ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவினைப் படிப்பினைகள்

Go down

பிரிவினைப் படிப்பினைகள் Empty பிரிவினைப் படிப்பினைகள்

Post by பிரசன்னா Sat Apr 21, 2012 1:46 pm

பிரிவினைப் படிப்பினைகள்
எம்.மணிகண்டன்First Published : 21 Apr 2012 05:36:29 AM IST

புதிதாக ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும்போது முதலில் எதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்? ராணுவத்துக்கா? இல்லை. புதிய நாணய முறைக்கா? அதுவும் இல்லை. வெளிநாட்டு உறவு? இல்லவே இல்லை.
பிறகு எதுதான் மிக முக்கியம் என்று கேட்கிறீர்களா? உலகின் பொதுவான நடைமுறை வேறு எதுவாகவும் இருக்கலாம். ஆனால், தெற்கு சூடான்காரர்களைக் கேட்டால், எல்லாவற்றையும்விட நாட்டின் தேசிய கீதம்தான் மிக மிக முக்கியம் என்கிறார்கள்.

இனப்படுகொலை, உள்நாட்டுப் போர், எண்ணெய்ச் சண்டை, வறுமை என ஆப்பிரிக்காவின் வழக்கமான எல்லாச் சாபக்கேடுகளையும் கொண்ட நாடுதான் சூடான். இந்த நாட்டிலிருந்து கடந்த ஆண்டு ஜூலையில் பிரிந்து சென்றபோது, தெற்கு சூடானில் முழுமையாக இருந்தது புத்தம் புதியதாக ஒரு தேசிய கீதமும் நிறைய கனவுகளும் மட்டும்தான்.
சேர்ந்து இருப்பதால் காட்டப்படும் அலட்சியத்தின் வலியைவிட பிரிவினையால் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று அந்த நாட்டினர் முடிவுக்கு வந்தார்கள்.

இதையடுத்து, கார்டோமை தலைநகராகக் கொண்ட சூடான் அதே பெயரிலேயே தொடர, ஜுபாவை தலைநகராக்கி தெற்கு சூடான் உதயமானது.

பிரிவினைக்கு முதல் காரணம் மதம். வடக்கின் ஆட்சியாளர்கள் மிகத் தீவிரமான முஸ்லிம்கள் என்றால், தெற்கில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள்.

வானத்தில் இருந்து பார்த்தால், தெற்கு பச்சை நிறமாகவும், வடக்கு பழுப்பு நிறமாகவும் தெரியுமாம். காரணம், தெற்கு முழுவதும் காடுகளும் மலைப் பகுதிகளும் நிறைந்திருக்கின்றன. வடக்கின் பெரும்பகுதி பாலைவனம். இப்படி இயற்கையே இரு நாடுகளையும் பிரித்து வைத்திருக்கிறது.

பிரிவினையில் ஏற்பட்ட பிரச்னைகள் இன்றைக்கும் தொடர்ந்து வருவதற்கு எண்ணெய் வளங்கள்தான் முக்கியக் காரணம். தன்னாட்சி பெற்ற காலத்திலிருந்தே தெற்கு சூடானின் பட்ஜெட் வருவாயில் 98 சதவிகிதம் எண்ணெயின் மூலமாகத்தான் வந்து கொண்டிருந்தது. ஆனால், அங்கு கடல்பகுதி கிடையாது என்பதால், நேரடி ஏற்றுமதி சாத்தியமில்லை.

வடக்கின் நிலப்பகுதி வழியாக அமைக்கப்பட்டிருக்கும் குழாய்கள் வழியாகத்தான் செங்கடலில் உள்ள சூடான் துறைமுகத்துக்கு கொண்டு சென்று எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியும். இதனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வடக்கைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் தெற்கு சூடானுக்கு இருக்கிறது.

விடுதலையின்போது தேசிய கீதத்துக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள், ப்ளூ நைல், தெற்கு காடஃபோன் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் தெளிவான எல்லைக் கோட்டைக் குறிக்கவில்லை.

ஒருபுறம் தெற்கு சூடான் விடுதலை ஏற்பாடு நடந்து கொண்டிருக்க, நாடுகளைப் பிரிப்பது தொடர்பான கருத்தறியும் வாக்கெடுப்பைப் புறக்கணித்த அபியே பகுதியில், தீவிரமான சண்டை நடந்து கொண்டிருந்தது. அதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எண்ணெய் வருவாயைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பான உறுதியான உடன்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, தனி நாடு கோரிப் போராடுவோருக்கு மிக முக்கியமான இன்னொரு படிப்பினை தெற்கு சூடான் விவகாரத்தில் இருக்கிறது. பிரிவினைக்கு முன்னதாக தெற்கு சூடானைச் சேர்ந்தவர்கள் வடக்கிலும், அங்குள்ளவர்கள் தெற்கிலும் லட்சக்கணக்கில் வசித்து வந்தார்கள். வேலைக்காகவும், தொழில் செய்யவும் இடம்பெயர்ந்த அவர்களை இரு நாடுகளும் இப்போது மிக மோசமாக நடத்துகின்றன.

இவர்களில் அரசுகளுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களும் அடங்குவார்கள் என்பதுதான் விசேஷம். அதாவது, சூடானுக்கு ஆதரவான கிளர்ச்சிக்காரர்கள் தெற்கு சூடானிலும், தெற்குக்கு ஆதரவானவர்கள் வடக்கிலும் இருந்து அந்தந்த நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளுக்கு அரசுகளின் ஆசியும் உண்டு. இன்றைய பிரச்னைகளுக்கு இதுதான் முக்கியக் காரணம்.

விடுதலைக்கு முன்பும் பின்பும் எல்லா வகையிலும் பொறுப்புடன் நடந்து கொண்டதாகக் கருதப்படும் தெற்கு சூடான், இப்போது வடக்குப் பகுதியிலுள்ள ஹெக்லிக் எண்ணெய் வயலை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதன் மூலம் ஒரு வரலாற்றுத் தவறைப் புரிந்திருக்கிறது. இதனால், தீவிரமான யுத்தம் தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன.

தெற்கு சூடான் பிரிந்து சென்றதிலிருந்து இன்று வரைக்கும் அந்நாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதில் எந்தக் குறையும் இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடையை விலக்கிக் கொண்டிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை, யுனெஸ்கோ, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளில் தெற்கு சூடான் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த வகையில் தனிநாடு கோரிப் போராடுவோருக்கு நம்பிக்கையளிக்கும் உந்து சக்தியாக தெற்கு சூடான் இருந்து வந்தது. ஆனால், தனி நாடு கோரும் எத்தனையோ இனங்களுக்கு அடக்குமுறைகள் மட்டுமே பதிலாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், ஒரு அருமையான வாய்ப்பை தெற்கு சூடான் வீணடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் புதிய ஆட்சியாளர்களின் தேவையற்ற நடவடிக்கைகளால், நாட்டில் குழப்பம்தான் மிஞ்சியிருக்கிறது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் அதற்கான தீர்வு இருப்பதாகவும் தெரியவில்லை.

கருத்தறியும் தேர்தலில் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்த மக்கள், வெறும் இனப் பெருமையையும் கெüரவத்தையும் மட்டும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். என்றாவது ஒரு நாள் போர்கள் ஓய்ந்து அமைதி ஏற்படும் என்கிற கனவும் அவர்களுக்கு நிச்சயமாக இருந்திருக்கும். அந்தக் கனவு என்றைக்கு மெய்ப்படுகிறதோ, அந்த நாள்தான் புதிய நாட்டுக்கு உண்மையான விடுதலை கிடைத்த நாளாக இருக்க முடியும். வெறும் தனிநாட்டுப் பெருமையால் மட்டுமே ஆகப்போவது என்ன?

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum