புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_m10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10 
48 Posts - 51%
heezulia
தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_m10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_m10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_m10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_m10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_m10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10 
48 Posts - 51%
heezulia
தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_m10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_m10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_m10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_m10தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Aug 26, 2013 7:13 pm

"தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை' என்ற பெயரில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆயிரத்தெட்டாவது வெளியீட்டு விழா மலரில் (21.8.1961) இடம்பெற்ற "தணிகைமணி' வ.சு.செங்கல்வராய பிள்ளையின் (15.8.1883-25.8.1972) கட்டுரைச் சுருக்கம் இது.

தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை
ஏழாம் நூற்றாண்டில் - செந்தமிழ் நாட்டில் மக்களின் நிலை, நாகரிகம், பழக்க வழக்கங்கள் எவ்வாறு இருந்தன என்பது அக்காலத்துத் திருஞானசம்பந்தப் பெருமானது தேவாரத்தினின்றும் ஒருவாறு புலப்படும். அதனை ஈண்டு விளக்குவாம்.

மக்கள்
உயர் ஞானத்தார், எழுமையும் விழுமியர், கேடில் எண்ணத்தர், சீலம்மிகு சித்தத்தவர், தலைப்படுந் தவத்தார், தவமலிபத்தர், துலை எடுத்த சொற்பயில்வார், நடுவுணர் பெருமையர், நித்த நியமங்கள் விதிப்படி நின்றவர், நிலைகொண்ட மனத்தவர், புலன்களை வென்றவர், மனந் தளராத் தகுதியர், வாய்மை வழுவாதவர், வெஞ்சினம் ஒழிந்தவர் ஆகிய பலரிருந்தனர்.

கலைவல்ல புலவர்கள், கற்றல் கேட்டல் உடையார், தமிழ்க்கலை தெரிந்த செஞ்சொலாளர்கள், நாவலர்கள், பாவலர்கள் பலரிருந்தனர். இரப்போர்க்குக் கரப்பு இலாமலும் - இல்லை என்று சொல்லாமலும் ஈந்து மகிழ்ந்த பெரியோர்களும், வரையின்றி அளித்த செல்வர்களும், அறங்களைப் பயிற்றி வந்த அறிஞர்களும், மழையின்றிப் பஞ்சம் புகுந்த காலத்தும் வண்மை குன்றாத வள்ளல்களும், எக்காரணத்தாலும் புலவர்மாட்டு வெய்யமொழி கூறாத பெருங்குணத்தவர்களும் அக்காலத்து வாழ்ந்துவந்தனர். கூகையன்ன மாக்களும் பொய்மிகுந்த வாயரும் இருந்தனர்.

மாதர்கள்
காலையில் இசைபாடி எழுவார்கள். சோலையில் உள்ள சுனைக்கோ, பொய்கைக்கோ, யாற்றுக்கோ, கடலுக்கோ சென்று குடைவார்கள். பொய்கையிற் குதித்து விளையாடுவார்கள். கொடி முல்லை, மல்லிகை, சண்பகம் ஆகிய பூக்களைக் கொய்வார்கள். மாளிகை மேலிருந்து அச்சமின்றிப் பாடல் ஒலியை எழுப்புவர். ஊ(ஞ்)சல் ஏறி இனிதாக இசை பாடுவர். கிளிக்கும் பூவைக்கும் சொல் பயிற்றுவர்; அம்மானை, கழல், பந்து ஆடுவர். கோயிலுக்கு மலர், புனல், தூபம், சாந்தம் இவை கொண்டு கன்னியர் செல்வர்; சிவவேடத்தைப் பரவுவார்; அண்ணல் புகழ் பாடுவார்.

அடியார்கள்
இறைவன் பேச்சையே பேசி இன்புறுவர். வேறு பேச்சுக்களுக்குத் தமது செவிகொடார். அடியார்கள் வட்டம் வட்டமாகச் சூழ்ந்து நின்று இறைவன் திருவடியைப் பரவுவார்கள். அடியார்களுக்கு அன்னம் அளித்தல் உயர்ந்த அறச்செயலாகக் கொள்ளப்பட்டிருந்தது.

அரசர்கள்
இவர்களுக்குக் கழல், குடை, முடி, யானை, சிவிகை, அந்தளம் (கவசம்), ஈச்சோப்பி (ஈயோட்டி), வட்டில் (பொற்) கிண்ணம் முதலியன உண்டு. இவர்கள் பட்டணப் பிரவேசம் செய்யும்பொழுது மணியொலி, சங்கொலி, முரசொலி ஒலிக்கும்.

கோயிலும் - வழிபாடும்
தண்டு, உடுக்கை, தாளம், தக்கை என்னும் பக்கவாத்தியங்களுடன் அடியார்கள் இன்னிசை பாடியும், நடனம் செய்தும் தொழுவார்கள். பல தொண்டர் ஒன்றுகூடித் திருநீறு பூசி அதிகாலையிற் பஜனை செய்வார்கள். தமிழிலும் வடமொழியிலும் வேற்றுத் திசைமொழியிலும் நரம்புக் கருவிகள் கொண்டு இசைகூட்டி வாசித்துத் தொழுவார்கள்.

தமிழ்
தமிழ்க்கலை தெரிந்த பெரியோர் இருந்தனர். தமிழின் தொன்மை, பெருமைகளைப் பேசிப் பாடல்கள் பாடுவார்கள். மாதர்களும் தமிழில் ஊறு பொருளைத் தேர்ந்து உணர்ந்திருந்தனர். தமிழ்மொழி - இசை மலிந்தது; இனிமை கொண்டது. கீதத்துக்கு ஏற்றது, பல ஓசைக்கும் இடம் தருவது, பெருகுந் தன்மையது, முடிவிலாதது - எனப் பாராட்டப்பட்டுள்ளது.

இசை, நடனம்
இன்னிசையாற் பாட வல்லவரும், கீதத்தை மிகப்பாடும் அடியார்களும், நடத்தொடு இசைபாடும் அடியார்களும், வேற்றுத் திசை இசைகளைக் கேட்டுத் தேர்ந்து ஆயும் பெரியோர்களும், இசை பாடும்பொழுது விம்மியழும் பெரியோர்களும் இருந்தார்கள். யாழ், வீணை, குழல், மொந்தை, முழவு இவை கீதம் பொலிதலுக்கு முக்கியமாய் விளங்கின. இசைபாடும் அடியார்கள் கூட்டம் கூட்டமாய்க் கூடித் துதிப்பர்; பாடுவர்; ஆடுவர்.

திருவிழாக்கள்
விழாக்களில் நெடுவெண்கொடிகள் நெருங்கிப் பொலிய - முழவு, குழல், மொந்தை, கொக்கரை, சங்கம், படகம், பறை - இவைகள் கடலொலி அயரப் பேரொலி எழுப்பும். சிவனடியார்களுக்கு அன்னம் இடப்படும். அரங்க மேடைகளில் மாதர்களும் மைந்தர்களும் ஏறி இறைவன் புகழைப் பாடித் துடிப்பார்கள். வேத ஒலி முழங்கும்.

வழக்கங்கள் - பழக்கங்கள்
மேழி கொண்டு உழுவார்கள்; கடைசியர்,
வயலில் வேலை செய்பவர் - கழனியில் பாடுவர்; விளையாடுவர்.
ஊர்களில் அந்தணர் வேள்வி, மறை ஒலி,
செந்தமிழ் கீதம் - இவை சிறப்புடன் வளர்ச்சி பெற்றிருந்தன.
இறைவனுறையும் திருமலையை வலமாக வணங்கும் வழக்கம் இருந்தது.
விரதம் அநுட்டிப்போர் நிலத்தில் உண்ணுதல் சொல்லப்பட்டுள்ளது.
புலவர்களிடத்தில் மிக மதிப்பு இருந்தது.
வழிபாடு, வந்தனை செய்யும் காலம் தவிர மற்ற நேரங்களில் மறைபேசியும், சந்திப்போதில் நிஷ்டையிலிருந்தும் பெரியோர்கள் காலம் கழித்தனர்.

நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Aug 26, 2013 8:33 pm

தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! 3838410834 தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! 3838410834 தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை! 103459460 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக