புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_lcapஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_voting_barஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
எனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_lcapஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_voting_barஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
எனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_lcapஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_voting_barஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_lcapஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_voting_barஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_lcapஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_voting_barஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_rcap 
19 Posts - 3%
prajai
எனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_lcapஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_voting_barஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
எனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_lcapஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_voting_barஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
எனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_lcapஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_voting_barஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_lcapஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_voting_barஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_lcapஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_voting_barஎனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது ராமநாதபுரம் மாவட்ட பயனம்!!!--பாகம் I


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Apr 15, 2012 7:04 pm

எனது நெருங்கிய நன்பர் ஜவஹர் அவர்கள் ராமநாதபுரத்தில் உள்ளார்! அவரது நீண்ட நாள் வேண்டுதலுக்கிணங்க குடும்பத்துடன் சென்று வந்தேன்!!! அத்தோடு இப்பயணத்தில் மூன்று இடங்கள் என் மனதில் முக்கியத்துவ படுத்தி இருந்தேன்!

1)திருப்புல்லாணி

2)சேதுக்கரை

3 )உத்திரகோசமங்கை

1989 ல் ஜவஹர் சற்று சுகவீணமடைந்திருந்தார் என்பதால் அவரை காணுவதற்காக சென்றிருந்தேன்! அச்சமயம் நான் ராமர் படத்தை கட்டிலுக்கு நேரே ஒட்டி வைத்துக்கொண்டு தியானித்து கொண்டிருந்த காலகட்டம்! அது எனக்குள் நல்ல சாத்வீகத்தையும் சரீரத்தில் ஒரு தேஜசும் கூட உண்டாக்கியிருந்தது! நல்ல சந்தடிசத்தம் உள்ள ஒரு லாட்ஜில் அய்ந்து நண்பர்கள் -எல்லோருமே வாலிப வயதிற்கான வேட்கையில்லாமல் ஏதோ ஒரு ஆண்மீக தொடர்புள்ளவர்கலாய் சேர்ந்திருந்தோம்! ராமகிருஸ்ணர்,விவேகானந்தர்,வள்ளலார்,சிவானந்தர்,இயேசு என குருமார்களின் சீடர்கள் அதில் இருந்தார்கள்! வேலைக்கு போய் திரும்பி வந்தால் சிணிமா,பெண்கள்,காதல் என்று இல்லாமல் ஒரு சத்சங்கம் போலவே இருக்கும்!தியானிக்கவும் செய்வோம்! ஒரு அய்ந்து நிமிடம் போனது போல தெறிந்தாலும் வம்பாக தியானத்தை முறித்தால் ஒரு மணி நேரம் என்கிற அளவு தியானம் எனக்கு சித்தித்தது!எதிர்காலத்தில் துறவற அழைப்பிற்கான வாய்ப்பு உள்ளதா என கேள்வி இருந்தது! ஜவஹரை காண்பதோடு ராமர் தொடர்பான இடங்களை காணவுமே சென்றிருந்தேன்! ஜவஹர் சிறுவயதிலிருந்தே நுன்னிய அறிவுள்ளவர்!விஞ்ஞானத்தில் ஆழ்ந்த அறிவும் உழைப்பும் இருந்தது! இந்தியாவிற்கு ஒரு நல்ல விஞ்ஞானியாய் வருகிற வாய்ப்பு இருந்தும் சுற்றமும் சூழலும் வாய்ப்பும் இல்லாததால் தேங்கிப்போய் மனசோர்வு அடைந்திறுக்க வாய்ப்பு இருக்கலாம் என்பதால் என்னுடன் பேசிக்கொண்டு இருந்தால் அவர் வெளியே வரவாய்ப்பு அமையும் என நம்பினேன்! அவரை அழைத்துகொண்டு ராமேஸ்வரத்தில் ஒரு நாள் முழுவதும் சுற்றிகொண்டே அவரை பேசவைத்து கொண்டிருந்தேன்! மறுநாள் திருப்புல்லானி, சேதுக்கரை சென்றோம்! திருப்புல்லானியில் இலங்கைக்கு செல்ல பாலம் கட்டுமான பணி நடந்துகொண்டிருக்கும் போது தர்ப்பை புல்லை படுக்கையாய் விரித்து ராமர் தூங்கிய இடம் என்பது வரலாறு! அதனை காணும் போது பிரிவுதுயரத்தில் அவர் மூழ்கி தவித்திருக்க வேண்டும் போல எனக்கு ஒரு படிமானம் உண்டாயிற்று!எனக்குள்ளும் ஒரு இனம்புரியாத சோகம் கவ்விகொண்டது!

திரும்பி வந்த பிறகு பஸ்ஸில் பயணிக்கும் போது திடீரென நினைவு மாறுவதும் எனக்குள் யாரோ பேசுவது போலவும் இருந்தது!நெஞ்சில் ஒரு வேதனை --காதல் தோல்வி அடைந்தவரின் துயரம் போல என்னை பற்றிகொண்டது! தியானம் முன்பு போல ஆழ்ந்து சித்திக்கவில்லை! பின்னோக்கி வந்துகொண்டே இருந்தேன்!விடுதலைக்காக பலமுயற்சி எடுத்தும் சிராய்த்துக்கொண்டிருந்தேனே தவிற முன்னேறமுடியவில்லை! லவ்கீக வாழ்க்கை-உலக இன்பங்களாலும் அதனை சரிக்கட்டமுடியவில்லை! உலகவாழ்விலும் ஊறி கொட்டைபோட இயலவில்லை! வேதாத்திரியம் இன்னும் பல ஞானமார்க்கம் என்று சொல்லிகொள்கிறவர்களின் பின் சென்றும் பலனில்லை! என்னை நானே உலகில் காத்துகொள்வதும் சிரமம் போல உணர்ந்து ஒரு நல்ல மனைவியின் துனை அவசியம் என்று உணர்ந்தேன்! கடவுளின் அருளால் உலகியலில் எனக்கு ஒரு நல்ல அரன் போல வாழ்க்கைதுனை கிடைத்தது! உலக பாரங்கள் அனைத்தையும் அவர்கள் மீது ஏற்றிவைத்து விட்டு நான் எனது பாணியில் வேலைக்கு போவதும் வீட்டிற்கு வந்ததும் தியானம் ஆண்மீகதேடலுக்கான வாசிப்பு என வாழ்க்கை போவதற்கு எந்த பிரச்சினையும் இல்லை!உலகியலில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை என்பதை விட அதற்கு போதிய திறமை இல்லை என்றே சொல்லலாம்!

ஆராவாரம்--பிரபலம் இல்லாத சாமானியனான எனது வாழ்விலும் கடவுள் என்னை இம்மையிலும் மறுமையிலும் அருளுக்குள்ளாக நடத்திக்கொண்டுதான் உள்ளார்! ஆரம்ப காலத்தில் கீதையை பற்றி பாரதியார் எழுதிய விளக்க உரை படித்திருந்தாலும் அதில் நிறைய விசயம் புரியாமல் இருந்தது !ஆனால் வாழ்க்கை என்னும் பள்ளியில் இந்து -பைபிள்-குரான் வரை என்னை கடரசெய்து மீண்டும் கீதையை பற்றிய ஒரு தெளிவுக்குள் -ஒன்றும் புறியாத கீதையை ஒரு கோணத்தில் முழுமையாய் புறிந்து கொண்டது மாதிரியான ஒரு தெளிவு கடவுள் கொடுத்துள்ளார் என்றே நம்புகிறேன்!


அடுத்து எப்பொதும் ஒரு வரையரைக்குள் என்னை புரிந்து கொள்ள முடியாமல் கிறுக்கு லூசு என்றாவது முடிவுக்கு வரமுடியாமல் சக மனிதர்களை தவிக்க விடுகிற என்னையும் சமூக அந்தஸ்தில் பரவாயில்லாத இடம் கடவுள் அருளியதால் மதிக்கிற சூழ்னிலை உருவாகியுள்ளது!
தியானம் -பிரார்த்தனையை பொறுத்து கேட்கபடுகிறோம் என்கிற நெருக்கம் உள்ளதுபோலவே தெறிகிறது!
``முதலாவது கடவுளது ராஜ்ஜியத்தையும் அவரது நீதியையும் தேடுங்கள் அப்போது எல்லாமே கூட கொடுக்கபடும்`` என்று இறைதூதர் இயேசு அறிவுறித்தியது போல அரைச்சாமியாரான எனக்கும் குடும்பம் ;தரமான வீடு; பிள்ளைகள் சமூக உறவுகள்;கருத்தாக்க சுகத்தை அனுபவிக்க சமூகவலைதளம்;அங்கங்கு ஒத்த சிந்தனையுள்ள ஆன்மீக அன்பர்களுடன் சம்பாசனை; ஆலோசனை நாடி வருவோருக்கு உபதேசம்; வேலையில் முடிந்த அளவு ஈடுபாடோடு உழைத்து கொண்டே இருப்பது இப்படி ஒரே நாளில் பல நாடகங்களில் பல பாத்திரங்களில் ஜொலித்தாலும் இவற்றையெல்லாம் ஒட்டாத ஒரு அமைதி எனக்குள் இருப்பது சகஜ பிரார்த்தனை என்பது போல மனம் கடவுளிடம் போய்போய் வருகிற தன்மை கொஞ்சம் வந்திருக்கிறது!


இந்த சூழ்னிலையில் குடும்பத்துடன் திருப்புல்லாணி செல்வது ராமருக்காக பிரார்த்திக்க வேண்டும் என்றொறு சித்தம்!அவர் எனது ஆதி குரு --தியான வாழ்வு அவரை முன்னிலை படுத்தியே ஆரம்பித்தேன்!முன்பு திருப்புல்லாணி சென்று வந்ததும் காதலிக்காமலேயே காதல்தோல்வி--அல்லது பிரிவுத்துயரம் சில நாளாக என்னை வாட்டிவதக்கியது-- எனவே சமாதானம் உண்டாகும் படியாக பிரார்திக்க வேண்டும் என திட்டம் செய்து கொண்டேன்!
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒரு புதிய தூது செய்தியை கடவுளிடமிருந்து இறைதூதர்கள் கொண்டு வரும்போதெல்லாம் இந்த உலகமும் அதன் பின்னனியில் மனிதர்களை தூண்டுவிடும் அசுரர்களும் அந்த இறைதூதரை கொடுமைகள் செய்தே வந்திருக்கிறார்கள்! வட்டிவதக்கியிருக்கிறார்கள்! அவர்கள் துன்ப துயறத்தோடு அறத்தை நிலைனாட்டி சென்ற பிறகு அவர்களை கடவுளுக்கு இணைவைத்து இவரை கும்பிட்டால் போதும் இவரின் உபதேசங்களை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை அல்லது அவரின் பக்தர்கள் என்கிற பெறும் அலட்டல் செய்து வேண்டாத சடங்குசம்பிரதாயங்களை பிரபல படுத்தி அவரின் மூல உபதேசத்தை மெதுவாக ஓரம்கட்டுவார்கள்!

``யார் கடவுள் என அறிந்து கொள்வது ஆன்மீக வாழ்வில் ஒரு ஆத்துமாவிற்கு எந்த பலனையும் கொடுக்காது! உபதேசங்களை உணர்ந்து கடைபிடித்து அதை தனக்குள்ளாக எவ்வளவு விளையவைக்கிறோமோ அந்த அளவு கடவுளிடம் பலனும் நெருக்கமும் கொடுக்கும்--அது யார் கடவுளாக இருந்தாலும்!!``

ராமரின் மூல உபதேசம் என்ன?
திரேதா யுகத்தில்--10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் பலதார & பலபுருஸ திருமண வாழ்வில் இருந்தனர்! பக்கத்து ஊர் மீது படையெடுத்து ஆண்களை கொண்று விட்டு பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாகவும் ஆடுமாடு செல்வங்களையும் கொள்ளயடித்து கொண்டுவருவது வீரம் என புகழபட்ட காலம்! சுக்ரீவனின் மனைவியை வாலி வைத்து கொண்டதற்காக ராமர் வாலியை கொண்றார்! அப்பொது வாலி ``ராமா இது எங்களுக்கு தர்மம் `` என்று சொல்லவில்லையா?


பலதார & பலபுருஸ திருமண வாழ்வில் இருந்த மனித சமுதாயத்திற்கு ``ஒருவனுக்கு ஒருத்தி`` என்கிற கொள்கையை கடவுளின் தூது செய்தியாக கொணர்ந்தவர் ராமரே!!அதற்காகவே அவர் பலமுறை இன்னலடைந்தார்!


1) தன்னை அழைத்த சூர்ப்பனகையின் இச்சையை தீர்க்க ராமர் மறுத்ததால் திருமனமாகி ஓராண்டிற்குள் சீதை ராவணனால் தூக்கி செல்லபட்டார்!!அதனால் இளம் மனைவியை பிறிந்தே வாடினார்!! அவர்களை மீட்ட தேடி அழைந்தார்!! மீட்டு கொண்டு அயோத்தி சென்றாலும் குடிமக்களின் அவதூறு பேச்சுக்காக மீண்டும் மனைவியை பிறிந்தே வாழ்ந்தார்!! ``ஒருவனுக்கு ஒருத்தி`` என்கிற கொள்கையை நிலைனாட்ட அவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இல்லற சுகத்தை அணுபவிக்க முடிந்தது! உலகமே சிற்றிண்பத்தில் பலதார --பலபுருஸ சுகத்தில் மூழ்கி திளைத்த போது ``ஒருவனுக்கு ஒருத்தி`` என்கிற கொள்கைக்காக அந்த சுகத்தை தியாகம் செய்ய வேண்டிவந்தது!!


2) கடவுள் சிலரை ராஜாக்களாக உயர்த்தி வைக்கிறார்! அந்த பதவியை அடைந்தவர்கள் தங்களிடம் உள்ள பதவியையும் அதிகாரத்தையும் தங்கள் இஸ்ட்டம் போல பயன்படுத்தி கடவுளின் சொரூபங்களான மனிதர்களை அடக்கி ஒடுக்கி ஆணவமாய் வாழதொடங்குகின்றனர்!! எங்கெங்கும் சர்வாதிகாரிகளாய் மனிதர்கள் மாறிவிடுகின்றனர்! ``சொன்னதை செய் சொன்னதை செய் சஸ்பெண்டு செய்வேன் என கண்ணை மூடிக்கொண்டு மிரட்டுவதை தான் நிர்வாகம்`` என்பதாக IAS IPS Acadamy களிலும் கற்று கொள்கின்றனர்! மிறட்டுவது தான் திறமையான நிர்வாகி எனவும் அவர்களின் முன்னால் கூணிகுருகுவது போல நடித்து விட்டு அவர்கள் போனதும் அவன் கிடக்கிறான் நாதாரி என திட்டி விட்டு அரைகுறையாக வேலையை செய்வதும் அரசுதுறைகளில் செயல்பாடாக போய்விட்டது!! பதவிகளை அணுபவிக்கும் அளவு அந்த பதவிகளின் செயல்பாடுகளில் கர்மயோகம் வெளிப்படுவதில்லை! பதவியை கொடுத்த கடவுள் அதை எப்படி பயன்படுத்தவும் விட்டுவிடுகிறார்; ஆனால் நியாயதீர்ப்பு நாளன்று அவரிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிற உணர்தல் மனிதர்களிடம் இல்லை! அதிகாரிக்கு தனது கீழ் உள்ளவர்களை ஆட்டிபடைக்க அதிகாரம் உள்ளது ஆனால் தனக்கும் மேலான அதிகாரி கடவுள் என்கிற உள்ளார்ந்த பயம் இல்லாமல் துஸ்பிரயோகம் செய்யும் போது அவன் அரக்கனாகிறான்!! ஒரு அதிகாரி முதலில் தனக்கு கீழ் உள்ளவர்களின் கஸ்ட்டனஸ்ட்டங்களை கருத்துகளை காது கொடுத்து கேட்க உள்வாங்க தெறிந்திருக்க வேண்டும் !! கீழ்மட்ட அணுபவங்களை ஜனநாயகமாய் உள்வாங்கி முடிவெடுத்து அதை அமுல்படுத்தும் போது சர்வாதிகாரியை போல அமுல்படுத்த வேண்டும்!அமுல் படுத்தும் போதே கீழுள்ளவர்களின் அணுபவங்களை உள்வாங்க வேண்டும்!! மாற்று கருத்துகளை பேச அணுமதிக்க வேண்டும்! சாதக பாதக அம்சங்களை நடுனிலையோடு சீர்தூக்கி பார்த்து முடிவெடுக்க வேண்டும்! பெரிய பாதிப்பில்லாத மாற்றுகருத்துள்ளவர்களை அரவணைத்து போகும் பக்குவமுள்ளவனே வெற்றிகரமான தலைவனாய் பரிணமிக்க முடியும்! லெனின் கூட முடிவெடுக்கும் பொது உட்கட்சி ஜன நாயகம் இருக்க வேண்டும் செயல்படுத்தும் போது அந்த முடிவை சர்வதிகாரமாய் செயல்படுத்த வேண்டும் என்றார்! அவர் அப்படி பட்டவராய் இருந்ததால் வெற்றி பெற முடிந்தது !ஆனால் பதவிக்கு வந்ததும் மாற்றுகருத்து உள்ளவர்கள் அனைவரையும் ஸ்டாலின் கொன்றொளித்து ஆமாம்சாமிகளாய் சேர்த்து வைத்து இதன் பேர் ஒற்றுமை என்றார்! அறிவாளிகள் ஒழிக்க பட்டு அடிவருடிகளும் ஆமாம்சாமிகளுமாய் பதவிக்கு வந்து சில நாளில் முழு சோவியத்கூட்டமைப்பும் அக்கு வேராய் ஆணிவேராய் சிதறிவிட்டது!


இறைதூதர் ராமர் தன்னிஸ்டம் போல செயல்படுவது அரசனுக்கு அழகன்று நாளும் குடிமக்களின் கருத்தை அறிந்து சாதக பாதக அம்சங்களில் நீதியோடு நடுனிலை தவராமல் ஆட்சி செய்ய வேண்டும் என்கிற ராஜ நீதியை சொன்னவர்! வழக்கு உள்ளவர்கள் --பாதிக்க பட்டவர்கள் இரவுபகல் எந்த நேரமும் தன்னிடம் வருவதற்கு வசதி உண்டாக்கியவர்! குடிமக்களின் இன்னல்களை போக்குவதுதான் அரசனின் தலையாய கடமை அதை செய்வதற்கு அரசனுக்கு தூக்கம்-- ஓய்வு நேரம் தடையாய் இருக்க கூடாது என்றார்! அவரது சபையின் ஆராய்ச்சி மணி என்னேரமும் திறந்து வைக்க பட்டது! பொது மக்களின் கருத்தை அறிய அவர் தமது அதிகாரிகளை மட்டும் நம்பாமல் தானே மாறு வேடத்தில் குடிமக்களோடு கலந்து உறைவார்!


பொது மக்களுக்கு அப்பற்பட்ட அரச நீதி அவன் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட முன்னுதாரனமாய் வாழ வேண்டும் என்பதற்காக மீண்டும் சீதையை வணவாசத்திற்கு அணுப்பி விட்டு பிரமசாரியாகவே வாழ்ந்தார்!! ``மக்களுக்காகவே அரசன்!! அரசனுக்காக மக்கள் அன்று!!`` என்கிற ராஜ நீதியை வாழ்ந்து காட்டினார்! ஒரு அரசன் லோகங்களுக்கெல்லாம் அதிபதியாகிய கடவுளுக்கு பயந்து அவரது ராஜ்ஜியத்தில் தான் ஒரு அதிகாரி என்கிற கர்மயோகத்தில்--ராஜரிஸியாய் வாழவேண்டும் என்பதான கடவுளின் தூது செய்தி ராமர் மூலமாக வெளிபடுத்த பட்டது!


இதற்கு ராமர் செலுத்திய விலை; விலை மதிப்பில்லாத தனது இளமையை--இளம் மனைவியை பிறிந்து வாடியது! தனது மனைவியையும் வாட்டியது! அந்த துயரம் ராமரை வாட்டிய போது அவர் தர்ப்பை புல்லை விரித்து துயரனித்திரை செய்த இடம் திருபுல்லாணி! இங்கு ராமரின் ஆறாத்துயரில் கடவுளது சாந்தியும் சமாதானமும் உண்டாகும் படியாக பிரார்திப்பது நல்லது என்பதாக எனக்கு பட்டது!
ஜவகர் முஸ்லீம் என்பதால் காருக்கு காவலாக இருக்கும் படி விட்டு விட்டு கோவிலுக்குள் சென்றோம்! கடவுளின் சாந்தியும் சமாதானமும் இறைதூதர் ராமருக்கு உண்டாகும் படியாக கோவிலை சுற்றிசுற்றி வந்து பிரார்த்தித்தேன்!மன நிறைவை பெற்றுகொண்டேன்!!

-------தொடரும்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 15, 2012 10:03 pm

நாங்கள் சிறுவயதில் மண்டபம் காம்பில் தான் இருந்தோம் எங்கள் அப்பா மத்திய அரசில் இருந்ததால் அங்கு இருந்தோம். (1971-75) கொழும்பில் இருட்ன்கு ஹர்லிக்ஸ் அவ்வளவு திக் ஆக இருக்கும். கொழும்பு தேங்காய் என்னை பிரபலம். வீட்டின் அருகில் கடல், கடற்கரை நின்று பார்த்தால் தூரத்தில் தலைமன்னார் தெரியும். மணல் மலையில் உட்கார்ந்து மாரியம்மன் கோவில் திருவிழா வேளாங்கண்ணி திருவிழா பார்த்த நினைவு இன்றும் மனதில் இருந்து அகலாதவை. ரயில்வே நிலயம் 15 கிலோமீட்டர் நடந்தே அல்லது ஸ்ய்கிளில் தான் வரவேண்டும். பூங்க மரமும் அரசு குவாட்டர்ஸும் மறக்கவே முடியாது. மரைக்காயர் பட்டினமும் சிங்காரதோப்பும் ரயில்வே காலனியும் பல சரிதிறத்தை உள்ளடக்கி இன்றும் விம்மி கொண்டிருக்கின்றன.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக