புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
செங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_lcapசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_voting_barசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_lcapசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_voting_barசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
செங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_lcapசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_voting_barசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
செங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_lcapசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_voting_barசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
செங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_lcapசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_voting_barசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
செங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_lcapசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_voting_barசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
செங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_lcapசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_voting_barசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
செங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_lcapசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_voting_barசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
செங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_lcapசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_voting_barசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_lcapசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_voting_barசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
செங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_lcapசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_voting_barசெங்குந்தர் குலத்தின் வரலாறு  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்குந்தர் குலத்தின் வரலாறு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 22, 2012 10:50 am

செங்குந்தர் குலத்தின் வரலாறு உங்களிடம் இருக்கின்றதா? இருந்தால் தரமுடியுமா? அதாவது ஒட்டக்கூத்தரின் வரலாறு இருந்தால் எனது மின்னஞ்சலில் அல்லது உங்கள் களஞ்சியத்தில் இட முடியுமா?

-பாஸ்கரன்

(மின்னஞ்சல் வழி பாஸ்கரன் என்ற நண்பர் உதவி கோரியுள்ளார், உதவுங்கள் உறவுகளே)



செங்குந்தர் குலத்தின் வரலாறு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 22, 2012 11:19 am

செங்குந்தர் எனும் கைக்கோளர் - ஒரு பார்வை
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தமிழகத்தில் உள்ள ஒரு இனம் செங்குந்தர் என்றழைக்கப்படும் கைக்கோளர். கைக்கோளர் எனும் பெயர் செங்குந்தர் என்ற பெயரோடு சேர்ந்து வழக்கத்தில் வர ஆரம்பித்தது சுமார் 1200 ஆண்டுகளாக. இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக சேலம், ஆத்தூர், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், ஆற்காடு, காஞ்சிபுரம், ஜெயங்கொண்டம், திருமழபாடி, தஞ்சை, சென்னை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் வணிகர்களாகவும் மற்ற தொழில்களிலும் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

"கூவிளம் இதழி தும்பை
கொண்டார்ச்சனை செய்தபேர்க்கு
தேவநாடாளவைக்கும் திருகுகைவேல்
செங்குந்தம் துணை" (செங்குந்தர் சதகம்)
செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

குறிஞ்சி நிலப்பகுதியிலிருந்த வந்த இனத்தவர், முருகனை தன் குலதெய்வமாக வழிபடும் இவர்கள் முருகனின் அம்சமான வீரபாகுத் தேவரின் வழிவந்தவர்கள். இதனாலோ என்னவோ வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற படைவீரர்களாக திகழ்ந்தனர். மூவேந்தர்களிடமும் மிகவும் நம்பிக்கைக்குரிய அந்தரங்க படைவீரர்களாய் இருந்த இவர்கள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தனர். ”வாள் தாங்கிய கைக்கோளர்” என்று கல்வெட்டுகளில் உள்ள செய்தியால் இவர்கள் ஈட்டி மட்டும் அல்ல வாள் பிடித்தும் போரிட வல்லர் என்று அறிகிறோம்.

செங்குந்தர்கள் முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த 9 இரத்தினங்களில் இருந்து பிறந்தவர்கள் என்பதால், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொழுது 9 செங்குந்தர்கள் வீரர்கள் உடையணிந்து வீரபாகுத் தளபதிகளாய் குமரன் சூரனை சம்ஹரிக்க உதவுவது இன்றும் நடைமுறையில் உண்டு. திருசெந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் மாசித்திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின் மண்டகப்படியாக இன்றும் நடைபெறுகிறது.


தெரிஞ்ச கைக்கோளப்படை என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வனில் கல்கி கைக்கோளப்படை பற்றி எழுதியிருப்பதை சற்று பாருங்கள்,

"மூன்று கம்பீர புருசர்கள் பிரவேசித்தார்கள். அவர்களுடைய முகங்களிலும் தோற்றத்திலும் வீர லக்ஷ்மி வாசம் செய்தாள். அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மையாளர் என்று பார்த்தவுடனே தெரிந்தது. (இன்று தமிழ் நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோள வகுப்பார் சோழப் பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற வீர வகுப்பாராயிருந்தனர்). அவர்களில் பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழ சக்கரவர்த்திகள் 'அகப் பரிவாரப் படை'யை அமைத்துக் கொள்வது வழக்கம். அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்குத் 'தெரிஞ்ச கைக்கோளர் படை' என்ற பெயர் வழங்கியது. அந்தந்தச் சக்கரவர்த்தி அல்லது அரசரின் பெயரையும் படைப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதுண்டு.

"சுந்தர சோழ தெரிஞ்ச கைக்கோளப் படையார் தானே?" என்று அநிருத்தர் கேட்டார்.

"ஆம், ஐயா! ஆனால் அப்படிச் சொல்லிக் கொள்ளவும் எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது."

"அது ஏன்?"

"சக்கரவர்த்தியின் சோற்றைத் தின்றுகொண்டு ஆறு மாத காலமாக இங்கே வீணில் காலங்கழித்துக் கொண்டிருக்கிறோம்."

"உங்கள் படையில் எத்தனை கை? எத்தனை வீரர்கள்?"

"எங்கள் சேனை மூன்று கைமா சேனை, இவர் இடங்கை சேனைத் தலைவர்; இவர் வலங்கை சேனைத் தலைவர்; நான் நடுவிற்கைப் படைத்தலைவன்.ஒவ்வொரு கையிலும் இரண்டாயிரம்வீரர்கள். எல்லோரும் சாப்பிட்டுத் தூங்கி கொண்டிருக்கிறோம். போர்த் தொழிலே எங்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது."

"உங்களுடைய கோரிக்கை என்ன?"

"எங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் மாதண்ட நாயகராயிருக்கும் சைன்யத்திலே சேர்ந்து யுத்தம் செய்ய விரும்புகிறோம்!"
"ஆகட்டும்; தஞ்சைக்குப் போனதும் சக்கரவர்த்தியின் சம்மதம் கேட்டுவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்."

"பிரம்மராஜரே! அதற்குள்ளே இலங்கை யுத்தம் முடிந்து விட்டால்...?"

"அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம், இலங்கை யுத்தம் இப்போதைக்கு முடியும் என்பதாகத் தோன்றவில்லை."

"ஈழத்துச் சேனாவீரர்கள் அவ்வளவு பொல்லாதவர்களா? எங்களை அங்கே அனுப்பி வையுங்கள். ஒரு கை பார்க்கிறோம்!..."

"ஒரு கை என்ன? நீங்கள் மூன்று கையும் பார்ப்பீர்கள், தெரிஞ்ச கைக்கோளரின் மூன்று கை மாசேனை யுத்தக்களத்தில் புகுந்துவிட்டால் பகைவர்களின் பாடு என்னவென்று சொல்ல வேண்டுமோ? நடுவிற்கை வீரர்கள் பகைவர் படையின் நடுவில் புகுந்து தாக்குவீர்கள். அதே சமயத்தில் இடங்கை வீரர்கள் இடப்புறத்திலும் வலங்கை வீரர்கள் வலப்புறத்திலும் சென்று இடி விழுவதுபோலப் பகைவர்கள்மீது விழுந்து தாக்குவீர்கள்..."

"அப்படித் தாக்கித்தான் பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்தோம்; சேரர்களை முறியடித்தோம்."


அப்பப்பா! என்னவொரு அசாத்திய வீரம், சுந்தர சோழரின் மந்திரியான அநிருத்த பிரம்மராயர் சாதாரண ஆளில்லை, திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த இவர் சோழர்களின் சாணக்கியர், இவரின் செவியும், கண்ணும் சோழ நாடு முழுவதும், இவருக்கு தெரியாமல் சோழ நாட்டில் எதுவுமே நடக்காது அந்நாளில். இப்பேர்பட்ட ஒருவரே கைக்கோளப் படையை புகழ்கிறார் என்றால் அவர்களின் வீரம் எந்த அளவிற்கு சிறந்ததாயிருந்திருக்க வேண்டும்.

செங்குந்தர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்த பிரபந்த திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

சோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டு) படிப் படியாக நெசவுத்தொழிலுக்குள் நுழைந்த இவர்கள் 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தங்கள் குலத்தொழிலாகிய படைத் தொழிலை விட்டு முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக் கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.

18ஆம் நூற்றாண்டு முதலே இவர்கள் முதலி எனும் பெயரை தங்கள் பெயருக்கு பின் சேர்த்துக்கொண்டனர் என்பது அந்நாள் பாண்டிச்சேரியின் கவர்னருக்கு முதன்மை துபாஷியாய் இருந்த ஆனந்த ரங்கப் பிள்ளை அவர்களின் டைரி குறிப்பிலிருந்து தெரியவருகிறது.

திருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமைபெற்றிருந்தனர் என்றும், மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை அளித்திருக்கின்றனர் என்றும் India before Europe by Catherine Ella Blanshard Asher, The Political Economy of Commerce: Southern India, 1500-1650, BySanjay Subrahmanyam, Textiles in Indian Ocean Societies, By Ruth Barnes ஆகிய நூல்கள் தெரிவிக்கின்றன.

விக்கிரமச் சோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன் முதலிய மூன்று சோழர்களிடம் அரசவைப் புலவராக இருந்த ஒட்டக் கூத்தர் செங்குந்த இனத்தைச் சேர்ந்தவர்.

இரட்டைப் புலவர்கள் என்று பெயர் பெற்ற மதுசூரியர் மற்றும் இளஞ்சூரியர் இவர்களும் செங்குந்த மரபில் தோன்றியவர்கள். இவர்கள் பிறந்தது சோழநாட்டின் ஆமிலந்துறையில், இவர்களில் ஒருவர் குருடர் மற்றவர் முடவர், இருப்பினும் முடவர் வழி காட்ட குருடர் அவரைத்தோள் ஏற்றிகொண்டு இருவருமாய் பல சிவாலயங்களுக்குச் சென்று பாடல்கள் பாடியுள்ளனர். இவர்களில் ஒருவர் முதல் இரண்டு அடியை பாட மற்றவர் அடுத்த இரண்டடியை பாடி முடிப்பார். காளமேகப் புலவரின் நண்பர்களாய் இருந்த இவர்கள் அவருடைய மறைவின் போது, புலவரின் உடலை நெருப்பு தன்னுள் வேகவைக்கத் தொடங்குவதை கண்ணுற்ற முடவர், முகத்தில் சோகம் தாளாது அறைந்து கொண்டார்.

'ஆசுகவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ்க் காளமேகமே'
என முடவர் கதற, குருடர் உடனே,
'-பூசுரா விண்கொண்ட செந்தனவாய் வேகுதே ஐயையோ
மண்தின்ற பாணமென்றவாய்!'
எனப்பாடி அழுதார்.

அரசியலில் - அண்ணாதுரை, ஆன்மிகத்தில் - திருமுருக கிருபானந்த வாரியார், கவிதையில் ஒட்டக்கூத்தர், பாவேந்தர் பாரதிதாசன், விடுதலைப் போராட்டத்தில் - தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன் என அறிஞர்களும், கவிஞர்களும், தியாக செம்மல்களும் என கைக்கோளர் குலத்தில் உதித்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

72 உட்பிரிவுகளை கொண்ட கைக்கோளர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும், இலங்கையிலும் முடியாட்சி காலம் தொட்டு வாழ்ந்து வருகின்றனர். கொங்கு நாட்டு சிற்றரசர்களில் ஒரு பிரிவினரான கெட்டி முதலியார் கட்டிய தாரமங்கலம் கோவில் சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தை பற்றியும் கெட்டி முதலியார்களை பற்றியும் தனியொரு பதிவில் பார்ப்போம்.


(பி.கு : இந்த கட்டுரைக்கான குறிப்புகள் தஞ்சை நூலகத்தில் இருந்தும், இணையத்தில் (குறிப்பாக மரத்தடி, முத்தமிழ் மன்றம், தினமலர்) இருந்தும் எடுக்கப்பட்டது. இரட்டையர் பாடல் ஷைலஜா அவர்களின் கட்டுரையில் இருந்து எடுப்பட்டது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்)

நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 22, 2012 1:29 pm

செங்குந்தர் என்பது இந்திய மாநிலமான தமிழ் நாட்டில் இருக்கும் ஒரு சாதியை குறிக்கும். இச்சமூக மக்கள் கைக்கோளர் என்கிற பெயராலும் அழைக்கப்படுவர். செங்குந்தர் முதலியார் என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்படும் சாதிகளில் ஒன்றாகும்.

பெயர்க்காரணம்

செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

வரலாற்றுச் சான்றுகள்

தெரிஞ்ச கைக்கோளப்படை என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன.

செங்குந்தர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்த பிரபந்த திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

நன்றி:சாந்தன்
பிற்கால சோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டு) படிப் படியாக நெசவுத் தொழிலுக்குள் நுழைந்த இவர்கள் 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக் கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.

திருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமை பெற்றிருந்தனர் என்றும், மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை இவர்கள் அளித்திருக்கின்றனர்.

மக்கள் பரப்பு

இம்மக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, கோவை தர்மபுரி, தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் வணிகத்திலும் பிற தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



செங்குந்தர் குலத்தின் வரலாறு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 22, 2012 2:13 pm

மூவருலாவின் ஆசிரியர் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர். இவர் சோழவள
நாட்டில் தஞ்சை ஒட்டங்காடு என்ற இடத்திற்கு அருகில் உள்ள மலரி என்னும் ஊரில்
பிறந்தவர். இவர் தந்தையார் சிவசங்கர பூபதி. தாயார் வண்டார் பூங்குழலி.
ஒட்டக்கூத்தருடைய இயற்பெயர் கூத்தர் என்பதாகும். இது தில்லை நடராசப்
பெருமானுடைய திருப்பெயராகும். கலைமகளை வழிபட்டு ஈட்டி எழுபது என்ற நூலைப்
பாடி, வெட்டப்பட்ட தலைகள் ஒட்டி உயிர் பெறுமாறு பாடியதால் ஒட்டக்கூத்தர் என்று
அழைக்கப் பெற்றார் என்றும், விக்கிரம சோழன் தன்மீது பாடிய உலாவில் உள்ள ஒரு
கண்ணியை ஒட்டிச் செய்யுள் இயற்றும்படி கேட்க, உடன் ஒட்டிச் செய்யுள் பாடியமையால்
ஒட்டக்கூத்தர் எனப் பெற்றார் எனவும் சிலர் கூறுவர். கூத்தர் என்பது இவரின்
இயற்பெயர் என்றும், ஒட்டம் என்பது இடத்தைப் பொருத்து வந்ததென்றும் ஆய்வாளர்
சொல்லுவர்.
இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும். வடமொழி நூல்களிலும் நல்ல புலமை
பெற்றவர். சோழ மன்னர் மூவருக்கும் அரசவைப் புலவராக இருந்தவர். இம்மூவருள்
ஒருவன் இவருக்கு அரிசிலாற்றங்கரையில் ஒரு ஊரையே கொடுத்தான். இது கூத்தனூர்
என வழங்கப்பெறுகிறது. இவ்வாறு தமிழகமெங்கும் பல ஊர்கள் இவர்
பெயரில் திகழ்கின்றன.

இவர் அரும்பைத் தொள்ளாயிரம், ஈட்டி எழுபது, காங்கேயன் நாலாயிரக்
கோவை, குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், தக்கயாகப் பரணி முதலிய
நூல்களையும் எழுதியுள்ளார். இவர் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், காளக்கவி
என்றும் அழைக்கப் பெற்றார்.

குலோத்துங்க சோழன் உலா

இரண்டாம் குலோத்துங்க சோழன் வரலாறு:

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரால் எழுதப்பெற்ற மூவருலா என்னும் நூலில்
இரண்டாம் குலோத்துங்க சோழன் உலாத்தலைவனாக இடம் பெறுகிறான். தன்
தந்தை விக்ரம சோழனால் கி.பி. 1133 இல் இளவரசர் பட்டம் சூட்டப் பெற்றான்.
பிறகு 1135 இல் அரியணை ஏறினான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் நாடு
எல்லா வளங்களும் பெற்று அமைதியான ஆட்சி நடந்தது.

இவனுக்கு வழங்கப்பெறும் சிறப்புப் பெயர்கள் அபயன், அநபாயன்,
எதிரிலிப் பெருமாள், கலிகடிந்த சோழன், திருநூற்றுச் சோழன், பெரிய
பெருமாள் என்பனவாகும். இவனுக்கு தியாகவல்லி, முக்கோக்கிழானடிகள் என்ற
இரு மனைவியர் இருந்தனர். இருவரில் தியாகவல்லி பட்டத்தரசியாக
இருந்தவள். இவளுக்குரிய சிறப்புப் பெயர் புவனமுழுதுடையாள் என்பதாகும்.
இராசராசன் என்னும் பெயருடைய மகன் ஒருவன் இருந்தான்.

தில்லையில் இவன் செய்த திருப்பணிகளைக் குலோத்துங்க சோழன் உலா,
இராசராச சோழன் உலா, தக்கயாகப் பரணி ஆகிய நூல்கள் விளக்கமாகக்
கூறுகின்றன. சிதம்பரம் சிவன் கோவிலுக்குப் பொன் வேய்ந்து, திருச்சுற்றுச்
சுவரும் அமைத்தான்.

ஏழுநிலைக் கோபுரங்கள் அடங்கிய சிவகாமிக் கோட்டம் அமைத்தான். அதனருகே
திருச்சுற்று மாளிகையும், திருக்குளமும் அமைத்தான். பொன்னாலும் மணியாலும் அழகு
செய்யப்பெற்ற தேர் ஒன்றைச் செய்தான். நகரெங்கும் பல மண்டபங்களைக் கட்டினான்.
இவனது ஆட்சிக் காலத்தில் எல்லா வளங்களும் நிறைந்த பெருநகரமாகச் சிதம்பரம்
விளங்கியது.

திருவாரூர்க் கோவிலில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
சைவ நாயன்மார்களுக்குச் சிலைவைத்து வழிபாட்டிற்கும், விழாவிற்கும் செலவுசெய்ய
நிலங்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறான். இவன் வைணவ சமயத்தில் கருத்து
வேறுபாடு கொண்டிருந்தான்.

இவன் தமிழ்ப் புலமையும், பல்வகைச் செய்யுள் இயற்றும் ஆற்றலும்
இலக்கிய, இலக்கண அறிவும் கொண்டிருந்தான். இத்தகைய திறமையானவனுக்கு
ஆசிரியராக இருந்தவர் ஒட்டக்கூத்தர். ஒட்டக்கூத்தர் இவனை ஞான
கெம்பீரன், நித்திய கீத பிரமோகன், தூரக வித்தியா விநோதன் என்று
புகழ்ந்து கூறியுள்ளார். ஒட்டக்கூத்தர் இவனது அவைக்களப் புலவராக இருந்தார்.
இவர் இவன்மீது குலோத்துங்க சோழன் உலா, பிள்ளைத்தமிழ் போன்ற
நூல்கள் இயற்றியுள்ளார்.

திருநாம நல்லூர், திருவதிகை, திருமுதுகுன்றம் போன்ற
ஊர்களிலும் திருப்பணிச் செய்துள்ளான். இவன் கி.பி.1133 லிருந்து 1150 வரை
சோழ நாட்டை ஆண்டான். இவன் காலத்தில் சைவ சமயம் ஏற்றம் பெற்றிருந்தது.

மேலும் விபரம் அறிய
இங்கு செல்லவும்!
நன்றி; tamilvu

ர.சிவா
ர.சிவா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 22/04/2012

Postர.சிவா Sun Apr 22, 2012 4:18 pm

பகிர்வுக்கு நன்றி ......
நானும் ஒரு செங்குந்தன் தான் அருமையிருக்கு

sakthi108
sakthi108
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 20/08/2010

Postsakthi108 Sun Apr 22, 2012 4:41 pm

அருமையான பதிவு.

இன்றைய உலகில் தங்களது வம்ச வரலாற்றை முழுமையாக எடுத்துச் செல்லும் தலைமை அரிதாகிப் போனது உண்மை.

ஈகரைக்கு நன்றி.

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Apr 22, 2012 4:53 pm

பகிர்வுக்கு நன்றி ......
நானும் ஒரு செங்குந்தன் தான்.......... அருமையிருக்கு ஜாலி



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
செங்குந்தர் குலத்தின் வரலாறு  812496
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 22, 2012 6:56 pm

sakthi108 wrote:அருமையான பதிவு.

இன்றைய உலகில் தங்களது வம்ச வரலாற்றை முழுமையாக எடுத்துச் செல்லும் தலைமை அரிதாகிப் போனது உண்மை.

ஈகரைக்கு நன்றி.

சக்தி அண்ணா முதலில் உங்களை உறுபினர் பகுதியில் அறிமுக படுத்தி கொள்ளுங்கள் உங்களை வரவேற்க மற்றும் உங்களை பற்றி தெரிந்து கொள்ள நம் உறவுகள் ஆவலோடு இருக்கின்றனர் அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 22, 2012 7:03 pm

இரா.பகவதி wrote:
சக்தி அண்ணா முதலில் உங்களை உறுபினர் பகுதியில் அறிமுக படுத்தி கொள்ளுங்கள் உங்களை வரவேற்க மற்றும் உங்களை பற்றி தெரிந்து கொள்ள நம் உறவுகள் ஆவலோடு இருக்கின்றனர் அன்பு மலர்

அருமை பகவதி!

மேலும் தகவல்கள் இருந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

வாங்க பிரகாசம், நலமா?



செங்குந்தர் குலத்தின் வரலாறு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Apr 22, 2012 9:03 pm

நலம் சிவா அண்ணா



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
செங்குந்தர் குலத்தின் வரலாறு  812496
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக