ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை! Empty செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை!

Post by பாலாஜி Thu Apr 12, 2012 1:09 pm

இந்தோனேசியாவின் அசே அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது பாறைத் தட்டுக்களை செங்குத்தாக -அதாவது மேலிருந்து கீழாக - அசைக்கவில்லை. மாறாக, பக்கவாட்டில்தான் அது ஏற்பட்டுள்ளது. இதனால்தான் சுனாமி பேரலைகள் ஏற்படாமல் பூமி தப்பியுள்ளது.

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை! 12-fault-horizontal-movement

கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட இந்தோனேசிய நிலநடுக்கத்தின் அளவானது 9 ரிக்டராகும். அப்போது ஏற்பட்ட சுனாமி பேரலைகள் இந்தியப் பெருங்கடல் நாடுகளை பெருமளவில் சுருட்டிப் போட்டு விட்டது. பல லட்சம் உயிர்கள் பலியாகின, பெரும் பொருட் சேதத்தையும் ஆசிய நாடுகள் சந்தித்தன.

நேற்று இந்தோனேசியக் கடலில் ஏற்பட்ட பூகம்பமும் சாமானியமானதல்ல. அதுவும் அடுத்தடுத்து இரு பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதலில் 8.7 ரிக்டர் அளவிலும் பின்னர் 8.3 ரிக்டர் என்ற அளவிலும் பெரும் பூகம்பங்கள் ஏற்பட்டன. ஆனாலும் ஒரு சுனாமி அலை கூட எழவில்லை. இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மிக மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டும் கூட சுனாமி வராதது குறித்து விஞ்ஞானிகள் விளக்குகையில், பூகம்பமானது செங்குத்தாக, அதாவது மேலிருந்து கீழாக பாறைத் தட்டுக்களை நகர்த்த வேண்டும். அப்போதுதான் கடல் நீர் வெளித் தள்ளப்பட்டு சுனாமி பேரலைகள் ஏற்படும். ஆனால் பக்கவாட்டில் தட்டுக்கள் நகர்ந்தால் அதனால் சுனாமி அலைகள் ஏற்படாது. நேற்றும் கூட பக்கவாட்டில்தான் தட்டுக்கள் நகர்ந்துள்ளன. இதனால்தான் சுனாமி வரவில்லை.

ஒருவேளை செங்குத்தாக பாறைகள் நகர்ந்திருந்தால் மிகப் பெரிய சேதத்தை ஆசிய நாடுகள் சந்தித்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர் அவர்கள்.

-தட்ஸ்தமிழ்


Last edited by வை.பாலாஜி on Thu Apr 12, 2012 1:12 pm; edited 2 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை! Empty 2004-2012 இந்தோனேசிய பூகம்பங்கள்: வெறும் 3 கிலோமீட்டர் வித்தியாசம்தான்!

Post by பாலாஜி Thu Apr 12, 2012 1:10 pm

ஜகார்தா: இந்தோனேசியாவில் 2004ம் ஆண்டு ஏற்பட்ட அதி பயங்கர நிலநடுக்கத்திற்கும், நேற்று ஏற்பட்ட பூகம்பத்திற்கும் இடையே நிறைய ஒற்றுமைகளும், ஓரிரு வித்தியாசங்களும் உள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2004ம் ஆண்டு ஏற்பட்ட மிக பயங்கர நிலநடுக்கமானது பெரும் சுனாமி பேரலைகளை கொண்டு வந்து இந்தியப் பெருங்கடல் நாடுகளை சீரழித்து விட்டுப் போனது. ஆனால் நேற்றைய பூகம்பமானது நல்ல வேளையாக பெரும் சேதத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டு பூகம்பங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

2004ல் ஏற்பட்ட பூகம்பமும், நேற்று ஏற்பட்ட பூகம்பமும், சுமத்ராவின் மேற்குக் கடல் பகுதியில்தான் ஏற்பட்டன. அதாவது இரண்டுமே ஒரே பகுதியில்தான் ஏற்பட்டுள்ளன.

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை! 12-indonesia-earth-quake

2004ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு முதலில் 8.9 ரி்க்டர் என கூறப்பட்டது. பின்னர் இது 9.1 ரிக்டராக திருத்தப்பட்டது. நேற்று ஏற்பட்ட பூகம்பமானது முதலில் 8.9 ஆக கூறப்பட்டது. பின்னர் இது 8.7 என குறைக்கப்பட்டது.

2004ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பமானது, கடலுக்கு அடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. நேற்றைய பூகம்பமானது 30 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இரண்டுக்கும் வித்தியாசம் வெறும் 3 கிலோமீட்டர் ஆழம்தான். ஆனால் இரண்டும் ஏற்படுத்திய விளைவுகள் மிகப் பெரியவை, மாறுபட்டவை.

2004ல் ஏற்பட்ட பூகம்பத்தால் பெரிய அளவில் சுனாமி பேரலைகள் எழுந்தன. இதனால் 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல லட்சம் பேர் வீடு, வாசல், உறவுகளை இழந்தனர்.

இந்த அளவுக்கு சேதம் ஏற்பட முக்கியக் காரணம், சுனாமிதான். 2004 பூகம்பத்தின்போது டெக்ட்ரானிக் பிளேட் எனப்படும் பாறைத் தட்டுக்கள் மேலும் கீழுமாக செங்குத்து திசையில் நகர்ந்ததே இந்த அபாயகரமான சுனாமிக்குக் காரணம். அதேசமயம், நேற்று ஏற்பட்ட பூகம்பத்தின்போது பாறைத் தட்டுக்கள் பக்கவாட்டில் நகர்ந்துள்ளன. இதனால்தான் பெரிதாக வந்த பூகம்பம் புஸ்வானமாகிப் போய் விட்டது.

-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை! Empty Re: செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை!

Post by பிரசன்னா Thu Apr 12, 2012 1:18 pm

ஓஹோ.... அப்படியா... நல்ல வேலை.... சுனாமி வரலை...

அரிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி நாட்டாமை நன்றி அன்பு மலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை! Empty மிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை?

Post by பாலாஜி Thu Apr 12, 2012 1:48 pm

நேற்று இந்தோனேசியாவின் பண்டா அச்சே பகுதியில் ஏற்பட்ட 8.6 ரிக்டர் நிலநடுக்கமும் அதன் பிறகு ஏற்பட்ட பின் அதிர்வு என்று வர்ணிக்கப்பட்ட 8.2 ரிக்டர் நில நடுக்கத்தினாலும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது. 2004ற்குப் பிறகு அதே பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டும் சுனாமி ஏற்படாததன் காரணம் என்ன என்பதை புவியியல் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஏற்பட்ட பூகம்பம் கண்டத் தட்டுகள் கிடைக்கோட்டு மட்டத்தில் அதாவது செங்குத்து நகர்தல் இல்லாமல், நகர்ந்ததால் கடல் நீர் எழும்புதல் குறைவாகவே இருந்தது என்று கூறியுள்ளனர்.

நேற்று ஏற்பட்டது 'ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட்' (Strike Slip Fault) என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2004-இலும் ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பூகம்பமும் சப்டக்ஷன் மண்டலம் (Subduction Zone) அல்லது இரண்டு நாடுகளின் கண்டத் தட்டுகளில் ஒன்று மற்றதன் அடியில் போய் செருகிக் கொள்ளும் செங்குத்து நகர்தலாகும், இதில் வெளியாகும் நிலநடுக்க அலை சக்தி பயங்கரமானது ஆனால் கண்டத் தட்டுக்கள் கிடைக்கோட்டு மட்டத்தில் நகர்ந்ததால் சக்தி அவ்வளவாக வெளிப்படவில்லை.

நேற்று ஏற்பட்ட முதல் பூகம்பம் பண்டா அச்சே கடற்கரையிலிருந்து 269 மைல்கள் தென் மேற்கு திசையில் மையம் கொண்டிருந்தது. இரண்டாவது 8.2 ரிக்டர் அளவு பூகம்பம் இந்த மையத்திலிருந்து மேலும் விலகி 120 மைல் தெற்கு திசையில் மையம் கோண்டிருந்தது.

இரண்டுமே கடலுக்கு அடியில் 14 மற்றும் 10 மைல்கள் ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று ஏற்பட்ட முதல் பூகம்பத்திலிருந்து வெளியாகும் சக்தியைக் காட்டிலும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்க பூகம்பத்தில் 6 மடங்கு அதிக சக்தி வெளியானது. நேற்று ஏற்பட்ட 2வது பூகம்பத்தில் வெளியான சக்தியைக் காட்டிலும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் 22 மடங்கு அதிக சக்தி வெளியானது.

இந்தோனேசிய தேசிய பூகம்ப தகவல் புவி பௌதீக விஞ்ஞானி ஆமி வான் இதைப்பற்றி கூறுகையில், 2004 டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட அந்த கடும் பூகம்பத்தின் போது இந்தியக் கண்டத் தட்டு இதைவிட சிறிய பர்மா கண்டத்தட்டுக்களுக்கு அடியில் போய் செருகியது. அப்போது சுமார் 50 அடி உயரத்திற்கு கண்டத்தட்டு நகர்ந்துள்ளது. இதனால் கடல் தரை அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட சுனாமி பேரலைகள் ஏற்பட்டது.
செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை! Img1120412015_1_1

ஆனால் நேற்று ஏற்பட்ட பூகம்பம் ஒரே பிளேட்டில் அதாவது ஆஸ்ட்ரேலியக் கண்டத்தட்டின் உள்ளேயே ஏற்பட்ட மாற்றம் இதனால் இரண்டு நாடுகளின் கண்டத் தட்டுகள் இதில் மோதலில் ஈடுபடவில்லை. மாறாக ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட் காரணமாக ஒன்று மற்றதிலிருந்து சற்றே கிடைக்கோட்டு மட்டத்தில் விலகியுள்ளது. இதனால் சீ ஃப்ளொர் என்று அழைக்கப்படும் கடலடித் தரையின் அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. இதனால் சுனாமி ஏற்படவில்லை.

மேலும் ஆஸ்ட்ரேலிய கண்டத்தட்டு சாதாரணமாக் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ அதே திசையில்தான் இந்த ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட் பாறை நகர்ந்துள்ளது.

நேற்று ஏற்பட்ட பூகம்பம் 2004 பூகம்பம் ஏற்பட்ட 'சப்டக்ஷன் மண்டலம்' என்று அழைக்கப்படும் இரண்டு கண்டத் தட்டுக்களில் ஒன்று மற்றதன் அடியில் சென்று நுழையும் பகுதிக்கு 100கிமீ மட்டுமே மேற்கேயிருந்துள்ளது என்கிறார் ஹைதராபாதில் உள்ள தேசிய புவி பௌதீக ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி ஆர்.கே. சத்தா கூற்கிறார்.

மேலும் 2004 சுனாமியை தீர்மானித்த சப்டக்ஷன் மண்டலத்திற்கு அருகே நேற்றைய பூகம்ப மையம் இருந்ததால் ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட், சப்டக்ஷன் மண்டலம் சந்திக்கும் மும்முனை சந்திப்பின் அருகே நேற்றைய பூகம்ப மையம் இருந்தது என்கிறார் சத்தா.

1950 - 1965ஆம் ஆண்டுகளுக்கு இடையே 8.5 ரிக்டர் அளவு கோல் பூகம்பங்கள் ஏற்பட்டது போல் தற்போது 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு இத்தகைய பெரிய பூகம்பங்கள் ஏற்படுவதற்கான புவிப்பாறை சூழல் அப்பகுதியில் நிலவுவதாக சத்தா தெரிவித்துள்ளார். அதாவது 1950- 65 ஆம் ஆண்டுகளிடையே ஏற்பட்டது போல் தற்போதும் மிகப்பெரிய நிலநடுக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக ரிக்டர் அளவு பூகம்பம் வரும் நாட்களில் ஏற்படாது என்று கூறுவதற்கில்லை என்கிறார் சத்தா.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்த மிகப்பெரிய 9 ரிக்டர் அளவு பூகம்பத்தினால் கடற்பரப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இன்னமும் அது தன்னை அட்ஜஸ்ட் செய்து கொண்டுவருகிறது என்று வான் என்ற விஞ்ஞானி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

நாடுகள் கட்டிடங்களைக் கட்டுவதில் கட்டுப்பாடுகளையும், பொதுமக்களுக்கு மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் போது பாதுகாப்பிற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தும் நேரம் வந்துவிட்டது.

-வெப்துனியா ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை! Empty Re: செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை!

Post by ஜாஹீதாபானு Thu Apr 12, 2012 1:56 pm

பகிர்வுக்கு நன்றி பாலாஜி........ அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை! Empty Re: செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை!

Post by பாலாஜி Thu Apr 12, 2012 1:59 pm

கிடைக்கோட்டு மட்டத்தில் நகர்தல்

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை! Strike-c

செங்குத்து நகர்தல்

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை! Horik


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை! Empty Re: செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை!

Post by பிரசன்னா Thu Apr 12, 2012 2:05 pm

பாலாஜி நீங்கள் கடல்கரையின் அழகை ரசித்து கொண்டு இருந்தாலும்
சுனாமியை பற்றியும் முழுமையாக அறிந்து வைத்து கொல்கிறீர்கள்.... சூப்பருங்க
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை! Empty Re: செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை!

Post by யினியவன் Thu Apr 12, 2012 2:29 pm

நாட்டாமை ஆனவுடன் நம்ம தல தீவிர ஆராய்ச்சியில ஈடு பட்டுட்டார் போல இருக்கே. புன்னகை

பகிர்வுக்கு நன்றி பாலாஜி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை! Empty Re: செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை!

Post by பாலாஜி Thu Apr 12, 2012 2:32 pm

நன்றி இனியவன் ,பிரசன்னா (அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது )


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை! Empty Re: செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை!

Post by ராஜா Thu Apr 12, 2012 2:40 pm

நன்றி பாலாஜி , தெளிவாக புரிந்தது ....
கொலவெறி wrote:நாட்டாமை ஆனவுடன் நம்ம தல தீவிர ஆராய்ச்சியில ஈடு பட்டுட்டார் போல இருக்கே. புன்னகை
பகிர்வுக்கு நன்றி பாலாஜி.
ஆமாம் , முன்னாடி பால்கனியில் இருந்து பீச்சீல் போறவங்களை ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தார் , இப்ப நாட்டாமை ஆனவுடன் கடலை ஆராய்ச்சி பண்ணுறார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை! Empty Re: செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
» கோதுமையில் செய்த சாப்பாட்டு தட்டுக்கள்!
» பறக்கும் தட்டுக்கள் உண்மைதானா? சில உண்மைகள்!
» 11 எம்எல்ஏக்கள் வழக்கில் புதிய திருப்பம்- நடவடிக்கைக்கு அவசியம் எழவில்லை என முதல்வர் கடிதம்
» இந்தியாவின் சீன எல்லைப்பகுதிகளில் பறக்கும் தட்டுக்கள்!-மர்மம் நீடிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum