புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சில சிந்தனைகள் Poll_c10சில சிந்தனைகள் Poll_m10சில சிந்தனைகள் Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
சில சிந்தனைகள் Poll_c10சில சிந்தனைகள் Poll_m10சில சிந்தனைகள் Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
சில சிந்தனைகள் Poll_c10சில சிந்தனைகள் Poll_m10சில சிந்தனைகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சில சிந்தனைகள் Poll_c10சில சிந்தனைகள் Poll_m10சில சிந்தனைகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சில சிந்தனைகள் Poll_c10சில சிந்தனைகள் Poll_m10சில சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில சிந்தனைகள் Poll_c10சில சிந்தனைகள் Poll_m10சில சிந்தனைகள் Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
சில சிந்தனைகள் Poll_c10சில சிந்தனைகள் Poll_m10சில சிந்தனைகள் Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
சில சிந்தனைகள் Poll_c10சில சிந்தனைகள் Poll_m10சில சிந்தனைகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சில சிந்தனைகள் Poll_c10சில சிந்தனைகள் Poll_m10சில சிந்தனைகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சில சிந்தனைகள் Poll_c10சில சிந்தனைகள் Poll_m10சில சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில சிந்தனைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 17, 2012 4:19 pm





1. கொஞ்சம் பசி இருக்கும்போதே சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.


2. பெரும் பலமுடையவன் அதை மெதுவாக உபயோகித்து வெற்றி பெற வேண்டும்.


3. மூட நம்பிக்கை மனதை விஷமாக்குகிறது.


4. சோம்பேறி மூச்சு விடுகிறான்; ஆனால், வாழவில்லை.


5. சிக்கனம் இருந்தால் மற்ற பண்புகள் அனைத்தும் எளிதில் வந்து விடும்.


6. சீக்கிரமாய் கொடுப்பவன் இரட்டிப்பாய் கொடுத்தவனாகிறான்.


7. உறுதியின்மையால் நல்ல வாய்ப்புகள் பல நழுவி விடுகின்றன. எப்போதும் மன உறுதியுடன் இருங்கள்.


8. முயற்சி செய்கிற வரையில் எவருக்கும் தம் திறமை பற்றி ஒன்றும் தெரியாது.


9. நீங்கள் அமைதியாய் வாழ விரும்பினால் கேளுங்கள்; பாருங்கள்; மௌனமாயிருங்கள்.


10. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வாங்க
வேண்டாம். எது இல்லாமல் வாழ முடியாதோ,
அதை மட்டும் வாங்கினால் போதும்.


11. பொய் எப்போதும் எச்சரிக்கையாய் ஆயுதங்களுடன் இருந்தாலும், முடிவில் தோல்வி அதற்குத்தான்.


12. எது நன்மை என்பதை அதை இழந்தால்தான் தெரியும்.


13. அறிவுள்ளவன் மூடனுக்கும் காளை மாட்டுக்கும் வழி விட்டு ஒதுங்கிச் செல்வான்.


14. சில நிமிடங்கள் மௌனமாயிருங்கள்; கோபம் தணிந்து விடும்.


15. கண்ணியமானவன் என்றால், அவன் யாருக்கும் துன்பம் ஏற்படுத்தாதவன் என்று பொருள்.


**நன்றி: 'சத்தான வாழ்வுக்கு முத்தான சிந்தனைகள்' - முனைவர் அ.அய்யூப்.

நன்றி http://nizampakkam.blogspot.in/



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சில சிந்தனைகள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 17, 2012 4:20 pm




16. அதிகமாய்ச் சாப்பிட்டால் உணவும் வெறுத்துப் போய்விடும்.


17. பணக்காரனாய் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியதில்லை; தேவைகளைக்
குறைத்தாலே போதும்.


18. இன்று நாம் செய்த நன்மை, நாளை நமக்குக் கிடைக்கப் போகும் இன்பமாகும்.


19. அதிகம் பேசினால் அதிகத் தவறு செய்ய நேரிடும்.


20. ஒவ்வொரு சாலைக்கும் இரு திசைகள் உண்டு.
கவனம் இருந்தால், வெற்றி தரும்
சாலையில் தொடர்ந்து பயணம் செய்ய முடியும்.


21. உண்மையான உழைப்பில்தான் வாழ்க்கை இருக்கிறது.


22. தானத்தை நிதானமாய் வழங்கிக் கொண்டே இருக்கும் கைக்குச் சலிப்பே இராது.


23. பறவைகளுக்குப் பயந்து விதைக்காமல் இருக்க வேண்டாம்.


24. எப்போதும் சலிப்பில்லாமல் செயல்படுபவன் வெற்றி அடைவான்.


25. கெட்ட பழக்கம் முதலில் வழிப்போக்கனைப் போல வரும்; பிறகு விருந்தாளியாய் மாறி,
முடிவில் முதலாளியாகி விடும்.


26. மறந்து விடாதீர்கள், உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உங்கள் சரித்திரத்தின் ஒரு பக்கமாகும்.


27. அடகு வைப்பதை விட விற்று விடுவதே மேல்.


28. அதிக நேரம் தூங்கும் சோம்பேறியை எழுப்ப சூரியன் இரு முறை உதிப்பதில்லை.


29. ஓர் ஆற்றைப் படகில் கடப்பதை விட நீந்திக் கடப்பது நல்லது. படகோட்டியைத்
தேட வேண்டியிருக்காது.


30. குதூகலமாக ஒரு வேலையைச் செய்யும் போது, வெற்றி கிடைக்காமல் போவதற்கு
வாய்ப்பே இல்லை.


**நன்றி: 'சத்தான வாழ்வுக்கு முத்தான சிந்தனைகள்' - முனைவர் அ.அய்யூப்.

நன்றி http://nizampakkam.blogspot.in/



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சில சிந்தனைகள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 17, 2012 4:21 pm

சில சிந்தனைகள் (பகுதி - 3)
வெற்றிக்கான எளிய வழிகள்!




1. ஒன்றும் இல்லாதவனைக் கூட கோடீஸ்வரன் ஆக்குவது பொருள்தான். எனவே
பணத்தைச் சம்பாதியுங்கள். கஷ்டப்பட்டு முதலில் ஒரு ரூபாய் சம்பாதித்து விட்டால்,
இரண்டாவது ஒரு ரூபாய் தானே வந்து சேரும். பகைவரை வெல்லக் கூடியது,
பொருள்தான். பொருள் இருந்தால், அறம் செய்யலாம்; இன்பம் அனுபவிக்கலாம்.
ஆகவே, எந்தப்பாடு பட்டாவது பொருள் தேட முயற்சி செய்யுங்கள். பொருள்தான்
உங்களைச் செழிக்க வைக்கும் கேணி! பொருள்தான் உங்கள் வாழ்க்கைக்குத் தோணி!
பொருள்தான் உங்களை உச்சிக்கு உயர்த்தும் ஏணி! பொருளைப் போற்றுங்கள்!
போற்றுகிறவரிடம்தான் பொருள் சேரும்.


2. பொருளைச் சேர்க்கத் திட்டமிடுங்கள். திட்டமிட்டு செயலாற்றுவதே வெற்றியின்
அடிப்படை. முடிந்த இடத்தில் எல்லாம் முயற்சி செய்யுங்கள். பல வகைகளிலும்
சிந்தித்துப் பாருங்கள். ஆராய்ந்து தெளிந்து, பின் ஒரு முயற்சியில் இறங்குங்கள்.
'இது சரியான நேரம் அல்ல' என்றால், ஆறப் போடுங்கள். சூடாக செய்வது நல்லது
என்றால், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்.


3. செயல்திறன் என்பது, மன ஊக்கம்தான். மனதில் உறுதியிருந்தால், வெற்றி நிச்சயம்.
துணிவுடனும் விழிப்புடனும் இருந்தால், எந்த இடையூறையும் வென்றுவிட முடியும். ஆனால்,
வீண் தம்பட்டம் அடிப்பது, கேலிக்கு இடமாகிவிடும். இடுக்கண் வந்தாலும், இழிந்த
செயல்களை செய்யக் கூடாது. வஞ்சத்தில் பொருளீட்ட முயற்சிப்பது, பச்சை மண்
பானையில் தண்ணீர் நிரப்புவதைப் போன்றது. பானையும் உடைந்து போகும்;
தண்ணீரும் ஓடிவிடும். எனவே, செய்வதைத் தூய்மையாகச் செய்யுங்கள்.


4. விசயம் தெரிந்தவர்களுடன் கலந்து ஆலோசித்துச் செய்வது, இரட்டை இலாபம்
தரும். ஒரு யானையை வைத்து அடுத்த யானையைப் பிடிப்பார்கள். அதுபோல,
ஒரு வேலையச் செய்யும்போதே, முடிந்தால் அடுத்த வேலையையும் சேர்த்துச்
செய்யுங்கள். செலவு, வரவு, நமக்கு மிச்சப்படுவது என்று கணக்குப் பார்த்து,
எதையும் செய்யுங்கள். வாரி குவித்து விடலாம் என்று ஆசைப்பட்டு, கையில்
இருப்பதையும் இழந்து விடாதீர்கள்.


5. கடுமையாக் முயற்சி செய்தால், விதியைக்கூட வென்றுவிட முடியும். முயற்சிக்கு
முட்டுக்கட்டையாக இருப்பது சோம்பல். சோம்பல் குடியை கெடுத்து விடும். சோம்பேறி
கெட்டு அழிவான். அவனுக்கு முன் அவனது தொழில் கெடும். சோம்பல், மறதி,
தூக்கம், கால தாமதம் இந்த நான்கும் நமது வெற்றியைக் கெடுக்கக் கூடியவை.


6. நமது எண்ணங்கள் எவ்வளவு சிறப்பாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு நமது
செயல்களும் சிறப்பாக இருக்கும். எனவே, கோடீசுவரன் ஆகிவிட்டது போலக் கனவு
காணுங்கள்.மாளிகையில் வாழ்வது போல, படகுக் காரில் பவனி செல்வது போல
ஒவ்வொரு இரவும் கனவு காணுங்கள்! அந்தக் கனவு கைகூடக் கடுமையாக
முயற்சி செய்யுங்கள். ஊக்கத்துடன் முயற்சி செய்தால், நிச்சயம் கை கூடும்.


7. காலம் அறிந்து செய்தால், எந்த முயற்சியும் வெற்றி பெறும். குளக்கரையில் நின்று
கொண்டிருக்கும் கொக்கு, மீன் வந்ததும், 'லபக்' என்று கொத்திக் கொள்ளும். அது போல,
காலத்தை எதிர்பார்த்து இருங்கள். காலம் வரும்போது, தவறவிடாமல், வேலையை
முடியுங்கள். காலம் வரும் வரை காத்திருப்பதைத் தோல்வி என்று நினைக்காதீர்கள்.
ஆட்டுச் சண்டை நடக்கும்போது, கிடா பின் வாங்கித் தாக்கும். புலி பதுங்கித் தாக்கும்.


8. நமது திறமை, முதலீடு போன்ற வலிமைகளை உணர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு மரத்தின் கிளைகளில் ஏறி, உச்சிக்குப் போய்விட்டோம். அதற்கு மேல் ஏறினால்
கிளை முறிந்து, நாம் கீழே விழுவோம்! அகலக் கால் வைக்கக் கூடாது! சிறுகக் கட்டிப்
பெருக வாழ்க!


9. தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறச் சொல்வன்மை மிக முக்கியம். சாமர்த்தியமாகப்
பேசத் தெரிய வேண்டும். அளவோடு பேச வேண்டும். சொல்லின் திறன் தெரிந்து நாம்
பயன்படுத்த வேண்டும். கேட்பவர் விரும்பும்படி பேச வேண்டும். அவருக்குப் பிடிக்காததைப்
பேசக் கூடாது. அவர் சொல்லுவதையும் நாம் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.வாய்ச்
சொல்லால் கெட்டவர்களும் உண்டு. எனவே, அவசரப்பட்டு வாயைத் திறக்கக் கூடாது.


10. பேச்சில் நாநயம் போல, நாணயமும் முக்கியம். இனிக்க இனிக்கப் பேசி,
ஏமாற்றக் கூடாது. உண்மையாகப் பேசவேண்டும். 'நாம் சொன்னது பொய்' என்று
தெரிந்தால் நாளை யாரும் நம்மை நம்ப மாட்டார்கள். எத்தனை நல்லவனாக, வல்லவனாக
இருந்தாலும் பொய்யன் என்று பெயர் வாங்கி விட்டால், எந்தப் பெருமையும் கிடைக்காது.


நன்றி: 'வெற்றிப்படிகள்' - முனைவர் அ.அய்யூப்

நன்றி http://nizampakkam.blogspot.in/



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சில சிந்தனைகள் Scaled.php?server=706&filename=purple11
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 17, 2012 4:21 pm

ந.கார்த்தி wrote:3. மூட நம்பிக்கை மனதை விஷமாக்குகிறது.
15. கண்ணியமானவன் என்றால், அவன் யாருக்கும் துன்பம் ஏற்படுத்தாதவன் என்று பொருள்.
**நன்றி: 'சத்தான வாழ்வுக்கு முத்தான சிந்தனைகள்' - முனைவர் அ.அய்யூப்.
நன்றி http://nizampakkam.blogspot.in/
சிரி சிரி சிரி சிரி சிரிப்பு

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 17, 2012 4:21 pm

சில சிந்தனைகள் (பகுதி - 4)

1. ஆணவம் வெற்றி வாய்ப்பைக் கெடுக்கும்.

2. இளமைக் கால உழைப்பு; அந்திமக் கால சுகம்.

3. ஆர்ப்பாட்டம், மறைமுக விரோதிகளை உருவாக்கும்.

4. நன்றியைப் பாராட்டுபவன், ஒருக்காலமும் நசிந்து போக மாட்டான்.

5. மிதமான வேலை, பதமாக முடியும்.

6. தற்பெருமை, உழைப்பைக் கெடுத்து, உயர்வைத் தடுக்கும்.

7. நேரத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், முயற்சியைத் துரிதப் படுத்த முடியும்.

8. தொண்டுள்ளம் கொண்டவன், பன்னெடுங்காலம் வாழ்வான்.

9. நயவஞ்சகனின் சகவாசம், நாசத்தின் தொடக்கம்.

10. உயர்ந்த வாழ்வின் திறவுகோல், உழைப்பாகும்.

11. புழங்காத பணமும் இறைக்காத கிணறும் பாழ்படும்.

12. பிழைப்பதற்கு வழி, உழைப்பில் இருக்கிறது.

13. செல்லம் சீரழிக்கும்; அன்பு பண்பை வளர்க்கும்.

14. தாராளமாய் இருப்பவன், ஏராளமாய் சம்பாதிப்பான், நண்பர்களை.

15. மேகம் திரண்டால் மழை; சோகம் சூழ்ந்தால் கண்ணீர்.

**நன்றி: 'சிந்தனையின் தேன் துளிகள்'-அல்ஹாஜ் எம்.ஏ.ப்பீ.ரஹமத்துல்லாஹ்.

நன்றி http://nizampakkam.blogspot.in/



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சில சிந்தனைகள் Scaled.php?server=706&filename=purple11
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 17, 2012 4:22 pm

ந.கார்த்தி wrote:
10. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வாங்க
வேண்டாம். எது இல்லாமல் வாழ முடியாதோ,
அதை மட்டும் வாங்கினால் போதும்.
என்ன கொடுமை சார் இது

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 17, 2012 4:24 pm

சில சிந்தனைகள் (பகுதி - 5)

வாழு; வாழாதே!

சிரித்து வாழ்; பலர் சிரிக்க வாழாதே!

ஏற்றமுடன் வாழ்; சீற்றத்துடன் வாழாதே!

புகழுடன் வாழ்; இகழ்வுடன் வாழாதே!

பாசத்துடன் வாழ்; பரிகாசத்துடன் வாழாதே!

இன்பத்துடன் வாழ்; சிறுமையுடன் வாழாதே!

பண்புடன் வாழ்; பராபரியாய் வாழாதே!

விழிப்புடன் வாழ்; பழிப்புடன் வாழாதே!

உழைத்து வாழ்; எத்தி வாழாதே!

களிப்புடன் வாழ்; கெலிப்புடன் வாழாதே!

பெருக வாழ்; சிறுக வாழாதே!

இணக்கத்துடன் வாழ்; பிணக்கத்துடன் வாழாதே!

மகிழ்வுடன் வாழ்; திகிலுடன் வாழாதே!

கொடுத்து வாழ்; கெடுத்து வாழாதே!

போற்றி வாழ்; தூற்றி வாழாதே!

சிறுகக் கட்டி பெருக வாழ்; பெருகக் கட்டி சிறுக வாழாதே!

கணித்து வாழ்; தனித்து வாழாதே!

மதித்து வாழ்; மிதித்து வாழாதே!

அடக்கத்துடன் வாழ்; ஆர்ப்பரித்து வாழாதே!

அன்புடன் வாழ்; அலங்கோலத்தோடு வாழாதே!

கொள்கையுடன் வாழ்; கோலத்துடன் வாழாதே!

படித்து வாழ்; பிறரை (காக்கா) பிடித்து வாழாதே!

பண்புடன் வாழ்; வம்புடன் வாழாதே!

சீராக வாழ்; சிரிக்க வாழாதே!

**நன்றி: 'நிறைந்த வாழ்வு' - அல்ஹாஜ் எம்.ஏ.ப்பி.ரஹமத்துல்லாஹ்.

நன்றி http://nizampakkam.blogspot.in/



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சில சிந்தனைகள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 17, 2012 4:25 pm


சில சிந்தனைகள் (பகுதி - 6) நற்பண்புகள்.

ஒழுக்கம் உயர்வைக் கொடுக்கும்.

உழைப்பு செல்வத்தைக் கொடுக்கும்.

பக்தி மன அமைதியைக் கொடுக்கும்.

சிரிப்பு ஆயுளைக் கொடுக்கும்.

உதவி ஆதரவைக் கொடுக்கும்.

அன்பு நட்பைக் கொடுக்கும்.

பண்பு மதிப்பைக் கொடுக்கும்.

சுத்தம் சுகத்தை கொடுக்கும்.

நேர்மை நிதானத்தை கொடுக்கும்.

பணிவு அந்தஸ்தைக் கொடுக்கும்.

துணிவு வளர்ச்சியைக் கொடுக்கும்.

கனிவு அன்பைக் கொடுக்கும்.

ஆர்வம் ஆற்றலைக் கொடுக்கும்.

சாதனை மகிழ்வைக் கொடுக்கும்.

கோபம் வெறுப்பைக் கொடுக்கும்.

ஆத்திரம் அழிவைக் கொடுக்கும்.

ஊக்கம் செயலைக் கொடுக்கும்.

ஏக்கம் ஏழ்மையைக் கொடுக்கும்.

நன்றி:'நிறைந்த வாழ்வு' - அல்ஹாஜ் எம்.ஏ.ப்பி.ரஹமத்துல்லாஹ்.

நன்றி http://nizampakkam.blogspot.in/



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சில சிந்தனைகள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 17, 2012 4:26 pm

முன்னேற சில முத்துக்கள்:
========= === ===========
1. செய்யும் தொழிலை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

2. எதையும் இலவசமாகப் பெற நினைக்காதீர்கள்.

3. போதும் என்ற மனம் நல்லதுதான். ஆனால், 'போதாது'
என்ற மனம்தான் முன்னேற்றத்திற்கான வழி. மனிதன்
கண்டுபிடிக்காத மர்மதேசங்கள் ஏராளம்.

4. வருத்தமோ அல்லது சுய இரக்கமோ அடையாதீர்கள்.
அவைகள் வாழ்க்கையின் நசுக்கிகள்.

5. உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துவைத்துக கொள்ளுங்கள்.

தவிர்த்துவிடுங்கள்:
=================
1. பொய் பேசும் நா.

2. கர்வ பார்வை.

3. தீமை செய்யும் கை.

4. தீயதை திட்டமிடும் அறிவு.

5. தீய காரியங்களை செய்ய விரையும் கால்.

6. பொய் சொல்ல எழும் சாட்சி.

7. நண்பர்களிடம் பகைமை வளர்க்கும் மனிதர்.

(நன்றி: 'வெற்றியை வெளியே தேடாதீர்கள்' - திரு.வை.நடராஜன்)


நன்றி http://nizampakkam.blogspot.in/



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சில சிந்தனைகள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 17, 2012 4:27 pm

ல சிந்தனைகள் (பகுதி - 8)

தழுவிக்கொள்ளுங்கள் -1
======================

* உங்களுடைய கோபதாபங்கள் உங்களுடனேயே இருக்கட்டும் -
வினியோகிக்க வெண்டாம்.

* ஆனால் உங்கள் உற்சாகத்தை இலவசமாக வினியோகியுங்கள்.

* நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

* நட்புடன் இருந்தால் பெரிதும் மதிக்கப்படுவீர்கள்.

* இறைவனின் படைப்பில் எல்லோருக்கும் பங்குண்டு. இந்த
முக்கியத்துவத்தை மற்றவர்கள் உணரச் செய்யுங்கள்.

* கீழேயோ, மேலோயோ அந்த அந்த நிலையில் மக்களை
சந்தியுங்கள்.

* புன்னகை என்ற ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.

* நகர்ந்து கொண்டே இருங்கள்; ஓடுகின்ற நதி ஒருநாளும்
அழுக்காகாது.

* முயற்சி செய்து கொண்டிருங்கள். தேயாமல் இருக்க
இதுதான் தலைவாசல்.

* இரும்பானாலும் இதயத்தோடு பாருங்கள்.

* எந்த காரியமானாலும் அதன் ஆரம்பம் விழாவாக இருக்கட்டும்.

* தோல்வி அடைந்தாலும் மன்னித்துக் கொள்ளுங்கள்.

* கருணையில் தாராளமாக இருங்கள்.

* அதிகாரத்தைவிட, அன்பு ஆளட்டும்.

* சொன்னதைச் செய்யுங்கள்.

நன்றி: 'வெற்றியை வெளியே தேடாதீர்கள்' - திரு.வை.நடராஜன்.

நன்றி http://nizampakkam.blogspot.in/



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சில சிந்தனைகள் Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக