ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதிகையின் எதிரொலி

4 posters

Go down

பொதிகையின் எதிரொலி Empty பொதிகையின் எதிரொலி

Post by ஆளுங்க Mon May 07, 2012 10:13 pm

06 மே 2012

சாப்பிடும் போது மட்டுமே தொலைக்காட்சி சேனல்களை நோண்டும் பழக்கம் உடையவன் நான். (மீதி நேரத்தில் தொலைக்காட்சியில் வீட்டிலுள்ளவர்கள் ராஜ்ஜியம் தான் என்பதால், அங்கு அமர்வதே இல்லை)

ஞாயிறு அன்று இரவு சன் டிவியில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" என்று ஓடிக்கொண்டிருந்தது. 'வர வர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே சூதாட்டம் போல் ஆகி விட்டன' என்று சொல்லிக் கொண்டே ரிமோட்டால் சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்தேன்.

அப்போது தான் "பொதிகை தொலைக்காட்சி" வந்தது.

முன்பு DD5 ஆக இருந்த காலத்தில், தொலைக்காட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்று வாசகர்களிடம் ஆலோசனை கேட்டு, வாக்கெடுப்பு நடத்தி 'பொதிகை' என்ற அழகான பெயரைத் தொலைக்காட்சிக்கு சூட்டினர் நிலையத்தார். கேபிள் டிவி வருவதற்கு முன் அரசனாக கோலோச்சிய பொதிகையைத் தற்போது பார்ப்பவர்கள் அரிது.

இந்த பதிவினை எழுதத் தூண்டியதே அவர்கள் தொன்று தொட்டு செய்து வரும் ஒரு செயல் தான்.


அப்படி என்ன செய்தார்கள் என்று கேட்கிறீர்களா?

தங்களுக்கு நேயர்கள் எழுதிய கடிதங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியின் பெயர் "எதிரொலி".

தாங்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளுக்கு வரும் எதிரொலிகளைத் தான் அவர்கள் படித்தனர். தபால் அட்டைகள், உள்நாட்டு அஞ்சல்கள் மற்றும் பொது அஞ்சல்கள் முதலியவற்றில் தங்கள் நிகழ்ச்சிகளைப் பற்றிய நேயர்களின் கருத்துகளைப் படித்தனர். நிகழ்ச்சிகளைப் பார்த்து பதில் எழுதும் மக்கள் இதனைப் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்?

நிகழ்ச்சியில் இருந்து சில துளிகள்:

ஒரு நிகழ்ச்சியைப் பாராட்டி பலர் எழுதியிருந்தால், அனைவரது பெயரையும் வாசித்து நன்றி கூறினர். அதுமட்டுமல்லாது, பிறரது மடல்களைப் படித்துக் காட்டததற்கு வருத்தமும் தெரிவித்தனர்.
தங்களுக்கு வந்த பாராட்டுகளை மட்டும் அவர்கள் வாசிக்கவில்லை!! வசவுகளையும் வாசித்தனர். வசவுகளை வாசித்த பின்னர், அதற்கு மன்னிப்பு கோரி பிற்காலத்தில் குறைகள் எழாமல் பார்த்து கொள்வதாக கூறினர்.
நிகழ்ச்சிகளின் நேரம் குறித்த கேள்விகளுக்கு தெளிவாக பதில் அளித்தனர்.
நிகழ்ச்சிகளுக்கு வந்த ஆலோசனைகளையும் செயல்படுத்த முனைவதாக கூறினர்.

எதிரொலிக்கு எதிரொலி:

நிகழ்ச்சியில் இயன்ற அளவு தமிழை மட்டுமே பயன்படுத்தினர் (நேயர்கள் எழுதியதைத் தவிர்த்து). அதுவும் அழகு தான்!
ஒரு நிகழ்ச்சியைப் பாராட்டி சில நேயர்கள் கவிதை எழுதி அனுப்பினர். தொகுப்பாளர்கள் அனைத்து கவிதைகளையும் பொறுமையாக படித்துக் காட்டி எழுதியவர்களுக்கு நன்றியும் சொன்னார்கள் .
ஒரு நேயர் பாட்டு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் பெண்ணின் தொடர்பு எண்ணைக் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு நாசூக்காக அவர்கள் மறுத்த விதம் அழகு!!
ஒரு நேயர் பொதிகையில் போடுவதாய் சொல்லும் படம் ஒன்று; ஆனால், திரையிடும் படம் ஒன்று என்று குறை கூறியிருந்தார். தொகுப்பாளர்கள் பொதிகையில் என்றுமே ஒளிபரப்பாகும் படம் பற்றி விளம்பரப்படுத்துவதில்லை என்று தெரிவித்தனர். நேயர்கள் பல சேனல்களைப் பார்ப்பதால் தவறாக எண்ணியிருக்கலாம் என்றனர்.
ஒரு நேயர் பொதிகையில் வெளிவரும் இசை நிகழ்ச்சிகள் பற்றி கேட்டு எழுதியிருந்தார். அனைத்தையும் அவர்கள் தங்கு தடையின்றி சொன்ன விதம் அருமை.
நிகழ்ச்சியின் இறுதியில் கடிதம் எழுதிய பிற நேயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் கடிதத்தைப் படிக்கமல் விட்டதற்கு வருத்தம் தெரிவித்தனர்.

முன்பு ஒரு காலத்தில் (நான் சிறுவனாக இருந்த போது) 'வயலும் வாழ்வும் நிகழ்ச்சி' பற்றி ஒரு நேயர் எழுதி இருந்தார். பேட்டிகளை வயல் வரம்புகளில் எடுக்கும் போது பறவைகளின் சத்தம் கேட்பதால், சில நேரங்களில் பேட்டியைத் தெளிவாக கேட்க முடியவில்லை என்று எழுதியிருந்தார். அடுத்த வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் இருந்து வயல் வரப்பைப் பிண்ணணிப்படமாகக் கொண்ட அறையில் பேட்டி எடுத்தனர்!!! இதை இன்று நினைத்தாலும் பொதிகையின் மீது ஒரு மதிப்பு ஏற்படுகிறது.

இன்று நேயர்களை வைத்து சூதாட்டம் நடத்தி, அதன் மூலம் பல சேனல்களும் கோடிகளில் சம்பாதிக்கிறன. அவற்றையெல்லாம் நாம் அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறோம். அவற்றில் ஒன்று கூட நேயர்கள் தங்களுக்கு எழுதும் கடிதங்களைப் படிப்பதில்லை. நிகழ்ச்சியைப் பற்றி எழுதும் நேயர் ஒருவருக்குத் தன் கருத்து சென்றடைந்ததா என்று எப்படி தெரியும்?

சூதாட்டங்கள் எதிலும் ஈடுபடாத பொதிகை மட்டுமே தங்கள் நேயர்கள் (குறைவான அளவாக இருப்பினும்) எழுதுவதை வாசித்து காட்டுகிறது. இது நேயர்களின் கருத்துகளுக்குக் கொடுக்கப்படும் மதிப்பு அல்லவா?

இன்று எத்தனை சேனல்கள் தங்கள் நிகழ்ச்சிகளைப் பற்றிய நேயர்களின் கருத்துகளை இப்படி படிக்கிறார்கள்?


எனது வலைப்பூவில் இருந்து மறு பதிப்பு செய்யப்பட்டது!


பொதிகையின் எதிரொலி Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

பொதிகையின் எதிரொலி Empty Re: பொதிகையின் எதிரொலி

Post by யினியவன் Mon May 07, 2012 10:26 pm

நானும் சில பொதிகை நிகழ்ச்சி பார்ப்பதுண்டு - நல்லா இருக்கு.

ஆர்ப்பாட்டம் இல்லாத தொகுப்பாளர்களால் நன்கு வழங்கப் படுகிறது நிகழ்சிகள்.

ஆனால் நம்மில் எத்துனை பேருக்கு பிடிக்கும் என்பதே கேள்வி?

மற்ற சேனல்கள் - கடிதம் என்ற ஒன்று இல்லை எனும் அளவுக்கு sms மற்றும் தொலை / அலை பேசியில் அழைக்க வைத்து காசு புடுங்குவதே குறியாக செயல் படுகின்றன.

பகிர்வுக்கு நன்றி ஆளுங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பொதிகையின் எதிரொலி Empty Re: பொதிகையின் எதிரொலி

Post by மகா பிரபு Tue May 08, 2012 5:59 am

நான் வெகு நாட்கள் இந்த அலைவரிசையை மட்டுமே பார்த்ததுண்டு. அப்போதெல்லாம் இதன் நிகழ்ச்சிகள் தனியார் தொலைகாட்ச்சிக்கு இணையாக இருக்கும். பிறகு சில அரசியல் காரணங்களால் இது வளர்ச்சி அடையவில்லை. சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பொதிகையின் எதிரொலி Empty Re: பொதிகையின் எதிரொலி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue May 08, 2012 8:11 am

ஆளுங்க சொல்வதை நான் அப்படியே ஆமோதிக்கிறேன். பொதிகை பொதிகைதான். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பொதிகையின் எதிரொலி Empty Re: பொதிகையின் எதிரொலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum