ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரியர் யார்? (பகுதி 1)

4 posters

Go down

ஆரியர் யார்? (பகுதி 1)  Empty ஆரியர் யார்? (பகுதி 1)

Post by பத்மநாபன் Tue Apr 24, 2012 12:07 am

1. ஆரியர்கள் என்போர் வந்தேறிகளே. அவர்கள் கி.மு 1000 க்கும் கி.மு 2000 ஆண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில், இந்தியாவின் ஒரு பகுதியை வந்தடைந்தவர்கள்.

2. ரிக்வேதம் ஆரியருடையதும், ஆரியரால் பின்பட்ட ஒரு வாழ்வுமுறையுடன் கூடிய ஒரு சடங்கு முறையை அடிப்படையாகக் கொண்டது. ரிக்வேத உள்ளடக்கமும் அதன் வாழ்வியல் முறையும், இந்திய சமுதாயத்துடன் தொடர்பற்ற ஒன்று.

3. ஆரியர் என்று கருதப்பட்டவர்கள் தான், இன்றைய பார்ப்பனர்கள் என்ற நேர்கோட்டு எடுகோள் தவறானது. மாறாக ஆரியரின் ஒரு பிரிவு, அதுவும் இந்திய சமுதாய கலப்பின் ஊடாகத்தான் பார்ப்பனர்களானார்கள். மற்றைய ஆரிய பகுதி இந்திய சமூகத்துடன் ஒன்று கலந்து இனம் காணமுடியாது போய்விட்டனர். அத்துடன் இன்றைய பார்ப்பனர்களின் ஒரு பகுதி, ஆரிய கலப்பற்றவர்கள். அதாவது இவர்கள் ஆரிய பார்ப்பனர்களால், பார்ப்பனர்களானவர்கள்.

4. ஆரியரின் எந்தப் பகுதி பெரும்பகுதி பார்ப்பனர்களானார்கள் என்றால், ஆரியரில் இருந்த பூசாரிகள் தான். அனைத்து ஆரியரும் பார்ப்பனராகவில்லை.

5. பார்ப்பனம், பார்ப்பனீயம் தோன்றுமளவுக்கு ஆரிய சமூகத்தின் சிதைவு நிகழ்ந்துள்ளது. இதன் விளைவு அதன் மூலமொழியை இழந்து போகுமளவுக்கு நிகழ்ந்துள்ளது.

6. ஆரிய சமூக அமைப்பை வழிநடத்திய பூசாரிகள், சமுதாய எண்ணிக்கையில் மிகச்சிறிய பிரிவினராவர். ஆனால் பொருளாதார ரீதியாக வலுவுள்ள ஆதிக்க பிரிவினராகும். தமது பலத்தினை நிலைநிறுத்தக் கூடிய வகையில், குதிரைகளை சொந்தமாக கொண்ட ஒரு பிரிவும் கூட. ஆரிய சமூக சிதைவின் போது, அவர்கள் தனிமைப்படுமளவுக்கு தனித்துவமான சடங்குகளை பேணும் ஒரு குழுவாக எஞ்சினர். அவர்கள் தமது தனித்தன்மையை பேணியபடி, தனிச் சலுகையையும் கொண்டபடி, இந்த பூசாரிகளும் சமுதாயத்தினுள் சிதைந்தனர். இந்த சிதைவின் மூலம் தமது மூல வேத ஆரிய மொழியை இழந்தனர். ஆனால் தனிச் சலுகை பெற்ற ஒரு பூசாரிக் குழுவாக இருந்ததாலும், வழிபாட்டு முறைகள் ஏற்கப்பட்டதாலும், அந்த பழைய சடங்கை அவர்கள் பாதுகாக்க முடிந்தது. ஆனால் தனது சொந்த மூல மொழியை இதனூடாக பாதுகாக்க முடியவில்லை. அதாவது வேத ஆரிய கால சடங்குகளை மற்றொரு மொழி ஊடாக செய்ய முனைந்தன் மூலம் தான், அது தப்பிப்பிழைத்தது. சமுதாயத்தில் சிதைந்ததன் மூலம், ஆரிய வேத மூல மொழியையே இழந்தனர்.

இந்த நிகழ்வு நீண்ட நீடித்த ஒரு கால பகுதியில், அதாவது சில தலைமுறைக்குள்ளான ஒன்றாக இருந்துள்ளது. சடங்கு நிலையில் எஞ்சிய அவர்களின் வாழ்வுமுறை மிகவும் தனிமைப்பட்ட நிலையிலும், சமுதாய போக்கில் ஒன்றிணைந்ததன் விளைவு, அவர்கள் ஆரிய வேத மொழியின் நீட்சியை இழந்தனர். எஞ்சி இருந்த சடங்கு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தின் சடங்காக மாறிய போது, சிதைந்த மூல மொழியில் இருந்தும், வாழ்ந்த சமுதாயத்தின் மொழிகளுடனும் கலந்து சமஸ்கிருதம் என்ற இரகசிய பூசாரிகளின் மொழி உருவானது. இது சமுதாயத்தின் பேச்சு மொழியாக உருவாகவில்லை. சொல்லப்போனால் ஆரியர்கள் அனைவரும் பேசும் மொழியாக மீள் உருவாக்கம் செய்யப்படவேயில்லை.

(தொடரும் - நன்றி - பி.இரயாகரன் )
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

ஆரியர் யார்? (பகுதி 1)  Empty Re: ஆரியர் யார்? (பகுதி 1)

Post by முஹைதீன் Tue Apr 24, 2012 12:36 am

தொடருங்கள் தெரிந்து கொள்வோம்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஆரியர் யார்? (பகுதி 1)  Empty Re: ஆரியர் யார்? (பகுதி 1)

Post by பத்மநாபன் Tue Apr 24, 2012 7:07 am

முஹைதீன் wrote:தொடருங்கள் தெரிந்து கொள்வோம்.

நன்றி முகைதீன். தொடருகிறேன்.
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

ஆரியர் யார்? (பகுதி 1)  Empty ஆரியர் யார்? (பகுதி 2)

Post by பத்மநாபன் Tue Apr 24, 2012 7:10 am

7 .வேதகாலச் ஆரிய சடங்குகளை செய்யக் கூடிய இந்த ஆரிய வழிவந்த பிரிவு, சமுதாயத்தில் தனிச்சலுகை பெற்ற ஓன்றாக மாறியது. இது சலுகை பெற்ற ஒரு தனியான சுரண்டும் வர்க்கமாக, தனது வர்க்க தனித்துவத்தை பேணவும், அதை இரகசியமாக்கவும், தனது பழைய மொழியின் சிதைவில் இருந்து ஒரு மொழியை தக்கவைத்துள்ளது. அதுதான் சமஸ்கிருதம். இதை கடவுளுக்கு மட்டும் தெரிந்த ஒரு மொழியாக கூறிக்கொண்டதுடன், கடவுளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடியவர்களின் ஒரு இரகசிய மொழியாகவும் இதைப் புனைந்தனர். இந்த மொழியைத் தெரிந்தவர்கள், கடவுளுடன் பேசக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை கட்டமைக்கப்பட்டது.

8. இந்த சமஸ்கிருத மொழியின் தோற்றம், அதுவும் பார்ப்பனரால் மட்டும் பேசப்பட்ட மொழியாக வரலாறு இந்த மொழியை அடையாளம் கண்டுள்ளது. இதை கடவுள் மொழி என்று கூறிக்கொண்டனர். மறுபக்கத்தில் ஆரிய மூல மொழியை மீட்க முடியாத அளவுக்கு, ஆரிய சிதைவு சமுதாயத்தினுள் நிகழ்ந்துள்ளது.

9. இந்த ஆரிய வேத மொழி சிதைவும், பார்ப்பனர் மட்டும் பேசும் சமஸ்கிருத மொழியின் தோற்றமும், ஆரியரின் சிதைவை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இடைப்பட்ட இக் காலத்தில் ஆரியர் என்ற அடையாளமே இன்றி, அது ஓரு தனித்துவமான மக்கள் கூட்டம் என்ற அடையாளமே இன்றியே, அது அழிந்துபோனது.

ஆரிய சமூகம் ஆரிய வேத மொழியை பேசிய காலத்தில், பல்வேறு தொழில்களைச் செய்யும் ஒரு சமூகமாகவே அது இருந்துள்ளது. அது வெறும் பூசாரிகளை மட்டும் கொண்ட கற்பனைக் கூட்டமல்ல. ஒரு சமுதாய அலகாக, தனது சமுதாயத்தினுள்ளான தேவைகளை பூர்த்தி செய்யும் பலதுறை சார்ந்த ஒரு குழுதான் ஆரியர். இதை நாம் ஆரிய ரிக்வேத சடங்குகளிலும் காணமுடியும். இரண்டாவதாக ஆரிய நாடோடி வாழ்க்கை அதன் முழுச் சிதைவு வரை, பல தலைமுறை கொண்டது. நாடோடிகளாக இந்தியாவின் ஒருபகுதியை வந்தடைந்த காலம் வரை, தனது சமூகத்தின் தேவையை அது தனக்குள்ளேயே பூர்த்தி செய்தது. இப்படி பல்வேறு சமூகத் தேவையையொட்டி, சமுதாயத்தில் உழைப்புப் பிரிவினை அதற்குள் இருந்தது. இந்த ஆரிய நாடோடிகள், அப்படியே இரத்த உறவு கொண்ட பார்ப்பனராக இடம் பெயரவில்லை. அப்படி காட்சிப்படுத்துவது என்பது, அப்படி நம்புவது என்பது, மூடர்களினதும், முட்டாள்களினதும் பிழைப்புவாதிகளினதும் செயலாகும்.

இப்படி வந்த நாடோடி ஆரிய சமூகம் இந்தியாவினுள் தனித்துவமாகவும், ஆரிய சமூகமாகவும் நீடிக்க முடியவில்லை. இந்திய சமூகத்தை வென்று அடக்கவும் முடியவில்லை. அவர்கள் சிதைந்தனர். சிதைந்த போது தமது சடங்கு முறை மூலம், இந்திய சமூகத்துக்கு நஞ்சிட்டனர். அந்த நஞ்சு தான், பார்ப்பனீயமாகி சாதியாக நீடிக்கின்றது. இந்த ஆரிய சடங்கு முறையைத் தவிர, ஆரிய மூலம் எதுவும் இனம் காணமுடியாத வகையில் அது சிதைந்துள்ளது.

மீட்கப்பட்ட ஆரிய வேத சடங்குமுறை தனது மூலத்தை தக்கவைத்தபடி, இன்றைய எல்லைவரை அது பலவாக திரிந்து வந்துள்ளது. ஆரிய வேத நாடோடி மக்களின் சிதைவு, தனது மொழியையும், அதன் மூலத்தையும் இழந்தது. தனது நாடோடித் தனித்துவத்தை பேண முடியாத ஒரு காரணத்தினால் தான் அழிந்து, பொதுவான சமூக ஓட்டத்தில் சிதைந்து கலந்தனர். இப்படி அந்த வேத ஆரிய மொழி சிதைவுற்று, அதன் மூல மொழி அழிகின்றது. இதன் மூலம் அவர்களின் இரத்த வழியான சமூக நாடோடி உறவு முறையே அழிகின்றது.

ஆனால் வேத ஆரிய சடங்குகளை பின்பற்றும் ஒரு பிரிவினர், இருக்கத்தான் செய்தனர். ஆனால் அவர்கள் ஆரியராகவோ, ஆரிய வேத மொழியை பேசுபவராகவோ இருக்கமுடியவில்லை. அதன் பெயரால் அவர்கள் தம்மைத்தாம் அடையாளப்படுத்தவும் கூட முடியவில்லை. அவர்கள் வாழ்ந்த சமூதாயத்தில் சிதைந்தபடி, தமது சடங்கை பின்பற்றுபவராக இருந்துள்ளனர். இந்த மதச் சடங்கை பின்பற்றியோர், பெருமளவில் ஆரியரில் இருந்த பூசாரிப் பிரிவாகும். இவர்களால் மட்டும் தான், தனது சடங்குகளையும் அது சார்ந்த நினைவுகளையும் தொடர முடிந்தது. மதம் ஊடாகவும் அவர்களின் பராம்பரியமாக மனப்பாடம் செய்யும் கல்வி முறையூடாகவும் இதைப் பேண முடிந்தது. அதாவது வசதியும் வாய்ப்பும் கொண்ட, உழைப்பில் ஈடுபட்டு வாழவேண்டிய தேவை இல்லாத பிரிவு மூலம் தான், இது ஒரு மதச் சடங்காக பாதுகாக்கப்பட்டது.

மறுபக்கத்தில் தனிச்சொத்துரிமை குடும்ப அலகை அடிப்படையாக கொண்டது என்ற வகையில், ஆரம்ப உழைப்பு பிரிவினைகள் பரம்பரைத்தன்மை கொண்டவையாகவே இருந்தது. அதாவது அது இயற்கையானது கூட. உற்பத்தி சார்ந்த அறிவு, அது சார்ந்த நுட்பத் திறன், அது பற்றிய கல்விமுறை பெற்றோர் வழியாக குழந்தைக்கு சென்றது. குழந்தை பிறந்தது முதலே, இது ஒரு வாழ்வாக மாறிவிடுகின்றது.

இந்த வகையில் ஆரியவேதச் சடங்குகளை, பூசாரிகள் தம் குழந்தைகள் ஊடாக பரம்பரையாக கடத்தப்பட்டது. ஆனால் இந்த பாரம்பரிய சடங்கை வேத ஆரிய மொழியில் தொடர்ச்சியாக செய்ய முடியவில்லை. மாறாக சமுதாயத்தில் நிலவிய மொழியில், வெறும் சடங்குகளாகவே அவை சிதைந்து வெளிப்பட்டது. வேத ஆரிய மொழிச் சிதைவு கலந்த ஒரு மந்திரமாகவே, சமஸ்கிருத மொழியின் முந்தைய வடிவங்கள் நீடித்தன. சமஸ்கிருத மொழி மந்திரம் என்ற நிலையைக் கடந்து, ஒரு மொழியாக உருவாகியது என்பது, ஆரிய வேத சடங்குக்கு இருந்த சமுதாய மதிப்பு தான் அடிப்படைக் காரணமாகும். இப்படி சமஸ்கிருதம் ஒரு சுரண்டும் வர்க்கத்தின் இரகசிய மொழியாகியது. இந்த மொழி ஒரு மக்கள் கூட்டத்தால் பேசப்படவில்லை. மாறாக மற்றவர்களை ஏமாற்றி தொழில் செய்யும் ஒரு கூட்டத்தின், தொழிலுக்குரிய மொழியாகியது.

இப்படி இந்த சமஸ்கிருதம் ஒரு குறித்த பூசாரிகளின் கூட்டத்தின் மொழியாவது என்பது, வேதஆரிய சடங்குகள் சமுதாயமயமாகியதன் பின் நிகழ்கின்றது. வேத ஆரியரின் முன்னயை சடங்கு முறைகள் சமுதாயத்தில் மதவழிபாடாக ஆதிக்கம் பெற்ற போது, சமஸ்கிருதமே அந்தச் சடங்குரிய மந்திர மொழியாகின்றது.

(தொடரும் - நன்றி - பி.இரயாகரன் )
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

ஆரியர் யார்? (பகுதி 1)  Empty Re: ஆரியர் யார்? (பகுதி 1)

Post by ராஜா Tue Apr 24, 2012 10:38 am

கி மு 4000 - கி மு 5000 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ஒரு பகுதியில் இருந்து உலகம் முழுவதும் சென்ற திராவிடர்களே , பின்னாளில் ஆரியர் என்று இந்தியாவிற்கே திரும்ப வந்தனர். சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆரியர் யார்? (பகுதி 1)  Empty Re: ஆரியர் யார்? (பகுதி 1)

Post by ஆரூரன் Wed Apr 25, 2012 4:17 pm

நல்ல ஆய்வுக்கட்டுரையாக உள்ளது. தொடருங்கள் நண்பரே !
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

ஆரியர் யார்? (பகுதி 1)  Empty Re: ஆரியர் யார்? (பகுதி 1)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகத்தின் ராஜா யார்? ( சிறுவர் பகுதி )
» தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» செந்தில் வீட்டு விருந்துக்கு யார் யார் வருகிறீர்கள் ?வருபவர்கள் அறிவிப்பு செய்யுங்கள் !!!!!!!!!!!!!!
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum