புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருடு போச்சே!  Poll_c10திருடு போச்சே!  Poll_m10திருடு போச்சே!  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருடு போச்சே!  Poll_c10திருடு போச்சே!  Poll_m10திருடு போச்சே!  Poll_c10 
284 Posts - 45%
heezulia
திருடு போச்சே!  Poll_c10திருடு போச்சே!  Poll_m10திருடு போச்சே!  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
திருடு போச்சே!  Poll_c10திருடு போச்சே!  Poll_m10திருடு போச்சே!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருடு போச்சே!  Poll_c10திருடு போச்சே!  Poll_m10திருடு போச்சே!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருடு போச்சே!  Poll_c10திருடு போச்சே!  Poll_m10திருடு போச்சே!  Poll_c10 
19 Posts - 3%
prajai
திருடு போச்சே!  Poll_c10திருடு போச்சே!  Poll_m10திருடு போச்சே!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருடு போச்சே!  Poll_c10திருடு போச்சே!  Poll_m10திருடு போச்சே!  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருடு போச்சே!  Poll_c10திருடு போச்சே!  Poll_m10திருடு போச்சே!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருடு போச்சே!  Poll_c10திருடு போச்சே!  Poll_m10திருடு போச்சே!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருடு போச்சே!  Poll_c10திருடு போச்சே!  Poll_m10திருடு போச்சே!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடு போச்சே!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:35 am


திருடு போச்சே!  E_1336020855

செல்வத்தின் தூரத்து உறவினர் ஒருவர் இறக்கும்போது, குழந்தை இல்லாத காரணத்தால், செல்வத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம் எழுதி வைத்து விட்டுப் போனார்.

ஏழை செல்வம் அதனை வாங்கி வர உறவினர் ஊருக்குச் சென்றான். அப்போது, மதன் என்பவன் அவனுக்கு வலிய வந்து உதவினான்.

செல்வம் பணத்தோடு ஊருக்குக் கிளம்பும் போது, மதன் அவனிடம், ""உங்கள் ஊர் வாசுவின் மகளுக்குத் தான், என் மகனைக் கல்யாணம் செய்து வைப்பதாகப் பேசி வைத்திருக்கிறேன். இப்போது நான் கல்யாண செலவிற்கான பணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் வாசுவிடம், நான் விரைவிலேயே முகூர்த்த நாளைக் குறிப்பிட்டு தகவல் கொடுப்பதாகக் கூறுங்கள்,'' என்றான்.

அவ்விதமே, செய்வதாகக் கூறி விட்டுக் கிளம்பினான் செல்வம்.

வழியில், மதன் பற்றி நினைத்து கொண்டே நடந்த செல்வத்திற்கு, ஒரு சந்தேகம் தோன்றியது. எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என எண்ணி, அவன் நள்ளிரவில் தன் ஊருக்கு வந்து, தன் வீட்டில் ஓரிடத்தில் தான் கொண்டு வந்த பணத்தை பத்திரமாகப் புதைத்து வைத்தான்.

மறுநாள் காலை அவன் தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் ""என் துரதிருஷ்டம் பாருங்கள்... என் தூரத்து உறவினர் விட்டுப் போன பணம் கைக்குக் கிடைத்தும், அதை அனுபவிக்க முடியவில்லை. அப்பணத்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு வரும்போது திருடர்கள் என்னை மடக்கி, என்னிடம் இருந்தப் பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். அந்த உறவினர் விட்டுப்போன ஐம்பதாயிரத்தோடு, என்னுடைய பணம் இரண்டாயிரம் ரூபாயும் போய் விட்டது,'' என்று கூறினான்.

எல்லாரும், ""ஐயோ பாவம்!'' எனத் தம் வருத்தத்தைத் தெரிவித்து விட்டுச் சென்றனர்.

பிறகு அவன் வாசுவின் வீட்டிற்கு போய் தன் பணம் பறி போனது பற்றிக் கூறிப் புலம்பினான்.

""அது சரி, இதை என்னிடம் ஏன் சொல்கிறாய்? உனக்கும் எனக்கும் அதிகத் தொடர்பே இல்லையே,'' என்றார்.

""ஆமாம். என் துரதிருஷ்டத்தை நினைத்து நான் சொல்ல வந்த விஷயத்தை மறந்து, என் கதையைச் சொல்லிக் கொண்டிருந்து விட்டேன். அந்த ஊர் மதன் தன் மகனுக்கு, உங்கள் மகளை கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதிப்பதாகச் சொல்லச் சொன்னார்,'' என்றான்.

அது கேட்டு வாசு மகிழ்ந்து, ""இப்படி ஒரு நல்ல சேதி கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். என்ன உதவி கேட்கிறாய்?'' என்றார்.

""எனக்கு ஒரு இரண்டாயிரம் ரூபாய் கடன் கொடுங்கள், ஒரு வருடத்தில் அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்,'' என்றான்.

""இரண்டாயிரம் ரூபாயா? எப்படி ஒரு வருடத்தில் நீ கொடுப்பாய்? உனக்கு நிலையான வருமானம் இல்லையே,'' என்று கேட்டார்.

""எனக்கு ஐம்பதாயிரம் கிடைக்கிறதே என்ற ஆசையால் ஒரு ஏக்கர் நிலத்தை விலை பேசி விட்டேன். அதனை வாங்கினால், விவசாயம் செய்து கடனை அடைப்பேன். உங்களைப் போல இன்னும் நான்கு பேரிடம் கடன் கேட்டு, அந்த நிலத்தை வாங்க நினைத்திருக்கிறேன்,'' என்றான் செல்வம்.

""சரி, <உன் விவசாயத்தில் பணம் கிடைக்காவிட்டால் என்ன செய்வாய்? எப்படி வாங்கின கடனை அடைப்பாய்,'' என்றான்.

""என் முன்னோர் விட்டுப்போன வீடு இருக்கிறது. அதனை விற்றாவது கடனை அடைப்பேன்,'' என்றான்.

வீடு இருக்கிறது என்று கேட்டதும், வாசு கடன் கொடுத்தார். அவரைப் போல வேறு சிலரும் செல்வத்துக்கு, கடன் கொடுத்தனர். கிடைத்த பணத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி, செல்வம் பயிர் செய்தான். வருட முடிவில் தான் வாங்கிய கடனை அடைத்து விட்டு, மீதி இருந்த பணத்தில் மேலும் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்தான். அவனிடம் பணம் சேரலாயிற்று.

பணம் இல்லாத போது சற்றும் மதிக்கப்படாத செல்வம், இப்போது மிகவும் மதிக்கப்பட்டான். வசதியாக உள்ள ஒரு விவசாயி தன் மகள் பொன்னியை செல்வத்திற்கு திருமணம் செய்து வைத்தான்.

கல்யாணமானதும் பொன்னி செல்வத்திடம், ""நான் ஆரம்ப முதலே உங்களைத் தான் மணக்க விரும்பினேன். என் தந்தை தான் அப்போது உங்களிடம் பணம் இல்லை என்று கூறி மறுத்தார். இப்போது, உங்களுக்கு நான்கு ஏக்கர் நஞ்சையும், வீடும் இருப்பது கண்டு என்னை உங்களுக்குக் கல்யாணம் செய்து வைத்தார். இது இருக்கட்டும், எனக்கு ஒரு சந்தேகம். கேட்கட்டுமா?'' என்றாள்.

""ஆகா! கேள்,'' என்றான்.

""இந்த வீடு உங்கள் முன்னோர் வீடு. ஆரம்பம் முதல் உங்களிடம் இருக்கிறது. அப்போது ஊராரிடம் கடன் வாங்காமல் சாதாரண ஏழையாக இருந்து, இப்போது கடன் வாங்கி நிலம் வாங்கினீர்களே! இதை முன்பே ஏன் செய்யவில்லை?'' என்று கேட்டாள்.

""ஒரு ரகசியத்தைக் கூறுகிறேன். இது வேறு யாருக்கும் தெரியாது. உறவினரிடம் இருந்து எனக்குப் பணத்தை வாங்கிக் கொடுத்து உதவிய மதன், என்ன நோக்கத்தோடு செயல்பட்டான் என ஊகித்து விட்டேன். அவன் தன் மகனுக்கு, வாசுவின் மகளைக் கல்யாணம் செய்து வைக்கத் தீர்மானித்திருந்தான். இந்த தகவலை என்னைக் கொண்டு, வாசுவிடம் சொல்ல வைத்தான். அதன் நோக்கமே, பிறகு என்னிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கல்யாணம் நடத்தக் கடன் கேட்கத்தான். அதனால்தான், என் பணம் திருடு போயிற்று என்று எல்லாரிடமும் சொன்னேன். ஆனால், பணத்தை பத்திரமாகப் புதைத்து வைத்தேன். அதன் பிறகு ஊராரின் இரக்கமும், ஆறுதலும் பெற்றுக் கடனும் வாங்கினேன். ஆரம்ப முதலே நான் உழைப்பாளி. அதனால், கடனையும் குறித்த காலத்தில் திருப்பிக் கொடுத்தேன். இதனால், என் மதிப்பு உயர்ந்தது; பணமும் சேர்ந்தது. நான் அந்த பணத்தை கடன் கொடுக்காமலும் காப்பாற்றினேன். அழகிய பொன்னியும் என் வீடு தேடி வந்தாள்,'' என்றான்.

""ஆகா! நீங்கள் முன் யோசனை கொண்டவரே. உழைப்பின் உயர்வை உணர்ந்து செயல்பட்டீர்கள். பணம் வந்ததே என்று சோம்பலாக இருக்கவில்லை. அதனால் உயர்ந்து விட்டீர்கள்,'' என்றாள் மகிழ்ச்சி ததும்ப.

அப்புறம் என்ன, அவர்கள் வாழ்க்கை இன்பமுடன் இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

***
தினமலர் » சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக