Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் ஒரு இனிய சந்திப்பு !
+19
hega
முரளிராஜா
dhilipdsp
அசுரன்
ரா.ரா3275
சிங்கம்
இரா.பகவதி
பிரசன்னா
balakarthik
ராஜா
மகா பிரபு
தர்மா
கே. பாலா
ஹர்ஷித்
பாலாஜி
யினியவன்
பிஜிராமன்
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
23 posters
Page 2 of 12
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
கோவையில் ஒரு இனிய சந்திப்பு !
First topic message reminder :
அன்புள்ள உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்கள் கடந்த ஏப்ரல் 23 ம் திகதி நான் கோவை நகருக்கு ஒரு சொந்த நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். போன மாதமே இதுகுறித்து நான் தம்பி பகவதியிடம் ஆலோசித்தேன். நான் இரண்டு நாட்கள் கோவையில் தங்குவதால், அச்சமயத்தில் நமது ரபீக் தம்பியை போய் பார்த்துவருவது என்று முடிவுசெய்தோம். பகவதியும், ரபீக் அவர்கள் மைசூரில் இருந்து மீண்டும் கோவையில் இரண்டாம் முறை ஹெமோதெரபிக்காக வந்திருப்பார், ஆகவே அப்போது பார்க்க இயலும் என்று கூறினார்.
ஆயினும் நடந்ததோ வேறு....இப்போது அன்னார் நம்மிடையே இல்லை எனினும் முன்பே குறித்தபடி நான் கோவை சென்றேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து நான் செல்கிறேன். எனது கால் முறிவு சரியாகிவிட்டது, இனிமேல் நான் சிற்றுந்துவை ஓட்டலாம் என்று எனது மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். எனவே பெங்களூர்ல் இருந்து எனது வேகனார் வண்டியிலேயே சென்றோம். கர்நாடகத்தை கடப்பதற்க்கு முன்பே தம்பி இராமனை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆயினும் தொடர்புகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட சேலம் தாண்டி சங்ககிரியை அடையும் பொழுது இராமனிடம் அலைபேசித்தொடர்பு கிடைத்தது. அவரிடம் விபரம் சொன்னேன். இப்போது விடுமுறை ஆதலால் அவர் அவரின் சொந்த ஊரில் இருப்பதாகத் தெரிவித்தார். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அவனாசி நகரத்தை கடந்து செல்வேன், வந்து என்னை சந்திக்க முடியுமா என்று இராமனிடம் கேட்டேன். அவனாசியில் இருந்து அவர் ஊர் வெறும் ஏழு கல் தொலைவுதான் என்பதால் அவ்வாறு கேட்டேன். ஆயினும் அவரோ.....இல்லை ஐயா....நான் உங்களை கோவையிலேயே வந்து சந்திக்கிறேன் என்று கூறினார். அதன்படி, கோவையில் நான் எப்போதும் தங்கும் “ கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதியில்” சந்திப்பது என்று முடிவு செய்தோம்.
இடையில் பகவதியோ, “அய்யா எங்குள்ளீர்கள்? எப்போது கோவை வந்து சேருவீர்கள்” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். மாலை ஆறு மணியளவில் கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதிக்கு வந்துவிடுங்கள் என்றேன். நாங்கள் கோவையை ஐந்து மணியளவில் வந்தடைந்து விடுதியில் தங்கினோம். தம்பி இராமன் தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு கோவை வந்தடைந்து தம்பி பகவதியையும் சேர்த்து கூட்டிக்கொண்டு ஏழரை மணியளவில் நான் தங்கியுள்ள விடுதிக்கு வந்து சேர்ந்தார். இடையில் மேகமூட்டத்துடன், சுழல்காற்றும் சாரலும் சேர்ந்து கொண்டதால் வீரகேரளம் என்ற கிராமத்தில் இருந்த ஆராய்ச்சி நிலைய விடுதியை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்ததாம்.
எப்படியோ, ஈகரை உறவுகள் மூன்றுபேர் கோவையில் சந்தித்தோம். தம்பி எம்.ஆர். கார்த்திக், தேர்வின் காரணமாக வர இயலவில்லை. எங்களுடன் என் மனைவியும் சேர்ந்துகொண்டார். மூன்று நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று சொல்வதைவிட, நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு. (பகவதியும், இராமனும் என்ன நினைத்தார்களோ என்பதை அவர்களே இந்தத் திரியில் பின்னுட்டமாக தெரிவிப்பார்கள்)
சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு இரவு உணவு உண்டோம். இந்த விடுதியில் உணட்வைப் பொறுத்தவரை வீட்டுச் சாப்பாடு போல்தான் தயாரிப்பார்கள். அதன் தரம் குறித்து நம்ம பகவதியும் இராமனும் தெரிவிப்பார்கள். உணவு முடிந்தவுடன் எனது அறைக்கு வந்தமர்ந்து பேச ஆரம்பித்தோம். முதலில் இரபீக் அவர்களின் மறைவு, அடிக்கடி பகவதி சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி உதவி செய்ததைக்குறித்து நான் பேசினேன்.
பின்பு எங்களின் கவனம் நமது ஈகரை உறவுகள் பக்கம் திரும்பியது. தினமும் ஈகரியில் வந்துபோகிற அனைவரைக் குறித்தும் பேசினோம். என்னென்ன பேசினோம் என்ற விபரம் எல்லாம் விரிவாகச் சொல்ல முடியாது இந்தத் திரியில். ஆயினும் கிழ்கண்ட புகைப்படத்தை நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் அப்போது நம்ம “கொலவெறியைக்” குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
எல்லோரையும் குறித்து பேசிமுடித்த பின்பு எங்களின் கவனம் கவிதைகளின் பக்கம் திரும்பியது. கிட்டத்தட்ட, இரண்டுமாதமாகவே வேலைப்பளுவின் காரணமாக நான் கவிதைகள் எதையும் எழுதவில்லை என்பதையும், அந்த நிலையை மாற்றவேண்டும் என்றும் பேசினோம். நின்றுபோய் இருக்கும் “பொழுதைக் கழிக்க ஓர் வழி” என்ற திரியை மீண்டும் துவக்கிட முடிவு செய்தோம். கிட்டத்தட்ட அதே நிலைமைதான் நம்ம இராமனுக்கும். தேர்வுகள், புராஜெக்ட் வேலைகள் காரணமாக அவரின் கவிதை பதிவுகளும் ஈகரையில் குறைந்து விட்டது. இந்த சந்திப்பில் மிக மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், நம்ம பகவதி என்னிடம் “ ஐயா, உங்களிடம் நான் வெண்பா கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கும் சொல்லித்தாருங்கள்” என்றதுதான். நிச்சயமாக, உடனே பாடத்தை ஆரம்பித்துவிடலாம் என்று அவரிடம் மகிழ்வுடன் சொன்னேன்.
இரவு பத்தரை மணி ஆகிவிட்டது. மின்சாரம் நின்றுபோய் ஒரே இருட்டாக இருந்தது. தம்பிகள் இருவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். கோவை நகரிலேயே உள்ள அவர்களின் நண்பர்களுடன் தங்கியிருந்து பின் காலையில் எழுந்து அவர்களின் இருப்பிடம் செல்வதாக சொன்னார்கள்.
இவ்வாறாக எங்களின் கோவை சந்திப்பு நிறைவடைந்தது, மிக மிக மன மகிழ்ச்சியுடன்.
தம்பிகள் பகவதியும், இராமனும் அவரவர் கருத்துக்களை, எண்ணங்களை இதே திரியில் பின்னுட்டமாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
அன்புள்ள உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்கள் கடந்த ஏப்ரல் 23 ம் திகதி நான் கோவை நகருக்கு ஒரு சொந்த நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். போன மாதமே இதுகுறித்து நான் தம்பி பகவதியிடம் ஆலோசித்தேன். நான் இரண்டு நாட்கள் கோவையில் தங்குவதால், அச்சமயத்தில் நமது ரபீக் தம்பியை போய் பார்த்துவருவது என்று முடிவுசெய்தோம். பகவதியும், ரபீக் அவர்கள் மைசூரில் இருந்து மீண்டும் கோவையில் இரண்டாம் முறை ஹெமோதெரபிக்காக வந்திருப்பார், ஆகவே அப்போது பார்க்க இயலும் என்று கூறினார்.
ஆயினும் நடந்ததோ வேறு....இப்போது அன்னார் நம்மிடையே இல்லை எனினும் முன்பே குறித்தபடி நான் கோவை சென்றேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து நான் செல்கிறேன். எனது கால் முறிவு சரியாகிவிட்டது, இனிமேல் நான் சிற்றுந்துவை ஓட்டலாம் என்று எனது மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். எனவே பெங்களூர்ல் இருந்து எனது வேகனார் வண்டியிலேயே சென்றோம். கர்நாடகத்தை கடப்பதற்க்கு முன்பே தம்பி இராமனை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆயினும் தொடர்புகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட சேலம் தாண்டி சங்ககிரியை அடையும் பொழுது இராமனிடம் அலைபேசித்தொடர்பு கிடைத்தது. அவரிடம் விபரம் சொன்னேன். இப்போது விடுமுறை ஆதலால் அவர் அவரின் சொந்த ஊரில் இருப்பதாகத் தெரிவித்தார். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அவனாசி நகரத்தை கடந்து செல்வேன், வந்து என்னை சந்திக்க முடியுமா என்று இராமனிடம் கேட்டேன். அவனாசியில் இருந்து அவர் ஊர் வெறும் ஏழு கல் தொலைவுதான் என்பதால் அவ்வாறு கேட்டேன். ஆயினும் அவரோ.....இல்லை ஐயா....நான் உங்களை கோவையிலேயே வந்து சந்திக்கிறேன் என்று கூறினார். அதன்படி, கோவையில் நான் எப்போதும் தங்கும் “ கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதியில்” சந்திப்பது என்று முடிவு செய்தோம்.
இடையில் பகவதியோ, “அய்யா எங்குள்ளீர்கள்? எப்போது கோவை வந்து சேருவீர்கள்” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். மாலை ஆறு மணியளவில் கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதிக்கு வந்துவிடுங்கள் என்றேன். நாங்கள் கோவையை ஐந்து மணியளவில் வந்தடைந்து விடுதியில் தங்கினோம். தம்பி இராமன் தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு கோவை வந்தடைந்து தம்பி பகவதியையும் சேர்த்து கூட்டிக்கொண்டு ஏழரை மணியளவில் நான் தங்கியுள்ள விடுதிக்கு வந்து சேர்ந்தார். இடையில் மேகமூட்டத்துடன், சுழல்காற்றும் சாரலும் சேர்ந்து கொண்டதால் வீரகேரளம் என்ற கிராமத்தில் இருந்த ஆராய்ச்சி நிலைய விடுதியை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்ததாம்.
எப்படியோ, ஈகரை உறவுகள் மூன்றுபேர் கோவையில் சந்தித்தோம். தம்பி எம்.ஆர். கார்த்திக், தேர்வின் காரணமாக வர இயலவில்லை. எங்களுடன் என் மனைவியும் சேர்ந்துகொண்டார். மூன்று நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று சொல்வதைவிட, நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு. (பகவதியும், இராமனும் என்ன நினைத்தார்களோ என்பதை அவர்களே இந்தத் திரியில் பின்னுட்டமாக தெரிவிப்பார்கள்)
சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு இரவு உணவு உண்டோம். இந்த விடுதியில் உணட்வைப் பொறுத்தவரை வீட்டுச் சாப்பாடு போல்தான் தயாரிப்பார்கள். அதன் தரம் குறித்து நம்ம பகவதியும் இராமனும் தெரிவிப்பார்கள். உணவு முடிந்தவுடன் எனது அறைக்கு வந்தமர்ந்து பேச ஆரம்பித்தோம். முதலில் இரபீக் அவர்களின் மறைவு, அடிக்கடி பகவதி சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி உதவி செய்ததைக்குறித்து நான் பேசினேன்.
பின்பு எங்களின் கவனம் நமது ஈகரை உறவுகள் பக்கம் திரும்பியது. தினமும் ஈகரியில் வந்துபோகிற அனைவரைக் குறித்தும் பேசினோம். என்னென்ன பேசினோம் என்ற விபரம் எல்லாம் விரிவாகச் சொல்ல முடியாது இந்தத் திரியில். ஆயினும் கிழ்கண்ட புகைப்படத்தை நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் அப்போது நம்ம “கொலவெறியைக்” குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
எல்லோரையும் குறித்து பேசிமுடித்த பின்பு எங்களின் கவனம் கவிதைகளின் பக்கம் திரும்பியது. கிட்டத்தட்ட, இரண்டுமாதமாகவே வேலைப்பளுவின் காரணமாக நான் கவிதைகள் எதையும் எழுதவில்லை என்பதையும், அந்த நிலையை மாற்றவேண்டும் என்றும் பேசினோம். நின்றுபோய் இருக்கும் “பொழுதைக் கழிக்க ஓர் வழி” என்ற திரியை மீண்டும் துவக்கிட முடிவு செய்தோம். கிட்டத்தட்ட அதே நிலைமைதான் நம்ம இராமனுக்கும். தேர்வுகள், புராஜெக்ட் வேலைகள் காரணமாக அவரின் கவிதை பதிவுகளும் ஈகரையில் குறைந்து விட்டது. இந்த சந்திப்பில் மிக மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், நம்ம பகவதி என்னிடம் “ ஐயா, உங்களிடம் நான் வெண்பா கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கும் சொல்லித்தாருங்கள்” என்றதுதான். நிச்சயமாக, உடனே பாடத்தை ஆரம்பித்துவிடலாம் என்று அவரிடம் மகிழ்வுடன் சொன்னேன்.
இரவு பத்தரை மணி ஆகிவிட்டது. மின்சாரம் நின்றுபோய் ஒரே இருட்டாக இருந்தது. தம்பிகள் இருவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். கோவை நகரிலேயே உள்ள அவர்களின் நண்பர்களுடன் தங்கியிருந்து பின் காலையில் எழுந்து அவர்களின் இருப்பிடம் செல்வதாக சொன்னார்கள்.
இவ்வாறாக எங்களின் கோவை சந்திப்பு நிறைவடைந்தது, மிக மிக மன மகிழ்ச்சியுடன்.
தம்பிகள் பகவதியும், இராமனும் அவரவர் கருத்துக்களை, எண்ணங்களை இதே திரியில் பின்னுட்டமாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !
மிகவும் நன்றி கொலவெறித் தம்பி...என்னைப் பார்த்தா பயப்படும் ஆளாகவா தெரிகிறது ?கொலவெறி wrote:அருமையான பதிவு அய்யா. நாங்களும் உங்களுடன் இருந்த உணர்வைத் தந்தது.
ராமனை முதலில் தொடர்பு கொள்ள முடியாததற்கு காரணம் அவர் கடலை சாகுபடியில் இருந்ததால் தான்.
பகவதியும் சரியான நேரத்தில் வராததற்கும் அதே காரணம் தான். இள ரத்தங்கள் நம் நாட்டை விவசாய நாடென அறிந்து அல்லும் பகலும் அயராது கடலை சாகுபடி செய்கிறார்கள்.
என்னைப் பற்றியும் பேசினேன் என்று சொன்னது மகிழ்வைத் தந்தது. சிவா சொல்ற மாதிரி என்னை போட்டுத் தள்ள பேசி இருந்தாலும் உங்கள் நாவிலும், எண்ணங்களிலும் நான் மின்னி மறைந்தது சந்தோஷமே.
ராமன் சொன்னாரே அம்மா இரவு 9 மணிக்கு உறங்க சென்று விடுவார்கள் என்று - நீங்கள் வெண்பா இயற்றும் சமயம் தானே அது? உங்களோடும் வெண்பாவோடும் மாரடிக்க முடியாது என்று உறங்க சென்று விடுவார்களோ?
படிக்கும் காலத்தில் சரியாக படிக்காமல் போனதால் தங்கள் மகளுடன் சேர்ந்து படிப்பது மிக நல்ல விஷயம் அய்யா.
என்ன ராமன் அய்யாவ ரொம்ப பயமுறுத்தி விடவில்லையே? அடுத்தமுறை நம் உறவுகளை சந்திக்கும் தைரியம் அய்யாவுக்கு இருக்கும்ல?
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !
மிகவும் இனிமை! மீண்டும் பள்ளிக்கு போகலாம் நம்மை நாம் அங்கு தேடலாம் என்ற பாட்டு வாய் மூனு முணுத்தது
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !
மிக்க மகிழ்ச்சி ஐயா . நெகிழ்ச்சியான தருணமிது. மீண்டும் மீண்டும் இதுபோல நிகழ வேண்டும் என்பதே என் ஆவல்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !
சிவா அண்ணனின் கலாய்ப்பு மிகவும் அருமை.
பகவதி வெண்பா கத்துக்க வேண்டும் என நினைப்பது மிகவும் நல்ல நகைச்சுவை..
பகவதி வெண்பா கத்துக்க வேண்டும் என நினைப்பது மிகவும் நல்ல நகைச்சுவை..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !
ஆஹா .. படிப்பதற்கே மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஈகரை உறவுகள் எழுத்தில் மட்டுமல்ல இதயங்களிலும் அதே பாச உணர்வோடு தான் பழகுகிறார்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.
நானும் நேரில் கலந்துகொண்டது போல உணர்கிறேன்.
இது சும்மா தமாசுக்கு:- ஐயாவையும் , ரெண்டு சிஷ்யர்களையும் பார்ப்பதற்கு தமிழ் சினிமா வில்லன் & கோ போல இருந்தது. அதனால் இப்படி ஒரு கற்பனை.
http://imageshack.us/content_round.php?page=done&l=img502/5930/51889078.jpg
நானும் நேரில் கலந்துகொண்டது போல உணர்கிறேன்.
இது சும்மா தமாசுக்கு:- ஐயாவையும் , ரெண்டு சிஷ்யர்களையும் பார்ப்பதற்கு தமிழ் சினிமா வில்லன் & கோ போல இருந்தது. அதனால் இப்படி ஒரு கற்பனை.
http://imageshack.us/content_round.php?page=done&l=img502/5930/51889078.jpg
Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !
ராஜா இன்னிக்கு செம மூடில் இருக்கற மாதிரி தெரியுதே?
அருமையான கற்பனை அல்லாத உரையாடல் - இதத் தான் மனசுக்குள்ள நெனச்சிருப்பாங்க.
அருமையான கற்பனை அல்லாத உரையாடல் - இதத் தான் மனசுக்குள்ள நெனச்சிருப்பாங்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !
பகிர்விர்க்கு நன்றி
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !
ராஜா wrote:ஆஹா .. படிப்பதற்கே மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஈகரை உறவுகள் எழுத்தில் மட்டுமல்ல இதயங்களிலும் அதே பாச உணர்வோடு தான் பழகுகிறார்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.
நானும் நேரில் கலந்துகொண்டது போல உணர்கிறேன்.
இது சும்மா தமாசுக்கு:- ஐயாவையும் , ரெண்டு சிஷ்யர்களையும் பார்ப்பதற்கு தமிழ் சினிமா வில்லன் & கோ போல இருந்தது. அதனால் இப்படி ஒரு கற்பனை.
http://imageshack.us/content_round.php?page=done&l=img502/5930/51889078.jpg
அண்ணா நல்ல கற்பனை, எங்கள வில்லன் குரூப்நு சொல்லி, உங்களையும் போட்டு தள்ளும் படி பண்ணிட்டீங்களே...
அருமை அண்ணா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கோவையில் ஒரு இனிய சந்திப்பு !
உண்மையில் உங்க மூவரையும் இந்த புகைபடத்தில் பார்ப்பதற்கு ஏதோ திட்டம் தீட்டுவது போல தான் தெரிகிறதுபிஜிராமன் wrote:அண்ணா நல்ல கற்பனை, எங்கள வில்லன் குரூப்நு சொல்லி, உங்களையும் போட்டு தள்ளும் படி பண்ணிட்டீங்களே... அருமை அண்ணா
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
Similar topics
» தோழர் திரு காஸ்யபனுடன் இனிய சந்திப்பு
» கோவை ஷிவா அவர்களுடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு
» அழகு ஹரிணி அவர்களுடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..
» நம் ஈகரை வியாபாரி ஷெரின் உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு
» நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..
» கோவை ஷிவா அவர்களுடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு
» அழகு ஹரிணி அவர்களுடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..
» நம் ஈகரை வியாபாரி ஷெரின் உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு
» நம்ம அழகு தேவதை நிலாசகி உடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..
Page 2 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|