ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்

+2
பாலாஜி
கா.ந.கல்யாணசுந்தரம்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  - Page 2 Empty பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 20, 2012 1:40 pm

First topic message reminder :

மொத்தம் 81 மொழிகளை அறிந்த பேரறிஞர் உலகத்திலேயே பாவாணர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவர் நம்மினத்தில் பிறந்தவர்; ஒரு தமிழர் என்பது ஒட்டுமொத்த உலகத்தமிழர்களுக்கே பெருமையாகும்.
•மேலை மொழிகளுக்கு மட்டுமே சொந்தாமாயிருந்த வேர்ச்சொல் ஆராய்ச்சி ...முறைமையக் கற்றித் தேர்ந்து தமிழில் வேர்ச்சொல் ஆய்வுகளை செய்ததவர். மேலைநாட்டவரே வியந்துநிற்கும் அளவுக்கு தமிழையும் மற்றைய உலக மொழிகளையும் நுணுகிநுணுகி ஆய்ந்தவர்.
•வேர்ச்சொல்லாய்வுத் துறையில் கொண்டிருந்த தன்னிகரற்ற பேராற்றலால் உலக மொழி ஆய்வாளர்களையும் வரலாற்று அறிஞர்களையும் கலங்கடித்தவர்.
•தமிழ் திரவிடத்திற்குத் தாய், தமிழ் ஆரியத்திற்கு மூலம், உலக முதல்மொழியும்(தமிழ்) முதல் மாந்தனும்(தமிழன்) தோன்றிய இடம் மறைந்த குமரிக்கண்டம் எனவாகிய முப்பெரும் உண்மைகளை எந்த வரலாற்று ஆசிரியரும் மறுக்கவியலாத அளவுக்கு மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டியவர்.
•உலகத்தின் முதல் தாய்மொழியாகிய தமிழ்மொழியே பல்வேறு காலங்களில் பல்வேறு மாறுதல்களை அடைந்து பல்வேறு மொழிக் குடும்பங்களாக மாறிப் பிரிந்து இருக்கிறது என்றும் உலக மக்கள் யாவரும் தமிழ்மொழியால் உறவினர்கள் ஆகின்றனர் என்றும் அறுதியிட்டுச் சொன்னவர்.
•50 ஆண்டுகள் தொடர்ந்து மொழியாராய்ச்சி செய்து 35க்கும் மேற்பட்ட அரிதிலும் அரிதான ஆய்வியல் நூல்களை தமிழுக்கும் தமிழருக்கும் வழங்கியவர்.

நன்றி: தமிழ் ஆராய்ச்சியாளர்கள்


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down


பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்  - Page 2 Empty Re: பாவாணர் -- தமிழ் ஆராய்ச்சியாளர்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 21, 2012 7:43 am




T.N.Balasubramanian wrote:நன்றி, கல்யாணசுந்தரம்.
ஜில்லா நூல் நிலய அலுவலகம் , மவுண்ட் ரோடு (அண்ணா சாலை) சென்னை , இவரை நினைவு கூறும் வகையில் , தேவ நேய பாவாணர் மாளிகை என பெயரிட பட்டுள்ளது போலும். பெருமை பட வேண்டிய விடயம்.
அவர் அறிந்த 81 மொழிகள் என்னென்ன என்பதை அறிய இயலுமா?
ரமணியன்.



பாவாணரின் சிறப்பியபுகளில் அவர் புலமை பெற்ற மொழிகள் பலவற்றுள் சில அறிகிறோம். கீழ்கண்டவாறு.

பாவாணரின் சிறப்பியல்புகள்


௧. கள்ளமற்ற குழந்தை உள்ளமுடைமை.

௨. கரும்பொன் வண்ண மேனி; எளிய உடை; சிலிர்த்த மீசை; பீடுநடை அகன்று ஏறிய நெற்றியுடன் விளங்கும் அரிமா நோக்குடைமை.

Ž. எங்கும் எப்போதும் செந்தமிழிலேயே அல்லது செழுமையான பிறமொழியிலேயே எழுதிப்பேசிக் கமழச் செய்த தூயமொழியியல் வாழ்வால் தாய் மொழியின்கண் நிகரற்ற கல்விப் புலமையுடைமை.

௪. மதிநுட்பம் பரந்த கல்வி தன்னலமின்மை, நெஞ்சுரம், மெய்யறியவா நடுநிலைமை முதலிய அறுவகைத்தகைமை நிறைந்து, சுருங்கச் சொல்லும் அறிவுச் சால்புடைமை.

௫. மறுப்பச்சமின்றி நடுவுநிலைமையோடு எவரும் ஒப்புமாறு தமிழ்க்கேடுகளைத் தறுகண்மையுடன் தக்காங்கு தகர்த்தெறியும் ஆணித்தரமான கருத்துகளை உடனுக்குடன் வெளியிட்டு உண்மையை விளங்கச் செய்யும் மங்காத உயர்தனித் தமிழ் மொழிமான மதுகைத்திறக் குடிமைப் பண்புடைமை.

•. தன்னல விளம்பர வணிகமற்ற மொழிப்பற்றும், வறுமையிற் செம்மையும், உண்மையும், உண்மையின் பாற்பட்ட அடக்கமான புலமைச் செருக்கும் இழைந்த கருத்தாணையுடன் "எனக்கும் வறுமையுமுண்டு, மனைவி, மக்களும் உண்டு, அத்தோடு (தமிழ்) மானமும் உண்டு" என்று செப்பிய செம்மாப்புடைமை.

–. முப்போதும், எப்போதும் தன்னல மறுப்பால், தமிழ் நல நினைப்பால், படிப்பால் நடமாடும் தனித்தமிழ்ப் பல்கலைக் கழகமாக உயர்ந்து தி.பி. ௧˜˜˜ (கி.பி. 1968) -இல் மொழிச்சரிவை நிமிர்த்த உலகத்தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்து வெற்றி ஈட்டி பொது மக்களின் எழுத்திலும், பேச்சிலும் தனித்தமிழைக் கமழச் செய்த முற்காணிப்பு அறிவுடைமை (Talent of Featuralogy).

—. எப் பண்ணிலும் பாடல் இயற்றும் பாவண்மையும், 'கித்தார்' (Guitar) இசைக்கும் இசைத்தமிழ்ப் புலமையுடைமை. உரைநடை, செய்யுள் இவற்றைத் தனித்தனியே பாகுபடுத்தி முறையோடு அனைவரையும் தெளிவித்துப் பாடம் புகட்டும் உயர்தனி ஆசிரிய ஒழுக்கப் பண்புடைமை.

˜. கி.பி. 1960-இலேயே சிறப்பாசிரியர் பொறுப்பேற்று தனித் தமிழ் திங்ளிதழான 'தென்மொழி'யில் 'தன்வரலாறு' எழுதி தமிழ் வரலாறு படைத்தமை.

௧௰. சொல்லாய்வு, மொழி நூலாய்வு, பன்மொழி-(தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய திரவிடமொழிகள் இலக்கணப் புலமையும்; ஆங்கிலம், கிரேக்கம், இலத்தீனம், பாரசீகம், உருது, இந்தி, சர்கசானியம், சமற்கிருதம், மேலை ஆரிய மொழி இலக்கிய விலக்கணப் புலமையும் மிக்கவர்). ஒப்பியன்மொழி நூட்புலமை முதலிய மூவகைத் தெள்ளியவறிவால், மூலம் காண்பதிலும், மூலச்சொல் வடிவ மீட்டமைப்பிலும் மரவுபிறழாத நடுவுநிலையுடன் முதன் முதல்; தமிழ் என்றும் வாழவும், ஒத்த முன்னேற்றம் காணவும்; இன்றியமையாத வேரும் வரலாறும் காட்வதுமான 'கொடி வழி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி' (Etymological Dictionary of Tamil on Genelogical basis) தொகுப்பு நெறிமுறைகள் வகுத்தளித்து அதன்படி 13 மடலங்களுள் முதல் மடலத்தின் முதல்பகுதி 'அகர' ஓரெழுத்தில் தொடங்கும் 6500 சொற்களுக்கு வேர்ச்சொல் பொருள் விளக்கம் 1470 தட்டச்சுப் பக்கங்கள் கொண்ட அளவில் தொகுத்து முடித்த நுண்மான் நுழைபுல ஆள்வினையுடைமை. (அதனை பிற்றைய நாளில் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் வழி அச்சிட்டு தி.பி. ௨௰௧• சுறவம் 2-இல் அரசு சார்பில் வெளியிட்டனர் என்பது அறியத்தக்கது.)

௧௧. புதிய செந்தமிழ் வேர்ச்சொல் உருவாக்கவும், வழக்குவீழ் சொல்லிற்கு வாழ்வளிக்கும் வல்லமையுடைமை.

௧௨. "தமிழே என்பாகவும் தசையாகவும் குருதியாகவும், வழக்குவீழ் சொல்லிற்கு வாய்க்கப் பெற்ற தமிழின முழு உருவம் இவரே" - பாவாணர் என்ற புகழ்த் தோற்றத் தகைமையுடைமை.


தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;
சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையி¢ருகூறாய்ப்
போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே!"

-நன்றி: 'தமிழ்ச்சிட்டு' - குரல்-8, இசை-12.

[img][/img]


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum