Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெயர் பெற்ற கோயில்கள்
+2
பிளேடு பக்கிரி
பிரசன்னா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெயர் பெற்ற கோயில்கள்
பெரிய கோயில் - தஞ்சை
பூங்கோயில் - திருவாரூர்
ஏழிருக்கை - சாட்டியக்குடி
ஆலக்கோயில் - திருக்கச்சூர்
கரக்கோயில் - திருக்கடம்பூர்
மணிமாடம் - திருநறையூர்
தூங்காளை மாடம் - திருப்பெண்ணாடகம்
அயவந்தீச்சரம் - திருச்சாத்தமங்கை
சித்தீச்சுரம் - திருநறையூர்
தகவல் பகிர்வு - தினமணி ஞாயிறு கொண்டாட்டம்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பெயர் பெற்ற கோயில்கள்
நன்றி பிரசன்னா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெயர் பெற்ற கோயில்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பெயர் பெற்ற கோயில்கள்
பிரசன்னா , அப்படியே இந்த கோவில்களை பற்றி இன்னும் கொஞ்சம் விரிவா கிடைச்சா போடுங்க.எதற்காக புகழ் பெற்றன என்று சொன்னால் அனைவரும் தெரிந்துகொள்வார்கள்
Re: பெயர் பெற்ற கோயில்கள்
பிளேடு பக்கிரி மற்றும் மும்மூர்த்திகளின் பின்னூட்டதிர்க்கும் நன்றி
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பெயர் பெற்ற கோயில்கள்
அனைவருக்கும் தஞ்சை பெரிய கோயில் பற்றி அறிந்து இருப்போம்.... அதனால் "பூங்கோயில் - திருவாரூர்" பற்றி அறிந்த தகவலை முதலில் பதிவிடுகிறேன்....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பெயர் பெற்ற கோயில்கள்
சிவஸ்தலம் பெயர் : திருவாரூர் (திருமூலட்டானம், திருவாரூர் பூங்கோயில்)
இறைவன் பெயர் : வன்மீகிநாதர், புற்றிடங்கொண்ட நாதர்
இறைவி பெயர் : அல்லியங்கோதை
எப்படிப் போவது : இத்தலம் திருவாரூர் நகரில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருவாரூர் அரநெறி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இந்த ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. திருவாரூர் நகரின் கிழக்கு
சிவஸ்தலம் பெயர் : திருவாரூர் (திருமூலட்டானம், திருவாரூர் பூங்கோயில்)
ஆலயம் பற்றி :
திருவாரூர் பிறக்க முக்தி தரும் தலம்.
பாம்புப் புற்றை தான் எழுந்தருளி இருக்கும் இடமாக தானே விரும்பி ஏற்றுகொண்ட வன்மீகி நாதர் கருவறையில் குடிகொண்டிருக்கும் தலம்.
கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப்பெரிய சிவாலயமும் கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய திருத்தலம்.
முசுகுந்த சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் போன்றோரால் ஆட்சி செய்யப்பட்ட தலைநகரமாகிய விளங்கிய திருத்தலம்.
சப்தவிடங்கத் தலங்களில் மூலாதாரத் தலம், பஞ்ச பூதங்களில் பிருத்வி (பூமி) தலம்.
திருமுதுகுன்றம் சிவஸ்தலத்தில் மணிமுத்தா நதியில் சுந்தரர் தான் இட்ட பொன்னை கமலாலயம் திருக்குளத்தில் எடுத்துக் கொள்ள அருளிய தலம்.
சுந்தரர் வேண்டிக் கொண்டதின் பேரில் அவருக்காக தியாகராஜப் பெருமான் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது போக இவ்வூர் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடைய திருத்தலம்.
சங்கிலி நாச்சியாரைப் பிரிய மாட்டேன் என்று செய்து கொடுத்த வாக்கை மீறி திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டதால் தன் இரண்டு கண் பார்வையும் இழ்ந்த சுந்தரர் காஞ்சீபுரத்தில் இடது கண் பார்வை பெற்றபின், திருவாரூர் தலத்தில் பதிகம் பாடி வலது கண் பார்வையும் பெற்ற தலம்.
விறன்மிண்ட நாயனார், நமி நந்தி அடிகள் நாயனார், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், சுழற்சிங்க நாயனார் முதலிய சிவனடியார்கள் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம்.
எந்த ஒரு சிவஸ்தலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இதுவே.
என்ற பல பெருமைகளை உடைய தலம் திருவாரூர் ஆகும்.
திருவாரூர் திருக்கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் இராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.பிற்கால சோழ மன்னர்களில் ஒருவனான கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவி இக்கோவிலை கற்றளிக் கோவிலாக மாற்றியதாகவும், பின்னர் குலோத்துங்க மன்னர்கள் காலத்தில் பெரியதாக விரிவாக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முதல் பிரகாரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்க்கையாகும். மேலும் 2 துர்க்கை சந்நிதி முதல் பிரகாரத்தில் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்றும் ஆக மொத்தம் எட்டு துர்க்கை சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருப்பது இதன் சிறப்பமசம். நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் நிற்கும் கோலத்தில் காணப்படுவதும் இக்கோவிலில் காணும் ஒரு சிறப்பம்சம்.
...திருசிற்றம்பலம்...
ஆன்மிக தகவல் பகிர்வு - http://holyindia.org/shiva/thevaram_temple/0150_thiruvarur_vanmeekinathar.jsp
இறைவன் பெயர் : வன்மீகிநாதர், புற்றிடங்கொண்ட நாதர்
இறைவி பெயர் : அல்லியங்கோதை
எப்படிப் போவது : இத்தலம் திருவாரூர் நகரில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருவாரூர் அரநெறி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இந்த ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. திருவாரூர் நகரின் கிழக்கு
சிவஸ்தலம் பெயர் : திருவாரூர் (திருமூலட்டானம், திருவாரூர் பூங்கோயில்)
ஆலயம் பற்றி :
திருவாரூர் பிறக்க முக்தி தரும் தலம்.
பாம்புப் புற்றை தான் எழுந்தருளி இருக்கும் இடமாக தானே விரும்பி ஏற்றுகொண்ட வன்மீகி நாதர் கருவறையில் குடிகொண்டிருக்கும் தலம்.
கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப்பெரிய சிவாலயமும் கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய திருத்தலம்.
முசுகுந்த சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் போன்றோரால் ஆட்சி செய்யப்பட்ட தலைநகரமாகிய விளங்கிய திருத்தலம்.
சப்தவிடங்கத் தலங்களில் மூலாதாரத் தலம், பஞ்ச பூதங்களில் பிருத்வி (பூமி) தலம்.
திருமுதுகுன்றம் சிவஸ்தலத்தில் மணிமுத்தா நதியில் சுந்தரர் தான் இட்ட பொன்னை கமலாலயம் திருக்குளத்தில் எடுத்துக் கொள்ள அருளிய தலம்.
சுந்தரர் வேண்டிக் கொண்டதின் பேரில் அவருக்காக தியாகராஜப் பெருமான் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது போக இவ்வூர் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடைய திருத்தலம்.
சங்கிலி நாச்சியாரைப் பிரிய மாட்டேன் என்று செய்து கொடுத்த வாக்கை மீறி திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டதால் தன் இரண்டு கண் பார்வையும் இழ்ந்த சுந்தரர் காஞ்சீபுரத்தில் இடது கண் பார்வை பெற்றபின், திருவாரூர் தலத்தில் பதிகம் பாடி வலது கண் பார்வையும் பெற்ற தலம்.
விறன்மிண்ட நாயனார், நமி நந்தி அடிகள் நாயனார், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், சுழற்சிங்க நாயனார் முதலிய சிவனடியார்கள் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம்.
எந்த ஒரு சிவஸ்தலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இதுவே.
என்ற பல பெருமைகளை உடைய தலம் திருவாரூர் ஆகும்.
திருவாரூர் திருக்கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் இராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.பிற்கால சோழ மன்னர்களில் ஒருவனான கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவி இக்கோவிலை கற்றளிக் கோவிலாக மாற்றியதாகவும், பின்னர் குலோத்துங்க மன்னர்கள் காலத்தில் பெரியதாக விரிவாக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முதல் பிரகாரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்க்கையாகும். மேலும் 2 துர்க்கை சந்நிதி முதல் பிரகாரத்தில் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்றும் ஆக மொத்தம் எட்டு துர்க்கை சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருப்பது இதன் சிறப்பமசம். நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் நிற்கும் கோலத்தில் காணப்படுவதும் இக்கோவிலில் காணும் ஒரு சிறப்பம்சம்.
...திருசிற்றம்பலம்...
ஆன்மிக தகவல் பகிர்வு - http://holyindia.org/shiva/thevaram_temple/0150_thiruvarur_vanmeekinathar.jsp
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பெயர் பெற்ற கோயில்கள்
ஏழிருக்கை - சாட்டியக்குடி
திருவிசைப்பா
திருச்சாட்டியக்குடி
சாட்டியக்குடி - சாத்தியக்குடி
தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற தலம்.
மக்கள் வழக்கில் சாட்டியக்குடி, சாத்தியக்குடி என்று வழங்குகிறது.
1) கீழ்வேளுரிலிருந்து (கீவளுரிலிருந்து) கச்சினம் வழியாகத் திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் வழியில் இத்தலமுள்ளது.
2) திருவாரூரிலிருந்து தேவூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் தேவூரை அடுத்துச் சாலையோரத்தில் சாட்டியக்குடி உள்ளது. மெயின்ரோடிலிருந்து சற்றுத் தள்ளி, உள்ளே கோயிலிருக்கிறது. கோயில்வரை பேருந்து செல்லும்.
ஊர் - சாட்டியக்குடி. கோயில் - ஏழிருக்கை. ஆறு ஆதாரங்களுக்கும் மேலாகிய ஏழாவது இடத்தை - துவாதசாந்த இருக்கையை, ஏழிருக்கை என்பர். இந்நினைவைத் தரும் வகையில் கோயிலின் பெயர் அமைந்துள்ளது. இது பற்றியே இத்தலத்திருவிசைப்பா பதிகத்தில் கருவூர்த்தேவர் ஒவ்வொரு பாட்டிலும் "ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே" என்று பாடியுள்ளார்.
சாட்டியம் (ஜாட்டியம்) வெப்ப மிகுதியால் வரும் சுரநோய். வெப்ப நோய்க்குரிய தேவதையாகிய ஜ்வரதேவதை இறைவனை வழிபட்ட தலமாதலின் ஜாட்டியக்குடி (சாட்டியக்குடி) என்று பெயர் வந்தது. (குடீ - ஊர்) வெப்ப நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இன்றும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுக் குணமடைவது வழக்கில் இருந்து வருகிறது. சாட்டிய (சாண்டில்ய) முனிவர் வழிபட்ட தலமென்றும் சொல்லப்படுகிறது. கோயில் பிராகாரத்தில் இம்முனிவரின் சிலாரூப மேனியும் உள்ளது.
கருவூர்த்தேவரின் திருவிசைப்பா பாடல் பெற்றது.
இறைவன் - வேதநாதர், வேதபுரீஸ்வரர், ரிக்வேதநாதர்.
இறைவி - வேதநாயகி.
தீர்த்தம் - வேததீர்த்தம்.
தலமரம் - வன்னி.
மேற்கு நோக்கிய சந்நிதி.
முன் வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பால் வசந்த மண்டபம் உள்ள. நேரே சென்று 3 நிலைகளையுடைய உள்கோபுரத்தை தாண்டினால் நீர்கட்டும் அமைப்பிலுள்ள நந்தியையும் பலி பீடத்தையும் கண்டு தொழலாம்.
அடுத்துள்ள வாயிலைக் கடந்து இடப்பால் பிராகாரத்தில் திரும்பினால் விசுவநாத லிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராஜசபை, நவக்கிரகங்கள், சனிபகவான், பைரவர், சாண்டில்ய முனிவர், கருவூர்த்தேவர், சம்பந்தர், அப்பர், குபேரன், விநாயகர், சூரியன் முதலிய சந்நிதிகளைத் தொழலாம். தலமரம் - வன்னி, பிராகாரத்தைத் தொடர்ந்து வந்தால் விநாயகர் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் காட்சி தரும்.
வலம் முடித்து வாயிலைத் தாண்டி உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம் கிடைக்கிறது.
மூலமூர்த்தி - சிவலிங்கத் திருமேனி. சற்று உயர்ந்த பாணம். சதுர ஆவுடையார் அமைப்பு. உள்மண்டபத்தில் இடப்பால் உற்சவ மூர்த்தங்களுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இம்மூர்த்தங்களுள் சோமாஸ்கந்தர், நடராஜர், விநாயகர், வள்ளி தெய்வயானை, முருகன், பிரதோஷ நாயகர், திரிபுரசம்ஹாரர், சூரியன், உஷா, பிரத்யுஷா, சண்டேஸ்வரர் முதலியவை இடம் பெறுகின்றன.
பிராகாரத்தில் அம்பாள் கோயில் தனிக்கோயிலாக உள்ளது. வேதநாயகி, நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் நெடிய உருவில் அருமையான காட்சி தருகின்றாள். சன்டிகேஸ்வரி மூர்த்தம் வெளியில் இடப்பால் (மண்டபத்தில்) உள்ளது.
இக்கோயில் A.H. 4. ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதென்பர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன.
அண்மையிலுள்ள கீழ்வேளூர், கச்சனர், திருத்துறைப்பூண்டி முதலியவை திருமுறைத்தலங்களாகும்.
மாசிமக உற்சவம் இத்தலத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி விழாவும் சிறப்புடையது. நாள்தோறும் நான்குகால வழிபாடுகள்.
"செம்பொனே பவளக் குன்றமே நின்ற
திரைமுகம் மால்முதற் கூட்டத் (து)
அன்பரா னவர்கள் பருகும் ஆரமுதே
அத்தனே பித்தனே னுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே
சங்கரா சாட்டியக் குடியார்க் (கு)
இன்பனே எங்கும் ஒழிவற நிறைந் (து) ஏழ்
இருக்கையில் இருந்தவா றியம்பே."
"செங்கணா போற்றி திசைமுகா போற்றி
சிவபுர நகருள் வீற் றிருந்த
அங்கணா போற்றி அமரனே போற்றி
அமரர்கள் தலைவனே போற்றி
தங்கள் நான் மறைநூல் சகலமுங் கற்றோர்
சாட்டியக் குடியிருந் தருளும்
எங்கள்நா யகனே போற்றி ஏழ் இருக்கை
இறைவனே போற்றியே போற்றி."
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
சாட்டியக்குடி - கிள்ளுகுடி அஞ்சல் - 611109
(வழி) தேவூர் - திருவாரூர் வட்டம்.
ஆன்மிக தகவல் பகிர்வு - http://www.kamakoti.org/tamil/tiruvasagam17.htm
திருவிசைப்பா
திருச்சாட்டியக்குடி
சாட்டியக்குடி - சாத்தியக்குடி
தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற தலம்.
மக்கள் வழக்கில் சாட்டியக்குடி, சாத்தியக்குடி என்று வழங்குகிறது.
1) கீழ்வேளுரிலிருந்து (கீவளுரிலிருந்து) கச்சினம் வழியாகத் திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் வழியில் இத்தலமுள்ளது.
2) திருவாரூரிலிருந்து தேவூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் தேவூரை அடுத்துச் சாலையோரத்தில் சாட்டியக்குடி உள்ளது. மெயின்ரோடிலிருந்து சற்றுத் தள்ளி, உள்ளே கோயிலிருக்கிறது. கோயில்வரை பேருந்து செல்லும்.
ஊர் - சாட்டியக்குடி. கோயில் - ஏழிருக்கை. ஆறு ஆதாரங்களுக்கும் மேலாகிய ஏழாவது இடத்தை - துவாதசாந்த இருக்கையை, ஏழிருக்கை என்பர். இந்நினைவைத் தரும் வகையில் கோயிலின் பெயர் அமைந்துள்ளது. இது பற்றியே இத்தலத்திருவிசைப்பா பதிகத்தில் கருவூர்த்தேவர் ஒவ்வொரு பாட்டிலும் "ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே" என்று பாடியுள்ளார்.
சாட்டியம் (ஜாட்டியம்) வெப்ப மிகுதியால் வரும் சுரநோய். வெப்ப நோய்க்குரிய தேவதையாகிய ஜ்வரதேவதை இறைவனை வழிபட்ட தலமாதலின் ஜாட்டியக்குடி (சாட்டியக்குடி) என்று பெயர் வந்தது. (குடீ - ஊர்) வெப்ப நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இன்றும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுக் குணமடைவது வழக்கில் இருந்து வருகிறது. சாட்டிய (சாண்டில்ய) முனிவர் வழிபட்ட தலமென்றும் சொல்லப்படுகிறது. கோயில் பிராகாரத்தில் இம்முனிவரின் சிலாரூப மேனியும் உள்ளது.
கருவூர்த்தேவரின் திருவிசைப்பா பாடல் பெற்றது.
இறைவன் - வேதநாதர், வேதபுரீஸ்வரர், ரிக்வேதநாதர்.
இறைவி - வேதநாயகி.
தீர்த்தம் - வேததீர்த்தம்.
தலமரம் - வன்னி.
மேற்கு நோக்கிய சந்நிதி.
முன் வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பால் வசந்த மண்டபம் உள்ள. நேரே சென்று 3 நிலைகளையுடைய உள்கோபுரத்தை தாண்டினால் நீர்கட்டும் அமைப்பிலுள்ள நந்தியையும் பலி பீடத்தையும் கண்டு தொழலாம்.
அடுத்துள்ள வாயிலைக் கடந்து இடப்பால் பிராகாரத்தில் திரும்பினால் விசுவநாத லிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராஜசபை, நவக்கிரகங்கள், சனிபகவான், பைரவர், சாண்டில்ய முனிவர், கருவூர்த்தேவர், சம்பந்தர், அப்பர், குபேரன், விநாயகர், சூரியன் முதலிய சந்நிதிகளைத் தொழலாம். தலமரம் - வன்னி, பிராகாரத்தைத் தொடர்ந்து வந்தால் விநாயகர் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் காட்சி தரும்.
வலம் முடித்து வாயிலைத் தாண்டி உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம் கிடைக்கிறது.
மூலமூர்த்தி - சிவலிங்கத் திருமேனி. சற்று உயர்ந்த பாணம். சதுர ஆவுடையார் அமைப்பு. உள்மண்டபத்தில் இடப்பால் உற்சவ மூர்த்தங்களுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இம்மூர்த்தங்களுள் சோமாஸ்கந்தர், நடராஜர், விநாயகர், வள்ளி தெய்வயானை, முருகன், பிரதோஷ நாயகர், திரிபுரசம்ஹாரர், சூரியன், உஷா, பிரத்யுஷா, சண்டேஸ்வரர் முதலியவை இடம் பெறுகின்றன.
பிராகாரத்தில் அம்பாள் கோயில் தனிக்கோயிலாக உள்ளது. வேதநாயகி, நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் நெடிய உருவில் அருமையான காட்சி தருகின்றாள். சன்டிகேஸ்வரி மூர்த்தம் வெளியில் இடப்பால் (மண்டபத்தில்) உள்ளது.
இக்கோயில் A.H. 4. ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதென்பர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன.
அண்மையிலுள்ள கீழ்வேளூர், கச்சனர், திருத்துறைப்பூண்டி முதலியவை திருமுறைத்தலங்களாகும்.
மாசிமக உற்சவம் இத்தலத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி விழாவும் சிறப்புடையது. நாள்தோறும் நான்குகால வழிபாடுகள்.
"செம்பொனே பவளக் குன்றமே நின்ற
திரைமுகம் மால்முதற் கூட்டத் (து)
அன்பரா னவர்கள் பருகும் ஆரமுதே
அத்தனே பித்தனே னுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே
சங்கரா சாட்டியக் குடியார்க் (கு)
இன்பனே எங்கும் ஒழிவற நிறைந் (து) ஏழ்
இருக்கையில் இருந்தவா றியம்பே."
"செங்கணா போற்றி திசைமுகா போற்றி
சிவபுர நகருள் வீற் றிருந்த
அங்கணா போற்றி அமரனே போற்றி
அமரர்கள் தலைவனே போற்றி
தங்கள் நான் மறைநூல் சகலமுங் கற்றோர்
சாட்டியக் குடியிருந் தருளும்
எங்கள்நா யகனே போற்றி ஏழ் இருக்கை
இறைவனே போற்றியே போற்றி."
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
சாட்டியக்குடி - கிள்ளுகுடி அஞ்சல் - 611109
(வழி) தேவூர் - திருவாரூர் வட்டம்.
ஆன்மிக தகவல் பகிர்வு - http://www.kamakoti.org/tamil/tiruvasagam17.htm
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பெயர் பெற்ற கோயில்கள்
அருமை , தொடருங்கள் பிரசன்னாபிரசன்னா wrote:அனைவருக்கும் தஞ்சை பெரிய கோயில் பற்றி அறிந்து இருப்போம்.... அதனால் "பூங்கோயில் - திருவாரூர்" பற்றி அறிந்த தகவலை முதலில் பதிவிடுகிறேன்....
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நிறுவனங்கள் பெயர் பெற்ற வரலாறு
» பாலிதானா கோயில்கள் - ஒரே மலையில் 900 கோயில்கள்!!!
» தென்னிந்தியக் கோயில்கள்… வட இந்திய கோயில்கள்… என்ன வேறுபாடு?
» விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..!
» புளூட்டோ அதிகாரப்பூர்வ பெயர் பெற்ற நாள்: மே 1- 1930
» பாலிதானா கோயில்கள் - ஒரே மலையில் 900 கோயில்கள்!!!
» தென்னிந்தியக் கோயில்கள்… வட இந்திய கோயில்கள்… என்ன வேறுபாடு?
» விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..!
» புளூட்டோ அதிகாரப்பூர்வ பெயர் பெற்ற நாள்: மே 1- 1930
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|