புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Poll_c10ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Poll_m10ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Poll_c10 
30 Posts - 83%
heezulia
ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Poll_c10ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Poll_m10ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Poll_c10ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Poll_m10ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Poll_c10ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Poll_m10ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Poll_c10ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Poll_m10ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல், 13 பேர் பலி 30 பேர் படுகாயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 12:18 pm

ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Ms01

ராசிபுரம் அருகே பஸ்சும், வேனும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 13 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வேன்-பஸ் பயங்கர மோதல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து ஈரோட்டுக்கு நேற்று காலை 8.30 மணிக்கு தனியார் பஸ் புறப்பட்டது. அதில் 65-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த பஸ் ராசிபுரம்-ஆட்டையாம்பட்டி ரோட்டில் வெண்ணந்தூர் அருகேயுள்ள பழந்தின்னிப்பட்டி எட்டிமடம் என்ற இடத்தின் அருகே சென்ற போது எதிரே வந்த வேனும் பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

விபத்துக்குள்ளான வேனில் புதுப்பாளையம், ஆட்டையாம்பட்டி பகுதி மற்றும் வெண்ணந்தூர் உள்பட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களை ஏற்றிக்கொண்டு வேன் அத்தனூர் சமத்துவபுரம் அருகிலுள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்திற்கு (கார்மென்ட்ஸ் நிறுவனம்) சென்றபோது தான் இந்த விபத்து நேர்ந்தது.

வேன் நொறுங்கியது

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்சின் முன் பக்கமும் சேதம் அடைந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் `அய்யோ, அம்மா' என்று அலறினார்கள். அவர்களின் அபய குரல் கேட்டு அக்கம்பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு வந்தனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர், போலீசார், போக்குவரத்து துறையினர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் பஸ் மற்றும் வேனுக்குள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

13 பேர் பலி

இந்த விபத்தில் 13 பேர் இறந்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. ராஜேஸ்வரி (வயது50). அத்தனூர் ஆலம்பட்டியை சேர்ந்தவர். இவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர்.

2. முருகேசன்(35), ஆட்டையாம்பட்டி பாப்பாரப்பட்டி வெள்ளைய கவுண்டனூர்.

3. சதீஷ்குமார்(30), புதுமாப்பிள்ளையான இவர் ராஜா பாளையம் புதூர் காலனி, ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி ஒரு மாதம் தான் ஆகிறது.

4. மீனா(40), வெண்ணந்தூர் சர்க்கார் தோப்பு.

5. பிரபாவதி(28), வெண்ணந்தூர் வெள்ளபிள்ளையார் கோவில் தெரு.

6. தமிழரசி(28), நைனாம்பட்டி, ஆட்டையாம்பட்டி.

7. கோசலாதேவி(45), சுப்புராபுரம் ஆட்டையாம்பட்டி.

8. கனகா(35), எஸ்.பாப்பாரபட்டி, ஆட்டையாம்பட்டி.

இந்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இவர்களில் ராஜேஸ்வரி மட்டும் பஸ்சில் சென்றபோது உயிர் இழந்தார். மற்ற 7 பேரும் வேனில் சென்றவர்கள் ஆவார்கள்.

9. நந்தகுமார்(28), ராஜாபாளையம்புதூர் காலனி, ஆட்டையாம்பட்டி.

10. பிரகாஷ்(18), ராஜாபாளையம்.

11. கற்பகம், வெண்ணந்தூர்.

12. புனிதா(வயது 36), வெண்ணந்தூர்.

13. தனலட்சுமி(37), ஆட்டையாம்பட்டி.

இவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து நடந்த பகுதியில் வேனில் பயணம் செய்தவர்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், டிபன் பாக்ஸ் போன்றவை ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டதும் இறந்தவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கும், அரசு ஆஸ்பத்திரிக்கும் சென்றனர். அவர்கள் இறந்தவர்களின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

கலெக்டர் குமரகுருபரன்


விபத்து பற்றி கேள்விப்பட்டதும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சத்தியபிரியா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்கள். விபத்தில் இறந்தவர்களின் உடல்களை விரைவாக பிரேத பரிசோதனை செய்து கொடுக்குமாறு கலெக்டர் குமரகுருபரன் டாக்டர்களை கேட்டுக்கொண்டார்.

இந்த விபத்து குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

புதுமாப்பிள்ளை பலி

இந்த விபத்தில் பலியான சதீஷ்குமார் என்பவருக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது. அவரது உடலை பார்த்து மனைவி கோகிலா மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்து காயத்துடன் உயிர் தப்பிய பிரியா(28) என்ற பெண் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

அலறி துடித்தோம்


நான் நைனாம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். அத்தனூர் சமத்துவபுரத்தில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்க்கிறேன். நான் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. வழக்கம் போல் வேனில் வேலைக்கு சென்றேன்.

அப்போது நாங்கள் சென்ற வேனும், எதிரே வந்த பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது, வேனில் இருந்த நாங்கள் தூக்கி வீசப்பட்டு காயமடைந்து வலியால் அலறி துடித்தோம். சிறிது நேரத்தில் நான் மயங்கி விட்டேன். அதன்பிறகு கண் விழித்து பார்க்கும் போது நான் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தெரியவந்தது. எங்களுடைய வேன் டிரைவர் வேலைக்கு சேர்ந்து ஒருவாரம் தான் ஆகிறது.

கம்பெனிக்கு 9 மணிக்குள் செல்ல வேண்டும் என்பதால் வேனை வேகமாக ஓட்டிசெல்வார். இன்று(நேற்று) கூட நான் ஏன் வண்டியை வேகமாக ஓட்டுகிறீர்கள் என்று அவரிடம் வாக்குவாதம் செய்தேன். சிறிது நேரத்தில் இந்த கோர சம்பவம் நடந்து விட்டது. இப்படி துயர சம்பவம் நடக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.

இவ்வாறு பிரியா கண்ணீர் மல்க கூறினார்.

தினத்தந்தி



ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல்,  13 பேர் பலி 30 பேர் படுகாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 20, 2012 12:48 pm

சோகம் சோகம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Apr 20, 2012 2:06 pm

வேக கட்டுபாட்டு கருவி என்ற ஒரு சட்டம் கொண்டு வந்தார்களே !!!
அது எங்கே அய்யா .. தூங்குகிறது ..........

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக