ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

5 posters

Go down

வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sat May 05, 2012 10:54 pm

வழக்கு எண் :18/9

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

எழுத்து இயக்கம் பாலாஜி சக்திவேல்

தயாரிப்பு UTV & N.லிங்குசாமி

செய்தி தாளில் படித்த நிகழ்வுகளை தொகுத்துத் திரைக்கதையாக்கி இயக்கி உள்ளார் பாலாஜி சக்திவேல்.பாராட்டுக்கள் மிக எதார்த்தமாகப் படமாக்கி உள்ளார் .ஒரே படத்தில் பல தகவல்களைத் தந்துள்ளார் .தயாரிப்பாளர்களும் பாராட்டுக்கு உரியவர்கள் .சமரசம் இன்றி குத்துப் பாடல் இன்றி மசாலா இன்றி படமாக்கி உள்ளனர் .படத்தில் ஸ்ரீ ,முரளி ,மிதுன் ,ஊர்மிளா ,மனீஷா அனைவருமே மிகச் சிறப்பாக நடித்து உள்ளனர் .அல்ல பாத்திரமாகவே மாறி உள்ளனர் .அறிமுகம் என்பதே தெரியாத அளவிற்கு முதிர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களாக நடித்து உள்ளனர் .நம்ப முடியாத நான்கு சண்டை ,நான்கு காதல் பாட்டு ,வெட்டு குத்து என்று திட்டமிட்டு மசாலாப் படம் எடுக்கும் சராசரி இயக்குனர்கள் அனைவருக்கும் இந்தப் படத்தை திரையிட்டுக் காட்டிப் புத்தி புகட்ட வேண்டும் .

சிறுவர்களை, வட மாநிலத்தில் ,முறுக்கு நிறுவனத்தில் கொத்தடிமைகளாக நடத்திய செய்தி செய்தித் தாளில் படித்த நினைவு உள்ளது .அந்த நிகழ்வை படத்தில் வைத்துள்ளார் .கொத்தடிமையாக வட மாநிலத்திற்கு சென்ற சிறுவனிடம் அப்பா அம்மா இறந்த செய்தியைக் கூட மறைக்கும் மனிதாபிமானம் அற்ற செயல் கண்டு, கண்ணில் கண்ணீர் வருகின்றது .விவசாய நிலங்களை வீட்டடி மனைகளுக்கும் அவலம் ,குழந்தைத் தொழிலாளர் முறையில் உள்ள கொடுமை, ஏழ்மையின் இயலாமை ,கந்து வட்டிக் கொடுமை ,பணக்காரகளின் சதி ,அலைபேசியால் சீரழியும் மாணவ சமுதாயம் ,காவல் துறையின் அவலம், அமைச்சரின் பித்தலாட்டம் ,மெல்லிய காதல் இப்படி பல தகவல்களை ஒரே படத்தில் தந்து வெற்றிப் பெற்றுள்ளார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். இரண்டு வருடமாக அசைப் போட்டு இந்த திரைக்கதையை உருவாக்கி உள்ளார் .படத்தில் வரும் நிகழ்வுகள் யாவும் செய்தித் தாளில் படித்த செய்திகளே ,காட்சிகளாக வருவதால் படம் பார்க்கிறோம் என்பதை மறந்து படத்தோடு ஒன்றி விடுகின்றோம் .

படம் முடிந்து வெளியே வந்த பிறகும் படத்தின் பாதிப்பு நினைவிற்கு வருகின்றது .இதுதான் இயக்குனரின் வெற்றி .இயக்குனருக்குக் கைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் வருகின்றது . தேசியவிருது வழங்குவதில் நேர்மை இருக்குமென்றால், இந்தப் படத்திற்கு தேசிய விருது உறுதி என்று ,அறுதி இட்டுச் சொல்லலாம் . பாடல் ஆசிரியர் நா .முத்துக்குமாரின் பாடல் வரிகள் நன்று .கிராமத்து வாழ்க்கையையும் ,நகரத்து சாலையோர வியாபர வாழ்க்கை ,நகரத்து பணக்கார மாணவனின் வாழ்க்கை அனைத்தையும் மிக இயல்பாக படமாக்கி உள்ளார் .

பணத்திற்கு ஆசைப்பட்டு காவல் ஆய்வாளர் குமாரவேல் அப்பாவி ஏழையை, குற்றவாளியாக்கி சிறைக்கு அனுப்பும் கொடுமைக் கண்டு படம் பார்க்கும் நமக்கும் ஆயவாளர் மீது கோபம் வருகின்றது .படத்தின் கதையை எழுதினால் படம் பார்ப்பவர்களுக்கு ஆர்வம் குறையும் என்பதால் கதையை எழுத வில்லை .

இந்தப் படத்தின் மூலம் பல்வேறு தகவல்களைத் தந்து சமுதாயம் சீர் பட உதவி உள்ளார் .இந்தப் படம் வெற்றிப் பெறுவது உறுதி .இந்த வெற்றியின் காரணமாக மசாலா இயக்குனர்கள் நல் வழிக்கு வர வாய்ப்பு உள்ளது . தயாரிப்பாளர்களும் இனி இதுப் போன்ற படம் எடுங்கள் என்று சொல்லும் நிலை வரும் .இந்தப் படத்தில் மிகப் பெரிய கதா நாயகன் இல்லை ,மிகப் பெரிய கதாநாயகி இல்லை ,பிரபல சிரிப்பு நடிகர் இல்லை ,கொடூர வில்லன் இல்லை,கவர்ச்சி நடிகையின் கவர்ச்சி நடனம் இல்லை . ஆனாலும் படம் வெற்றிப் பெற்றுள்ளது .சராசரி படம் எடுக்கும் எல்லோரையும் சிந்திக்க வைத்த மிகச் சிறந்தப் படம் .பாராட்டுக்கள்
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by யினியவன் Sun May 06, 2012 1:22 am

நல்ல கதை இருக்குனு சொல்லிட்டீங்களே - அப்ப அதுதான் ஹீரோ.

நல்ல விமர்சனம் இரவி - படம் வெற்றி பெற்று - தேசிய அவார்டும் வாங்க வாழ்த்துகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sun May 06, 2012 7:25 am

நன்றி! வேண்டுகோள் கொல வெறி என்று இருப்பதாய் மனித நேயம் என்று மாற்றுங்கள் .

அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty வழக்கு எண் 18/9 - சிறப்பு விமர்சனம்

Post by பாலாஜி Sun May 06, 2012 11:51 am

நடிகர்கள்: ஸ்ரீ, ஊர்மிளா மஹந்தா, மனிஷா யாதவ், மிதுன் முரளி, முத்துராமன், சின்னசாமி

இசை: பிரசன்னா

ஒளிப்பதிவு: விஜய் மில்டன்

தயாரிப்பு: சுபாஷ் சந்திர போஸ் & ரோனி ஸ்க்ரூவாலா

எழுத்து - இயக்கம்: பாலாஜி சக்திவேல்


சம்பிரதாயமான ஒரு பாராட்டை முன்னுரையாகத் தருவது கூட, இந்தப் படைப்பின் இயல்புக்கு விரோதமாகிவிடுமோ என யோசிக்க வைக்கும் அளவு ஒரு நேர்மையான படம் வழக்கு எண் 18/9.

தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தப் போகிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்காமல், சத்தமின்றி அந்த வேலையைச் செய்யும் மிகச் சில படைப்பாளிகளுள் ஒருவர் பாலாஜி சக்திவேல். படங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதில் நம்பிக்கையில்லாத, ஜீவனுள்ள படைப்புகளைத் தருவதை மட்டுமே பிரதானமாகக் கொண்ட இயக்குநர்.

தனது முந்தைய காதல், கல்லூரி படங்களை விட பல மடங்கு உயர்வான ஒரு படைப்பை தமிழ் ரசிகர்கள் கண்முன் வைத்திருக்கிறார்.

காதலும் அந்த உணர்வும் எல்லாவுயிர்க்கும் பொதுவானது. அந்தஸ்துகளுக்கு அப்பால் உயர்ந்து நிற்பது என்பதையும், சட்டம் ஏழைகளுக்கு எப்படி எட்டாத உயரத்தில் நிற்கிறது என்ற பேருண்மையை வெகு எளிதாகவும் சொல்லியிருக்கிறார்.

கதையின் முடிவில் கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும், ஒரு துயருற்ற மனதுக்கு இளைப்பாறக் கிடைக்கும் சிறு மேடை போல அந்த முடிவு அமைந்திருப்பதால் பலத்த கைத்தட்டலுடன் வரவேற்கிறார்கள் ரசிகர்கள்.

கதை?

ஆசிட் வீச்சில் முகம் வெந்து துடித்தபடி மருத்துவமனைக்கு தூக்கி வருகிறார்கள் ஒரு வேலைக்காரப் பெண்ணை. போலீஸ் விசாரணை தொடங்குகிறது. அந்தப் பெண் வேலை செய்யும் வீட்டுக்கு எதிரே நடைபாதைக் கடையில் வேலை செய்யும் இளைஞன் மீது சந்தேகம் என்கிறாள் பெண்ணின் தாய். விசாரிக்கிறது போலீஸ். அந்த விசாரணையில் இளைஞனின் கண்ணீர்க் கதையும் அந்த வேலைக்காரி மீதான காதலும் மட்டுமே தெரியவருகிறது.

அப்போதுதான், அந்தப் பெண் வேலை செய்த வீட்டு எஜமானியின் மகள் வருகிறாள். வேறு ஒரு இளைஞனை விசாரிக்க வேண்டும் என அவள் புகார் கொடுக்க, விசாரிக்கிறது போலீஸ். அந்த விசாரணை வேலைக்காரிக்கு நீதியைப் பெற்றுத் தந்ததா என்பது கொஞ்சம் சினிமா, கொஞ்சம் Poetic Justice கலந்த க்ளைமாக்ஸ்!

இரண்டு கோடுகளாய் பயணிக்கும் இந்தக் கதை, ஒரு புள்ளியில் இணைவதே தெரியாமல் இணைகிறது. திரைக்கதையில் அத்தனை நேர்த்தி.

ஹீரோவின் ப்ளாஷ்பேக் தர்மபுரியின் வறட்சி மிக்க கிராமத்தில் தொடங்குகிறது. அந்த மனிதர்கள், அவர்களின் துயர்மிகு வாழ்க்கை, மண்மூடி மறைந்து போகும் அவர்கள் வாழ்க்கை ஒரு கண்ணீர் அத்தியாயம்.

பெற்றோர் இறந்ததைக் கூட மறைத்துவிடும் அந்த முறுக்குக் கம்பெனி முதலாளி, நடைபாதையில் பசி மயக்கத்தில் வீழ்ந்து கிடப்பவனை எல்லோரும் வேடிக்கை மட்டுமே பார்த்துச் செல்ல, அவன் பசி தீர்த்து, வேலையும் வாங்கிக் கொடுக்கும் ஒரு செக்ஸ் தொழிலாளி, மெல்ல மெல்ல உயிர் விட்டுக் கொண்டிருக்கும் கிராமத்து கட்டைக் கூத்திலிருந்து சினிமா வாய்ப்பு தேடி வரும் சின்னசாமி, நொடியில் குணம் மாறும் அந்த தள்ளுவண்டி சாப்பாட்டுக் கடை முதலாளி, மகளைக் காக்க எல்லோர் மீதும் எரிந்து விழும் வயதான வேலைக்காரி... இவர்கள் அனைவரையும் நாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இவர்களுக்குப் பின்னாள் உள்ள கதைகள் நமக்குத் தெரிவதில்லை. காரணம் நமது மனிதாபிமானம் என்பதே ஒரு demonstration effect என்பதால்தான். அடுத்தவர் மெச்சிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது மனிதாபிமானங்களின் உள்ளார்ந்த நோக்கம் இல்லையா! இந்த நோக்கம் இல்லாமல் அணுகினால் நம்மாலும் வேலு, ஜோதி, சின்னசாமிகளைக் காண முடியும்!

இவர் நாயகன், அவர் நாயகி என்றெல்லாம் இனம் பிரித்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை இந்தப் படத்தில். காரணம், ஒரு நிமிடம் வந்து செல்லும் அந்த பஞ்சர் ஒட்டும் பாத்திரம் கூட மனசுக்குள் வந்துவிடுவதுதான். நடித்த அனைவருமே புதுமுகங்கள். ஆனால் அவர்களின் நடிப்பு படத்தையே தூக்கி நிறுத்துகிறது.

நடைபாதை சாப்பாட்டுக்கடையில் வேலை பார்க்கும் வேலுவாக வரும் ஸ்ரீ, வேலைக்காரப் பெண் ஜோதியாக வரும் ஊர்மிளா மஹந்தா, பணக்காரப் பையனாக வரும் மிதுன் முரளி, எஜமானி மகளாக வரும் மனீஷா நால்வரையும் பிரதான பாத்திரங்களில் ஜொலிக்க வைத்துள்ளார் இயக்குநர்.

கூத்துக் கலைஞனாக வரும் சின்னசாமி அசத்தியிருக்கிறார்.

ஆனால் இவர்கள் அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடுகிறார் இன்ஸ்பெக்டராக வரும் முத்துராமன். தமிழ் சினிமாவில் இதுவரை இத்தனை இயல்பாக போலீஸ் வேடத்தைச் செய்ததில்லை.

காட்சிகளை மீறி ரசிகனின் கவனத்தைக் கவர வேண்டும் என்ற பிரயத்தனம் துளிகூட வசனங்களில் இல்லை. அந்த பாத்திரம் தன் இயல்பில் பயன்படுத்தும் சொற்களே வசனங்கள்!

சதா சர்வகாலமும் செல்போனை நோண்டிக் கொண்டே இருக்கும் இளம் பெண்கள், இளைஞர்களுக்கு இந்தப் படம் சொல்லும் எச்சரிக்கை செய்திகள் ஏராளம்.

பார்ப்பவருக்கு, இது பக்கத்து தெருவில் நடக்கும் சமகால நிகழ்வு என்பதை உணர்த்தும் அளவு உறுத்தலில்லாத ஒளிப்பதிவு. அதுவும் ஸ்டில் கேமிராவில். விஜய் மில்டன் பாராட்டுக்குரியவர்.

முதல் முறையாக எந்த பாடலுக்கும் பின்னணி இசை இல்லை. வெறும் பாடல் மட்டும்தான். 'ஒரு குரல் கேட்குது பெண்ணே...' மனதுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

எதற்கெடுத்தாலும் ஈரானிய, மெக்சிகன் படங்களை உதாரணத்துக்கு தேடும் அறிவு ஜீவிகளின் வேலையைக் குறைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்!

இந்த வழக்கால் தமிழ் சினிமா தலை நிமிர்ந்தது!

-தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by யினியவன் Sun May 06, 2012 12:09 pm

பாலாஜி - இணைத்துவிட்டேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by balakarthik Sun May 06, 2012 12:12 pm

நேற்றுத்தான் இந்த படத்தை நெட்டில் சுட்டு பார்த்தேன் மிக அருமையான படம் கதாபாத்திரங்கள் மிக மிக யதார்த்தமாக உள்ளது படத்தின் பிகபெரிய பலம் ஒவ்வொரு காட்சியும் மிகவும் உண்மையாக உள்ளது சினிமாத்தனம் இல்லாத நல்ல சினிமா இந்த படம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by ஹர்ஷித் Sun May 06, 2012 12:17 pm

eraeravi wrote:நன்றி! வேண்டுகோள் கொல வெறி என்று இருப்பதாய் மனித நேயம் என்று மாற்றுங்கள் .

அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum