புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_m10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_m10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10 
284 Posts - 45%
heezulia
முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_m10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_m10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_m10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_m10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10 
19 Posts - 3%
prajai
முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_m10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_m10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_m10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_m10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10 
7 Posts - 1%
mruthun
முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_m10முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் அளித்த உற்சாக "டானிக்'


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 1:39 pm

முதல்வர் அளித்த உற்சாக "டானிக்' 22sk1

பிரபலமான அரசியல் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கல்வித் துறைக்கு வருவது மிகமிக அரிது. அதிலும் அறிவுக் களஞ்சியமான பல்கலைக்கழகத்தின் தலைமைப் பதவிக்கு வருவது சாதாரண விஷயமல்ல.


நாவன்மையால் பொதுமக்களை தன் வசம் கட்டிப்போட்டு வைத்தவரும், "நாவலர்' என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவருமான இரா.நெடுஞ்செழியன் குடும்பத்திலிருந்து கல்வியாளர் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக வந்துள்ளார். அதிலும் இப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்பது அவருக்கு கூடுதல் சிறப்பு. ஆம்! அவர் தான் பேராசிரியர் கல்யாணி மதிவாணன்.

பதவியேற்று ஓரிரு நாள்களே ஆன நிலையில், கடைநிலை ஊழியர் முதல் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினரையும் நேரடியாகச் சந்தித்து கருத்துகளைக் கேட்கும் புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளார். தமிழகத்தின் முதன்மையான பல்கலைக்கழகமாக உயர்த்துவோம் என்ற முழக்கத்தோடு பணிகளைத் தொடங்கியுள்ளார்.
இறுக்கமான முகத்துடன் செல்வோர் அனைவரும், அவரது அறையை விட்டு வெளியே வரும்போது, முகமலர்ச்சியுடன் காணப்பட்டனர்.

அவரது பணிகளுக்கு இடையே, அவரைச் சந்திக்கச் சென்றபோது "தினமணி' என்றதும் உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார்.
உங்களது குடும்பம் பற்றி?

எனது மாமனார் அனைவரும் அறிந்த முன்னாள் நிதியமைச்சர் நெடுஞ்செழியன். எனது கணவர் மதிவாணன், கோ-ஆப் டெக்ஸில் பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகள் சொப்னா மதிவாணன், அமெரிக்காவில் சமையற்கலை தொழில்நுட்ப நிர்வாகவியலில் பட்டம் பெற்று, தொழில்முனைவோராக இருக்கிறார். மகன் ஜீவன் நெடுஞ்செழியன், சர்வதேச டென்னிஸ் விளையாட்டு வீரர். தற்போது திருச்சியில் நடைபெறும் சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். எனது தந்தை முனைவர் குத்தாலிங்கம் இதே பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக சிறப்பாகப் பணியாôற்றியுள்ளார்.

அரசியல் குடும்பத்தில் குடிபுகுந்த உங்களால், கல்வித் துறையில் சாதிக்க முடிந்தது எப்படி?

நான் திருவனந்தபுரத்தில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோதே, எனக்கு திருமணம் நடைபெற்றது. எனக்கோ தொடர்ந்து படிக்க வேண்டும் என்று ஆவல். இதை குறிப்பால் உணர்ந்த எனது மாமனாரும், மாமியார் விசாலாட்சி நெடுஞ்செழியனும், கணவரும் தொடர்ந்து படிக்க முழு சுதந்திரம் அளித்தனர். அதிலும், எனது மாமியார் 3-ம் ஆண்டு பி.ஏ. தேர்வு எழுதி முடிக்கும் வரை என்னுடன் திருவனந்தபுரம் வந்து தங்கி உற்ற துணையாக இருந்தார். பின்னர், சென்னை எத்திராஜ் கல்லூரியில் எம்ஏ, டி.லிட் மற்றும் பிஎச்.டி பட்டங்களைப் பெற்றேன். அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து படிப்படியாக ஆங்கிலத் துறை தலைவர் வரை கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் கல்விப் பணி ஆற்றியுள்ளேன். இதற்கு எனது குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு அளித்ததே காரணம். எனது மாமியார் விசாலாட்சி நெடுஞ்செழியன், இன்று வரை எனக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருந்து வருகிறார்.

துணைவேந்தர் பதவி குறித்து?

"துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள நீங்கள் நிச்சயம் சாதிப்பீர்கள்' என முதல்வர் ஜெயலலிதா எனக்கு ஊக்கம் கொடுத்துள்ளார். அதிகப் பொறுப்புகளைக் கொண்டுள்ள பதவி துணைவேந்தர் பதவி என எனது தந்தையும் அடிக்கடி கூறுவார். ஆனால், என்னைப் பொறுத்தவரை பணியாற்றுவதற்குச் சளைக்க மாட்டேன். முதல்வர் கொடுத்துள்ள ஊக்கத்துடன் இன்னும் மேலும் மேலும் உழைக்கத் தயாராக இருக்கிறேன். 2023-க்குள் உயர்கல்வியில் தமிழகத்தை உன்னத நிலைக்கு கொண்டு செல்லும் தொலை நோக்குத் திட்டத்தை முதல்வர் உருவாக்கியுள்ளார். அவரது தொலை நோக்குப் பார்வையை, செயல்படுத்தும் திட்டங்களை, முழு ஈடுபாட்டுடன் செயல்படுவேன். எனக்கு கொடுத்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழகத்தில் 2-வது நிலையிலுள்ள இந்த பல்கலைக்கழகத்தை முதல்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றிக் காட்டுவேன். இதை என்னால் கண்டிப்பாகச் சாதிக்க முடியும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வருவதாகக் கூறியுள்ளீர்கள்? அதற்கான திட்டங்கள் ஏதும் வைத்துள்ளீர்களா?

பல்கலைக்கழகத்தில் அனைத்து கீழ்நிலையிலுள்ள ஊழியர் முதல் துறைத் தலைவர்கள், அலுவலர்கள் வரை அனைவரும் மனமகிழ்ச்சியுடன் பணியாற்றும் சூழலை உருவாக்குவது தான் எனது முதல் பணி. அவரவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியை யார் தலையீடும் இல்லாமல் சுதந்திரமாகப் பணியாற்ற வாய்ப்புக் கொடுக்கப்படும். அப்போதுதான் பல திறமைகள் வெளிக் கொணரப்படும்.

இது பல்கலைக்கழக வளர்ச்சிக்கு மட்டுமின்றி, செம்மையாகச் செயல்படவும் உதவும். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தை "பசுமை வளாகமாக' மாற்றவும் திட்டமிட்டுள்ளேன்.

பசுமை என்றால் மரங்களை மட்டும் நடவு செய்வதல்ல. சுற்றுச்சூழலுக்கு உகந்த சூரிய சக்தி மின் உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கவல்ல எரிசக்தியை பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல், கழிவுகளை மறுசுழற்சிக்கு கொண்டு வருதல் போன்ற பல்வேறு சமுதாய மேம்பாட்டுக்கு உகந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் வளாகமாக மாற்றப்படும்.

பல்கலைக்கழக எரிசக்தித் துறை பேராசிரியர்களுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளேன். ஜெர்மன் உதவியுடன் அதற்கான திட்டப் பணிகளை துவக்க கேட்டுக் கொண்டுள்ளேன். இந்தக் காலச் சூழலுக்கு உகந்த சர்வதேச தரமுள்ள பல்வேறு படிப்புகள் தொடங்கவும் திட்டமிட்டுள்ளேன்.

தமிழகத்தில் முதலிடத்தை பெற்றவுடன், நாட்டிலும் இப்பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெறவும் முயற்சிப்பேன். ஆனால், 3 ஆண்டுகளில் இவ்வளவு பணிகளை முடிக்க இயலுமா? என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முதலிடம் பெறுவதற்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்புகிறேன். சாதிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக