ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம்

4 posters

Go down

அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம் Empty அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம்

Post by பிரசன்னா Mon May 07, 2012 11:37 am

அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம் Tamil_News_large_462554

கோட்டயம் :முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆராய, உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்மட்டக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், "கேரளாவுக்கு நியாயம் கிடைக்கவில்லை' என, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜெ.ஜோசப் தெரிவித்திருந்தார். இதற்கு உயர்மட்டக்குழுவில் கேரளா தரப்பு பிரதிநிதியாக இடம் பெற்ற நீதிபதி கே.டி.தாமஸ், "அமைச்சர் சொன்னபடி நடப்பதற்காக, உயர்மட்டக்குழுவில் என்னை நியமிக்கவில்லை' என பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக - கேரள எல்லையை ஒட்டி, 119 ஆண்டு பழமையான முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த அணை பலவீன மடைந்து விட்டதாகவும், அதனால், புதிய அணை கட்டவேண்டும் எனவும், கேரளா வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணை பிரச்னை குறித்து ஆராய்ந்து அறிக்கை தர, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் உயர்மட்டக்குழுவை நியமித்தது. இக்குழுவில் தமிழக பிரதிநிதியாக நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரளா பிரதிநிதியாக நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் இடம் பெற்றனர். ஆனந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, கடந்த மாதம் 25ம்தேதி அறிக்கை தாக்கல் செய்தது.

கேரளா அதிருப்தி :அந்த அறிக்கையின் நகல்கள், இரு மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டன. அதில், முல் லைப் பெரியாறு அணை உறுதியுடன் இருப்பதாகவும், புதிய அணை கட்டத்தேவையில்லை என்றும் உயர்மட்டக்குழு தெரிவித்துள்ளது. இதில், கேரளா கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

இதுகுறித்து கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜெ.ஜோசப் கூறுகையில், "முல்லை பெரியாறு விவகாரத்தில், புதிய அணை கட்டுவது ஒன்றே தமிழகத்துடனான, பல ஆண்டு பிரச்னைக்குத் தீர்வு. இவ்விஷயத்தில் நீதிபதி தாமஸ், கேரளாவுக்கு ஆதரவாகச் செயல்படவில்லை. இது சம்பந்தமாக கேரளாவின் அதிருப்தியை மத்திய அரசிடம் தெரிவிப்போம்' என்றார்.

நீதிபதி வீட்டுக்கு பேரணி:கோட்டயத்தில் குஞ்ஞிகுழியில் உள்ள நீதிபதி தாமஸ் வீட்டுக்கு நேற்று முன்தினம் முல்லைப் பெரியாறு போராட்ட சமிதியினர், எம்.எல்.ஏ., பிஜிமோள் தலைமையில் ஊர்வலமாகச் சென்றனர். வீட்டுக்கு சற்று முன்பாக ஊர்வலத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போலீசுக்கும், ஊர்வலம் சென்றவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

நீதிபதி கண்டனம்:அமைச்சர் பி.ஜெ.ஜோசப் தன்னைப் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு, நீதிபதி தாமஸ் பதில் அளித்துள்ளார்.

அவர், கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உயர்மட்டக்குழு அறிக்கையை முழுவதுமாகப் படிக்காமல், அமைச்சர் ஜோசப் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தவறான தகவல்களை பகிரங்கமாக தெரிவித்து, பொதுமக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளார். இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பேன். முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், நான் நேர்மையாக நடந்துள்ளேன். அணை குறித்து உண்மைகளை உயர்மட்டக்குழுவிடம் தெரிவிக்கவே என்னை நியமித்தனர். அமைச்சர் சொன்னபடி கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய என்னை நியமிக்கவில்லை. நான் சொல்வதும், செய்வதும் உண்மையாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் எனக்குண்டு. என்னை கேரளாவைச் சேர்ந்தவன் என்றோ, தமிழகத்தைச் சேர்ந்தவன் என்றோ சொல்வதில் அர்த்தமில்லை. இரு மாநிலத்தினருக்கும் நியாயமானதைச் செய்யவே அறிக்கை அளித்துள்ளேன்.இவ்வாறு தாமஸ் கூறினார்.

தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம் Empty Re: அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம்

Post by யினியவன் Wed May 09, 2012 7:06 am

பலவேஷம் காட்டுகிற அரசியல்வாதியப் பார்த்து நீங்க
ஆவேசப் படாதீங்க கணம் நீதிபதி அவர்களே.

கனமா கவனிச்சா கணம் நீதிபதிகள் கூட
நீதி தவறுவதும் நடக்கத் தானே செய்கிறது?

நீங்க சொல்லி இது இதோட முடிஞ்சிடப் போவுதா?
அப்படி முடிஞ்சிட்டா இவங்க எப்படி அரசியல் பண்ண முடியும்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம் Empty Re: அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 09, 2012 8:39 am

நல்ல நீதிபதி மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம் Empty Re: அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம்

Post by balakarthik Wed May 09, 2012 10:07 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம் Empty Re: அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» என்னை ஓரம்கட்டுவது நியாயமா?-ப்ரியாமணி ஆவேசம்
» சுப்ரீம் கோர்ட்டை இழுத்து மூடுங்க: தலைமை நீதிபதி முன் பூசன் ஆவேசம்
» ’காலணி இல்லாமல் வளர்ந்த என்னை...’ கண்கலங்கிய அமைச்சர்- உருகிய ஜெ.!
» இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம்
» முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum