புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
21 Posts - 70%
heezulia
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
1 Post - 3%
viyasan
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
213 Posts - 42%
heezulia
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
21 Posts - 4%
prajai
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
7 Posts - 1%
mruthun
கர்வம் அழிந்தது. Poll_c10கர்வம் அழிந்தது. Poll_m10கர்வம் அழிந்தது. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்வம் அழிந்தது.


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Apr 27, 2012 11:45 am


நான் மறையைக் கற்றவனல்ல ஞானி!
நான் மறையக் கற்றவனே ஞானி!

என்பது முதுமொழி.

நான் என்னும் அகந்தையையின்றி வாழ்வது எல்லோராலும் இயலாதவொன்றாகும். இருந்தாலும் அவ்வாறு இருக்க முயல்பவர்கள் தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளக் கூடத்தேவையில்லை. எல்லோரும் அவர்களை ஞானி என்றுதான் உணர்வார்கள்.கதை ஒன்று…………



அறிஞன் ஒருவன் இருந்தான் அவனுக்கு தான் மிகவும் அறிவாளி என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. யாராக இருந்தாலும் அவர்களை கேள்வி கேட்டே மடக்கிவிடமுடியும் என்று தன்மீது மிகுந்த கர்வம் கொண்டிருந்தான்.

இவன் கர்வத்தை அழிப்பதற்காகவே காலம் ஒரு சூழலை உருவாக்கித்தந்தது.

ஒருநாள் கிராமத்தின் வழியே சென்றுகொண்டிருந்த அறிஞன், அவ்வழியில் மாடுமேய்த்துக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தான். நல்ல அறிவாளிகளே நான் கேள்வி கேட்கிறேன் என்றால் பேரச்சம் கொள்வார்கள். இவன் படிப்பறிவில்லாதவன் இவன் தன்கேள்விகளுக்கு அஞ்சுவதைப் பார்த்து இரசிக்கவேண்டும் என்று விரும்பினான்.

அறிஞன் : உன்னிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன்.

மாடு மேய்க்கும் இளைஞன் : (தயக்கமே இன்றி) கேளுங்கள்……..


அறிஞன் : (என்னடா இது அறிஞர்களே அஞ்சும் தன்னிடம் இவன் எந்த அச்சமுமின்றி கேள்வி கேளுங்கள் என்கிறானே! என்ற கேள்வியுடன்…)

1. “உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?

மாடு மேய்க்கும் இளைஞன் : சூரிய ஒளி! அதற்கு மேற்பட்ட ஒளியே இல்லையே!

அறிஞன் : 2.உலகின் சிறந்த நீர் எது?

மாடு மேய்க்கும் இளைஞன் : கங்கை நீர்! சிவன் தலையிலிருந்தும். விட்ணுவின் பாதத்திலிருந்தும் வந்து அதில் மூழ்கியவர்களுக்கு வீடுபேறளிக்கும கங்கை நீரைவிட சிறந்த நீர் வேறென்ன இருக்கமுடியும்?

அறிஞன் : 3. உலகின் சிறந்த மலர் எது?

மாடு மேய்க்கும் இளைஞன் : தாமரை மலர்! தேவதேவியரும் வீற்றிருக்கும் மலரை விட சிறந்த மலர் வேறேது? என்றான்..


அறிஞன் : ( இவனை படிப்பறிவில்லாதவன் வெறுங்குடம் என்றல்லவா எண்ணினேன். இவன் நிறைகுடம் என்று தெளிந்தான் அறிஞன்… ) உன் அறிவை மெச்சுகிறேன் இந்தா என்னுடைய விலையுயர்ந்த முத்துமாலை என்று பரிசளித்தான்…..

மாடு மேய்க்கும் இளைஞன் : (அறிஞனின் மிச்சம் மீதியிருக்கும் கர்வத்தையும் சம்மட்டியால் அடித்து நீக்க எண்ணி…) ஐயா நான் இந்தப் பரிசுக்குத் தகுதியல்லாதவன் அதனால் வேண்டாம். ……….

ஏனென்றால் நான் சொன்ன பதில்கள் மூன்றும் தவறானது..

அறிஞன் : (திகைத்து நின்ற அறிஞன் பேச்சின்றி விழித்தான்) என்னப்பா சொல்கிறாய் இதற்கு மேலும் இந்தக் கேள்விக்கு வேறு பதிலே இல்லையே!

மாடு மேய்க்கும் இளைஞன் : ஐயா…

1. சூரிய ஒளி சிறந்தது தான் இருந்தாலும் அந்த ஒளியைப் பார்ப்பதற்குக்கூட நம் கண்ணில் ஒளி வேண்டும்.. அதனால் கண்ணொளி சூரிய ஒளியைவிட உயர்வானது.

2. கங்கை நீர் புனிதமானது தான்.. இருந்தாலும் அதனை எல்லா நாட்டினரும், சமயத்தாரும் ஏற்பார்களா? அதனால்…..
தாகத்தோடு இருக்கும் ஒருவனுக்கு…..

கிடைக்காத கங்கை நீர் - கிடைத்த சிறிதளவு நீர்

என ஒப்பிட்டு நோக்கினால் கங்கை நீரை உயர்வானது எனக் கருதமுடியாது.

3. தாமரை மலருக்குப் பல சிறப்புகள் இருந்தாலும். நீரைவிட்டு வெளியே எடுத்தால் தாமரை வாடிவிடும்.. உண்மையில் மலர்களில் சிறந்தது பருத்திமலர்தான். அதிலிருந்து கிடைக்கும் நூலில் நெய்யப்படும் ஆடைகள் மக்களின் மானத்தையல்லவா நாள்தோறும் காக்கிறது. பருத்திமலரை விடத் தாமரை எந்த விதத்தில் மக்களுக்குப் பயன்டும் சிறந்த மலராகமுடியும்?


அறிஞன் : (தன் கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில் தலை தாழ்த்தி உண்மையை ஏற்றுக்கொண்டு விடைபெற்றான்)


இந்தக் கதையில் கேட்ட கேள்விக்கான பதில்கள் சரி - தவறு என்று நாம் சிநத்திப்பதைவிட….

அந்த அறிஞனின் கர்வத்தை அழிக்கும் ஆயுதமாக இந்த பதில்கள் அமைந்தன என்று சிந்திப்பது மிகவும் சரியான புரிதாலாக இருக்கும்.

http://gunathamizh.blogspot.com/2010/09/blog-post_9804.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 12:00 pm

நான் மறையைக் கற்றவனல்ல ஞானி!
நான் மறையக் கற்றவனே ஞானி!


சூப்பர் முகைதீன் - முதுமொழியும் கதையும் அருமை.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக