? மூன்று விஷயங்கள் தேவை. முதலில் போதிய உணவு இருப்பு. பாதுகாப்புக்கு ராணுவம். மக்களின் நம்பிக்கை. இந்த மூன்றிலும் தன்னிறைவு பெற்றதே சிறந்த நிர்வாகம்.இதில் ஏதேனும் ஒன்றை விட வேண்டும் என்றால் விட வேண்டியது எது?'''ராணுவம்!'' என்றார் கன்பூஷியஸ் பளிச்செனறு.அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால் அந்த நாட்டின் கதி அவ்வளவுதான்.சீன சிந்தனைகளுக்கு கன்பூஷியஸ் மூலமாவார்.தள்ளாத வயதிலும் கன்பூஷியஸ் அயராது உழைத்த உழைப்பே இன்றைய நவீன சீனாவாகும். அவரிடம் மக்களுக்காக அரசாங்கமானது செய்யவேண்டியது என்ன என்று ஒரு முறை கேட்டபோது அவர்களை அதாவது மக்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவிப்பதே அரசாங்கத்தின் முதல் வேலையாகும் என்றார்.அதன்பின் அவரிடம் இரண்டாவதாக மக்களுக்கு அரசாங்கம் செய்யும் பணி எது என வினவியபொழுது நல்ல தரமான பண்பாடுடைய கல்வியை வழங்க வேண்டும் என்று பதில் கூறினார்.பசியாலும், பட்டினியாலும் வயிறு சுருங்கி துடித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் சென்று நீதி போதனை செய்தால் அது சுவரிடம் வேதாந்தம் பேசியது போல் இருக்கும். பசி மயக்கத்தில் கிடப்பவனுக்கு முதல் தேவை சாதமே தவிர வேதங்கள் அல்ல இந்த உண்மையை கி.மு. 551-ஆண்டிலேயே கன்பூஷியஸ் சொன்னார். ஒரு நாடு அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வளர்ச்சி பாதையை நோக்கிச்செல்ல வேண்டுமென்றால் அந்த நாட்டு மக்களிடம் செல்வமும் கல்வியும் மட்டும் இருந்தால் போதாது. சுதந்திர தாகமும் எதையும் தியாகம் செய்யும் வீரமும் பாய்ந்து வரும் ஈட்டிக்கு முன் திறந்த மார்புடன் நிற்கும் தைரியமும் வேண்டுமென்று கன்பூஷியஸ் தமது வாழ்நாள் முழுவதும் உபதேசித்தது மட்டுமல்லாது அதை நடைமுறையிலும் செய்து காட்டினார். நாட்டிற்கு அமைச்சராக அவர் இருந்த காலத்தில் சீனா முழுவதும் மஞ்சள் நதி கூடவே கன்பூஷியஸின் உபதேச நதியும் பெருக்கெடுத்து ஓடியது.
mukanul
Re: கன்பூஷியஸ் தத்துவங்கள்.........
பகிர்ந்தமைக்கு நன்றி பகவதி
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|