Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி
Page 1 of 1
கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி
கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை விடுவிப்பதற்கான `கெடு' முடிந்ததால் நேற்று பதற்றம் அதிகரித்தது. கலெக்டரை மீட்பதற்காக, மாவோயிஸ்டுகள் - அரசு பிரதிநிதிகளுக்கு இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 வயதான ஐ.ஏ.எஸ். அதிகாரியான அலெக்ஸ் பால்மேனன், சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
மாவோயிஸ்டுகள் `கெடு'
குக்கிராமம் ஒன்றில் நடந்த மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, கடந்த சனிக்கிழமையன்று மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் கலெக்டர் அலெக்ஸ் கடத்தப்பட்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், கலெக்டரின் பாதுகாவலர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடத்தப்பட்ட கலெக்டரை விடுவிப்பதற்கு, சிறையில் இருக்கும் 8 தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 நிபந்தனைகளை மாவோயிஸ்டுகள் விதித்து இருந்தனர். கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, 25-ந் தேதி (நேற்று) வரை அவர்கள் `கெடு' விதித்து இருந்தனர்.
மாவோயிஸ்டுகளின் நிபந்தனைகளை ஏற்று, தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை (`பசுமை வேட்டை') உடனடியாக நிறுத்த சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி ராமன்சிங் உத்தரவிட்டார். மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவையும் அவர் அமைத்தார்.
ஹெலிகாப்டரில் மருந்துகள்
அதைத் தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட தூதுக்குழு அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள கலெக்டரின் உடல்நிலை மோசம் அடைந்ததால், அவருக்கு தேவையான மருந்துகளை கொடுத்து அனுப்பும்படியும் மாவோயிஸ்டுகள் தகவல் அனுப்பி இருந்தனர்.
அதன்படி, அகில இந்திய ஆதிவாசிகள் மகாசபை தலைவரான மனிஷ் குஞ்சம், கலெக்டர் அலெக்சுக்கு தேவையான மருந்துகளை கொண்டு சென்றார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மறுத்துவிட்டாலும், மருந்து கொண்டு செல்வதற்கு மட்டும் அவர் சம்மதம் தெரிவித்து இருந்தார். சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ள தரிமட்லா கிராமத்துக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச்செல்லப்பட்டார்.
`கெடு' முடிந்ததால் பதற்றம்
இதற்கிடையில், நேற்றுடன் மாவோயிஸ்டுகள் விதித்த `கெடு' முடிந்ததால், கலெக்டரை விடுவிப்பதில் பதற்றம் அதிகரிக்க தொடங்கியது. அதே நேரத்தில், கோரிக்கை ஏற்கப்பட்டு, பேச்சுவார்த்தை தொடங்க இருப்பதால் மாவோயிஸ்டுகள் தங்கள் கெடுவை மேலும் நீடிக்க வேண்டும் என்று, முதல்-மந்திரி ராமன்சிங் நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.
மருந்துகளை கொண்டு சென்ற தூதர் மனிஷ் குஞ்சம் நேற்று மாலை ராய்ப்பூர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கெடு பற்றி முடிவு செய்வதற்காக தரிமட்லா கிராமத்தில் நேற்று மாலை மக்கள் நீதிமன்றத்தை கூட்ட முடிவு செய்து இருந்தனர்.
நாளை வரை...
அது குறித்த அதிகாரபூர்வ தகவல் உடனடியாக வெளியாகவில்லை என்றாலும், இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக, நாளை (வெள்ளிக்கிழமை) வரை `கெடு'வை நீட்டிக்க மாவோயிஸ்டுகள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
பரபரப்பான இந்த சூழ்நிலையில், சத்தீஷ்கார் அரசு சார்பில் மத்தியஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றுபட்ட மத்திய பிரதேச மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் நிர்மலா புச், சத்தீஷ்கார் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ்.கே.மிஸ்ரா இருவரும், கலெக்டரை மீட்பதற்கான செயல்திட்டங்கள் குறித்து, மாநில அரசு அதிகாரிகளுடன் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
விரைவில் இரு தரப்பு பேச்சு
மாவோயிஸ்டுகள் தூதராக அறிவித்த பிரசாந்த் பூஷண் மற்றும் மனிஷ் குஞ்சம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டதால், ஆந்திர மாநிலம் ஐதராபாத் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.ஹர்கோபால் புதிய தூதராக நியமிக்கப்பட்டார்.
அவரையும், மாவோயிஸ்டுகளின் மற்றொரு தூதரான `தேசிய எஸ்.சி.-எஸ்.டி. கமிஷன்' முன்னாள் தலைவர் பி.டி.சர்மாவையும் அரசு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு ஒப்புக்கொண்டு இருப்பதாக, முதல்-மந்திரி ராமன்சிங் அறிவித்தார். இரு தரப்பு குழுவினருக்கும் இடையே கலெக்டரை விடுவிப்பது குறித்து விரைவில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
மனித உரிமை ஆர்வலர்
பயணக்கைதிகளை விடுவிப்பதற்கான சமரச பேச்சுவார்த்தை நடத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர், பேராசிரியர் ஹர்கோபால்.
பிரபல மனித உரிமைகள் ஆர்வலரான இவர், ஏற்கனவே ஒடிசாவில் மால்கங்கிரி கலெக்டர் வினில் கிருஷ்ணா மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டபோது அவரை விடுவிக்க நடந்த சமரச பேச்சுவார்த்தையில் பங்குபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினதந்தி
தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 வயதான ஐ.ஏ.எஸ். அதிகாரியான அலெக்ஸ் பால்மேனன், சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
மாவோயிஸ்டுகள் `கெடு'
குக்கிராமம் ஒன்றில் நடந்த மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, கடந்த சனிக்கிழமையன்று மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் கலெக்டர் அலெக்ஸ் கடத்தப்பட்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், கலெக்டரின் பாதுகாவலர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடத்தப்பட்ட கலெக்டரை விடுவிப்பதற்கு, சிறையில் இருக்கும் 8 தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 நிபந்தனைகளை மாவோயிஸ்டுகள் விதித்து இருந்தனர். கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, 25-ந் தேதி (நேற்று) வரை அவர்கள் `கெடு' விதித்து இருந்தனர்.
மாவோயிஸ்டுகளின் நிபந்தனைகளை ஏற்று, தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை (`பசுமை வேட்டை') உடனடியாக நிறுத்த சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி ராமன்சிங் உத்தரவிட்டார். மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவையும் அவர் அமைத்தார்.
ஹெலிகாப்டரில் மருந்துகள்
அதைத் தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட தூதுக்குழு அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள கலெக்டரின் உடல்நிலை மோசம் அடைந்ததால், அவருக்கு தேவையான மருந்துகளை கொடுத்து அனுப்பும்படியும் மாவோயிஸ்டுகள் தகவல் அனுப்பி இருந்தனர்.
அதன்படி, அகில இந்திய ஆதிவாசிகள் மகாசபை தலைவரான மனிஷ் குஞ்சம், கலெக்டர் அலெக்சுக்கு தேவையான மருந்துகளை கொண்டு சென்றார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மறுத்துவிட்டாலும், மருந்து கொண்டு செல்வதற்கு மட்டும் அவர் சம்மதம் தெரிவித்து இருந்தார். சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ள தரிமட்லா கிராமத்துக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச்செல்லப்பட்டார்.
`கெடு' முடிந்ததால் பதற்றம்
இதற்கிடையில், நேற்றுடன் மாவோயிஸ்டுகள் விதித்த `கெடு' முடிந்ததால், கலெக்டரை விடுவிப்பதில் பதற்றம் அதிகரிக்க தொடங்கியது. அதே நேரத்தில், கோரிக்கை ஏற்கப்பட்டு, பேச்சுவார்த்தை தொடங்க இருப்பதால் மாவோயிஸ்டுகள் தங்கள் கெடுவை மேலும் நீடிக்க வேண்டும் என்று, முதல்-மந்திரி ராமன்சிங் நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.
மருந்துகளை கொண்டு சென்ற தூதர் மனிஷ் குஞ்சம் நேற்று மாலை ராய்ப்பூர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கெடு பற்றி முடிவு செய்வதற்காக தரிமட்லா கிராமத்தில் நேற்று மாலை மக்கள் நீதிமன்றத்தை கூட்ட முடிவு செய்து இருந்தனர்.
நாளை வரை...
அது குறித்த அதிகாரபூர்வ தகவல் உடனடியாக வெளியாகவில்லை என்றாலும், இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக, நாளை (வெள்ளிக்கிழமை) வரை `கெடு'வை நீட்டிக்க மாவோயிஸ்டுகள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
பரபரப்பான இந்த சூழ்நிலையில், சத்தீஷ்கார் அரசு சார்பில் மத்தியஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றுபட்ட மத்திய பிரதேச மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் நிர்மலா புச், சத்தீஷ்கார் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ்.கே.மிஸ்ரா இருவரும், கலெக்டரை மீட்பதற்கான செயல்திட்டங்கள் குறித்து, மாநில அரசு அதிகாரிகளுடன் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
விரைவில் இரு தரப்பு பேச்சு
மாவோயிஸ்டுகள் தூதராக அறிவித்த பிரசாந்த் பூஷண் மற்றும் மனிஷ் குஞ்சம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டதால், ஆந்திர மாநிலம் ஐதராபாத் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.ஹர்கோபால் புதிய தூதராக நியமிக்கப்பட்டார்.
அவரையும், மாவோயிஸ்டுகளின் மற்றொரு தூதரான `தேசிய எஸ்.சி.-எஸ்.டி. கமிஷன்' முன்னாள் தலைவர் பி.டி.சர்மாவையும் அரசு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு ஒப்புக்கொண்டு இருப்பதாக, முதல்-மந்திரி ராமன்சிங் அறிவித்தார். இரு தரப்பு குழுவினருக்கும் இடையே கலெக்டரை விடுவிப்பது குறித்து விரைவில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
மனித உரிமை ஆர்வலர்
பயணக்கைதிகளை விடுவிப்பதற்கான சமரச பேச்சுவார்த்தை நடத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர், பேராசிரியர் ஹர்கோபால்.
பிரபல மனித உரிமைகள் ஆர்வலரான இவர், ஏற்கனவே ஒடிசாவில் மால்கங்கிரி கலெக்டர் வினில் கிருஷ்ணா மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டபோது அவரை விடுவிக்க நடந்த சமரச பேச்சுவார்த்தையில் பங்குபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிணையாக வைத்திருந்த போலீசைக் கொன்று வெறியாட்டம் : "கெடு' முடிந்ததால் பீகார் அரசுக்கு நக்சல்
» ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை
» 2 நேபாள பெண்களை கடத்திய இந்தியர்கள்-மீட்க முடியாமல் திணறல்
» தீவிரவாதிகள் கடத்திய இந்திய பைலட் விடுதலை
» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
» ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை
» 2 நேபாள பெண்களை கடத்திய இந்தியர்கள்-மீட்க முடியாமல் திணறல்
» தீவிரவாதிகள் கடத்திய இந்திய பைலட் விடுதலை
» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|