ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

NSB பரிவர்த்தனை ஊடாக பிரதம நீதியரசருக்கு வலை வீசும் மகிந்த ராஜபக்‌ஷ!

Go down

NSB பரிவர்த்தனை ஊடாக பிரதம நீதியரசருக்கு வலை வீசும் மகிந்த ராஜபக்‌ஷ! Empty NSB பரிவர்த்தனை ஊடாக பிரதம நீதியரசருக்கு வலை வீசும் மகிந்த ராஜபக்‌ஷ!

Post by eelamaran Thu May 10, 2012 6:37 pm

தேசிய சேமிப்பு வங்கி ‘த பினான்ஸ்’ நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்ததை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புவிக்க ஜனாதிபதிக்கு நெருக்கமான சில தனியார் ஊடகங்கள் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

எனினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமைய இந்த அரசியல் சூழ்ச்சி மேற்கொள்ள்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை தன்பிடியில் வைத்திருப்பதற்காகவே இந்த சூழ்ச்சித் திட்டத்தை மகிந்த ராஜபக்‌ஷ தீட்டியுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதம நீதியரசர் ஜனாதிபதியின் கைபொம்மையாகவே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தார். எனினும், நாட்டில் நீதித்துறை மீது மக்கள் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருவதாகவும், இந்த நிலையில் தொடர்ந்தால் நீதிமன்றம் மீதான நம்பிக்கை முழுமையாக அற்றுப்போகும் எனவும் நீதியரசர்கள் சிலர் பிரதம நீதியரசரை எச்சரித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிலர் பிரதம நீதியரசரைச் சந்தித்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் ஜனாதிபதியின் காதுகளுக்குச் சென்றுள்ளன. நிலைமையை சுதாரித்துக் கொண்ட ஜனாதிபதி, பிரதம நீதியரசரை தொடர்ந்து கைபொம்மையாக வைத்திருப்பதற்குத் தேவையான சூழ்ச்சித் திட்டத்தைத் தயாரித்துள்ளார்.

இதற்கமையவே தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் காரியவசத்தை பங்குச்சந்தை பரிவர்த்தனையில் ஜனாதிபதி சிக்கவைத்ததாக ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் எம்மிடம் தெரிவித்தார்.

இந்த சூழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பப் பணிகளை தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர்களில் ஒருவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சுமனதாஸவிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.

பங்குச் சந்தையில் துமிந்த சில்வாவின் சகோதரர் ரெய்னோ சில்வாவிற்கும் அவரது நண்பர் ஒருவருக்கும் சொந்தமான பங்குகளையே தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் கொள்முதல் செய்துள்ளார். இந்தப் பரிவர்த்தனைக்குத் தேவையான தடைகளை அகற்றுமாறு சில தினங்களுக்கு முன்னர் பரிவர்த்தனை நிலையத்தின் தலைவருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசத்தை இந்த சூழ்ச்சியில் சிக்கவைப்பதன் மூலம் பிரதம நீதியரசரை தன்பக்கம் இழுந்து தொடர்ந்து கைபொம்மையாக செயற்பட வைப்பதே ஜனாதிபதியின் திட்டமாகும்.

இந்த சூழ்ச்சி திட்டம் குறித்து தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு, பல தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்த விடயம் பிரதீப் காரியவசத்தையும், அவரது மனைவி ஷிராணி பண்டாரநாயக்கவையும், அவரது குடும்பத்தாரையும் விரக்தியடையச் செய்துள்ளது. இதனால் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு குடும்ப உறுப்பினர்கள் கோரி வருவதாக தெரியவருகிறது.

இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பிரதம நீதியரசர், அரசியலமைப்பின் பிரகாரம் அந்தப் பதவியில் இன்னும் 09 ஆண்டுகள் நீடிக்க முடியும். இதற்கமைய எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கெதிரான கடுமையான தீர்மானங்களை எடுக்கக் கூடிய சாத்தியங்கள் நிறையவே காணப்படுகிறன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதித்துறையின் சிரேஷ்ட சட்டத்தரணியொருவர், ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அநீதிக்கெதிராக அந்நாள் பிரதம நீதியரசராகப் பதவி வகித்த நெவில் சமரகோன் இவ்வாறான தருணங்களில் கடுமையான தீர்மானங்களை எடுத்திருந்ததாகக் குறிப்பிட்டார். அதேபோன்று தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க செயற்பட வேண்டும் எனவும் அதற்கான அதிகாரமும், ஞானமும் அவருக்கு இருப்பதாகவும் அந்த சட்டத்தரணி குறிப்பிட்டார்.

ஷிராணி பண்டாரநாயக்க, அந்நாள் பிரதம நீதியரசர் நெவில் சமரகோனைப் பின்பற்றினால் மாத்திரமே நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை மதிக்கும் அனைவருக்கும் அது எடுத்துக்காட்டாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

http://thaaitamil.com/?p=18411
eelamaran
eelamaran
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 25/04/2012

http://thaaitamil.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum