ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடமாடும் எஃகுக் கோட்டை

2 posters

Go down

நடமாடும் எஃகுக் கோட்டை Empty நடமாடும் எஃகுக் கோட்டை

Post by பிரசன்னா Thu May 03, 2012 4:04 pm


நடமாடும் எஃகுக் கோட்டை ஒன்றைத் தயாரித்து, அதை ஒரு போர்ச் சாதனமாக உபயோகிக்கலாம் என்று ஓர் எண்ணம். 1913-ல் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளில் ஒருவரான கேப்டன் எப்.ஜே.பூலர் என்பவர்தான் முதன்முதலாக இந்த யோசனையை வெளியிட்டார். அப்போது சமாதான காலமாக இருந்ததால், இதுபற்றி பிரிட்டிஷ் பாதுகாப்பு இலாகா உரிய கவனம் செலுத்தவில்லை.

பூலர் இந்த யோசனையைத் தெரிவித்த சில மாதங்களுக்குள்ளேயே, அதாவது 1914 ஆகஸ்ட் 4-ம் தேதி, முதலாவது உலக மகா யுத்தம் தொடங்கிவிட்டது. அப்போது ராணுவ அதிகாரியான லெப்-கர்னல் ஸ்வின்டன், நடமாடும் எஃகுக் கோட்டைகள் தயாரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, அவற்றை இயக்குவதற்குச் சங்கிலிச் சக்கரங்களைப் (Chain wheels) பயன்படுத்தலாம் எனவும் யோசனை கூறினார். அவர் கூறிய இந்த யோசனையின் அடிப்படையில் பிரிட்டிஷ் ராணுவ இன்ஜினீயர்கள் பலர் இது சம்பந்தமான ஆராய்ச்சிகளை உடனடியாக மேற்கொண்டனர்.

நடமாடும் எஃகுக் கோட்டை P67

''இந்த ஆராய்ச்சி பூர்த்தியாகி முதல் நடமாடும் எஃகுக் கோட்டை போர் முனையில் செயலாற்றத் தொடங்கும் வரை, இதுபற்றி துளி செய்திகூட யாருக்கும் தெரியக் கூடாது. பரம ரகசியமாக இந்தக் காரியம் நடந்தேற வேண்டும்'' என பிரிட்டிஷ் ராணுவ இலாகா கருதியது. இதனால், இந்த ஆராய்ச்சிபற்றி மூடி மறைப்பதற்காகப் பொய்யான செய்தி ஒன்றை அது வெளிக்கிளப்பியது. 'எந்த நிலையிலும் ஒழுகாத 'தண்ணீர்த் தொட்டி’ (Tank) ஒன்றைக் கண்டுபிடிப்பதிலேயே அந்த ராணுவ இன்ஜினீயர்கள் கவனம் செலுத்திவருகிறார்கள்’ என்பதே அந்தச் செய்தியாகும். ஆகவே, இதனால் முதல் நடமாடும் எஃகுக் கோட்டையை மேற்படி இன்ஜினீயர்கள் முதன்முதலாகத் தயாரித்து வெளிக்கொண்டுவந்தபோது, பிரிட்டிஷ் பொதுமக்கள் அதை ஒருவகைப் புதுத் தண்ணீர்த் தொட்டி என்றே நினைத்தார்கள். இதனால் 'டாங்க்’ என்றே அதை அழைத்தார்கள். தவறாக அவர்கள் இவ்விதம் நடமாடும் எஃகுக் கோட்டைக்கு 1916-ல் இட்ட பெயரே, பிறகு அப்படியே நிலைத்துவிட்டது.

பிரிட்டனில் தயாரான தனது முதல் டாங்கை, 1916 பிப்ரவரி 8-ம் தேதி முதன்முதலாக பிரிட்டன் போரில் ஈடுபடுத்தியது. இந்த முதல் டாங்குக்கு 'லிட்டில் வில்லி’ எனப் பெயரிடப்பட்டது.

ஆனால், இந்த 'லிட்டில் வில்லி’ போர் நடவடிக்கை களுக்கு அவ்வளவு சிறந்ததாக இல்லை. இதனால், அதில் பல மாற்றங்கள் செய்து 'பிக் வில்லி’ (Big willy) என மற்றொரு டாங்கைத் தயாரித்தார்கள். 10 ராணுவ வீரர்கள் ஏக காலத்தில் இதற்குள் இருக்கலாம்.

இந்த 'பிக் வில்லி’ டாங்கை முதன்முதலாக 1916 செப்டம்பர் 15-ம் தேதி பிரான்ஸில் சோம் (Somme) போர் முனையில் பிரிட்டன் ஈடுபடுத்தியது. அப்படி ஈடுபடுத்திய 49 டாங்குகளில் 17 டாங்குகளின் இன்ஜின்கள் சரியாகச் செயலாற்றவில்லை. 18 டாங்குகள் போர்முனைக்குக் கிளம்பவே மறுத்து விட்டன. 5 டாங்குகள் போரில் ஈடுபட்டு இருந்தபோதே நடுவில் செயலற்று நின்றுவிட்டன. 9 டாங்குகள்தான் கடைசி வரை நன்றாக இயங்கின.

நடமாடும் எஃகுக் கோட்டை P67a

தான் இவ்விதம் முதன்முதலில் போரில் அதிக அளவில் ஈடுபடுத்திய 'பிக் வில்லி’ டாங்குகளை 'மார்க்-1’ என பிரிட்டிஷ் ராணுவ இலாகா அழைத்தது. இதை ஆதாரமாகக்கொண்டு மேன்மேலும் அபிவிருத்தி செய்து, புது மாடல்களைத் தயாரிக்கத் தொடங்கியது. அபிவிருத்தி செய்யப்பட்ட டாங்குகளை 'மார்க்-2’ எனப் பெயரிட்டு 1917 ஏப்ரல் 8-ம் தேதி பிரான்ஸில் போர் முனையில் முதன்முதலாக பிரிட்டன் ஈடுபடுத் தியது. 1918 நவம்பரில் இரண்டாவது உலகப் போர் முடிவதற்குள்ளாக 'மார்க் 3, 4, 5’ ஆகிய மேலும் அபிவிருத்தி செய்யப்பட்ட டாங்குகளை பிரிட்டன் போரில் ஈடுபடுத்தியது.

இப்போது டாங்குகளில் பிரதானமாக மூன்று ரகங்கள் உள்ளன. லேசான டாங்குகள், நடுத்தர டாங்குகள், கனமான டாங்குகள் என்பவையே ஆகும். லேசான டாங்குகள் எந்த இடத்துக்கும் சுலபமாகக் கொண்டுசெல்ல ஏற்றவை. விமானங்கள், கப்பல்கள் மூலம் ஏற்றிச் செல்லவும் வசதியானவை. மலைப் பிரதேசங்களிலும் பயன்படும். ஓரளவு துரிதமாகவும் செல்லக் கூடியவை. லேசான டாங்கு, கனமான டாங்கு இரண்டுக்கும் இடைப்பட்டது நடுத்தர டாங்கு. சமவெளிகளில் சாதாரண யுத்த நடவடிக்கைகளுக்கு இதையே மிகுதியாகப் பயன்படுத்துவது வழக்கம். கனமான டாங்குகள் மற்ற எல்லாவற்றையும்விட சக்தி வாய்ந்தவை. அதிகப் பாதுகாப்பானவை. எவ்விதத் தாக்குதல்களையும் சமாளிக்கக்கூடியவை. ஆனால், அவை மிக மெதுவாகவே நகர்ந்து செல்லும். போர் முனைகளில் விசேஷமான நிலைகளில் மட்டும் பயன்படுத்துவதற்கு என இவை தயாரிக்கப்படு கின்றன.

இந்த மூன்று வகை டாங்குகள் தவிர, வேறு பல விசேஷ வகை டாங்குகளும் இப்போது உண்டு.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கும் நமக்கும் இடையே நடந்த போரில் பாகிஸ்தான் படைகள் 'பாட்டன்’ என்ற ஒரு வகை டாங்குகளை மிகுதியாகப் பயன்படுத்தின. இது நடுத்தர வகையைச் சேர்ந்தது; 1952 ஜூலையில் இரண்டாவது உலக மகா யுத்தம் முடிந்த பிறகு தயாரிக்கப்பட்டது. புகழ்பெற்ற அமெரிக்க ஜெனரலான ஜார்ஜ் எஸ்.பாட்டன் இதைக் கண்டு பிடித்ததால், 'பாட்டன் டாங்கு’ எனப் பெயர் பெற்றுள்ளது.

இதில் 'எம்-47’, 'எம்.-60’, 'எம்-113’ என்று பல ரகங்கள் உண்டு. 'எம்-113’ என்பது மிக நவீன ரகம். 'எம்-47’ என்பது மிகப் பழைய ரகம். 'எம்.’ என்றால் மீடியம் (நடுத்தரம்) எனப் பொருள்படும். அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு அளித்து அது நமக்கு எதிராக உபயோகித்த 'பாட்டன் கள்’ 'எம்-47’ ரகத்தைச் சேர்ந்தவையே.

இந்த வகை பாட்டன் டாங்குகளைக் கொரியப் போரில்தான் முதன்முதலாக அமெரிக்கா ஈடுபடுத்தியது. இதில் பொருத்தப்பட்டுள்ள பீரங்கி மிக சக்தி வாய்ந்த போர்க் கருவியாகும். 12 மைல் தூரம் குண்டுகளைச் சுடும் ஆற்றல் இந்தப் பீரங்கிக்கு உண்டு. இதில் இருந்து கிளம்பும் குண்டுகள் விநாடிக்கு 3,000 அடி (நிமிஷத்துக்கு 1,80,000 அடி) வேகத்தில் செல்லக் கூடியவை.

பாகிஸ்தான் படைகள் 'பாட்டன்’ அன்றி 'ஷெர்மன்’ என்ற மற்றொரு வகை டாங்குகளையும் நமக்கு எதிராக ஏவின. இவை 'எம்-4’ என்ற வகையைச் சேர்ந்தவை. 1941 செப்டம்பரில் முதன்முதலாக இவை தயாரிக்கப்பட்டன. இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்துகொண்டு இருந்தபோதே 49,234 'ஷெர்மன்’ டாங்குகள் தயாராகிவிட்டன. ஒரே ரகத்தில் இவ்வளவு அதிக டாங்குகள் உலகில் இதுவரை எங்கும் தயாரிக்கப்பட்டது இல்லை.

வட ஆப்பிரிக்காவில் ஜெனரல் ரோமலின், ஜெர்மன் டாங்குப் படை களோடு மோதி வெற்றி வாகை சூடியவை இந்த ஷெர்மன் டாங்குகளே. 3,000 மைல் பயணம் செய்தால்கூட இதன் இணைப்புப் பகுதிகள் தேய்வது இல்லை. இந்த டாங்குகளின் எடை 33 டன். இவற்றில் இப்போது ஏழு ரகங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பொருத்தப்பட்டுள்ள இன்ஜினின் ஆற்றல் வெவ்வேறு விதம். 1956-ல் இருந்து இந்த டாங்குகள் தயாரிப்பதை அமெரிக்கா நிறுத்திவிட்டது.

நம்மிடமும் பல ஷெர்மன் டாங்குகள் உண்டு. நாம், சொந்தமாக சென்னை அருகே ஆவடியில் டாங்குகள் தயாரிக்க இப்போது ஏற்பாடாகி வருகிறது. 1966 ஆரம்பத்தில் முதல் டாங்கு தயாராகி வெளிவரும்.

ஆவடியில் தயாராகும் இந்த இந்திய டாங்குகளுக்கு 'வைஜயந்த்’ எனப் பெயர்.

- அ.ராம்கோபால்

விகடன்.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நடமாடும் எஃகுக் கோட்டை Empty Re: நடமாடும் எஃகுக் கோட்டை

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 03, 2012 7:34 pm

தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா... நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum