புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_lcapதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_voting_barதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_lcapதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_voting_barதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_rcap 
2 Posts - 8%
viyasan
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_lcapதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_voting_barதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_lcapதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_voting_barதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_lcapதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_voting_barதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_lcapதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_voting_barதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_lcapதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_voting_barதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_lcapதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_voting_barதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_lcapதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_voting_barதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_lcapதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_voting_barதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_lcapதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_voting_barதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_lcapதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_voting_barதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_lcapதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_voting_barதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_lcapதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_voting_barதமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 8:27 am

First topic message reminder :

இந்தோனேசியா அருகே கடலில் 8.7 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த பூமி அதிர்ச்சி உணரப்பட்டது.

மனிதனால் முன்கூட்டியே கணிக்க முடியாத இயற்கை சீற்றங்களில் முக்கியமானது பூகம்பம்.

பூமி அதிர்ச்சி

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் உள்ள பாண்டா ஏஸ் நகருக்கு அருகே நேற்று பிற்பகல் 2.08 மணிக்கு கடலுக்கு அடியில் 8.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் 80 சென்டி மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் ஏற்பட்டு கடற்கரையை நோக்கி வந்தன. இதனால் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இந்த பூகம்பம் சென்னை நகரிலும், திருச்சி, மதுரை, சேலம், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உணரப்பட்டது. சென்னை நகரில் எழும்பூர், மைலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாநகர், கிண்டி, தியாகராயநகர், வடபழனி, அடையார் ஆகிய பகுதிகளில் நில நடுக்கத்தை நன்றாக உணர முடிந்தது.

கட்டிடங்கள் குலுங்கின

சென்னை நகரில் திடீரென்று பூகம்பம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. அலுவலகங்களில் இருக்கைகளில் அமர்ந்து இருந்தவர்கள் பூமி அதிர்ச்சியை உணர முடிந்தது. இருக்கைகள் அசைந்ததால் பீதி அடைந்த அவர்கள் அவசர அவசரமாக அலுவலகங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. கட்டில்கள் அசைந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்து வெளியே வந்து ஒருவரிடம் ஒருவர் பதற்றத்துடன் விசாரித்தனர்.

சிறிது நேர இடைவெளிக்கு பிறகு மறுபடியும் ஒருமுறை பூமி அதிர்ந்தது. இதனால் அலுவலகங்களை விட்டும், வீடுகளை விட்டும் வெளியே வந்தவர்கள் உள்ளே செல்ல தயங்கினார்கள்.

சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக கடலில் சுனாமி அலைகள் உருவாகி பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின் சார்பில் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசின் சார்பிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நிலைமையை சமாளிக்க முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா உள்பட கடலோர பகுதியில் வசிக்கும் மக்களிடையே பீதி ஏற்பட்டது.

ஆனால் எந்த சூழ்நிலையையும் சந்திக்க அரசு தயாராக இருப்பதால் மக்கள் பீதி அடைய தேவை இல்லை என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா அரசுகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

மெரினா கடற்கரையில் பாதுகாப்பு

சுனாமி எச்சரிக்கையின் காரணமாக சென்னை நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியா அருகே ஏற்பட்ட பூகம்பம் காரணமாக ராட்சத சுனாமி அலைகள் உருவாகி, தாக்கியதில் மெரினா கடற்கரை நாசமானதோடு பலத்த உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. இதனால் கடற்கரையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். கடற்கரைக்கு வந்தவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் நேற்று பிற்பகலில் மெரினா கடற்கரை வெறிச்சோடியது.

இதேபோல் பெசன்ட் நகர் கடற்கரையிலும் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பூகம்பத்தின் காரணமாகவும், சுனாமி பீதியின் காரணமாகவும் பல ஊர்களில் நேற்று பிற்பகலில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சென்னை நகரில், பல தனியார் நிறுவனங்களில், "இனி வேலை செய்ய வேண்டாம், வீடுகளுக்கு செல்லுங்கள்'' என்று அறிவித்தனர். இதனால் அந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அவசர அவசரமாக வீடு திரும்பினார்கள்.

திருச்செந்தூரில் கடல் சீற்றம்

திருச்செந்தூரில் வழக்கத்துக்கு மாறாக நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அதிக உயரத்துக்கு எழும்பின. சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே வெகு தூரம் வரை கடல்நீர் வந்தது.

ஆனால் தூத்துக்குடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் அமைதியாக காணப்பட்டது.

ஆபத்து நீங்கியது

பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரத்தில் சுனாமி அலைகள் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த பூகம்பம் காரணமாக சுனாமி அலைகள் உருவாகவில்லை.

இதைத்தொடர்ந்து நேற்று மாலையில், 28 நாடுகளுக்கும் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தினதந்தி



தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 8:39 am

மாமல்லபுரத்தில் கடல் உள்வாங்கியது

தமிழ்நாட்டில் நேற்று பகல் 2ற் மணியளவில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தையொட்டி மாமல்லபுரத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மேற்பார்வையில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் சுற்றுலா பயணிகளை அவசர, அவசரமாக வெளியேற்றினர். கடற்கரையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு வெண்புருவம்- கொத்தளமேடு பகுதியில் கடல் நீர் சுமார் 50 மீட்டருக்கு உள்வாங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூரில் நில அதிர்வு உணரப்பட்டது. மேசை, நாற்காலிகள் லேசாக குலுங்கின. பள்ளிக்கூட மாணவர்கள் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காஞ்சீபுரத்திலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.



தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 8:40 am

நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் குளத்தில் தண்ணீர் பொங்கியது குளித்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம்

சுமத்ரா தீவு பகுதியில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டபோது அதன் தாக்கம் குமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் தெரியவந்தது.

வில்லுக்குறியை அடுத்த மாடத்தட்டுவிளையில் பல்வேறு குளங்கள் அமைந்துள்ளன. அதில் சிறுதாமரைகுளமும் ஒன்று. இந்த குளத்தில் நேற்று பகல் நேரத்தில் ஏராளமான பெண்களும், ஆண்களும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று குளத்தின் ஒரு பகுதியில் தண்ணீர் அலைகள் போல எழுந்தது. அப்போது குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய் பகுதியில் அந்த தண்ணீர் பொங்கி சிதறியது. சுமார் 3 அடிவரை தண்ணீர் எழுந்ததை பார்த்ததும் அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். சிறிது நேரத்தில் குளம் பழையது போலவே மாறியது.

இதேபோல தக்கலை அருகே உள்ள கேரளபுரம் அதிசய விநாயகர் மற்றும் மகாதேவர் கோவிலில் உள்ள தெப்பக்குளம், உதயகிரி கோட்டை அருகே உள்ள தெப்பக்குளம், ஆழ்வார்கோவில் கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் ஆகிய குளங்களிலும் நிலநடுக்க நேரத்தில் திடீரென்று தண்ணீர் பொங்கி எழுந்தது. இதனால் குளத்தின் அடியில் இருந்த சகதிகள் அனைத்தும் மேலே மிதப்பதை காண முடிந்தது. சிறிது நேரத்தில் திடீரென்று உயர்ந்த நீர்மட்டம் பழைய நிலைக்கு மாறியதை காணமுடிந்தது.

இதுபோல நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள கோவில் தெப்பகுளம், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள குளங்களில் தண்ணீர் பொங்கியதை மக்கள் பார்த்துள்ளனர்.



தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 8:42 am

ஆச்சர்யம் கலந்த பயம் வருகிறது சிவா.. அரிய தகவல்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 8:57 am

அசுரன் wrote:ஆச்சர்யம் கலந்த பயம் வருகிறது சிவா.. அரிய தகவல்கள்

மக்கள் மனிதத் தனிமையை இழந்து வருகிறார்கள். இதுதான் உலக அழிவிற்கான அறிகுறிகள்.



தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 9:01 am

தயார் நிலையில் கப்பல்-விமானப்படைகள்

பூகம்பத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை எதிரொலியாக, இந்திய கப்பல் மற்றும் விமானப்படைகள் நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

தேசிய பேரிடர் மீட்பு அதிரடிப்படையின் 80 பிரிவுகள், மோப்ப நாய்கள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் ஹிண்டன் விமானப்படை தளத்தில் தயாராக நிறுத்தப்பட்டு இருந்தனர். அதில் 6 பிரிவுகள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மீட்பு விமானங்களில் 10 டன் மருத்துவ பொருட்களும் ஏற்றப்பட்டு இருந்தன.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்தமான் தீவில் நிறுத்தப்பட்டு இருந்த அனைத்துப் போர்க்கப்பல்களையும் கடற்படை அதிகாரிகள் உஷார் நிலையில் வைத்திருந்தனர். கிழக்கு பிராந்திய கடற்படை தலைமையகமும், மீட்புப்பணிக்கு உரிய கப்பல்களை தயார் நிலையில் வைத்திருந்தது.



தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 9:02 am

மும்பைக்கு மேற்கே அரபிக்கடலிலும் நில நடுக்கம்

இந்தோனேஷியாவில் பூகம்பம் ஏற்படுவதற்கு சுமார் 13/4 மணி நேரத்துக்கு முன், அதாவது பகல் 12.31 மணிக்கு அரபிக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மராட்டிய தலைநகர் மும்பைக்கு மேற்கே 155 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 3.4 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக மும்பை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் ராஜீவ் நாயர் தெரிவித்தார்.

மும்பை நகரின் வட பகுதியில் சில இடங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 9:04 am

சுனாமி பீதியால் இந்திய-அமெரிக்க கடற்படை கூட்டு பயிற்சிக்கு பாதிப்பு இல்லை

சென்னைக்கு அருகே நடைபெற்று வரும் இந்திய-அமெரிக்க கடற்படை கூட்டு போர்ப்பயிற்சி, சுனாமி பீதியால் பாதிக்கப்படவில்லை. அப்பயிற்சி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு பயிற்சி

இந்திய-அமெரிக்க கடற்படைகள், கடந்த 1992-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கூட்டு போர்ப்பயிற்சி, `மலபார்' என்ற பெயரில், கடந்த 7-ந் தேதி சென்னை அருகே வங்கக்கடலில் தொடங்கியது. இது, 10 நாட்கள் பயிற்சி ஆகும். இதில், இரு நாடுகளின் அதி நவீன போர்க் கப்பல்கள் பங்கேற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி பீதி நிலவியது. இதனால், இந்திய-அமெரிக்க கடற்படை கூட்டு பயிற்சி பாதிக்கப்பட்டு இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது.

பாதிப்பு இல்லை

ஆனால், அந்த பயிற்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

சுனாமி பீதியையும் மீறி, இந்திய-அமெரிக்க கடற்படை கூட்டு போர்ப்பயிற்சியை நடத்தினோம். தற்போது, சென்னைக்கு தெற்கே வங்கக்கடலில் இருநாட்டு கப்பல்களும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை. திட்டமிட்டபடி, எந்த கட்டுப்பாடும் இன்றி, 10 நாட்கள் பயிற்சி நடைபெறும்.

சுனாமியிலும் பயிற்சி பெற்று இருப்போம்

ஒருவேளை, சுனாமி தாக்கி இருந்தால் கூட எங்கள் கூட்டு பயிற்சியில் எந்த மாறுதலும் இருந்திருக்காது. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை கையாள்வது எப்படி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது எப்படி என்பதும் எங்கள் போர்ப்பயிற்சியில் அடங்கும்.

எனவே, சுனாமி தாக்கி இருந்தால், அதையே சாதகமாக்கி ஒத்திகை பார்த்து இருப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 9:34 am

இந்த கூட்டுப்பயிற்சியை பார்த்து இலங்கையே பீதியடையவில்லை... அப்புறம் இவங்க ஏன் பயப்படனும்.

தகவலுக்கு நன்றி சிவா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 12, 2012 9:55 am

சுனாமிக்கு பயந்து நேத்தி பதுங்கிட்டு இன்னிக்கு வந்து செய்தி தரும் சிவா - நீங்க வீரர் தானுங்கோ. புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக