ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு)

5 posters

Go down

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு) Empty நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு)

Post by இரா.பகவதி Sun Apr 22, 2012 5:57 pm

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு) 540370_391543154218641_100000888786399_1228710_848453496_n



நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு)

பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்கள் ஹீமோபீலியா (Hemophilia) பற்றி முகநூலில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அந்த கட்டுரையை அவரது அனுமதியின் பேரில் எனது பதிவாக வெளியிடுகிறேன். தாங்கள் படித்துப் பார்த்து தங்களது கருத்தை தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.


ஹீமோபிலியா (Hemophilia ) என்பது இரத்தம் தொடர்பான ஒரு
பரம்பரை நோய். இது ஆண்களிடமிருந்து ஆண்களுக்கு மட்டுமே வரும்.

இதில் பெண்கள் ஹீமோபிலியா நோயின் சுமப்பாளர்களாக மட்டுமே இருப்பார்கள். இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, ஏதாவது ஒரு காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறத் தொடங்கினால், இரத்தம் நிற்காது; இரத்தம் உறையாது. தொடர்ந்து இரத்தம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் பொதுவாக நம் உடலில் ஒரு வெட்டும் காயம் பட்டு இரத்தம் வெளிப்பட்டால், இரத்தம் வெளிக் காற்றைச் சந்தித்த நொடியிலேயே, அதனுடன் தொடர்பு கொண்டு, இரத்தம் உறைந்துவிடும். இதுதான் இயல்பு. அப்படி இன்றி தொடர்ந்து இரத்தம் உடலிலிருந்து வெளியேறிக்கொண்டே இருந்தால், இரத்த இழப்பு ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடும்.

இரத்தம் உறையாமை நோய்க்கான வேதிப்பொருள். Factor viii

இரத்தம் உறைதலின் காரணிகள்

பொதுவாக இரத்தம் உறைவதற்காக, மரபணுவில் உள்ள ஒரு காரணி (clotting factor VIII ) இரத்தத்தில் இருக்கும். இது இரத்தம், இரத்தக் குழாய்க்குள் இருக்கும் போது செயல்படாது ; இரத்தம் குழாயை விட்டு வெளியேறினால் தான் இரத்தம் உறையும். உயிர் காப்பதற்கான இயற்கையின் ஓர் ஏற்பாடு இது. சிலரது உடலில் இந்த காரணி ஏதோ ஒரு காரணத்தினால் இல்லாமல் இருக்கலாம்/குறைபாடு இருக்கலாம். .அவர்களுக்கு இரத்தம் உறையாது. மேலும் இரத்தம் உறைவதற்கான காரணி, "X" குரோமோசோமில்தான் உள்ளது .நம் உடலில் ஆண் பெண் பாலினத்தை நிர்ணயிக்க, ஆண் உடலில் "XY" குரோமோசோமும், பெண்ணிடம் "XX" குரோமோசோமும், உள்ளன.

நமது உடல் செல்லும், உட்கருவும், அதற்குள் உள்ள குரோமோசோமும் உள்ளன.

ஆண், பெண்ணுக்கான குரோமோசோம்கள். பெண்:XX,ஆண் XY குரோமோசோம். ஆணின் குரோமோசோம்தான் எல்லா குரோமோசோம்களிலும் சிறியது. இது , காலப்போக்கில் அளவில் சிறியதாகி விட்டது.

ஆணின் :XY குரோமோசோம். பெண்ணின்XX குரோமோசோம்
பாலினம் உருவாதல். இதனை நிர்ணயம் செய்வது ஆணின் விந்தணுவில் உள்ள X மற்றும் Y சுமந்து வரும் தனித்தனி விந்தணுக்களே..!

மனித உடலின் ஒவ்வொரு செல்லிலும், 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இதில் 22 ஜோடி குரோமோசோம்கள், உடல் நிலைக்கும் ஒரே ஒரு ஜோடி குரோமோசோம் மட்டும் பாலினத்தை நிர்ணயிக்கிறது .உடலின் ஒவ்வொரு செல்லிலும், இந்த பாலின குரோமோசோம்கள் உள்ளன. கரு உருவாகும்போது, பாலினம் நிர்ணயிக்கப் படுவது, ஆணின் விந்து சுமந்து வரும் X மற்றும் Y உள்ள விந்தணுக்களால்தான்.! X குரோமோசோம் இரு பாலினத்திலும் உண்டு. இதில் X குரோமோசோமில்தான் இரத்தம் உறையும் காரணி உள்ளது. இதில் ஏதாவது குறைபாடு இருந்தால், இரத்தம் உறையாது. ஆனால். ஆணுக்கு ஒரே ஒரு X குரோமோசோம் உள்ளதால், அதில் உள்ள குறைபாடு படக்கென வெளிப்படும். பெண்ணுக்கு இரண்டு X குரோமோசோம்கள் உள்ளதால், ஏதாவது ஒரு குரோமோசோமில் குறைபாடு இருந்தாலும் , மற்றது சமாளித்துக் கொள்ளும், பிரச்சினை வெளியில் தெரியாது. ஆண்களின் X குரோமோசோமில் குறைபாடு/பாதிப்பு இருந்தால் அது உடனே வெளியில் தெரியும். அதனால்தான் வியாதி வருகிறது. அப்படி ஒரு நோய் தான் ஹீமோபிலியா என்னும் இரத்தம் உறையாமை நோய். இது பரம்பரை பரம்பரையாக ஆண்களிடம் மட்டுமே வரும். பெண்கள் இந்த நோய்க்கான காரணியைச் சுமந்து, தன் குழந்தைகளிடம் இறக்கி விடுவார்கள்.



இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி

விக்டோரியா மகாராணியின் சந்ததிகளில்.. இரத்தம் உறையாமை பாதிப்பு உள்ளவர்கள் வட்டப் புள்ளியில் குறியிடப்பட்டவர்கள். இரத்தம் உறையாமை நோய் இங்கிலாந்தில் உள்ள அரச பரம்பரையில் காணப்பட்டது. இந்த நோயின் மரபணு விக்டோரியா மகாராணியிடம் இருந்தது. அவர்தான் தாராளமாக தன் இளவரசர்களுக்கெல்லாம் தந்தார். அவர்களுக்கு இரத்தம் உறையாமை நோய் வந்து கஷ்டப்பட்டார்கள். இறந்தும் போனார்கள். . இது அரச பரம்பரையில் வந்ததால் இதனை பெருமையுடன் அரச வியாதி (Royal Disease) என அழைத்தனர். முதன் முதலில் இதனைப் பற்றிய பதிவு இரண்டாம் நூற்றாண்டில் பாபிலோனியாவில் உள்ளது. அவர்கள் குழந்தைகளுக்கு சுன்னத் செய்யும் போது, தொடர்ந்து குழந்தைகளின் இறப்பு நேரிட்டதால் இந்த நோயைப் பற்றிக் கண்டுபிடித்தனர். இன்று உலகில் இந்த வியாதியுடன் இருந்தாலும் சிலருக்கு அதன் தன்மை தெரியாது. வியாதி பற்றியும் தெரியாது. (எங்கள் பழனியில் கூட ஒரு பையன் இந்த நோயுடன் உள்ளான். அவனது பெற்றோருக்கு இந்த நோயின் தன்மை, தீவிரம் தெரியாது. ஒரு மருத்துவர் தான் இதனை அறிந்து தக்க தருணத்தில் ஆலோசனை தந்துள்ளார்). இரத்த உறவில் திருமணம் செய்வதால்தான், இந்த பரம்பரை நோய் அதிகரிக்கிறது. இது பரம்பரை நோய், மரபணு மூலம் வரும் என்பதால், இந்த நோய்க்கு மருந்தே கிடையாது. ஆனால், கவனத்துடன் இருந்தால், இதனைக் கட்டுப் படுத்தலாம். முக்கியமாக இரத்த உறவுக்குள் திருமணம் நடக்காமல் இருந்தால், இப்படிப் பட்ட இறப்பு நிகழும் நோய்களை தவிர்க்கலாம். இதன் முக்கிய காரணம் மரபணுவில் உள்ள சிக்கல்தான். இது இரத்த உறவு திருமணம் மூலம் அதிகரிக்கிறது.


இரத்தம் உறையாமை நோயை 2 வயதுக்கு முன்னே கண்டறிதல்

பாதிப்பு ஏற்படும் இடங்கள்

உலகில் 75 % இரத்தம் உறையாமை நோய் உள்ளவர்களுக்கு சரியான சிகிச்சை கிடையாது. இவர்களைப் பற்றிய சரியான கணக்கெடுப்பும் கிடையாது. இரத்தம் உறையாமை நோயில் மூன்று வகை உண்டு. உலக ஹீமோபிலியா அமைப்பு, 1963 ல், கனடாவிலுள்ள மாண்ட்ரியலில் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலக நல நிறுவனத்தால் அங்கீகரிப்பட்ட அமைப்பாகும். இதில் 113 நாடுகள் உறுப்பினராக உள்ளன.இரத்தம் உறையாத நோயாளிகளுக்கு விழிப்புணர்வு உண்டாக்குவதற்காக, 1998 லிருந்து, ஏப்ரல் 17 ம் நாள் உலக இரத்தம் உறையாமை தினம், கடைப் பிடிப்பது என தீர்மானிக்கப் பட்டு, அது நடைமுறையிலும் இருந்து வருகிறது. இரத்தம் உறையாமை அமைப்பின் நிறுவனரான பிரான்க் ச்சானபெல் ( Frank Schnabel) லின் பிறந்த நாளான ஏப்ரல் 17 ம் நாளையே, அந்த நோயுற்ற மக்களுக்காக கடைப்பிடிக்கின்றனர்.


இரத்தம் உறையாமை நோயின் சிகிச்சை

இரத்தம் உறையாமை நோய்க்கு மரபணு சிகிச்சை இரத்தம் உறையாமை நோய் வந்தவர்களின் வாழ்நாள் குறைவு.அதிகமாக, 11 வயது வரை தான் இருப்பார்கள். வியாதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், கொஞ்ச காலம் வாழலாம். 2006 ம் ஆண்டு கணக்குப்படி, அமெரிக்காவில் 13 ,500௦௦ பேர் இரத்தம் உறையாமை நோயால் அவதிப்படுகின்றனர். இங்கிலாந்தில் 50,௦௦௦ 000,000பேர் இந்த நோயுடன் உள்ளனர். உலகில் பொதுவாக,5 ,௦௦௦000 ௦௦௦ ஆண்களுக்கு ஒருவர் வீதம் இந்நோய் பாதிப்பு வருகிறது. இந்தியாவில் 1,000௦௦௦ ஆண் குழந்தை பிறப்புக்கு, 32 குழந்தைகளுக்கு இரத்தம் உறையாமை நோய் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 1,300 புது இரத்தம் உறையாமை நோய் உண்டாகிறது. பெங்களூரில் 51 .31 லட்சம் மக்கள் தொகையில், இதுவரை 400௦௦ குடும்பங்களில் மட்டுமே இரத்தம் உறையாமை நோய் உள்ளதாக தெரியவருகிறது. இந்நோய் எத்தனை பேருக்கு உள்ளது என்ற சரியான கணக்கெடுப்பு இல்லை.தமிழ் நாட்டிலும் எத்தனை பேர் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற தகவல் இல்லை.

முகநூல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு) Empty Re: நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு)

Post by முரளிராஜா Mon Apr 23, 2012 4:11 am

தங்கள் பகிர்வுக்கு நன்றி பகவதி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு) Empty Re: நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு)

Post by realvampire Mon Apr 23, 2012 4:56 am

உலக மற்றும் இந்திய அளவிலான ஹீமோபீலியா சொசைட்டி சாப்டர்களின் முகவரி (தமிழ்நாடு உட்பட).
இந்த ஹீமோபீலியா குறைபாடு உள்ளவர்கள் இதில் உறுப்பினர்களாகி கொள்வதன் மூலம் குறைபாட்டின் தன்மை, பிற பிரிவுகள், அவசர கால தற்காப்பு மற்றும் அருகில் உள்ள ஹீமோபீலியா சிறப்பு மருத்துவர் விபரம், சிகிச்சை மற்றும் மருந்து கட்டண சலுகைகளை பெறலாம்.
இணைய முகவரி : ஹீமோபீலியா {உலகம்} , ஹீமோபீலியா {இந்தியா}
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 31/01/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு) Empty Re: நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு)

Post by முத்துராஜ் Mon Apr 23, 2012 5:34 am

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் பிறக்கும் பிள்ளைகு ஏதாவது குறைபாடு இருக்கும் என்கிறார்களே உன்மயா?


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு) Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு) Empty Re: நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு)

Post by ந.கார்த்தி Mon Apr 23, 2012 6:22 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு) Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு) Empty Re: நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு)

Post by realvampire Mon Apr 23, 2012 8:54 am

முத்துராஜ் wrote:நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் பிறக்கும் பிள்ளைகு ஏதாவது குறைபாடு இருக்கும் என்கிறார்களே உன்மயா?
நிச்சயமாக வாய்ப்பு உள்ளது .. மரபுவழி நோய்கள் தொடர..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 31/01/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு) Empty Re: நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum