Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது; பெண்கள் உள்பட 7 பேர் பலி
5 posters
Page 1 of 1
ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது; பெண்கள் உள்பட 7 பேர் பலி
![ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது; பெண்கள் உள்பட 7 பேர் பலி First](https://2img.net/h/dailythanthi.com/images/news/20120429/First.jpg)
வாலாஜா அருகே ஆட்டோ கிணற்றில் பாய்ந்ததில் அதில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கிணறு தூர்வாரும் பணி
வேலூர் மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள வடகடப்பந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கிணறுகளில் தூர்வாரும் பணிக்கும், கூலி வேலைக்கும் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மாரியப்பன் மனைவி சித்ரா (வயது 20), வரதன் மனைவி சித்ரா (25), இவரது மகன் 7-வது வகுப்பு படிக்கும் மாணவன் அஜித் (11), ருத்ராயரெட்டி மகன் செல்வராஜ் (52), அவரது மனைவி ராணி (48), சாமிக்கண்ணு (50), அவரது மகன் மந்திரி குமார் (16) ஆகிய 7 பேர் ஆட்டோவில், 16 கி.மீ. தொலைவில் உள்ள பெரியதகரகுப்பம் கிராமத்தில் சோமு என்பவரின் நிலத்தில் உள்ள கிணற்றில் தூர்வாருவதற்காக ஆட்டோவில் செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி காட்ராம்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் பெருமாள் (40) என்பவரின் ஆட்டோவில் பெரிய தகரகுப்பம் கிராமத்திற்கு காலை 10.30 மணிக்கு புறப்பட்டுச்சென்றனர்.
ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது
ஆட்டோ வாலாஜா தாலுகா தலங்கை அருகே உள்ள விநாயகபுரம் கிராமம் பஜனை கோவில் அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த 50 அடி ஆழ கிணற்றை நோக்கிச்சென்றது.
அப்போது ஆட்டோவில் இருந்தவர்கள் அய்யோ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என மரண ஓலமிட்டனர். எனினும் கண் இமைக்கும் நேரத்திற்குள் ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்து அதன் சுவற்றில் மோதி நீரில் மூழ்கியது.
![ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது; பெண்கள் உள்பட 7 பேர் பலி Ms01](https://2img.net/h/dailythanthi.com/images/news/20120429/ms01.jpg)
7 பேர் பலி
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் பெருமாள் மற்றும் அதில் பயணம் செய்த மாரியப்பன் மனைவி சித்ரா, வரதன் மனைவி சித்ரா, சிறுவர்கள் அஜீத், மந்திரிகுமார், செல்வராஜ் மற்றும் அவரது மனைவி ராணி ஆகிய 7 பேரும் பரிதாபமாக செத்தனர்.
மேலும் ஆட்டோ டிரைவரின் அருகில் அமர்ந்து பயணம் செய்த சாமிக்கண்ணு என்பவர் மட்டும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் ஆட்டோ கிணற்றில் பாய்ந்ததும் தண்ணீரில் குதித்து நீச்சலடித்து கூச்சலிட்டார்.
ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்ததையும், சாமிக்கண்ணு கூச்சலிடுவதையும் பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஓடிச்சென்று கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்த சாமிக்கண்ணுவை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
உடல்கள் மீட்பு
இதற்கிடையே சம்பவம் பற்றி தகவலறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் ஆட்டோவுடன் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஆட்டோவையும் 7 பேர் பிணங்களையும் மீட்டனர். அவர்களது உடல்கள் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.
விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சாமிக்கண்ணு தனது மகன் மந்திரிகுமார் உடலை பார்த்து கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இந்த விபத்து பற்றி வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஒரே குடியிருப்பு பகுதியில் வசித்த உறவினர்களான 7 பேர் கிணற்றுக்குள் மூழ்கி இறந்த சம்பவம் வடகடப்பந்தாங்கல் எம்.ஜி.ஆர்.நகர்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிர் தப்பியவர் பேட்டி
விபத்தில் உயிர்தப்பிய சாமிக்கண்ணு கூறியதாவது:-
ஆட்டோ ஒழுகூரை தாண்டி பகல் 11 மணி அளவில் விநாயகபுரம் என்ற இடத்தில் வேகமாக சென்று கொண்டு இருந்தபோது திடீரென நிலைதடுமாறி ரோடு ஓரத்தில் இருந்த தரைமட்ட விவசாய கிணற்றுக்குள் பாய்ந்தது. நாங்கள் உயிர்பயத்தில் அலறினோம். 50 அடி உயர அந்த கிணற்றில் 25 அடிக்கு தண்ணீர் இருந்தது.
நான் ஆட்டோ டிரைவர் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்ததால் தண்ணீருக்குள் நீச்சலடித்து வெளியே வந்துவிட்டேன். மற்றவர்களுக்கும் நீச்சல் தெரியும் என்றாலும் ஆட்டோவுக்குள் சிக்கிக்கொண்டதால் வெளியே வரமுடியவில்லை.
நான் தண்ணீருக்குள் தத்தளித்து சத்தம் போட்டதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து என்னை காப்பாற்றினர். மற்றவர்களை பிணமாக மீட்டனர். இந்த விபத்தில் எனது மகன் குமாரும் பலியாகிவிட்டான். என்னுடன் வேலைக்கு அழைத்துச்சென்று மகனையும், உறவினர்களையும் பறிகொடுத்து விட்டேன்.
இவ்வாறு சாமிக்கண்ணு கூறினார்.
பெற்றோரை இழந்த 8 குழந்தைகள்
விபத்தில் பலியான செல்வராஜ்-ராணி தம்பதியினருக்கு கிருஷ்ணன்(20), லட்சுமணன்(15), பாஸ்கர்(12), ஜோதிகா(8),சுரேஷ்(6), சந்தோஷ்(5) மகேஷ்(4), அரிகரன் (11/2 வயது) என மொத்தம் 7 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
8 குழந்தைளுக்கு பெற்றோரான செல்வராஜ், ராணி தம்பதியினர் இறந்தது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் ஆட்டோவை ஓட்டி வந்து விபத்தில் சிக்கி இறந்த டிரைவர் பெருமாள் தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து தற்போது தான் ஆட்டோ வாங்கியதாகவும், அந்த ஆட்டோவிற்கு சில நாட்களுக்கு முன்பு தான் பதிவு எண் வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தினத்தந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது; பெண்கள் உள்பட 7 பேர் பலி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது; பெண்கள் உள்பட 7 பேர் பலி
அட பாவமே. இறந்து போன இந்த உயிர்கள் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது; பெண்கள் உள்பட 7 பேர் பலி
கிணறு தூரு வாருபவர்களுக்கு கிணறே எமனாகி விட்டது கொடுமை.
இன்னும் நம்ம ஊரில் பாதுகாப்பு முறைகளை எங்குமே கடைப் பிடிப்பது இல்லை என்பதற்கு சான்று இதுவே.
அனுதாபங்கள் உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு.
இன்னும் நம்ம ஊரில் பாதுகாப்பு முறைகளை எங்குமே கடைப் பிடிப்பது இல்லை என்பதற்கு சான்று இதுவே.
அனுதாபங்கள் உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது; பெண்கள் உள்பட 7 பேர் பலி
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
அனுதாபங்கள் உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு.
Re: ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது; பெண்கள் உள்பட 7 பேர் பலி
பாவம் சிறார்கள் பரீட்சை முடிந்து குதூகூலமாக இருக்க வேண்டிய நேரத்தில் இப்படி ஒரு துயரசம்பவம் அனைவரின் ஆன்மாவும் சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை இரு கைகூப்பி வேண்டிக்கொள்கிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது; பெண்கள் உள்பட 7 பேர் பலி
பலியான 6 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன
வாலாஜா அருகே 50 அடி ஆழ கிணற்றுக்குள் ஆட்டோ பாய்ந்ததில் 7 பேர் பலியானார்கள். அதில் ஆட்டோ டிரைவர் உடல் தவிர மற்ற 6 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன.
7 பேர் பலி
வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே கிணறு தூர்வாரும் பணிக்காக 3 பெண்கள் உள்பட 7 பேர் ஒரு ஷேர் ஆட்டோவில் பெரியதகரகுப்பம் கிராமத்துக்கு புறப்பட்டு சென்றனர். ஆட்டோவை காட்ராம்பாக்கத்தை சேர்ந்த பெருமாள் (வயது 40) ஓட்டிச்சென்றார்.
தலங்கை அருகே உள்ள விநாயகபுரம் கிராமம் பஜனைகோவில் அருகே ஆட்டோ சென்றபோது திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். சாமிக்கண்ணு (50) என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
ஒரே இடத்தில் அடக்கம்
இந்த விபத்தில் இறந்த மாரியப்பன் மனைவி சித்ரா (20), வரதன் மனைவி சித்ரா (25), அவரது மகன் அஜித் (11), செல்வராஜ் (52), அவரது மனைவி ராணி (48), மந்திரி குமார் (16 உயிர்தப்பிய சாமிக்கண்ணுவின் மகன்) ஆகிய 6 பேரின் உடல்களும் நேற்று எம்.ஜி.ஆர். நகரில் அவர்களது வீடு அருகே உள்ள இடுகாட்டில் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன.
இதற்காக 6 பேருக்கும் தனித்தனியாக குழிகள் வெட்டப்பட்டு இருந்தன. எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இறந்தவர்கள் 6 பேரின் உடல்களையும் தூக்கி சென்று குழிகளில் வைத்து புதைத்தனர். இறந்தவர்களும், அவர்களது குடும்பத்தினரும் மிகவும் ஏழைகள், கூலித்தொழிலாளர்கள் என்பதால் மிகவும் எளிமையான முறையில் இந்த உடல் அடக்கம் நடைபெற்றது.
முன்னதாக வடகடப்பந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் வில்பர்ட் ஜெயக்குமார் இறந்தவர்களின் உடல்களுக்கு மாலைகள் அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
8 பிள்ளைகள்
உடல் அடக்கத்தின்போது, தாய் (ராணி), தந்தையை (செல்வராஜ்) இழந்த கிருஷ்ணன் (22), லட்சுமணன் (20), மகேஷ் (16), பாஸ்கர் (15), சுரேஷ் (11), சந்தோஷ் (6), ஜோதிகா (8), அரிஹரன் (8 மாத குழந்தை) ஆகியோர் துக்கத்தில் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
தாய்-தந்தை இன்றி அனாதையான 8 பேரையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுததும் அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
வாலாஜா அருகே 50 அடி ஆழ கிணற்றுக்குள் ஆட்டோ பாய்ந்ததில் 7 பேர் பலியானார்கள். அதில் ஆட்டோ டிரைவர் உடல் தவிர மற்ற 6 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன.
7 பேர் பலி
வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே கிணறு தூர்வாரும் பணிக்காக 3 பெண்கள் உள்பட 7 பேர் ஒரு ஷேர் ஆட்டோவில் பெரியதகரகுப்பம் கிராமத்துக்கு புறப்பட்டு சென்றனர். ஆட்டோவை காட்ராம்பாக்கத்தை சேர்ந்த பெருமாள் (வயது 40) ஓட்டிச்சென்றார்.
தலங்கை அருகே உள்ள விநாயகபுரம் கிராமம் பஜனைகோவில் அருகே ஆட்டோ சென்றபோது திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். சாமிக்கண்ணு (50) என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
ஒரே இடத்தில் அடக்கம்
இந்த விபத்தில் இறந்த மாரியப்பன் மனைவி சித்ரா (20), வரதன் மனைவி சித்ரா (25), அவரது மகன் அஜித் (11), செல்வராஜ் (52), அவரது மனைவி ராணி (48), மந்திரி குமார் (16 உயிர்தப்பிய சாமிக்கண்ணுவின் மகன்) ஆகிய 6 பேரின் உடல்களும் நேற்று எம்.ஜி.ஆர். நகரில் அவர்களது வீடு அருகே உள்ள இடுகாட்டில் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன.
இதற்காக 6 பேருக்கும் தனித்தனியாக குழிகள் வெட்டப்பட்டு இருந்தன. எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இறந்தவர்கள் 6 பேரின் உடல்களையும் தூக்கி சென்று குழிகளில் வைத்து புதைத்தனர். இறந்தவர்களும், அவர்களது குடும்பத்தினரும் மிகவும் ஏழைகள், கூலித்தொழிலாளர்கள் என்பதால் மிகவும் எளிமையான முறையில் இந்த உடல் அடக்கம் நடைபெற்றது.
முன்னதாக வடகடப்பந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் வில்பர்ட் ஜெயக்குமார் இறந்தவர்களின் உடல்களுக்கு மாலைகள் அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
8 பிள்ளைகள்
உடல் அடக்கத்தின்போது, தாய் (ராணி), தந்தையை (செல்வராஜ்) இழந்த கிருஷ்ணன் (22), லட்சுமணன் (20), மகேஷ் (16), பாஸ்கர் (15), சுரேஷ் (11), சந்தோஷ் (6), ஜோதிகா (8), அரிஹரன் (8 மாத குழந்தை) ஆகியோர் துக்கத்தில் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
தாய்-தந்தை இன்றி அனாதையான 8 பேரையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுததும் அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆட்டோ கிணற்றில் பாய்ந்தது; பெண்கள் உள்பட 7 பேர் பலி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேன்-லாரி பயங்கர மோதல், பெண்கள் உள்பட 11 பேர் பலி
» சாராய வேட்டைக்கு சென்ற எஸ்ஐ, ஏட்டுக்கு அடி, உதை!! 11 பெண்கள் உள்பட 23 பேர் கைது
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்
» சாராய வேட்டைக்கு சென்ற எஸ்ஐ, ஏட்டுக்கு அடி, உதை!! 11 பெண்கள் உள்பட 23 பேர் கைது
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|