புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
61 Posts - 47%
heezulia
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
5 Posts - 4%
Raji@123
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
3 Posts - 2%
prajai
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
2 Posts - 2%
Barushree
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
176 Posts - 41%
heezulia
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
9 Posts - 2%
prajai
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சரஸ்வதி வீணை Poll_c10சரஸ்வதி வீணை Poll_m10சரஸ்வதி வீணை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரஸ்வதி வீணை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 22, 2012 11:40 pm

சரஸ்வதி வீணை Veenai00

இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனை இசைய வைக்கிற, அமைதியடைய வைக்கிற அருமையான விஷயம் இசை.

"இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்''


என்று இசையை பற்றிய திரைப்பட பாடல் ஒன்று உண்டு. இசையை தரும் இசைக்கருவி களில் எத்தனையோ வகைகள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது, வீணை. இது ஒருவகை நரம்பு இசைக்கருவி.

வீணை இசைக்கருவி பண்டையகாலம் தொட்டு வாசிக்கப்பட்டு வந்தாலும் கி.பி.17-ம் நூற்றாண்டில் தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. இது தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரின் காலத்தில் தான் நிகழ்ந்தது.

வீணை என்றாலே தஞ்சை தான் நினைவுக்கு வரும். தஞ்சாவூர் வீணை தான் பிரசித்தி பெற்றவையாக இன்னும் விளங்கி வருகிறது.

வீணைகள் பலா மரத்தினால் செய்யப்படுகிறது. அதில் குடம், மேற்பலகை, தண்டி, வளைவுமூடி மேல் உள்ள மாடச்சக்கை, சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் போன்ற பாகங்கள் உள்ளன. வீணையில் 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் அமைக்கப்பட்டு இருக்கும். வாசிப்பு தந்திகள் சாரணி, பஞ்சமம், மந்தரம், அநுமந்தரம் ஆகியவையாகும். சுருதி தந்திகள் பக்கசாரணி, பஞ்க பஞ்சமம், ஹெச்சு சாரணி ஆகியவை.

தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டு இருக்கும். குடம் உள்ள பக்கம் பெரிதாகவும், யாளி முனைப்பக்கம் சிறியதாகவும் காணப்படும். தண்டியின் இரு பக்கத்திலும் மெழுகுச்சட்டங்கள் இருக்கும். அவற்றின் மேல் 2 ஸ்தாயிகளை தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினால் செய்யப்பட்டிருக்கும். யாளி முகத்திற்கு அருகில் இருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும், பயன்படுகிறது. 4 வாசிப்பு தந்திகள் லங்கர்களின் நுனியில் உள்ள வளையங்களில் முடியப்பட்டு குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டு இருக்கும். நாகபாசத்தில் சுற்றப்பட்டு இருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியை செம்மைபடுத்த பயன்படும். வளையங்களை நாகபாசபக்கமாக தள்ளினால் சுருதி அதிகரிக்கும்.

தஞ்சை வீணையின் குடத்தின் வெளிப்புறத்தில் 24 தெரணை கோடுகள் நாபுக்கள் கீறப்பட்டு இருக்கும். வீணையில் பல வகை உண்டு. இதில் ஒரே மரத்துண்டில் தண்டியும், குடமும் குடைந்து செய்யப்பட்டு உள்ள வீணைக்கு ஏகாந்த வீணை என்று பெயர். வீணை குடத்தின் மேல் பல வகை களில் பல ஒலித்துளைகள் வட்டமாக போடப்பட்டு இருக்கும். இந்த துளை நாதத்தை வெளியே கொண்டு வருவதற்கு உதவும்.

வலது கையின் ஆள்காட்டி விரலும், நடுவிரலும் வீணையின் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும், நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள- சுருதித்தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப் படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல் களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொள்வார்கள். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன் னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி கீழ் தண்டில் உள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார். தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது காலில் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்.



சரஸ்வதி வீணை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 22, 2012 11:40 pm

வீணையின் வகைகள்

வீணைகளில் சாதாரண வீணை (சரஸ்வதி வீணை), ஏகாந்த வீணை, கார்விங் வீணை, உட்கார்விங் வீணை, விசித்திர வீணை, ருத்திரவீணை ஆகிய வகைகள் உள்ளன. இதில் விசித்திர வீணை என்பது கோட்டுவாத்தியம் எனவும் அழைக்கப்படும். இந்த வகை வீணை அரிது. இந்த வகை வீணை இசைப்பவர்களும் அரிது. இப்போது விசித்திரவீணை, ருத்திர வீணை போன்றவைகளும் அரிதாகிவிட்டன. ஒரு வீணை தயாரிக்க ரூ.8 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. முன்பு வீணை தயாரிக்க அதிக நாட்கள் ஆனது. தற்போது 3, 4 பேர் வேலையை பிரித்து செய்வதால், 20 நாட்களில் ஒரு வீணையை பூர்த்தி செய்துவிடுகிறார்கள். வீணைக்கு தேவையான பலாமரங்கள் பண்ருட்டியில் இருந்தும், கம்பிகள் மும்பையில் இருந்தும், பைபர் (சுரக்குடுவை) சென்னையில் இருந்தும் வரவழைக்கப்படுகிறது. வீணையின் அளவு 41/4 அடி. வெளிக்கூடு அகலம் 141/2 அங்குலம். எடை சராசரியாக 7 கிலோவில் இருந்து 9 கிலோ வரை இருக்கும்.

தஞ்சையில் 3-வது தலைமுறையாக வீணை தயாரிக்கும் சகோதரர்களான வெங்கடேசன், அனந்தநாராயணன் ஆகியோர் சொல்கிறார்கள்..

"நாங்கள் மரத்திலான வீணைகள் மட்டுமின்றி வெள்ளி வீணை, தோல் வீணை, எலக்ட்ரானிக் வீணை, எப்.எம். வீணை, பைபர் வீணை போன்றவைகளையும் தயார் செய்கிறோம். இதில் எப்.எம். வீணையை அது இசைக்கும் இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவிற்குள் எப்.எம்.மூலம் கேட்கலாம். தற்போது 50 குடும்பங்கள் இந்த வீணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

முந்தைய காலங்களில் வீணை குடத்தை அலங் கரிக்க யானை தந்தத்தை தகடுகளாக அறுத்து பூவேலைப்பாடுகளுடன் பயன்படுத்தினார்கள். பின்பு மான் கொம்புகள் பயன்படுத்தப்பட்டன. இப்போது பூ வேலைப்பாடுகளை மரத்திலும், பிளாஸ்டிக் தகடுகளிலும் செய்கிறார்கள். இதை லாபம் சம்பாதிக்கும் தொழிலாக நடத்துவதில்லை.

ருத்திர வீணை என்பது அரிதாகிவிட்டது. விசித்திர வீணையும் அரிதாகிவிட்டது. இந்த வீணையில் மெழுகுசட்டம், 24 மெட்டு போன்றவை இருக்காது. மேல் பகுதியில் 4 கம்பிகளும், 4 தாள கம்பிகளும், உட்பகுதியில் 12 தாளக்கம்பிகளும் இருக்கும். தற்போது வீணை அதிகம் தேவைப்படுகிறது. ஆனால் தயாரிப்பு குறைவாக உள்ளது. தஞ்சையில் செய்யும் வீணை தான் உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துச்செல்லப்படுகிறது'' என்று அவர்கள் கூறினார்கள்.

தினத்தந்தி



சரஸ்வதி வீணை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 22, 2012 11:49 pm

இதில் எப்.எம். வீணையை அது இசைக்கும் இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவிற்குள் எப்.எம்.மூலம் கேட்கலாம்.
பத்து மீட்டருக்கு எதுக்கு எப். எம்... நேர்லயே கேக்கலாமே? வீணைகளில் இவ்வளவு வகைகளா?அற்புதம்.
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக