ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்

+8
உமா
Ahanya
பூவன்
அசுரன்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
சிவா
rameshnaga
balakarthik
12 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  Empty நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்

Post by balakarthik Tue Apr 24, 2012 12:32 pm

* இறைவனுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கவே கோயில்களை அமைக்கிறோம். ஆனால், பொதுவாக நம் குறைகளை நிவர்த்தி செய்து தரும்படியே பகவானிடம் வேண்டிக்கொள்கிறோம். சில சமயங்களில் நிவர்த்தி உண்டாகிறது. சில சமயங்களில் நம் விண்ணப்பம் நிறைவேறுவதில்லை.

* நாம் பிரார்த்தனை செய்தும் பலனில்லை என்றால் கடவுளுக்கு கருணை இல்லையா என்று தோன்றும். நம் பூர்வ ஜென்மவினைப் பயனால் தான் துன்பம் ஏற் படுகிறது. பகவான் நாம் விரும்பும் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தால், மேலும் மேலும் அது வேண்டும் இது வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம்.

* விருப்பங்கள் நிறைவேற நிறைவேற, ஆசைகள் பெருகிக்கொண்டே இருக்கும். அதே நேரம், தம்மிடம் நம்பிக்கை இருக்கும்படியாக செய்வதற்காக, இறைவன் அவ்வப்போது, நம் விருப்பங்களை நிறைவேற்றியும் தருவார்.

* பகவானிடம் நம் விருப்பங்களை வேண்டி நிற்பதில் மேலான ஒரு நன்மை இருக்கிறது. ஆரம்பத்தில் நம் மனக்குறைகளை பகவானிடம் சொல்வதால் நமக்கு மனநிம்மதி உண்டாகிறது. நாம் சாமான்யர்களாக இருக்கும்வரையில் நம் குறைகளை நிவர்த்திக்க பிரார்த்திப்பதும், நமக்கான விருப்பங்களையும், வரங்களையும் வேண்டிக்கேட்பதிலும் தவறொன்றும் இல்லை. வெறும் குறைகளையும், வரங்களையும் மட்டுமே கேட்கத் தொடங்கிய நாம் இறுதியாக சரணாகதி நிலைக்கு தயாராகி நம்மையே அவரிடம் கொடுப்பதற்காகத் தான்.


நன்றி :- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  Empty Re: நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்

Post by rameshnaga Tue Apr 24, 2012 12:40 pm

ரொம்பவும் நன்றி! பாலா கார்த்திக்...ஸ்ரீ பெரியவரின் அருளுரையைப் பதிந்ததற்கு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  Empty பல கடவுள்கள் ஏன்?

Post by balakarthik Tue Apr 24, 2012 7:48 pm

பல கடவுள்கள் ஏன்? - காஞ்சி மகா பெரியவர்
எதைச் சாப்பிட்டால் என்ன? அன்னத்தை சாப்பிட்ட மாத்திரத்தில் வயிறு நிரம்பி விடுகிறது. ஆனால், அநேகவிதமான பதார்த்தங்கள் எல்லாம் எதற்காக என்று கேட்டால் என்ன சொல்கிறது? வயிறு நிரம்ப வேண்டும் என்பது சரி, ஆனால் நாக்கு என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது ருசி பார்க்கிறது. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பதார்த்தத்திலே ருசி இருக்கிறது. அந்த ருசியை அனுசரித்து அவனவன் சாப்பிடுகிறான். அதனால் வெவ்வேறு ருசியுள்ளவற்றைச் சுவைக்கிறார்கள்.

ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு மூர்த்தியிடத்திலே ருசி இருக்கிறது. அதனால் அநேகவிதமான மூர்த்திகள் இருக்கின்றன.
புராணம் என்றால் பழசு என்பதுதான் அர்த்தம். சுவாபமாக மிகவும் நல்லவர்களாகச் சிலர் இருக்கிறார்கள். சில பேரிடத்தில் கெட்ட அம்சம்தான் அதிகமாக இருக்கும். அப்படி ரொம்ப நல்லவர்களாக அல்லது ரொம்ப கெட்டவர்களாக இருக்கிறவர்களுடைய சரித்திரங்களைப் புராணங்களாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் புராணங்களைப் பார்த்தால் ஏராளமான நீதிகள் இருக்கும். அவற்றையெல்லாம் பார்ப்பது இல்லை? தத்துவங்களைப் பார்ப்பது இல்லை. அவற்றில் இரண்டுதலை, நான்குதலை, பசுமாடு பூஜித்தது என்றுவரும். இப்படி இருப்பவற்றைப் பார்த்து, ' இது என்ன? எல்லாம் கட்டுக்கதை' என்று சொல்லிவிடுகிறோம்.

ஒரு கையில் ஒடிந்த தந்தம் என்றால், இன்னொரு கையிலே கொழுக்கட்டை வைத்திருக்கிறார் விநாயகர். அதற்குள் தித்திப்பாக இருக்கிற வஸ்துவுக்குப் பெயர் பூர்ணம். பூர்ணம் என்றால் முழுமை. ஒரு கையில் இருக்கிற தந்தம் மூளி. இன்னொன்றிலோ முழுமை. வாழ்க்கையை முழுமையாக்க வேண்டும்.


நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  Empty Re: நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்

Post by சிவா Tue Apr 24, 2012 7:51 pm

சிறந்த கருத்துள்ளவற்றைத் தொகுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள் பாலா!


நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  Empty ஒரே இறைவனுக்கு பல வழிபாடுகள் - காஞ்சி மகா பெரியவர்

Post by balakarthik Tue Apr 24, 2012 8:11 pm

* நம்முடைய வீடுகளில் பலவிதமான வடிவங்களில் கடவுளை வழிபாடு செய்கிறோம். கடவுளுக்கு இத்தனை பெயர்கள் உண்டா என்பதும், அவரின் உண்மைத் தன்மையை உணர இத்தனை வடிவங்கள் தேவையா என்பதும் நம் மனதில் சந்தேகமாகத் தோன்றும். உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள் உலகில் இல்லை. இருப்பவர் ஒருவர் தான். இன்னும் சொல்லப்போனால் நம் உயிரும் கூட அவரின் ஒரு வடிவம் தான். இவ்வுலகத்தை நடத்தும் பெரிய சக்தியாக இருந்து அவரே நம்மை வழிநடத்துகிறார்.

* நம் மண்ணில் தோன்றிய மகான்கள், ஒரே கடவுளையே பல வடிவங்களாக வழிபட்டு, அவரவருக்குரிய வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தி விட்டார்கள். இந்த முறைகள் அவர்களின் அனுபவத்தின் வாயிலாக கண்டறியப்பட்டவை. அம்முறைகளில் நமக்கு பிடித்ததைப் பின்பற்றினால் நாமும் அவர்களைப் போலவே, ஆண்டவனின் அருளைப் பெறமுடியும். நமது இஷ்டதெய்வ வழிபாட்டினைத் தொடர்ந்து செய்யும்போது, நமக்கென்று தனியான மனப்போக்கு தேவையில்லை என்ற நிலை உருவாகும். அப்போது, இருப்பது ஒரே கடவுள் தான் என்ற உறுதிநிலையைப் பெற்றுவிடுவோம்.
- காஞ்சிப்பெரியவர்

நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  Empty நான் சிறியவன்' என்று எண்ணுங்கள்

Post by balakarthik Tue Apr 24, 2012 8:15 pm

நான் சிறியவன்' என்று எண்ணுங்கள் - காஞ்சி மகா பெரியவர்

* சிக்கனம் என்ற பெயரில் தானும் அனுபவிக்காமல், பிறரையும் அனுபவிக்கவிடாமல் கருமியாய் இருக்கக்கூடாது. செலவாளியாக இருப்பவன் பணத்தை எல்லாம் வேண்டாத ஆசைகளுக்காக செலவழித்து விட்டு கடனாளியாகிவிடக் கூடாது.

* நாலுபேர் நம்மைப் புகழவேண்டும் என்பதற்காக பலரும் சமூகசேவை செய்கிறார்கள். சேவை என்றால் வீட்டுக்கும் நாட்டுக்கும் தொண்டு செய்யவேண்டும் என்ற உணர் வோடு தன்னால் முடிந்த பணிகளைச் செய்வதாகும்.

* தொண்டு செய்பவன், தன்னை பெரியவன் என்று நினைத்து, தலைக்கனம் கொண்டு அலைவதில் பயனில்லை. இன்னும் சொன்னால், "நான் சிறியவன்' என்ற எண்ணம் வேண்டும்.

* சங்கீத ஞானம் இருந்தால் தான், கடவுளைப் பற்றி பாடமுடியும் என்பதில்லை. ஆண்டவன் மீது அன்புணர்வுடன் பாடினாலே போதும். இறைவன் நம் பக்தியை ஏற்றுக் கொள்வான்.

* பணத்தில் மட்டும் நாம் கணக்காய் இருக்க எண்ணுகிறோம். பொருளை வீணாகச் செலவழித்தால் வருத்தப்படுகிறோம். ஆனால், காலத்தை தேவையில்லாமல் வீணாக்கி விடுகிறோம். அதை முறையாகப் பயன்படுத்துவது அவசியம்.


ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  Empty பேச்சைக் குறைப்பது எப்படி? - காஞ்சி மகாபெரியவர்

Post by balakarthik Tue Apr 24, 2012 8:19 pm

பேச்சைக் குறைப்பது எப்படி? - காஞ்சி மகாபெரியவர்

* தொண்டு செய்வதால் நமக்கென்ன பயன் என்று எண்ணுகிறார்கள். ராமாயண அணில் நமக்கெல்லாம் உதாரணம். பாலம் செய்யும் பணியில் தன்னால் முடிந்த மணலைக் கொண்டு சேர்த்த அணிலைப் போல நம்மால் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும்.

* கடவுள் அருள் என்பது எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது. ஆனால், நம் மனம் கல்லாக இருந்தால், நீருக்குள் இருக்கும் கல் போல நம்மால் இறையருளை உணர முடிவதில்லை.

* நம் வேலையை நாமே செய்து கொள்வதை கவுரவக் குறைச்சலாக நாம் நினைக்கிறோம். உண்மையில், நம் வேலையை நாம் அடுத்தவரிடம் செய்யச் சொல்வது தான் கவுரவக் குறைச்சல்.

* குடும்பத்தை புறக்கணித்துவிட்டு சேவை செய்வதால் பயனில்லை. குடும்பத்திற்கு சேவை செய்வது தான் முதல் கடமை. பெற்ற தாயை பிச்சை எடுக்கச் செய்துவிட்டு கோதானம் செய்வதெல்லாம் அதர்மம்.

* எண்ணத்தை நிறுத்தப் பழகினால் மட்டுமே வேண்டாத பேச்சுக்களை நம்மால் குறைத்துக் கொள்ள முடியும். எண்ணமும் பேச்சும் கட்டுக்குள் வந்தால்தான் பயனுள்ள செயல்களில் நம் கவனம் செல்லத்துவங்கும்.


நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  Empty தெய்வம் எங்கும் இருக்கிறது

Post by balakarthik Tue Apr 24, 2012 8:28 pm

தெய்வம் எங்கும் இருக்கிறது - காஞ்சி மகாபெரியவர்

* எதையும் கண்டிக்கும் அதிகாரம் இருப்பதாக நினைக்காமல், எதிலும் உள்ள உண்மையைப் புரிந்து கொள்ள முயலும் அதிகாரம் தான் நமக்கு உள்ளது.

* உயர்ந்து மேல்நோக்கி வளரும் மனிதன் மற்ற பிராணிகளைவிட அதிகமான சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால், உண்மையில் நாம் துக்கத்தையே அதிகம் அனுபவிக்கிறோம்.

* புரியாமல் இருந்தாலும் இப்போது இருக்கும் சாஸ்திரங்களை ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும். இன்றைக்குப் புரியாவிட்டாலும் பின்னொரு காலத்தில் அவை தெரிய வரும்.

* சிரத்தை குறையாமல், ஆரம்பித்த செயலை நிறுத்தாமல், முயற்சி செய்து கொண்டிருந்தால் இறைவனை
அடைவது உறுதி.


* பக்தியும் சிரத்தையும் ஆத்மாவுக்கு உயர்ந்த மருந்து. பிரசாதங்களை விட, மக்களுக்குப் பக்தியும் சிரத்தையும் உண்டாவதே முக்கியம்.

* எங்கு தெய்வம் இருந்தாலும், அங்கு தனது குறைகளைச் சொல்லிக் கொள்ளவே மக்கள் ஆசைப்படுகிறார்கள். தெய்வம் அனைத்து இடத்திலும் தான் இருக்கிறது. ஆனால், அது அவர்களுக்கு தெரிவதில்லை.


ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  Empty Re: நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்

Post by rameshnaga Wed Apr 25, 2012 11:21 am

ரொம்ப...ரொம்ப ...ரொம்ப...நன்றிகள் பாலா கார்த்திக்...உங்களுடைய ஸ்ரீ பெரியவர் குறித்த பதிவுகளுக்கு.

நான் கொஞ்சம்., கொஞ்சம் அவர் குறித்தான செய்திகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பை அவர் அருளாலேயே பெற்றிருக்கிறேன்...உண்மையில்..அவர் குறித்தான நமது சமூகத்தின் பார்வை மிக..மிகக் குறைபாடுடையது.
அவரை ஒரு மதத்தின் தலைவர், மற்றும் ஒரு துறவி என்ற நிலையோடு நமது பார்வை அவரைப் புரிந்து கொள்வதில் பெரும்பாலும் முடிந்து விடுகிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி மகத்தான பல்வேறு
புரட்சிக் கருத்துக்களை எடுத்துச் சொன்னவர் அவர் என்பது அவருடைய அருளுரைகளைப் படித்தால் புரியும்.
"பிடி அரிசித் திட்டம்"., தற்காலக் கல்வி முறையின் குறைபாடுகள்...நமது ஜன நாயகத்தின் வீழ்ச்சி..
சமுதாயத்தில் ஆண்., பெண் இருவருக்குமான பங்களிப்புகள் ., சமுதாயத்தின் கட்டமைப்பு., வரதக்ஷிணைக்கு எதிராக ஒரு இளைஞன் செய்ய வேண்டியது என்ன?...என்பதைப் பற்றியெல்லாம்..
தான் ஆரோகணித்திருந்த பீடத்திற்குப் பங்கமில்லாமல்..மக்களின் மனதில் பதிய வைக்க பெரும் முயற்சி
செய்தவர் அவர். எந்த ஒரு சமுதாயப் புரட்சியாளனையும் விட மகத்தான புரட்சியாளர் அவர்.
எந்த ஒரு கம்யூனிஸ்டையும் விட மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் அவர். (இன்றைக்கும் கம்யூனிஸ்டுகளில்தான்
ஒரு சில நல்லவர்களாவது இருக்கிறார்கள் என்பதால்தான் -உதாரணத்திற்கு திரு.நல்லகண்ணு ஐய்யா அவர்கள்..) அவர் குறித்தான விஷயங்கள் இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதில்
எனக்கும் மிகுந்த விருப்பமும்., கடமையும் உண்டு. நமது தளத்தில்.."இந்து" தலைப்பின் கீழ் "ஒரு பாவத்தின்
அஞ்சலி" என்ற தலைப்பில் கவிதைகளாகவும்., (19 கவிதைகள்)., "மைத்ரீம் பஜதே" என்ற தலைப்பில்
அவருடைய உரைகளையும் கொஞ்சம் கொஞ்சம் தொகுத்திருக்கிறேன். அவர் குறித்தான எனது சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள உங்களது இந்தப் பதிவு உதவி செய்தது., பாலா கார்த்திக். உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மீண்டும்...மீண்டும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  Empty Re: நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்

Post by balakarthik Wed Apr 25, 2012 11:40 am

மிக்க நன்றி நாகா சார் இன்னும் தொடரும் அவரை பற்றிய பதிவுகள் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  Empty Re: நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum