ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்

3 posters

Go down

மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் Empty மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்

Post by சிவா Mon May 07, 2012 12:21 pm

மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் CNIRP070506

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நாளான நேற்று கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் நேற்று இறங்கினார். இந்த கோலாகல நிகழ்ச்சியை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி கோஷத்துடன் கண்டு தரிசித்தனர்.

பிரசித்தி பெற்ற திருவிழா

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ சமயங்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திடும் சிறப்பு மிகு விழாவாகும். பழமையை பறைசாற்றக் கூடிய சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் விளங்குகிறது.

இந்த பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் அன்னம், குதிரை, சிம்மம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை நகர மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த புதன்கிழமை கோலாகலமாக நடந்தேறியது. 3-ந் தேதி காலையில் தேரோட்டம் நடைபெற்றது.

கள்ளழகர்

இதற்கிடையில் மதுரைக்கு வடக்கே 18 கி.மீ. தூரத்தில் உள்ள அழகர்மலையில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் (அழகர்) கடந்த 4-ந் தேதி மதுரைக்கு புறப்பட்டார். அவர் கள்ளழகர் வேடம் தரித்து மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் வழங்கவும், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் திருமாலையை ஏற்றுக் கொள்ளவும், தனது தங்கை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்காகவும் மதுரை நகருக்கு வருவதாக புராணங்கள் கூறுகின்றன.

அழகர்மலையில் இருந்து 4-ந்தேதி மாலை 6 மணிக்கு மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர் கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் மதுரை மூன்று மாவடிக்கு வந்தார்.

ஆண்டாள் திருமாலை

அன்று இரவு 10 மணியளவில் தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்தார். அங்கு நள்ளிரவு 12 மணியளவில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை சூட்டப்பட்டது.

நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளத்தில் உள்ள கருப்பண்ணசுவாமி கோவிலுக்கு வந்து தங்கக்குதிரையில் ஆயிரம் பொன் சப்பரத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு விடிய, விடிய சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடந்தன. அதிகாலை 3 மணியளவில் தங்கக்குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி வைகை ஆற்றுக்கு கள்ளழகர் புறப்பட்டார்.

ஆற்றில் இறங்கினார்

சித்திரை திருவிழாவின் இந்த முத்தாய்ப்பு நிகழ்ச்சியையொட்டி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மதுரையில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் பூமியும் குளிர்ந்து இருந்தது. அன்று இரவு முதலே மதுரை மாநகர் எங்கும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

ஆற்றுப்பகுதிக்குள்ளும், கரையோரங்களிலும் கல்பாலம், மேம்பாலம் என அனைத்து பகுதிகளிலும் தலையா அல்லது கடல் அலையா என்று வியக்கும் அளவுக்கு பக்தர்கள் வெள்ளமாக காட்சி அளித்தன. அழகர் வருகையை எதிர்நோக்கி இரவு முதலே பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அதிகாலை 5.50 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க தங்கக்குதிரை வாகனத்தில் கையில் கைத்தடி நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்.

பக்தி கோஷம்

அவரை வரவேற்க சகோதரரான வீரராகவப்பெருமாள் ஏற்கனவே வைகை ஆற்று மண்டபத்திற்கு வந்திருந்தார். தங்கக்குதிரை வாகனத்தில் வந்த கள்ளழகரை மூன்றுமுறை வலம் வந்து வீரராகவப்பெருமாள் வரவேற்றார். கள்ளழகர் ஆற்றில் இறங்கிய காட்சியை கண்டு அங்கு கூடி இருந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், `கோவிந்தா, கோவிந்தா' என்று பக்தி முழக்கம் எழுப்பி பரவசம் அடைந்தனர். வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் அங்குள்ள மண்டகப்படிகளில் தங்கி இருந்தார். அப்போது பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

இரவு 11 மணியளவில் அங்கிருந்து கள்ளழகர் புறப்பட்டு வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோவிலுக்கு சென்றார்.

இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு ஏகாந்த சேவையும், பக்தி உலாவும் நடைபெறுகிறது. பிற்பகல் 11 மணிக்கு வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அங்கு கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்க உள்ளார்.

தினத்தந்தி


மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் Empty Re: மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்

Post by சிவா Mon May 07, 2012 12:22 pm

மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் First07


மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் Empty Re: மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்

Post by பிளேடு பக்கிரி Mon May 07, 2012 12:51 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் Empty Re: மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்

Post by பிரசன்னா Mon May 07, 2012 5:40 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பகிர்விற்கு நன்றி... பச்சை பட்டு உடுத்தி இருந்தால் நல்ல மழை உண்டு என்பர்...

இயற்கை சீற்றம் இல்லாமல் விவசாயிக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும்.... சூப்பருங்க
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் Empty Re: மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
» சித்திரை திருவிழா
» கோவிந்தா கோஷம் முழங்க ..பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!
» திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை திருவிழா ரத்து
»  பிரான்சு அதிபர் விருந்தில் பனாரஸ் பட்டு சேலை உடுத்தி வந்த ஐஸ்வர்யாராய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum