ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி

Go down

கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி Empty கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி

Post by சிவா Fri May 04, 2012 9:03 am

கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி Cni040503

சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் பிடியில், 13 நாட்கள் இருந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை ஆனார். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அவரது உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன், கடந்த மாதம் 21-ந் தேதி, மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார்.

நிபந்தனைகள்

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த தண்டேவாடா மாவட்டத்தை பிரித்து, கடந்த ஜனவரி மாதம்தான் சுக்மா மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் ஆவார்.

அவரை விடுவிக்க வேண்டுமானால், ஜெயிலில் உள்ள 17 மாவோயிஸ்டு தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும், அப்பாவி பழங்குடியினர் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர். இவற்றை நிறைவேற்ற ஏப்ரல் 25-ந் தேதிவரை `கெடு' விதித்தனர்.

பேச்சுவார்த்தை

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சத்தீஷ்கார் மாநில அரசு தரப்பு தூதர்களாக முன்னாள் தலைமைச் செயலாளர்கள் நிர்மலா பச், எஸ்.கே.மிஸ்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மாவோயிஸ்டு தரப்பு தூதர்களாக முன்னாள் கலெக்டர் பி.டி.சர்மா, மனித உரிமை இயக்க ஆர்வலர் ஹர்கோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இருதரப்பு தூதர்களுக்கும் இடையே தலைநகர் ராய்ப்பூரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த 30-ந் தேதி, 4-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, கலெக்டரை விடுவிப்பது தொடர்பான உடன்பாடு கையெழுத்தானது.

விடுவிக்க ஒப்புதல்

ஜெயிலில் உள்ள மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட அனைத்து கைதிகளின் வழக்குகளை ஆய்வு செய்ய அரசு தரப்பு தூதர் நிர்மலா பச் தலைமையில் உயர் அதிகார கமிட்டி அமைக்க அந்த உடன்படிக்கையில் மாநில அரசு ஒப்புக் கொண்டது.

இதன்படி, 48 மணி நேரத்தில் கலெக்டரை விடுவிக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகளுக்கு இருதரப்பு தூதர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

கலெக்டர், மே 2-ந் தேதி விடுவிக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை மே 3-ந் தேதி விடுவிப்பதாக மாவோயிஸ்டுகள் அறிவித்தனர். தங்கள் தரப்பு தூதர்கள் பி.டி.சர்மா, ஹர்கோபால் ஆகியோரிடம் கலெக்டரை ஒப்படைப்பதாக அவர்கள் கூறினர்.

தூதர்கள் புறப்பட்டனர்

அதன்படி, கலெக்டர் விடுதலையை எதிர்பார்த்து சத்தீஷ்கார் மாநிலம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. மாவோயிஸ்டு தரப்பு தூதர்கள் பி.டி.சர்மா, ஹர்கோபால் ஆகியோர் கலெக்டரை அழைத்து வர புறப்பட்டனர்.



ராய்ப்பூரில் இருந்து அவர்கள் அரசு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றனர். சுக்மா மாவட்டத்தில் சிந்தல்நாரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் முகாமுக்கு அவர்கள் ஹெலிகாப்டரில் போய்ச் சேர்ந்தனர்.

அங்கிருந்து, மாவோயிஸ்டுகள் கலெக்டரை பிடித்து வைத்திருக்கும் தட்மெட்லா காட்டுப் பகுதிக்கு தூதர்கள் ஒரு ஜீப்பில் புறப்பட்டுச் சென்றனர். அவர்களுடன் பத்திரிகையாளர்களும் வெவ்வேறு வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர்.

அடர்ந்த காட்டுக்குள் பயணம்

தட்மெட்லா காட்டுப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தூதர்களின் வாகனத்தை மாவோயிஸ்டுகள் தடுத்து நிறுத்தினர். பத்திரிகையாளர்களை திரும்பிச் செல்லுமாறு அவர்கள் கூறினர்.

இரு தூதர்களை மட்டும் அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் பின்னால் அமர வைத்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கூட்டிச் சென்றனர். குறிப்பிட்ட இடத்தில், மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு, தூதர்களை நடக்க வைத்து கூட்டிச் சென்றனர்.

மீண்டு வந்தார்

கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு தூதர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் கலெக்டரை மாவோயிஸ்டுகள் ஒப்படைத்தனர். அவர்களுடன் சிந்தல்நார் முகாமுக்கு ஒரு வாகனத்தில் கலெக்டரை அனுப்பி வைத்தனர்.

அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக 30 நிமிட பயணத்துக்கு பிறகு, இரவு 7 மணியளவில், சிந்தல்நாரில் ரிசர்வ் போலீஸ் முகாமை கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனும், தூதர்களும் அடைந்தனர். அங்கு திரளாக குழுமி இருந்த பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் கலெக்டரை வரவேற்றனர்.

இதன்மூலம், மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு 13 நாட்களுக்கு பிறகு கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் மீண்டு வந்துள்ளார்.

சஸ்பென்ஸ்

முன்னதாக, கலெக்டர் விடுதலை செய்யப்பட்டு விட்டார் என்று தகவல் வெளியான போதிலும், அவர் வரும் அறிகுறியே தென்படவில்லை. சிந்தல்நாருக்கு ஹெலிகாப்டரோ, ஜீப்போ வந்தால், அதில் கலெக்டர் இருப்பதாக கருதி எல்லோரும் ஆவலுடன் பார்த்தனர். ஆனால், கலெக்டர் இல்லை என்று தெரிந்தவுடன் ஏமாற்றம் அடைந்தனர். தூதர்கள் பயன்படுத்திய ஹெலிகாப்டர் வருவதும், திரும்பிச் செல்வதுமாக இருந்தது.

இந்த வகையில், 3 மணி நேரமாக நீடித்த `சஸ்பென்ஸ்', கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை உண்மையிலேயே பார்த்த பிறகுதான் விலகியது.

பேட்டி

மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்த அனுபவத்தைப் பற்றி, சிந்தல்நார் முகாமில் கலெக்டர் அலெக்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"நான் நன்றாக இருக்கிறேன். என் விடுதலைக்கு பாடுபட்ட சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி ராமன்சிங், அரசு அதிகாரிகள், இருதரப்பு தூதர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், நான் விடுதலை செய்யப்படுவது தாமதம் ஆகி இருக்கும்.

அரசு என்னை எங்கு பணியாற்ற சொல்கிறதோ, அங்கு பணிபுரிவேன். ஒருவேளை, சுக்மா மாவட்டத்திலேயே தொடர்ந்து பணியாற்ற சொன்னால், அதை அப்படியே பின்பற்றுவேன்.''

இவ்வாறு கலெக்டர் அலெக்ஸ் கூறினார்.

களைப்பாக இருக்கிறேன்

நிருபர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்ப முயன்றபோது, `நான் களைப்பாக இருக்கிறேன். கடத்தல் விவகாரத்தை பற்றி பேசுவதற்கு முன்பு, வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை பார்க்க விரும்புகிறேன். உங்களிடம் பிறகு பேசுகிறேன்' என்று கலெக்டர் அலெக்ஸ் கூறினார்.

அவர் முதல்-மந்திரி ராமன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, நன்றி தெரிவித்தார்.

கமிட்டி கூடியது

இதற்கிடையே, உடன்பாட்டில் ஒப்புக் கொண்டபடி, மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட அனைத்து கைதிகள் மீதான வழக்குகளை ஆய்வு செய்ய உயர் அதிகார கமிட்டியை சத்தீஷ்கார் மாநில அரசு நியமித்தது.

உடனடியாக, அக்கமிட்டி ஆய்வை தொடங்கி விட்டதாக முதல்-மந்திரி ராமன்சிங் தெரிவித்தார்.

மகிழ்ச்சி

இதற்கிடையே, கலெக்டர் விடுதலை ஆன தகவலை அறிந்து, அவருடைய கர்ப்பிணி மனைவி ஆஷா பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்.

சென்னை கொளத்தூர் செந்தில் நகரில் உறவினர் இல்லத்தில் தங்கி உள்ள கலெக்டரின் தந்தை வரதாசும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கினார். சென்னையில் உள்ள கலெக்டரின் மாமனார் வேணுகோபாலும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் வள்ளிïரில் உள்ள சமாதானபுரம்தான், கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனின் சொந்த ஊர் ஆகும். அங்குள்ள உறவினர்களும், நண்பர்களும் கலெக்டரின் விடுதலையை பட்டாசு வெடித்து கொண்டாடினர். இனிப்புகளும் வழங்கினர்.

தினத்தந்தி


கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி Empty Re: கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி

Post by சிவா Fri May 04, 2012 9:03 am

கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி First04


கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» கலெக்டர் அலெக்ஸ் நாளை விடுதலை: மாவோயி்ஸ்டுகள் ஒப்புதல்
» சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!
» கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு
» மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட கலெக்டர் விடுதலை 8 நாட்களுக்கு பிறகு வீடு வந்து சேர்ந்தார்
» பட்டாசு வெடித்து 9 பேர் பலி - கும்பகோணத்தில்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum