ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்த உருவம்! தெரியாத மனது!!

2 posters

Go down

தெரிந்த உருவம்! தெரியாத மனது!! Empty தெரிந்த உருவம்! தெரியாத மனது!!

Post by கேசவன் Fri Apr 27, 2012 2:29 pm

அந்த பெண்மணிக்கு ஐம்பது வயதிற்கு மேல் இருக்கும் உருவத்தை பார்த்தாலே பெரிய அந்தஸ்தில் உள்ளவர் என்று சொல்லி விடலாம் சில நிமிடம் பேச்சி கொடுத்தாலே அந்த பெண்மணியின் அறிவு கூர்மை நம்மை வியக்கவைத்து விடும் அவர் மற்றவரை பார்ப்பதே ஒரு வித ராஜ பார்வை போல் இருக்கும். நான் யாரையும் ஆட்சி படுத்துவேனே தவிர யாருடைய அதிகாரத்திற்கும் அடிபணிய மாட்டேன் என்று சொல்லாமல் சொல்வது போல் அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருக்கும் அதற்காக அவரை அடங்கா பிடாரி என்று சொல்லிவிடவும் முடியாது அதிகாரம் கலந்த அன்பு மொழியே அவரிடமிருந்து வெளிவரும்.

அவர் என்னை காண மூன்று மாதமாக கஷ்டப்பட்டு முன்னனுமதி பெற்றிருந்தார் அன்று ஞாயிற்று கிழமை பார்வையாளர்கள் சற்று அதிகம் ஆனாலும் இவர் என் முன்னால் வந்து அமர்ந்ததும் எனக்காக நீங்கள் சற்று அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்றார் சரி பார்க்கலாம் என்னை காண வந்த காரணம் என்ன என்று அவரிடம் கேட்டேன். மிக நீண்ட பெருமூச்சி அவரிடமிருந்து வெளிவந்தது எந்த குறையை சொல்வது என்று தெரியவில்லை சுவாமி என் வாழ்வில் எல்லாமே குறையாக இருக்கிறது என்று மிகவும் சலிப்போடு சொன்ன அவர் தனது நிலைமையை என்னிடம் விளக்கலானார்.

சுவாமி நான் பிறந்தது செங்கோட்டை எனது தகப்பனார் மிகவும் வசதி படைத்தவர் பரம்பரை பரம்பரையாக எங்களுக்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உண்டு கேரளாவில் ரப்பர் தோட்டம், தேயிலை தோட்டம் என்று ஏராளமான வருவாய்க்கான வழிகள் உண்டு இதுவுமில்லாமல் சொந்தமாக சக்கரை ஆலை, நூலாலை, அரிசி ஆலை என்று என் தகப்பனாரின் தொழில் நீண்டுகொண்டே போகும் நானும் என் தம்பியும் தான் அவருக்கு பிள்ளைகள் என் தம்பி என்னை விட பதினைந்து வயது சிறியவன் ஒருவகையில் அவனுக்கு நான் அக்கா மட்டுமல்ல தாயும் கூட காரணம் அவன் பிறந்த வீட்டிலேயே என் தாயார் காலமாகி விட்டார் எங்கள் இருவரின் நலத்தையும் முன்னிட்டு என் தகப்பனார் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வில்லை.

எங்கள் வீடு மிக பெரியது சொந்த பந்தங்கள் என்று எப்போதும் நிறைய மனிதர்கள் கூடி இருப்பார்கள் எங்கள் வீட்டில் எத்தனை வேலைக்காரர்கள் என்று எனக்கே தெரியாது கஷ்டமென்றால் என்ன? எதற்க்காக அழுகிறார்கள்? என்பது கூட அப்போது எனக்கு தெரியாது எனக்கு தெரிந்தது எல்லாம் என் தம்பியும் அப்பாவும் தான் என் தம்பியை எனக்கு மிகுவ்ம் பிடிக்கும் அவன் நிற்கும் போது நடக்கும் போது பேசும் போது எனக்குள் பொங்கி வரும் சந்தோசத்திற்கு அளவே கிடையாது. இளம்வயதில் என்னை அழகு படுத்துவதில் செலுத்திய கவனத்தை விட அவனை அலங்காரம் செய்து பார்ப்பதில் தான் அதிக நேரம் செலவிடுவேன்.

இந்த வேளையில் அப்பா எனக்கு மாப்பிளை பார்க்க ஆரம்பித்தார் கல்யாணம் முடிந்தால் புருஷன் வீட்டுக்கு போய்விட வேண்டும். அப்படி போன பிறகு தம்பியை எப்படி பார்க்க முடியும் அவனை பார்க்காமல் என்னால் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. அப்படி இருப்பதை எண்ணி பார்ப்பதற்கே எனக்கு தைரியமில்லை அதனால் அப்பாவிடம் எனக்கு திருமணம் வேண்டாம் நான் திருமணம் செய்து கொண்டு தான் ஆக வேண்டுமென்றால் வீட்டோடு மாப்பிளையை பாருங்கள் இல்லை என்றால் எனக்கு திருமணம் நடத்துவதை பற்றிய சிந்தனையையே விட்டு விடுங்கள். என்று சொன்னேன் அவர் என் நிலைமையை புரிந்து கொண்டார். நான் எதிர்பார்த்த படி மாப்பிளை தேட ஆரம்பித்தார்.

இந்த நிலையில் எங்கள் வீட்டில் மேனஜராக வேலை செய்தவரின் மகனையே எனக்கு மாப்பிளையாக அப்பா முடிவு செய்தார். என் கணவருக்கு வசதி வாய்ப்பு இல்லையே தவிர நல்ல அறிவும் படிப்பும் அமைந்திருந்தது. அமைதியானவர் அதிர்ந்து கூட எதையும் பேசமாட்டார். தூரத்து உறவும் கூட அவர் இதையெல்லாம் பார்த்து நானும் சம்மதம் சொன்னதனால் என்னுடைய இருபதாம் வயதில் திருமணம் நடந்தது. ஐந்து வருடங்கள் கனவுலகில் சஞ்சாரம் செய்தது போல தான் என் வாழ்க்கை இன்பகரமாக இருந்தது அதன் பிறகு திடீர் என்று ஒரு சாலை விபத்தில் என் தகப்பனார் இறந்து போனவுடன் தான் என் சோதனை காலம் ஆரம்பமானது.

எனது கணவர் அதுவரை அமைதியாக இருந்தது அவரது நிஜ சுபாவம் அல்ல அவருக்குள் குமிறி கொண்டிருந்த எரிமலையின் சாம்பலே அமைதியின் வடிவம் என்பதை புரிந்து கொண்டேன் தம்பியோ சிறியவன் நானோ பெண் எல்லா நிர்வாகத்தையும் அவர்தான் பார்த்தாக வேண்டும் இதனால் அவருக்கு வேலை பளு ஏற்பட்டதோ இல்லையே கர்வம் தலைக்கேறி விட்டது. மது, மாது, சூது என்று அவர் சகவாசம் விரிய ஆரம்பித்தது சில சொத்துக்களை தனது பெயரில் பவர் வாங்கி கொண்டு விற்கவும் ஆரம்பித்தார். இதை நான் தட்டி கேட்டால் என்னிடம் கொடுமையாக நடக்கவும் ஆரம்பித்தார் அதுவரை என் வாழ்வில் அப்படி யாருமே என்னிடம் நடந்தது கிடையாது. ஒரு சுடு சொல் கூட வாங்கி பழக்கமில்லாதவள் நான் காட்டிய கணவனின் காட்டு மிராண்டி தனத்தை தாங்க முடியாமல் துடித்தேன்.

அவர் முரட்டு தனம் என்னோடு மட்டும் நின்றிருந்தால் பரவாயில்லை சகித்து கொண்டு வாழ்க்கையை நடத்தியிருப்பேன் ஆனால் அவர் என் தம்பியையும் பதம்பார்க்க ஆரம்பித்து விட்டார் அவன் பள்ளியில் சிறிய தவறுகள் செய்வதை அறிந்தால் கூட மிக கடினமாக தாக்குவார் ஒருநாள் இவன் ஒழிந்தால் தான் எனக்கு நிம்மதி என்று பேசினார் அப்படி அவர் பேசியது சாதாரண வார்த்தையாக எனக்கு படவில்லை சொத்துக்காக தனது ஆடம்பர வாழ்க்கைக்காக எதையும் செய்ய துணிவார் என்பது நான் அறிந்தது அதனால் இனியும் அவரோடு வாழ்க்கை நடத்தினால் என் ஒரே தம்பியின் எதிர்காலமே சூனியமாகிவிடும் என்று முடிவு செய்து அவரை விவாகரத்து செய்ய விரும்பி என் குடும்ப வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்டேன்.

என் கணவரின் நடவடிக்கையை வழக்கறிஞரும் நன்றாக அறிந்திருந்தார் எனவே என் முடிவை அவர் வரவேற்று அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார் ஒரு நாள் என் கணவரிடமிருந்து மணவிலக்கும் பெற்றேன் எனக்கு சந்தோசமாக இருந்தது இனி என் தம்பியை என் விருப்படி பாதுகாப்போடும் அன்போடும் வளர்க்கலாம் என்ற தைரியம் பிறந்தது மீதமிருந்த சொத்துகளின் நிர்வாகத்தை நானே கவனித்தேன் தம்பியை நன்றாக படிக்க வைத்தேன் அவனும் கற்பூர புத்தியோடு படிப்பில் முன்னேறினான் என் வார்த்தையை அவன் தட்டியதே கிடையாது. அவன் படித்து முடித்தவுடன் அவனுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து மணமுடித்து வைக்க விரும்பினேன்.

நான் வசதி படைத்த குடும்பத்தில் ஒரே மகளாக பிறந்தாலும் எனது கணவர் பிறப்பால் ஏழை இதனால் அவருக்கு பணத்தின் மீதும் ஆடம்பர வாழ்க்கையின் மீதும் மோகம் இருந்தது அதனாலேயே அவர் பல தவறுகளை செய்து என்னையும் துன்பபடுத்தினார் அதனால் என் தம்பிக்கு வசதி படைத்த குடும்பத்தில் பெண்ணெடுத்தால் அவளுக்கு பணத்தின் மீது மோகம் இருக்காது தம்பியின் மீது அன்புமட்டுமே இருக்கும் என்று முடிவு செய்து பணம் படைத்தவர் குடும்பத்தில் உள்ள நல்ல பெண்களை தேட ஆரம்பித்தேன் கடேசியில் திண்டுக்கல் பக்கத்தில் நல்ல வசதி உள்ள ஒருவரின் மகளை திருமணம் பேசி முடித்தேன் என் தம்பி அக்கா அவளை பார்த்தால் அடங்கி போகின்ற பெண்ணாக தெரியவில்லை வேறு பெண் பார்ப்போம் என்றான் உனக்கு ஒன்றும் தெரியாது எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் என்று திருமணத்தை நடத்தினேன்.

திருமணம் முடிந்து விளக்கேற்ற வீட்டுக்கு வந்த மருமகள் ஒரே மாதத்தில் தனது குணத்தை காட்ட ஆரம்பித்து விட்டாள் எதெற்கெடுத்தாலும் குற்றம் குறை சண்டை சச்சரவு அழுகை என்று ஆரம்பித்த அவள் ஒவ்வொரு நாளும் என் தம்பிக்கு புதுபுது பிரச்சனைகளை கொடுத்தாள் குழந்தை ஒன்று பிறந்தால் அவள் மன நிலை மாறிவிடும் என்று நினைத்தேன் ஆனால் கடவுள் ஏனோ ஆண்டுகள் இரண்டு ஆகியும் குழந்தையை கொடுக்கவே இல்லை தனக்கு குழந்தை இல்லாததற்கு கணவன் தான் காரணம் என்று அவள் நினைத்து மீண்டும் மீண்டும் சண்டை வளர்க்க ஆரம்பித்தாள் ஒரு கட்டத்தில் உன் அக்கா இந்த வீட்டில் இருந்தால் நான் உன்னோடு குடும்பம் நடத்த மாட்டேன் முதலில் அவர்களை வெளியேற்று என்று கணவனிடம் நச்சரிக்க ஆரம்பித்தாள்.

என் தம்பி இதை என்னிடம் காட்டிக்கொள்ளவே இல்லை தன் மனதிற்குள்ளேயே போட்டு எல்லாவற்றையும் மறைத்து விட்டு என்னிடம் சிரித்து பேசினான் ஆனால் நாளடைவில் அவள் என்னிடமே நேரில் வாழாவெட்டியான நீ இந்த வீட்டில் இருந்தால் எனக்கு குழந்தை பிறக்காது நானும் சந்தோசமாக வாழமுடியாது என்று சொல்ல ஆரம்பித்தாள் நானும் யோசித்தேன் ஒருவேளை நாம் விலகி இருந்தால் தம்பியோடு ஒழுங்காக குடித்தனம் நடத்துவாளோ என்று எண்ண ஆரம்பித்து எங்களுக்கு சொந்தமாக சென்னையில் உள்ள ஒரு வீட்டில் தங்க போய்விட்டேன் தம்பியை பார்க்காமல் ஒவ்வொரு வினாடியும் துடியாய் துடித்தேன் ஆனாலும் அவன் நழ்வாழ்வை மனதில் வைத்து பிரிவை தாங்கி கொண்டேன்.

தம்பியை காணாமல் அக்கா துன்ப படுவது தம்பிக்கு தெரியாமலா இருக்கும் தானாடாவிட்டாலும் சதையாடும் என்பார்களே அதே போல என் தம்பி என்னை தேடி வந்து வீட்டுக்கு அழைத்தான் நீ இல்லாமல் என்னால் அங்கு இருக்கவே முடியாது நீ வந்துவிடு என்று வலுகட்டாய படுத்தினான் நான் மறுத்துவிட்டேன் அரைகுறை மனதோடு அவன் போய்விட்டான் சிறிது நாட்கள் போனால் எல்லாம் சரியாகிவிடும் என்று அமைதியாக இருந்தேன் அந்த அமைதி வெகு நாட்கள் நீடிக்கவில்லை சில மாதங்களிலேயே கடும் சூறாவெளி அடிக்க துவங்கியது

ஒரு நாள் காலையில் தம்பியிடம் இருந்து தொலைபேசி வந்தது அக்கா நீ உடனே புறப்பட்டு வா இங்கே என் மனைவி கோரதாண்டவம் ஆடிகொண்டிருக்கிறாள் அவளுக்கு துணையாக அவள் வீட்டார் அனைவரும் இங்கே நம் வீட்டில் வந்து சூழ்ந்து கொண்டார்கள் எல்லா சொத்தையும் மனைவியின் பெயரில் எழுதி வைக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். என்றான் நீ தைரியமாக இரு கவலைபடாதே எல்லாம் சில நாளில் சரியாகி விடும் என்று அவனுக்கு ஆறுதல் சொன்னேனே தவிர அவன் கூப்பிட்ட படி நான் வீட்டுக்கு போகவில்லை ஒருவேளை நான் போயிருந்தால் நிலைமை வேறு விதமாக மாறியிருக்கும்

என் தலையிலே கல்லை தூக்கி போட்ட அந்த செய்தி அடுத்தவாரமே வந்தது எங்கள் தேயிலை தோட்டத்தில் தொழிலார்கள் மத்தியில் நடந்த தகராறு ஒன்றை தீர்த்து வைக்க தம்பி போனபோது அவனை சிலர் தாக்கி கொலைசெய்து விட்டார்கள் என்ற செய்தி பேரிடியாக தலையில் இறங்கி வேரற்ற மரம் போல என்னை ஆக்கியது இன்றுவரை நான் அனுபவித்து வரும் அந்த கஷ்டம் இனி எந்த நாளும் விலகபோவதே இல்லை கண்ணுக்கு கண்ணாக வளர்த்த என் அருமை தம்பி யாரோ சில பேரின் சமமானதே இல்லாத தகராறில் உயிரை பறி கொடுத்து விட்டான் இத்தனைக்கும் அவன் மனைவி எந்த கவலையும் அடைந்தது போல் தெரியவில்லை தனது கணவனின் சொத்து தன்னை விட்டு போகாமல் இருக்க வேண்டும். என்பதில் குறியாக இருந்தாளே தவிர அவன் மறைவை பற்றி நினைத்து கூட பார்க்கவில்லை.

அதனால் தான் எனக்கொரு சந்தேகம் வந்தது என் தம்பி இறந்தது தொழிலாளி மத்தியில் நடந்த சண்டையால் தானா அல்லது வேறு யாராவது சூழ்ச்சி செய்து திட்டமிட்டு அவனை கொன்று விட்டார்களா? என்று புரியவில்லை நான் இழந்த தம்பியை மீண்டும் பெற முடியாது போலீஸ்காரர்களும் விசாரித்து முடிவுக்கு வராமல் விட்டு விட்டார்கள் என் மனம் விட மறுக்கிறது என் குலகொளுந்தை கொன்றவர்கள் யார் எதற்க்காக கொன்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை தயவு செய்து நீங்கள் அவனது ஆவியை அழைத்து விவரங்களை கேட்டு சொன்னால் என் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்று கண்ணீரோடு தனது கதையை சொல்லி முடித்தார்கள்

அவர்களுக்கு நான் சொன்ன பதிலும் அதனால் அவர்கள் பெற்ற தீர்வும் இந்த இடத்திற்கு தேவையில்லை ஆனால் ஒரு மனிதனின் உருவ தோற்றத்திற்கும் அவனுக்குள் பொங்கி பிரவாகமா வழிந்து கொண்டிருக்கும் பிரச்சனைக்கும் சம்மந்தமே இல்லை அந்த பெண்மணியின் கம்பீரமான தோற்றத்திற்கும் அவர் வாழ்க்கை போராட்டத்திற்கும் எண்ண சம்மந்தம் இருக்கிறது மனிதர்களை தேர்வு செய்வதில் செய்கின்ற தவறுகள் பலரது வாழ்க்கையை எந்த அளவு மாற்றி விடுகிறது. என்பதையெல்லாம் அவர் வாழ்க்கையில் இருந்து நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் நமது எண்ணம் மட்டுமே சரியாக இருக்கும் என்று மற்றவர்களின் ஆலோசனையை கேட்காமல் நடப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவரது வாழ்க்கை எனக்கு சிறந்த பாடத்தை தந்ததால் மட்டுமே இதை உங்கள் முன்னால் பதிவு செய்கிறேன்.

http://www.ujiladevi.blogspot.com/2012/04/blog-post_27.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்த உருவம்! தெரியாத மனது!! 1357389தெரிந்த உருவம்! தெரியாத மனது!! 59010615தெரிந்த உருவம்! தெரியாத மனது!! Images3ijfதெரிந்த உருவம்! தெரியாத மனது!! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தெரிந்த உருவம்! தெரியாத மனது!! Empty Re: தெரிந்த உருவம்! தெரியாத மனது!!

Post by யினியவன் Fri Apr 27, 2012 2:41 pm

தங்கத்தின் தரம் உரசிப் பார்த்தால் தான் தெரியும்ன்னு சொல்ற மாதிரி மனிதனின் குணமும் அப்படித் தான்.

மனிதனை உரசிப் பார்க்கையில் தங்கத்தை உரசுகையில் சேதாரம் ஏற்படுவதுபோல் நாம் மனதிலும் நீங்கா சேதாரம் ஏற்பட்டு விடுவதை தவிர்க்க முடிவதில்லை.

நல்ல பகிர்வுக்கு நன்றி கே7.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum