புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_m10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10 
284 Posts - 45%
heezulia
சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_m10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_m10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_m10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_m10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10 
19 Posts - 3%
prajai
சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_m10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_m10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_m10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_m10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_m10சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 1:42 pm

சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு
ப.ஜெகநாதன் காட்டுயிர் விஞ்ஞானி, மைசூர்.
First Published : 22 Apr 2012 03:07:00 PM IST

சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா 22sk3

பல ஆண்டுகளாக மார்ச் மாதங்களில் பத்திரிகைகளில் அடிக்கடி இடம்பெறும் செய்தி சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்பது. அதற்கான முக்கிய காரணங்கள் நகரமயமாதல், செல்போன் டவரிலிருந்து வரும் மின்காந்த அலைகள் என்றும் எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் அக்கட்டுரைகளில் சொல்லப்பட்டிருக்கும். இவையெல்லாம் எந்த அளவிற்கு உண்மை?

சிட்டுக்குருவியின் நிலை அவ்வளவு பரிதாபகரமாக உள்ளதா? இக்கேள்விக்கான விடையை அறிய முற்படும் முன் பல சங்கதிகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

சிட்டுக்குருவிகள் உலகின் பல பகுதிகளில் பரவியுள்ள ஒரு பறவையினம். இப்பறவைகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே அதிகம் தென்படும். உச்சந்தலையில் சாம்பல் நிறமும், தொண்டை கருப்பாகவும், உடலின் மேலே அரக்கு நிறத்திலும் இருப்பவை ஆண் குருவிகள். பெட்டையின் உடலில் இதைப்போன்ற நிறங்கள் இருக்காது, மாறாக வெளிறிய பழுப்பு நிறத்திலும் அதன் முகத்தை கொஞ்சம் உற்று நோக்கினால் கண்களின் மேலே நீண்ட புருவமும் இருப்பதைக் காணலாம். மளிகைக்கடை வாசலிலும், மார்க்கெட்டுகளிலும், நம் தெருக்களிலும் பறந்து திரிவதை எளிதில் காணலாம். சில நேரங்களில் நம் வீடுகளிலுள்ள சுவர் இடுக்குகளில் கூட வந்து கூடமைக்கும். சிறுவயதிலிருந்து நாம் பார்த்துப் பழகிய பறவைகளில் சிட்டுக்குருவிகள் முதலிடம் வகிக்கும்.

ஓர் உயிரினம் அழிந்துகொண்டு வருகிறது என்று சொல்வதற்கு முன் அதற்கான ஆதாரங்களை நாம் முன் வைக்கவேண்டும். முன்பு 20,000 இருந்தது இப்போது வெறும் 500 தான் இருக்கிறது என்று சொல்லும் போது, ஒரு காலத்தில் இருந்த அதன் எண்ணிக்கை நமக்குத் துல்லியமாக தெரிந்திருக்கிறது. இதுவே அடிப்படைத் தகவல். பிறகே அந்த உயிரினம் எண்ணிக்கையில் குறைந்துபோனதற்கான காரணத்தை ஆராய முற்படுவோம்.

இந்த அடிப்படைத் தகவல்களை தெரிந்துகொள்ளவே பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும். ஆனால் இந்தியா முழுவதிலும் சிட்டுக்குருவிகள் எங்கெங்கு, எத்தனை இருந்தன என்கிற தகவல் இதுவரை இல்லை. இந்தத் தகவல் இல்லாமல், நாம் பார்க்கவில்லை என்பதற்காக அவை அழிந்து வருகின்றன என்றும் அதற்கான காரணங்களையும் தக்க
ஆதாரங்களின்றி கூறுவது சரியல்ல.

சிட்டுக்குருவி அழிந்து வருவதாகக் கூறப்படும் தகவல்கள் எல்லாம் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. சிட்டுகுருவிகளைப்பற்றி இங்கிலாந்தில் 1940-களிலிருந்து இன்றுவரை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல பறவையியலாளர்கள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அங்குள்ள சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைப் பல ஆண்டுகளாக கணக்கெடுத்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் பல இடங்களில் பரவியிருந்த சிட்டுக்குருவியை 2002ம் ஆண்டு அந்நாட்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் பறவைகளின் பட்டியலில் அந்நாட்டு அறிவியலாளர்கள் சேர்த்துவிட்டனர். சிட்டுகுருவிகளின் எண்ணிக்கை நகரப்பகுதிகளிலிருந்து முன்பு இருந்ததைக்காட்டிலும் சுமார் 90 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டதாகப் பலகாலமாக நடத்தப்பட்டுவரும் ஆராய்ச்சியின் வாயிலாகத் தெரியவந்தது.

இங்கிலாந்தில் 1920களிலேயே சிட்டுக்குருவிகள் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறையத் தொடங்கின. அதாவது குதிரைவண்டிகள் போய் மோட்டார் வாகனங்கள் வந்த காலங்களில். குதிரைவண்டிகளில் கொண்டுசெல்லப்படும் மூட்டைகளிலிருந்து சிந்தும் தானியங்களையும், குதிரைகளின் கழிவுகளிலுள்ள செரிக்கப்படாத தானியங்களையும் உட்கொண்டு வாழ்ந்து வந்த சிட்டுக்குருவிகள் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை உயரத்தொடங்கிய பின் குறைய ஆரம்பித்தன.

எனினும் 2005ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 13 மில்லியன் சிட்டுக்குருவிகள் இருப்பது தெரியவந்தது. ஆனால் 1994 முதல் 2000 வரை தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையில் சற்று குறைந்தும், ஸ்காட்லண்ட் மற்றும் வெல்ஷில் அதிகரித்தும் காணப்பட்டன. வீட்டுச் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பூனைகளும், நகரிலுள்ள காகங்களும் இவற்றை இரையாகக்கொள்வது, சிட்டுக்குருவிகள் கூடுகட்ட ஏதுவான பல புதர்ச்செடிகள் கொண்ட தோட்டங்கள் இல்லாமை, இனப்பெருக்க காலங்களில் குஞ்சுகளுக்குத் தேவையான பூச்சிகள் இல்லாமல் போவதால் ஏற்படும் உயிரிழப்பு போன்றவை காரணங்களாக இருக்கலாம் என்று பரவலாகத் தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் சிட்டுக்குருவிகள் பல இடங்களில் மறைந்து வருவதைக்கண்டு அது இந்தியாவிற்கும் பொருந்தும் என நினைத்து இங்கும் அவற்றின் இனம் அழியாமலிருக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் ஒரு நடவடிக்கைதான் மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடப்பட்டதாகும். உண்மையில் நம்நாட்டிலுள்ள சிட்டுக்குருவிகளின் நிலை அவ்வளவு மோசமாக இன்னும் போய்விட்டதாகத் தெரியவில்லை. ஒரு சில நகரங்களிலுள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம், அப்பகுதிகளிலிருந்து மறைந்தும் போயிருக்கலாம். ஆனால் பல ஆண்டுகள் தொடர்ந்து இவற்றின் எண்ணிக்கையை இங்கெல்லாம் கணக்கெடுத்த பின்னரே நாம் இதன் வீழ்ச்சி பற்றியும் அதற்கான காரணங்களையும் அறுதியிட்டுச் சொல்லமுடியும்.

புறநகர்ப்பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும், இவற்றின் எண்ணிக்கை மாறாமலும், ஓரளவிற்கு நல்ல எண்ணிக்கையிலும் இருப்பதாக புதுதில்லி, உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் நடத்தப்பட்ட சில குறுகிய கால ஆராய்ச்சி முடிவுகளின் வாயிலாக அறியமுடிகிறது.

இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவுக்கு சிட்டுக்குருவிகள் மனிதர்களால் கொண்டு செல்லப்பட்ட காலம் ஒன்றுண்டு. அவை இப்போது எண்ணிக்கையில் மிகுந்து சில பகுதிகளில் அந்நாட்டுக்குச் சொந்தமான பல பறவைகளின் பெருக்கத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவிலுள்ள சிட்டுக்குருவிகளுக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கத்தான் வேண்டுமா? இந்தியாவில் அழிவின் விளிம்பில் தொற்றிக்கொண்டிருக்கும் பல பறவையினங்கள் இருக்கும் போது அவற்றையெல்லாம் காப்பாற்றும் முயற்சியின் ஈடுபடாமல் உலகெங்கிலும் காணப்படும் சிட்டுக்குருவிக்காக பரிதாபப்படுவது சரியா? இது எந்த விதத்திலாவது நம் நாட்டின் பல்லுயிர் பாதுகாப்பிற்கு உதவுமா?

உதவும். இதுவரை புலி போன்ற வசீகரமான விலங்குகளின் மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுப்பதற்கும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் தான் முதலிடம் தரப்பட்டு வந்தது. அந்த வகையில் பல இடங்களிலும் காணப்படும் சிட்டுக்குருவிகளின் பாதுகாப்பிற்காக அதற்கென ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நல்லதே.

இந்த விழிப்புணர்வை சிட்டுக்குருவிக்கு மட்டுமே இல்லாமல் நம் நாட்டில் உள்ள பல அழிந்து வரும் பறவையினங்களுக்காகவும் செய்ய வேண்டும். அதற்கு சிட்டுக்குருவி பாதுகாப்பை ஒரு முதல் படியாக எடுத்துக்கொள்ளலாம். பறவைகளால் இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்க இதைப் போன்ற தினங்களை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் ஏற்படும் விழிப்புணர்வினால் அவற்றைப் பாதுகாக்கும் எண்ணமும், அவை அழியாமல் இருக்கச் செய்ய வேண்டிய தகுந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் பெருகும்.

பத்திரிகைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேளையில் பல நேரங்களில் அனுபவமில்லாதவர்களின் கருத்துக்களையோ, வேறு நாட்டில் நடந்த ஆராய்ச்சியின் முடிவுகளையோ வெளியிடுகின்றன. இதன் காரணமாக, மூன்று முக்கிய பிரச்னைகள் எழுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று பறவை ஆராய்ச்சி நிபுணர் கோபி சுந்தர் கூறுகிறார்.

முதலாவதாக பிணந்தின்னிக்கழுகுகளின் நிலையை உதாரணமாகக் சொல்லலாம். இப்பறவைகள் நம் நாட்டின் பல பகுதிகளிலிருந்து முழுவதுமாக அற்றுப்போய்விட்டன. அடுத்த சந்ததியினர் இப்பறவையை படங்களில் மட்டுமே பார்த்தறியும் நிலை ஏற்பட்டுள்ளது. தகுந்த அடிப்படைத் தகவல் இல்லாத சிட்டுக்குருவியின் வீழ்ச்சியை பெரிதுபடுத்துவதால் அழிவின் விளிம்பில் இருக்கும் இதைப்போன்ற பல பறவைகளைக் காப்பாற்ற வேண்டியதற்கான கவனம் சிதறியோ, திசை திருப்பப்பட்டோ விடுகிறது.

எதற்கு அக்கறை காட்ட வேண்டுமோ அதை விட்டுவிட்டு தேவையில்லாத அல்லது உடனடியாக கவனம் செலுத்தத் தேவையில்லாத ஒன்றிற்காக நம் நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்வது எந்த விதத்திலும் உபயோகமாக இருக்காது.
இரண்டாவதாக, இது தான் இப்பறவைகள் குறைவதற்கான காரணம் என அறிவிக்கப்படுவதால் பலரும் இதையே உண்மையென நம்பிவிடும் அபாயம் உள்ளது. இதனால் இத்துறையில் பலகாலமாக ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்களின் நீண்டகால உழைப்பும் வீணாகிறது.

மூன்றாவதாக மிக முக்கியமானதாக, அத்தகவல்களை அவர்கள் மறுக்கும் போதோ, உண்மையான காரணங்களை முன் வைக்கும் போதோ அவர்களின் கூற்று செல்லுபடியாகாமல் போகும் அபாயமும் உள்ளது.

நீங்கள் சிட்டுக்குருவியின் காதலரா? அது குறைந்து போனதற்காக அனுதாபப்படுகிறீர்களா? அது மட்டுமே போதாது. அவற்றை காப்பாற்றுவதற்கு. அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கும் அறிவியல்பூர்வமான முயற்சிகளில் பங்களியுங்கள். சிட்டுக்குருவியை பார்க்கும் அதேவேளையில் இந்தியாவிலுள்ள சுமார் ஆயிரத்து முந்நூறு பறவைகளின் மீதும் கவனம் செலுத்துங்கள். உங்களது ஆர்வமும், அனுதாபமும் சிட்டுக்குருவியிலிருந்து தொடங்கட்டும்.

சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா?

சிட்டுக்குருவிகள் குறைந்து விட்டன என்று சொல்லும் முன் இதற்கு முன் எவ்வளவு இருந்தது என்பதை தெரிந்திருப்பது மிக மிக அவசியம். ஆனால் இந்தியா முழுவதிலும் எங்கெங்கு எத்தனை சிட்டுக்குருவிகள் இருந்தன என்பது இதற்கு முன் கணக்கெடுக்கப்படவில்லை. இந்த அடிப்படைத் தகவலை இந்தியா முழுவதிலிருந்தும் திரட்டுவதற்கான முயற்சி இம்மாதம் தொடங்கப்பட்டுள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.

www.citizensparrow.in எனும் வலைத்தளத்தில் உங்களைப் பதிவு செய்து கொண்டு நீங்கள் சிட்டுக்குருவியைப் பார்த்த இடங்களையும், பார்க்காத இடங்களையும் கூட தெரிவிக்க வேண்டும். இதைப்போன்ற எளிய கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையையும், எங்கே அதிகமாக, எங்கே குறைவாக இருக்கிறது என்பதை அறிய முடியும்.
நாடு முழுவதிலிருந்தும் தகவல் கிடைத்தால்தான் இப்பறவைகள் குறைவதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை சரியாகக் கணிக்க முடியும். இக்கணக்கெடுப்பு 31, மே மாதம் வரைதான். தகவலை தெரிவித்து சிட்டுக்குருவிகளுக்கு உதவுங்கள்.

தினமணி sunday கொண்டாடம்

ர.சிவா
ர.சிவா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 22/04/2012

Postர.சிவா Mon Apr 23, 2012 3:19 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா சூப்பருங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 3:27 pm

ர.சிவா wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா சூப்பருங்க

உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 23, 2012 7:23 pm

உங்கள் வீடுகளில் மாடியில் பறவைகள் குடிக்க தண்ணீர் வையுங்கள் ... தண்ணீர் இல்லாமலும் சிட்டு குருவிகள் சாகின்றன ...
முடிந்தால் நாஞ்சில் நாடனின் , தீதும் நன்று என்ற புத்தகத்தில் நீரின்றி அமையாது உலகு என்ற அத்தியாயத்தை ஒருமுறை படித்து பாருங்கள்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 24, 2012 12:01 pm

புரட்சி wrote:உங்கள் வீடுகளில் மாடியில் பறவைகள் குடிக்க தண்ணீர் வையுங்கள் ... தண்ணீர் இல்லாமலும் சிட்டு குருவிகள் சாகின்றன ...
முடிந்தால் நாஞ்சில் நாடனின் , தீதும் நன்று என்ற புத்தகத்தில் நீரின்றி அமையாது உலகு என்ற அத்தியாயத்தை ஒருமுறை படித்து பாருங்கள்

அனைவராலும் செய்ய கூடிய ஒன்று..... செய்யலாமே.... நன்றி புரட்சி நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக