Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டசபை செய்தி துளிகள்
3 posters
Page 1 of 1
சட்டசபை செய்தி துளிகள்
மணல் குவாரி மூலம் ரூ.188 கோடி வருமானம்
சட்டசபை கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் கே.தங்கவேல் (திருப்பூர் தெற்கு), டெல்லிபாபு ஆகியோர் மணல் குவாரி சம்பந்தமாக எழுப்பிய கேள்விகளுக்கு, பதில் அளித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-
2003-ம் ஆண்டு முதல் ஆற்றுப்படுகைகளில் உள்ள குவாரிகளில் மணலை எடுத்து நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யும் பணி அரசு துறையான பொதுப்பணி துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மணல் குவாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
2011-2012-ம் ஆண்டில் மணல் குவாரி மூலம் அரசுக்கு ரூ.188 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மணல் குவாரிகள் சம்பந்தமாக 5,315 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.13 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
------
சுற்றுலா ஸ்தலமாகிறது, இருக்கன்குடி மாரியம்மன் கோவில்
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா கூறும்போது, ``இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தினம்தோறும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் ஓய்வு மண்டலம், கழிவறை வசதி, குடிநீர் வசதி ஆகிய பணிகளை மேற்கொள்ள ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற உள்ளது. அங்கே படகு குழாம், பூங்கா அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
------
பாரதியார் பல்கலைக்கழக பிரச்சினை-அமைச்சர் விளக்கம்
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், உறுப்பினர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) எழுந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக கவன ஈர்ப்பை கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:-
பாரதியார் பல்கலைக்கழகத்தில் 35 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது. 100 பேர் இதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்கள் முறையாக நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது. பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு 26 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் 24 பேர் பணியில் சேர்ந்தனர். இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு ஐகோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒப்புக்கொண்டவர்களில் 23 பேர் பணிக்கு வந்தனர். ஒருவர் வரவில்லை. இவர்களுடைய பணி தற்போது நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. நிரந்தரம் செய்யப்படவில்லை. ஆகவே இவர்களை தேர்ந்தெடுத்ததில் எந்த விதமான விதிமுறையும் மீறப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
------
சொந்த கட்டிடத்திற்கு மாறும் சார்பதிவாளர் அலுவலகங்கள்
சட்டமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் ராமஜெயம் (அ.தி.மு.க.), சந்திரகுமார் (தே.மு.தி.க.), அசோக் (அ.தி.மு.க.) ஆகியோர் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் அளித்து வணிகவரி மற்றும் பதிவு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இதில் 224 சார்பதிவாளர் அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. வரும் 5 ஆண்டுகளில் தனியார் கட்டிடங்களில் இயங்கும் அனைத்து சார் பதிவகங்களுக்கு, புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
2011-2012-ம் ஆண்டில் 52 கட்டிடங்கள் கட்டுவதற்கு 26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் பதிப்பு அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து கட்டிடங்கள் கட்டிக்கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
------
வரதராஜன் மறைவுக்கு இரங்கல்
தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியதும் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் என்.வரதராஜன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்பை சபாநாயகர் டி.ஜெயக்குமார் வாசித்தார். அதனை தொடர்ந்து வரதராஜனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று, மவுனத்தை கடைப்பிடித்தனர்.
------
தி.மு.க. உறுப்பினர்கள் வரவில்லை
`சட்டசபையில் பேசுவதற்கு போதுமான நேரம் ஒதுக்குவதில்லை' என்று கூறி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு வார காலத்திற்கு சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்தது. இதை தொடர்ந்து, நேற்றை சட்டமன்ற கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
தினதந்தி
சட்டசபை கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் கே.தங்கவேல் (திருப்பூர் தெற்கு), டெல்லிபாபு ஆகியோர் மணல் குவாரி சம்பந்தமாக எழுப்பிய கேள்விகளுக்கு, பதில் அளித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-
2003-ம் ஆண்டு முதல் ஆற்றுப்படுகைகளில் உள்ள குவாரிகளில் மணலை எடுத்து நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யும் பணி அரசு துறையான பொதுப்பணி துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மணல் குவாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
2011-2012-ம் ஆண்டில் மணல் குவாரி மூலம் அரசுக்கு ரூ.188 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மணல் குவாரிகள் சம்பந்தமாக 5,315 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.13 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
------
சுற்றுலா ஸ்தலமாகிறது, இருக்கன்குடி மாரியம்மன் கோவில்
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா கூறும்போது, ``இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தினம்தோறும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் ஓய்வு மண்டலம், கழிவறை வசதி, குடிநீர் வசதி ஆகிய பணிகளை மேற்கொள்ள ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற உள்ளது. அங்கே படகு குழாம், பூங்கா அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
------
பாரதியார் பல்கலைக்கழக பிரச்சினை-அமைச்சர் விளக்கம்
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், உறுப்பினர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) எழுந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக கவன ஈர்ப்பை கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:-
பாரதியார் பல்கலைக்கழகத்தில் 35 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது. 100 பேர் இதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்கள் முறையாக நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது. பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு 26 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் 24 பேர் பணியில் சேர்ந்தனர். இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு ஐகோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒப்புக்கொண்டவர்களில் 23 பேர் பணிக்கு வந்தனர். ஒருவர் வரவில்லை. இவர்களுடைய பணி தற்போது நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. நிரந்தரம் செய்யப்படவில்லை. ஆகவே இவர்களை தேர்ந்தெடுத்ததில் எந்த விதமான விதிமுறையும் மீறப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
------
சொந்த கட்டிடத்திற்கு மாறும் சார்பதிவாளர் அலுவலகங்கள்
சட்டமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் ராமஜெயம் (அ.தி.மு.க.), சந்திரகுமார் (தே.மு.தி.க.), அசோக் (அ.தி.மு.க.) ஆகியோர் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் அளித்து வணிகவரி மற்றும் பதிவு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இதில் 224 சார்பதிவாளர் அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. வரும் 5 ஆண்டுகளில் தனியார் கட்டிடங்களில் இயங்கும் அனைத்து சார் பதிவகங்களுக்கு, புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
2011-2012-ம் ஆண்டில் 52 கட்டிடங்கள் கட்டுவதற்கு 26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் பதிப்பு அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து கட்டிடங்கள் கட்டிக்கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
------
வரதராஜன் மறைவுக்கு இரங்கல்
தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியதும் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் என்.வரதராஜன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்பை சபாநாயகர் டி.ஜெயக்குமார் வாசித்தார். அதனை தொடர்ந்து வரதராஜனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று, மவுனத்தை கடைப்பிடித்தனர்.
------
தி.மு.க. உறுப்பினர்கள் வரவில்லை
`சட்டசபையில் பேசுவதற்கு போதுமான நேரம் ஒதுக்குவதில்லை' என்று கூறி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு வார காலத்திற்கு சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்தது. இதை தொடர்ந்து, நேற்றை சட்டமன்ற கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சட்டசபை செய்தி துளிகள்
நேரில் பார்த்தாலும் ரத்தக்கொதிப்பே வந்துடும்.. அம்பூட்டு ரீலு உடுறாங்க... இடைஇடையே அம்மா அம்மான்னு வேற..
இங்கே ராவாக படிக்க அழகாக உள்ளது சிவா.
இங்கே ராவாக படிக்க அழகாக உள்ளது சிவா.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சட்டசபை செய்தி துளிகள்
இவனுங்க ரொம்ப ஓவரா நேத்தி வேலை செஞ்ச அதிர்ச்சில தான் சுனாமி உருவாகும் சூழ்நிலை.
எப்பா எப்பவும் போல சும்மா போயி தூங்கிட்டு முடிஞ்சா ரெண்டு பலான படம் கைபேசில பாத்தோமான்னு இருங்கப்பா.
எப்பா எப்பவும் போல சும்மா போயி தூங்கிட்டு முடிஞ்சா ரெண்டு பலான படம் கைபேசில பாத்தோமான்னு இருங்கப்பா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்
» செய்தி துளிகள்
» செய்தி துளிகள்
» இன்றைய செய்தி துளிகள்
» செய்தி துளிகள் -தொடர் பதிவு
» செய்தி துளிகள்
» செய்தி துளிகள்
» இன்றைய செய்தி துளிகள்
» செய்தி துளிகள் -தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|