புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_m10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_m10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_m10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_m10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_m10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_m10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_m10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_m10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_m10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_m10இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:13 pm

இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! BT_1334737609இரவில் ஆண்கள், பெண்களாக மாறும் அபூர்வக் கோயில்! E_1334738020

எச்சரிக்கை...! நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அபூர்வமாகத் தோன்றலாம். இப்படிக்கூட செய்வார்களா என்று நினைக்கலாம்.

ஆனால், படித்து முடித்ததும் “அட!’ என்று நீங்கள் வியப்பின் உச்சகட்டத்துக்கே போகப்போவது மட்டும் நிச்சயம்!
கருநாகப்பள்ளி என்கிற இடம். நேரம், இருள் பரவ ஆரம்பிக்கும் இரவின் தொடக்கம். அது கொஞ்சம் இருட்டான பகுதி. ஒரு சின்ன குடிசை மாதிரியான இடத்துக்குள் ஓர் இளம் வயது வாலிபர் உள்ளே செல்கிறார். உள்ளே மங்கலான வெளிச்சம் மட்டுமே இருக்கிறது. கொஞ்ச நேரம் கழித்து அந்த குடிசைக்குள் இருந்து ஓர் அழகான இளம் பெண் வருகிறாள்!

என்னநடக்கிறது குடிசைக்குள்ளே...! ஆவலாகவும் ஒருவித எதிர்பார்ப்போடும் எட்டிப்பார்த்தால் உள்ளே சென்ற இளைஞன் அங்கே இல்லை எங்கே போனான்... எப்படிப் போனானா அவன்?

நம் முகத்தில் தெரியும் கேள்வியை ஊகித்துவிட்டவர்போல் குடிசைக்குள்ளிருக்கும் இன்னொரு நபர் சொல்கிறார். “என்ன உள்ளே வந்த பையனைத் தேடறீங்களா? இப்போ உங்க கண்ணு முன்னாடியேதானே வெளியே போனான்...!’

“என்னது! அவன் இப்போதான் வெளியே போனானா? ஒரு பெண்ணுதானே வெளியில போனா... பையன் யாரும் போகலையே?’ குழப்பத்தோடு கேட்டதற்கு வந்த பதிலால் கொஞ்சம் அதிர்ச்சி, ஆச்சரியம் எல்லாவற்றிலும் ஆழ்ந்துபோனது உண்மை.

“இப்போ வெளியே போச்சே... அந்தப் பெண்ணுதான் அந்தப் பையன்...!’ இதுதான் நமக்குக் கிடைத்த பதில்.

பையன்தான் பெண்ணா மாறிட்டானா? உள்ளே ஏதாவது மாய மந்திரம் நடந்துச்சா? இல்லைன்னா புராணக்கதையில வருமே பார்வதிதேவி குளிச்ச குளத்துல ஆண்கள் யாராவது தெரிஞ்சோ தெரியாமலோ இறங்கிட்டா பெண்ணா மாறிடுவாங்கன்னு, அது மாதிரி இந்த இடத்துக்கு சாபம் ஏதாவது இருக்குமா? அடுக்கடுக்காக வந்த யோசனைகளை அப்படியே தள்ளிவைத்தவிட்டு அங்கே இருந்த நபரிடமே கேட்டோம்.

தம்பி ஊருக்கு புதுசா? என்பதுபோல் ஒரு பார்வையை வீசிவிட்டு அவர் சொல்ல ஆரம்பித்தார்.
“அவங்கள்லாம், பக்கத்துல இருக்கற கொற்றங்குளக்கரை தேவி கோயிலுக்குப் போறவங்க...!’

சொன்ன அவர் சின்ன இடைவெளி விட, கோயில் என்று காதில் விழுந்தபிறகு சும்மா இருக்கலாமா? மற்றதையெல்லாம் கோயிலுக்கே சென்று பார்த்து, கேட்டுக் கொள்ளலாம் என்று வேகவேகமாகப் புறப்பட்டோம். அங்கே நாம் பார்த்த அபூர்வக் காட்சிகளைத்தான் படங்களாக நீங்கள் பார்க்கிறீர்கள்.

படத்தில் நீங்கள் பார்க்கும் எல்லாப் பெண்களுமே அழகு, நளினம் எல்லாம் அச்சு அசல் பெண் போல இருந்தாலும் நிஜத்தில் ஆண்கள்...!

நம்பமுடியவில்லை அல்லவா? ஆனால் அதுதான் உண்மை...! ஆண்கள் எல்லாம் பெண்களாக மாறியிருப்பது ஏதோ சாபமோ மந்திர மாயமோ இல்லை. தாங்களே விரும்பி அவர்கள் அணிந்துகொண்டிருக்கும் வேடம்தான் அது.

ஏன் இப்படி ஒரு வேடம்? ஆண்கள் கோயிலுக்குப் போகும்போது இப்படித்தான் போகவேண்டும் என்பது கட்டாயமா என்ன? எல்லாவற்றையும் அந்தப் பெண்கள்... தப்பு தப்பு... ஆண்களிடமே விசாரித்தோம்.

“நல்லா வேலை கிடைக்கணும்னு அம்மாகிட்டே பிரார்த்திச்சிருந்தேன். எனக்கு வேலை கிடைச்சிடுச்சு. வேலை கிடைச்சா பெண் வேடமிட்டு விளக்கு எடுக்கறேன்னு பிரார்த்திச்சிருந்தேன். அதனால் ஹைதராபாத்திலிருந்து இப்போ இங்கே என்னோட பிரார்த்தனையை நிறைவேற்ற வந்திருக்கேன்!’ என்றார், இளைஞர் அசோக்லால்.

அடுத்து ஓர் இளம் வயதுப் பெண்மணி இரண்டு சிறுமிகளை அழைத்துவர அவரை நெருங்கி, “சார் உங்க மகள்களுக்காக வேண்டிக்கிட்டுதானே நீங்க பெண் வேடம் போட்டிருக்கீங்க?’ நாமாகவே கண்டுபிடித்துவிட்ட பெருமையுடன் கேட்டோம்.
“இல்லீங்க. என்னோட பசங்க அனந்தகிருஷ்ணனும், கோவிந்தனும்தான், நல்லா படிப்பு வரணும்கிறதுக்காக பெண்வேஷம் போட்டிருக்காங்க. நாங்க இவங்க அம்மா!’ அந்த பெண்மணி சொல்ல, அசடு வழிந்துவிட்டு, நிஜமான பெண் யார், வேடமணிந்தவர் யார்? எனப் புரியாமல் சுற்றி சுற்றி வந்து, ஆண்கள் எல்லோருக்கும் ஏதாவது ஒரு பிரார்த்தனை இருப்பதையும் அது நிறைவேறியபின் அல்லது நிறைவேறவேண்டும் என்ற வேண்டுதலுடன் வருபவர்கள் பெண்வேடம் அணிந்து கையில் திருவிளக்குடன், இரவு முழுவதும் வலம் வருவதையும் தெரிந்து கொண்டு, ஒருவழியாக கோயிலுக்குள் சென்றோம்.
அடுத்த என்ன, ஏன் இப்படி ஒரு வேண்டுதல்? இதற்கு ஏதாவது புராணக் கதை இருக்கிறதா? என்ற கேள்விகளை கோயிலில் இருப்பவர்களிடம் கேட்பதுதானே? அதைத்தான் செய்தோம்.

“ஒரு காலத்துல இந்தப் பகுதி காடாக இருந்துச்சாம். இந்தப் பக்கத்துல ஆடு, மாடு மேய்க்கிற பசங்க நடமாட்டம் மட்டும்தான் இருக்குமாம்.

அந்த சமயத்துல ஒருநாள், மாடு மேய்க்கிற சிறுவர்கள் சிலபேரு, கீழே கிடந்த ஒரு தேங்காயை எடுத்து பக்கத்துல இபுருந்த கல்லுல அடிச்சு உடைக்கப் பார்த்திருக்காங்க. அப்போ திடீர்னு அந்தக் கல்லுல இருந்து ரத்தம் பொங்கி வழிஞ்சிருக்கு.
பதறிப்போன பசங்க, அலறி அடிச்சுக்கிட்டு வந்து ஊர்ல சொல்லியிருக்காங்க. உடனே எல்லாருமா சேர்ந்து ப்ரசன்னம் பார்த்ததுல தேவி இங்கே குடிகொண்டிருக்கறது தெரியவந்து, தேவிக்கு ஒரு கோயில் கட்டினாங்க.

கோயில்னா விளக்கு எரியணுமே.. தொடர்ந்து வனப்பகுதியாகவே இது இருந்ததால இங்கே வரவே பலரும் பயப்பட்டாங்க. அதுலயும் குறிப்பா பெண்கள் வரவே மாட்டாங்களாம். அதனால, ஆடுமாடு மேய்க்கிற பசங்களே பெண் வேடமிட்டு விளக்கேந்தி கோயிலைச் சுத்திவந்து அம்மனுக்கு வழிபாடு நடத்தினாங்களாம். அந்தப் பசங்களோட கோரிக்கையெல்லாம் அந்த அம்மன் நிறைவேற்றி வைச்சாளாம்.

காடெல்லாம் மறைஞ்சு ஊரான பிறகு, இங்கே ஒரு நடைமுறையாகவே ஆண்கள் பெண் வேடமிட்டு விளக்கு ஏந்தி வலம் வந்து அம்மனை வழிபட்டா நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை பிறக்க, இப்போ சுந்தரன்கள், சுந்தரிகளா வேடமிட்டு உலாவந்து வழிபடறாங்க. அவங்க வேண்டுதல்களும் ஈடேறுது..!’

கேரள பாணி கட்டடக்கலையில் உள்ள கோயிலில் அம்மன் தவிர, பரமேஸ்வரன், மகாகணபதி, ஸ்ரீதர்மசாஸ்தா, யக்ஷி, மாடன், நாகராஜா ஆகிய துணை தேவதைகளுக்கும் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் பெண்களாக மாறும் அற்புதத்தைப் பார்க்க வேண்டுமானால் நீங்கள் பங்குனி மாதம் 10,11 தேதிகளில் இந்தக் கோயிலில் இருக்க வேண்டும். ஆமாம். ஒவ்வொரு வருடமும் அந்தநாளில்தான் சமய விளக்கு என்ற இந்தத் திருவிழா நடக்கிறது. “சமயம்’ என்றால் ஒப்பனை (மேக்கப்) என்று அர்த்தம் சொல்கிறார்கள். உண்மையிலேயே ஒப்பனைக் கலைஞர்கள் பலருக்குப் பிழைப்பதற்கான வருமானம் தரும் நாளாகவும் இது இருக்கிறது.

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயிலில் சவரா, புதுக்கோடு, குளங்கரைபாகம், கோட்டைக்கம் ஆகிய நான்கு ஊர்க்காரர்களும் ஒன்றாகச் சேர்ந்த இந்த விழாவை நடத்துகிறார்கள். நான்கு ஊரிலிருந்தும் கனஜோராக அலங்கரிக்கப்பட்ட வண்டிகள் வர, அவற்றின் முன்னே இசைக்கச்சேரிகள், செண்டை மேளத்துடன் ஊர்வலம் செல்ல... இரண்டு நாட்கள் மாலையிலிருந்த அதிகாலை வரை ஊரோ திமிலோகப்படுகிறது.

கேரளாவிலிருந்து மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான ஆண்கள் வந்து பெண்வேடமிட்டு வணங்குகிறார்கள். கோயிலிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூஞ்ஞாலு மூடு என்ற இடத்திலிருந்து கோயில் அருகே ஆறாட்டு நடைபெறும் இடம் வரை பெண் வேடமிட்ட ஆண்கள் கையில் விளக்குடன் வரிசையாக நிற்க, அம்மன் ஆறாட்டுக்கு எழுந்தருள்வாள்.

“பொதுவா மலையாளிகள் எந்த ஊர்ல இருந்தாலும் ஓணம் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்துடுவாங்க. ஒருவேளை ஓணத்துக்கு வரமுடியாட்டியும் இந்த “சமயவிளக்கு’ திருவிழா காண வராம இருக்கமாட்டாங்க!’ என்கிறார் இந்த ஊரைச்சேர்ந்த பக்தர், பிரதீபன்.

வித்தியாசமான வேண்டுதல்... வேண்டியதை நிறைவேற்றும் தேவி...! நீங்கள் இத்தலம் சென்று தரிசிக்க இன்னும் வேறென்ன காரணம் வேண்டும்?

கேரளமாநிலம் கொல்லத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் கொற்றன்குளக்கரை தேவிகோயில் உள்ளது.

- திருவட்டாறு சிந்துகுமார்

குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக