Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
+20
தர்மா
முரளிராஜா
ரா.ரா3275
அருண்
ந.கார்த்தி
சிவா
Manik
ரா.ரமேஷ்குமார்
அசுரன்
ர.சிவா
ஹர்ஷித்
உதயசுதா
முஹைதீன்
யினியவன்
பாலாஜி
ராஜா
balakarthik
பிஜிராமன்
பிரசன்னா
மகா பிரபு
24 posters
Page 70 of 92
Page 70 of 92 • 1 ... 36 ... 69, 70, 71 ... 81 ... 92
எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும்
ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
First topic message reminder :
ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.
எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..
ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.
எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..
Last edited by மகா பிரபு on Sun May 20, 2012 11:04 pm; edited 6 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சென்னை "அவுட்': கொஞ்சம் "டவுட்' * பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது
தரம்சாலா:ஐ.பி.எல்., லீக் போட்டியில் சொதப்பலாக ஆடிய சென்னை அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் சென்னை அணியின் "பிளே-ஆப்' வாய்ப்பு அனேகமாக முடிவுக்கு வந்துள்ளது.
தரம்சாலாவில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான 66வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
மீண்டும் கில்கிறிஸ்ட்:
தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட் நேற்று மீண்டும் களமிறங்கினார். சென்னை அணியில் டுபிளசி நீக்கப்பட்டு ஆல்பி மார்கல், யோ மகேஷ் இடம் பிடித்தனர். "டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் கில்கிறிஸ்ட், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
திணறல் துவக்கம்:
சென்னை அணி துவக்கத்தில் இருந்தே திணறியது. முரளி விஜய் (10), மைக்கேல் ஹசி (7) ஏமாற்றினார். அசார் முகமூது வீசிய 8வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசிய சுரேஷ் ரெய்னா (17), அதே ஓவரில் அவுட்டானார். கேப்டன் தோனியும் (6) பொறுப்பற்ற "ஷாட்' அடித்து வெளியேற, சென்னை அணி 10.2 ஓவரில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
பிராவோ ஆறுதல்:
தனிநபராக போராடிய டுவைன் பிராவே, ஒன்று இரண்டாக ரன்களாக சேர்த்தார். இவர், பியுஸ் சாவ்லா, டேவிட் ஹசி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு ஆறுதல் தந்தார். ஹாரிஸ் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த ரவிந்திர ஜடேஜா (13), அவானா பந்தில் பெவிலியன் திரும்பினார். ஆல்பி மார்கல் (14) நிலைக்கவில்லை. பிராவோ (48) அரைசத வாய்ப்பை இழந்தார்.
சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. அனிருதா (1), அஷ்வின் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
சூப்பர் துவக்கம்:
சுலப இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு மன்தீப் சிங், கில்கிறிஸ்ட் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. சென்னை பந்துவீச்சை பதம்பார்த்த இவர்கள் பவுண்டரிகளாக விளாசினர். ஹில்பெனாஸ் வீசிய முதல் ஓவரில் மன்தீப் சிங் இரண்டு பவுண்டரி அடிக்க, ஆல்பி மார்கல் ஓவரில் கில்கிறிஸ்ட் தன்பங்கிற்கு இரண்டு பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில், மன்தீப் சிங் (24) அவுட்டானார்.
கில்கிறிஸ்ட் அபாரம்:
அடுத்து வந்த நிடின் சைனி (1), டேவிட் ஹசி (9) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய கில்கிறிஸ்ட், யோ மகேஷ் வீசிய 15வது ஓவரில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி விளாசி அரைசதம் அடித்தார். சித்தார்த் சிட்னிஸ் (11) ஓரளவு ஒத்துழைப்பு தந்தார்.
ஆல்பி மார்கல் பந்தில் அசார் முகமூது ஒரு பவுண்டரி அடிக்க, பஞ்சாப் அணி 16.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. கில்கிறிஸ்ட் (64 ரன், 46 பந்து), அசார் (9) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகனாக பஞ்சாப் கேப்டன் கில்கிறிஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.
சபாஷ் கில்கிறிஸ்ட்
நேற்று, சென்னை அணியின் யோ மகேஷ் வீசிய 13வது ஓவரின் கடைசி பந்தை பஞ்சாப் வீரர் சிட்னிஸ் அடித்தார். இதனை எல்லைக்கோடு அருகே அருமையாக தடுத்த சென்னை அணியின் அனிருதா ஸ்ரீகாந்த், வலது தோள்பட்டை பகுதியில் காயமடைந்து கீழே விழுந்தார். இதனை அறிந்த சிட்னிஸ், மூன்றாவது ரன்னுக்கு ஓட கில்கிறிஸ்ட்டை அழைத்தார். ஆனால் கில்கிறிஸ்ட் மறுத்தார். எதிரணி வீரர் காயமடைந்ததால், கூடுதலாக ரன் எடுக்க மறுத்த கில்கிறிஸ்டின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது. காயம் காரணமாக அனிருதா பீல்டிங் செய்ய வரவில்லை.
இன்னும் வாய்ப்பு உண்டு
ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் "நடப்பு சாம்பியனாக' களமிறங்கிய சென்னை அணி, முதல் சுற்றுடன் நடையை கட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை சென்னைக்கு போட்டியாக உள்ள மற்ற அணிகள் எல்லாம் அடுத்த போட்டிகளில் தோற்றால் "பிளே-ஆப்' வாய்ப்பு கிடைக்கலாம்.
1. தற்போது 16 புள்ளிகள் பெற்றுள்ள பஞ்சாப் அணி, நாளை டில்லியுடனான கடைசி லீக் போட்டியில் தோற்க வேண்டும்.
2. மும்பை அணி தனது கடைசி போட்டியில் (மே 20), ராஜஸ்தானை வீழ்த்த வேண்டும்.
3. பெங்களூரு அணி டெக்கான், டில்லி அணிகளுக்கு எதிரான 2 போட்டியிலும் தோற்க வேண்டும்.
இதெல்லாம் நடந்தால், பெங்களூரு (15 புள்ளி, ரன்ரேட் -0.072), பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் முதல் சுற்றுடன் நடையை கட்டும். டில்லி, மும்பை, கோல்கட்டா அணிகளுடன் 17 புள்ளியுடன், நல்ல ரன்ரேட் (+0.100) உள்ள சென்னை அணியும் சேர்ந்து "பிளே ஆப்' சுற்றுக்கு செல்லலாம்
-தினமலர்
தரம்சாலாவில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான 66வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
மீண்டும் கில்கிறிஸ்ட்:
தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட் நேற்று மீண்டும் களமிறங்கினார். சென்னை அணியில் டுபிளசி நீக்கப்பட்டு ஆல்பி மார்கல், யோ மகேஷ் இடம் பிடித்தனர். "டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் கில்கிறிஸ்ட், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
திணறல் துவக்கம்:
சென்னை அணி துவக்கத்தில் இருந்தே திணறியது. முரளி விஜய் (10), மைக்கேல் ஹசி (7) ஏமாற்றினார். அசார் முகமூது வீசிய 8வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசிய சுரேஷ் ரெய்னா (17), அதே ஓவரில் அவுட்டானார். கேப்டன் தோனியும் (6) பொறுப்பற்ற "ஷாட்' அடித்து வெளியேற, சென்னை அணி 10.2 ஓவரில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
பிராவோ ஆறுதல்:
தனிநபராக போராடிய டுவைன் பிராவே, ஒன்று இரண்டாக ரன்களாக சேர்த்தார். இவர், பியுஸ் சாவ்லா, டேவிட் ஹசி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு ஆறுதல் தந்தார். ஹாரிஸ் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த ரவிந்திர ஜடேஜா (13), அவானா பந்தில் பெவிலியன் திரும்பினார். ஆல்பி மார்கல் (14) நிலைக்கவில்லை. பிராவோ (48) அரைசத வாய்ப்பை இழந்தார்.
சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. அனிருதா (1), அஷ்வின் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
சூப்பர் துவக்கம்:
சுலப இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு மன்தீப் சிங், கில்கிறிஸ்ட் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. சென்னை பந்துவீச்சை பதம்பார்த்த இவர்கள் பவுண்டரிகளாக விளாசினர். ஹில்பெனாஸ் வீசிய முதல் ஓவரில் மன்தீப் சிங் இரண்டு பவுண்டரி அடிக்க, ஆல்பி மார்கல் ஓவரில் கில்கிறிஸ்ட் தன்பங்கிற்கு இரண்டு பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில், மன்தீப் சிங் (24) அவுட்டானார்.
கில்கிறிஸ்ட் அபாரம்:
அடுத்து வந்த நிடின் சைனி (1), டேவிட் ஹசி (9) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய கில்கிறிஸ்ட், யோ மகேஷ் வீசிய 15வது ஓவரில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி விளாசி அரைசதம் அடித்தார். சித்தார்த் சிட்னிஸ் (11) ஓரளவு ஒத்துழைப்பு தந்தார்.
ஆல்பி மார்கல் பந்தில் அசார் முகமூது ஒரு பவுண்டரி அடிக்க, பஞ்சாப் அணி 16.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. கில்கிறிஸ்ட் (64 ரன், 46 பந்து), அசார் (9) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகனாக பஞ்சாப் கேப்டன் கில்கிறிஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.
சபாஷ் கில்கிறிஸ்ட்
நேற்று, சென்னை அணியின் யோ மகேஷ் வீசிய 13வது ஓவரின் கடைசி பந்தை பஞ்சாப் வீரர் சிட்னிஸ் அடித்தார். இதனை எல்லைக்கோடு அருகே அருமையாக தடுத்த சென்னை அணியின் அனிருதா ஸ்ரீகாந்த், வலது தோள்பட்டை பகுதியில் காயமடைந்து கீழே விழுந்தார். இதனை அறிந்த சிட்னிஸ், மூன்றாவது ரன்னுக்கு ஓட கில்கிறிஸ்ட்டை அழைத்தார். ஆனால் கில்கிறிஸ்ட் மறுத்தார். எதிரணி வீரர் காயமடைந்ததால், கூடுதலாக ரன் எடுக்க மறுத்த கில்கிறிஸ்டின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது. காயம் காரணமாக அனிருதா பீல்டிங் செய்ய வரவில்லை.
இன்னும் வாய்ப்பு உண்டு
ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் "நடப்பு சாம்பியனாக' களமிறங்கிய சென்னை அணி, முதல் சுற்றுடன் நடையை கட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை சென்னைக்கு போட்டியாக உள்ள மற்ற அணிகள் எல்லாம் அடுத்த போட்டிகளில் தோற்றால் "பிளே-ஆப்' வாய்ப்பு கிடைக்கலாம்.
1. தற்போது 16 புள்ளிகள் பெற்றுள்ள பஞ்சாப் அணி, நாளை டில்லியுடனான கடைசி லீக் போட்டியில் தோற்க வேண்டும்.
2. மும்பை அணி தனது கடைசி போட்டியில் (மே 20), ராஜஸ்தானை வீழ்த்த வேண்டும்.
3. பெங்களூரு அணி டெக்கான், டில்லி அணிகளுக்கு எதிரான 2 போட்டியிலும் தோற்க வேண்டும்.
இதெல்லாம் நடந்தால், பெங்களூரு (15 புள்ளி, ரன்ரேட் -0.072), பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் முதல் சுற்றுடன் நடையை கட்டும். டில்லி, மும்பை, கோல்கட்டா அணிகளுடன் 17 புள்ளியுடன், நல்ல ரன்ரேட் (+0.100) உள்ள சென்னை அணியும் சேர்ந்து "பிளே ஆப்' சுற்றுக்கு செல்லலாம்
-தினமலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கெயல் "புயல் வேக சதம்! * பெங்களூரு அசத்தல் வெற்றி * டில்லி போராட்டம் வீண்
புதுடில்லி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கெய்ல் 62 பந்தில் 128 ரன்கள் விளாசி கைகொடுக்க, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் "பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. டில்லி அணியின் போராட்டம் வீணானது.
டில்லியில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் 67வது லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
சேவக் இல்லை:
டில்லி அணி ஏற்கனவே "பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டது. பெங்களூரு அணி கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. சேவக் காய்ச்சலால் அவதிப்பட, டில்லி அணியின் கேப்டன் பொறுப்பை ஜெயவர்தனா ஏற்றார். "டாஸ் வென்ற இவர் "பீல்டிங் தேர்வு செய்தார்.
"சிக்சர் மழை:
பெங்களூரு அணிக்கு துவக்கத்தில் தில்ஷன்(10) ஏமாற்றம் அளித்தார். இதற்கு பின் கெய்ல், கேப்டன் விராத் கோஹ்லி சேர்ந்து டில்லி பந்துவீச்சை சிதறடித்தனர். முதலில் அடக்கி வாசித்த கெய்ல் 17 பந்தில் 10 ரன்கள் தான் எடுத்திருந்தார். பின் வாணவேடிக்கை காட்டிய இவர், இர்பான் பதான் ஓவரில் 3 இமாலய சிக்சர் விளாசினார். தொடர்ந்து நேகி ஓவரில் "ஹாட்ரிக் சிக்சர் அடித்தார். உமேஷ் யாதவ் ஓவரிலும் 2 சிக்சர் அடிக்க, ஸ்கோர் மின்னல் வேகத்தில் <உயர்ந்தது. 53 பந்தில் இத்தொடரில் தனது முதல் சதம் அடித்து அசத்தினார் கெய்ல். மறுபக்கம் விராத் கோஹ்லி அரைசதம் கடந்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது. கெய்ல் 128(62 பந்து, 13 சிக்சர், 7 பவுண்டரி), கோஹ்லி 73 ரன்களுடன்(53 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர்.
விக்கெட் சரிவு:
கடின இலக்கை விரட்டிய டில்லி அணி திணறல் துவக்கம் கண்டது. ஜாகிர் கான் "வேகத்தில் வார்னர்(15) வெளியேறினார். உன்முக்த் சந்த்(18) தாக்குப்பிடிக்கவில்லை. ஜெயவர்தனா(9)ஏமாற்றினார். போராடிய வேணுகோபால்(36), முரளிதரன் "சுழலில் சிக்கினார். நமன் ஓஜா(13) நிலைக்கவில்லை.
கடைசி கட்டத்தில் ராஸ் டெய்லர், ஆன்ட்ரி ரசல் வரிசையாக பவுண்டரி, சிக்சர்களாக விளாச, போட்டியில் சூடு பிடித்தது. இந்த நேரத்தில் வினய் குமார் பந்தில் டெய்லர்(55) அவுட்டாக, போட்டி மீண்டும் பெங்களூரு பக்கம் வந்தது.
கடைசி ஓவரில் டில்லி வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டன. கட்டுக் கோப்பாக பந்துவீசிய பரமேஸ்வரன், ரசலை(31) வெளியேற்றியதோடு, 8 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். டில்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 194 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
ஆட்ட நாயகன் விருதை கெய்ல் வென்றார்.
இது அதிகம்
நேற்று 215/1 ரன்கள் எடுத்த பெங்களூரு அணி இத்தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. இதற்கு முன் சென்னை அணி 208/5 ரன்கள்(எதிர், பெங்களூரு) எடுத்திருந்தது.
சிறந்த ஜோடி
நேற்று இரண்டாவது விக்கெட்டுக்கு கெய்ல்-கோஹ்லி சேர்ந்து 204 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக ரன் எடுத்த இரண்டாவது ஜோடி என்ற பெருமை பெற்றது. முதலிடத்தில் பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட்-மார்ஷ் ஜோடி( 206 ரன்கள், எதிர், பெங்களூரு, 2011) உள்ளனர்.
சாதனை மழையில்...
ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் கெய்ல். நேற்று 128 ரன்கள் விளாசிய இவர் 3வது சதம் அடித்தார். கடந்த ஆண்டு கோல்கட்டா (102*), பஞ்சாப் (107) அணிகளுக்கு எதிராக சதம் அடித்தார். இவரை அடுத்து டில்லி அணியின் டேவிட் வார்னர் (107*, 109*), பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட் (109*, 106) தலா இரண்டு சதம் அடித்துள்ளனர்.
* ஐ.பி.எல்., அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடம் (128 ரன்) பிடித்தார் கெய்ல். முதலிடத்தில் கோல்கட்டா அணியின் பிரண்டன் மெக்கலம் (158*, எதிர்-பெங்களூரு, 2008) உள்ளார்.
* ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் ஒரு இன்னிங்சில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது. முன்னதாக டில்லி அணியின் டேவிட் வார்னர் (109*, எதிர்-டெக்கான்), மும்பை அணியின் ரோகித் சர்மா (109*, எதிர்-கோல்கட்டா) ஆகியோர் அதிகபட்ச ரன்னை பெற்றனர்.
* நேற்று 13 சிக்சர் விளாசிய கெய்ல், ஐ.பி.எல்., அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் பிரண்டன் மெக்கலத்துடன் பகிர்ந்து கொண்டார். கடந்த 2008ல் பெங்களூருவுக்கு எதிராக பிரண்டன் மெக்கலம் ஒரே இன்னிங்சில் 13 சிக்சர் விளாசினார்.
* ஐ.பி.எல்., அரங்கில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் கெய்ல் முதலிடம் வகிக்கிறார். இதுவரை 42 போட்டியில் 127 சிக்சர் விளாசி உள்ளார். சென்னை அணியின் ரெய்னா (91 சிக்சர்), பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட் (86) அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர்.
* ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் கெய்ல் 14 போட்டியில் 57 சிக்சர் விளாசி உள்ளார். டில்லி அணியின் கெவின் பீட்டர்சன், டெக்கான் அணியின் கேமிரான் ஒயிட் தலா 20 சிக்சர் அடித்துள்ளனர்.
* கெய்ல் இதுவரை விளையாடிய 14 போட்டியில் 706 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்தவர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார். இது, கடந்த நான்கு தொடர்களில் அதிக ரன்கள் எடுத்தவர்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. 2008ல் பஞ்சாப் அணியின் ஷேன் மார்ஷ் (11 போட்டி, 616 ரன்), 2009ல் சென்னை அணியின் ஹைடன் (12 போட்டி, 572 ரன்), 2010ல் மும்பை அணியின் சச்சின் (15 போட்டி, 618 ரன்), 2011ல் பெங்களூரு அணியின் கெய்ல் (12 போட்டி, 608 ரன்) ஆகியோர் அதிக ரன் எடுத்தனர்.
-தினமலர்
டில்லியில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் 67வது லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
சேவக் இல்லை:
டில்லி அணி ஏற்கனவே "பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டது. பெங்களூரு அணி கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. சேவக் காய்ச்சலால் அவதிப்பட, டில்லி அணியின் கேப்டன் பொறுப்பை ஜெயவர்தனா ஏற்றார். "டாஸ் வென்ற இவர் "பீல்டிங் தேர்வு செய்தார்.
"சிக்சர் மழை:
பெங்களூரு அணிக்கு துவக்கத்தில் தில்ஷன்(10) ஏமாற்றம் அளித்தார். இதற்கு பின் கெய்ல், கேப்டன் விராத் கோஹ்லி சேர்ந்து டில்லி பந்துவீச்சை சிதறடித்தனர். முதலில் அடக்கி வாசித்த கெய்ல் 17 பந்தில் 10 ரன்கள் தான் எடுத்திருந்தார். பின் வாணவேடிக்கை காட்டிய இவர், இர்பான் பதான் ஓவரில் 3 இமாலய சிக்சர் விளாசினார். தொடர்ந்து நேகி ஓவரில் "ஹாட்ரிக் சிக்சர் அடித்தார். உமேஷ் யாதவ் ஓவரிலும் 2 சிக்சர் அடிக்க, ஸ்கோர் மின்னல் வேகத்தில் <உயர்ந்தது. 53 பந்தில் இத்தொடரில் தனது முதல் சதம் அடித்து அசத்தினார் கெய்ல். மறுபக்கம் விராத் கோஹ்லி அரைசதம் கடந்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது. கெய்ல் 128(62 பந்து, 13 சிக்சர், 7 பவுண்டரி), கோஹ்லி 73 ரன்களுடன்(53 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர்.
விக்கெட் சரிவு:
கடின இலக்கை விரட்டிய டில்லி அணி திணறல் துவக்கம் கண்டது. ஜாகிர் கான் "வேகத்தில் வார்னர்(15) வெளியேறினார். உன்முக்த் சந்த்(18) தாக்குப்பிடிக்கவில்லை. ஜெயவர்தனா(9)ஏமாற்றினார். போராடிய வேணுகோபால்(36), முரளிதரன் "சுழலில் சிக்கினார். நமன் ஓஜா(13) நிலைக்கவில்லை.
கடைசி கட்டத்தில் ராஸ் டெய்லர், ஆன்ட்ரி ரசல் வரிசையாக பவுண்டரி, சிக்சர்களாக விளாச, போட்டியில் சூடு பிடித்தது. இந்த நேரத்தில் வினய் குமார் பந்தில் டெய்லர்(55) அவுட்டாக, போட்டி மீண்டும் பெங்களூரு பக்கம் வந்தது.
கடைசி ஓவரில் டில்லி வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டன. கட்டுக் கோப்பாக பந்துவீசிய பரமேஸ்வரன், ரசலை(31) வெளியேற்றியதோடு, 8 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். டில்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 194 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
ஆட்ட நாயகன் விருதை கெய்ல் வென்றார்.
இது அதிகம்
நேற்று 215/1 ரன்கள் எடுத்த பெங்களூரு அணி இத்தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. இதற்கு முன் சென்னை அணி 208/5 ரன்கள்(எதிர், பெங்களூரு) எடுத்திருந்தது.
சிறந்த ஜோடி
நேற்று இரண்டாவது விக்கெட்டுக்கு கெய்ல்-கோஹ்லி சேர்ந்து 204 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக ரன் எடுத்த இரண்டாவது ஜோடி என்ற பெருமை பெற்றது. முதலிடத்தில் பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட்-மார்ஷ் ஜோடி( 206 ரன்கள், எதிர், பெங்களூரு, 2011) உள்ளனர்.
சாதனை மழையில்...
ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் கெய்ல். நேற்று 128 ரன்கள் விளாசிய இவர் 3வது சதம் அடித்தார். கடந்த ஆண்டு கோல்கட்டா (102*), பஞ்சாப் (107) அணிகளுக்கு எதிராக சதம் அடித்தார். இவரை அடுத்து டில்லி அணியின் டேவிட் வார்னர் (107*, 109*), பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட் (109*, 106) தலா இரண்டு சதம் அடித்துள்ளனர்.
* ஐ.பி.எல்., அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடம் (128 ரன்) பிடித்தார் கெய்ல். முதலிடத்தில் கோல்கட்டா அணியின் பிரண்டன் மெக்கலம் (158*, எதிர்-பெங்களூரு, 2008) உள்ளார்.
* ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் ஒரு இன்னிங்சில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது. முன்னதாக டில்லி அணியின் டேவிட் வார்னர் (109*, எதிர்-டெக்கான்), மும்பை அணியின் ரோகித் சர்மா (109*, எதிர்-கோல்கட்டா) ஆகியோர் அதிகபட்ச ரன்னை பெற்றனர்.
* நேற்று 13 சிக்சர் விளாசிய கெய்ல், ஐ.பி.எல்., அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் பிரண்டன் மெக்கலத்துடன் பகிர்ந்து கொண்டார். கடந்த 2008ல் பெங்களூருவுக்கு எதிராக பிரண்டன் மெக்கலம் ஒரே இன்னிங்சில் 13 சிக்சர் விளாசினார்.
* ஐ.பி.எல்., அரங்கில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் கெய்ல் முதலிடம் வகிக்கிறார். இதுவரை 42 போட்டியில் 127 சிக்சர் விளாசி உள்ளார். சென்னை அணியின் ரெய்னா (91 சிக்சர்), பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட் (86) அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர்.
* ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் கெய்ல் 14 போட்டியில் 57 சிக்சர் விளாசி உள்ளார். டில்லி அணியின் கெவின் பீட்டர்சன், டெக்கான் அணியின் கேமிரான் ஒயிட் தலா 20 சிக்சர் அடித்துள்ளனர்.
* கெய்ல் இதுவரை விளையாடிய 14 போட்டியில் 706 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்தவர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார். இது, கடந்த நான்கு தொடர்களில் அதிக ரன்கள் எடுத்தவர்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. 2008ல் பஞ்சாப் அணியின் ஷேன் மார்ஷ் (11 போட்டி, 616 ரன்), 2009ல் சென்னை அணியின் ஹைடன் (12 போட்டி, 572 ரன்), 2010ல் மும்பை அணியின் சச்சின் (15 போட்டி, 618 ரன்), 2011ல் பெங்களூரு அணியின் கெய்ல் (12 போட்டி, 608 ரன்) ஆகியோர் அதிக ரன் எடுத்தனர்.
-தினமலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
யினியவன் wrote:வாங்க பிரசன்னா - டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ராயல்ஸ் யாருவேணா ஜெயிக்கட்டும் - இந்த மும்பை மட்டும் ஜெயிக்கக் கூடாது.
ஆமாம் இந்த மும்பை பயலுக ஜெயிக்கக் கூடாது.... ரொம்ப சீன் போடுவானுங்க
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
கண்டிப்பாக சென்னை வராது என்ற நம்பிக்கையை கொடுத்து விட்டார்கள் நம் சென்னை அணியினர்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
பிரசன்னா wrote:யினியவன் wrote:வாங்க பிரசன்னா - டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ராயல்ஸ் யாருவேணா ஜெயிக்கட்டும் - இந்த மும்பை மட்டும் ஜெயிக்கக் கூடாது.
ஆமாம் இந்த மும்பை பயலுக ஜெயிக்கக் கூடாது.... ரொம்ப சீன் போடுவானுங்க
மும்பை மேல அவ்ளோ ஒரு பாசமா............. பெங்களூரு ஜெயிச்சா எவ்ளோ சீன் போடுவாங்க தெரியுமா ........... ஜெயிச்சா எல்லாரும் சீன் போடத்தான் செய்வாங்க....... சோம்பேறி மாதிரி உட்காந்திருக்க மாட்டாங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
விடுங்கண்ணே நாமதான் ரெண்டுமுறை சேம்பியன்..சாந்தன் wrote:கண்டிப்பாக சென்னை வராது என்ற நம்பிக்கையை கொடுத்து விட்டார்கள் நம் சென்னை அணியினர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
2 முறை சேம்பியன் சேம்பியன்னு சொல்லிதான் ஆஸ்திரேலியா அழிஞ்சே போயிட்டாங்க நீங்களும் அது மாதிரி ஆகிடாதீங்க பிரபு........
திறமை உள்ள இடத்தில் வெற்றியும் இருக்கும்
திறமை உள்ள இடத்தில் வெற்றியும் இருக்கும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
அட போப்பா.. திறமை மட்டும் இருந்தால் போதாது . அதிச்டமும் இருக்க வேண்டும்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
இரண்டும் இருந்தா மட்டும் ஜெயிச்சுர முடியுமா
கடவுளின் கருணை வேண்டும் நண்பா
விட்டா ஜோசியரின் அனுசரனையும் வேணும்னு சொல்லுவ போல
கடவுளின் கருணை வேண்டும் நண்பா
விட்டா ஜோசியரின் அனுசரனையும் வேணும்னு சொல்லுவ போல
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
அதிஷ்டம் இருப்பதால் தான் மும்பை போன்ற இத்து போன அணி எல்லாம் வெற்றி பெறுகிறது..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 70 of 92 • 1 ... 36 ... 69, 70, 71 ... 81 ... 92
Similar topics
» தொடரை வெல்வது யார்? இந்தியா-நியூஸி. இன்று பலப்பரீட்சை
» ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?
» 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை
» இனி உலகக் கோப்பையை வெல்வது ஜெர்மனி
» கஷ்டங்களை வெல்வது எப்படி?
» ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?
» 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை
» இனி உலகக் கோப்பையை வெல்வது ஜெர்மனி
» கஷ்டங்களை வெல்வது எப்படி?
Page 70 of 92
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|