ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Empty தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின

Post by சிவா Thu Apr 12, 2012 8:27 am

First topic message reminder :

இந்தோனேசியா அருகே கடலில் 8.7 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த பூமி அதிர்ச்சி உணரப்பட்டது.

மனிதனால் முன்கூட்டியே கணிக்க முடியாத இயற்கை சீற்றங்களில் முக்கியமானது பூகம்பம்.

பூமி அதிர்ச்சி

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் உள்ள பாண்டா ஏஸ் நகருக்கு அருகே நேற்று பிற்பகல் 2.08 மணிக்கு கடலுக்கு அடியில் 8.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் 80 சென்டி மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் ஏற்பட்டு கடற்கரையை நோக்கி வந்தன. இதனால் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இந்த பூகம்பம் சென்னை நகரிலும், திருச்சி, மதுரை, சேலம், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உணரப்பட்டது. சென்னை நகரில் எழும்பூர், மைலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாநகர், கிண்டி, தியாகராயநகர், வடபழனி, அடையார் ஆகிய பகுதிகளில் நில நடுக்கத்தை நன்றாக உணர முடிந்தது.

கட்டிடங்கள் குலுங்கின

சென்னை நகரில் திடீரென்று பூகம்பம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. அலுவலகங்களில் இருக்கைகளில் அமர்ந்து இருந்தவர்கள் பூமி அதிர்ச்சியை உணர முடிந்தது. இருக்கைகள் அசைந்ததால் பீதி அடைந்த அவர்கள் அவசர அவசரமாக அலுவலகங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. கட்டில்கள் அசைந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்து வெளியே வந்து ஒருவரிடம் ஒருவர் பதற்றத்துடன் விசாரித்தனர்.

சிறிது நேர இடைவெளிக்கு பிறகு மறுபடியும் ஒருமுறை பூமி அதிர்ந்தது. இதனால் அலுவலகங்களை விட்டும், வீடுகளை விட்டும் வெளியே வந்தவர்கள் உள்ளே செல்ல தயங்கினார்கள்.

சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக கடலில் சுனாமி அலைகள் உருவாகி பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின் சார்பில் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசின் சார்பிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நிலைமையை சமாளிக்க முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா உள்பட கடலோர பகுதியில் வசிக்கும் மக்களிடையே பீதி ஏற்பட்டது.

ஆனால் எந்த சூழ்நிலையையும் சந்திக்க அரசு தயாராக இருப்பதால் மக்கள் பீதி அடைய தேவை இல்லை என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா அரசுகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

மெரினா கடற்கரையில் பாதுகாப்பு

சுனாமி எச்சரிக்கையின் காரணமாக சென்னை நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியா அருகே ஏற்பட்ட பூகம்பம் காரணமாக ராட்சத சுனாமி அலைகள் உருவாகி, தாக்கியதில் மெரினா கடற்கரை நாசமானதோடு பலத்த உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. இதனால் கடற்கரையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். கடற்கரைக்கு வந்தவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் நேற்று பிற்பகலில் மெரினா கடற்கரை வெறிச்சோடியது.

இதேபோல் பெசன்ட் நகர் கடற்கரையிலும் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பூகம்பத்தின் காரணமாகவும், சுனாமி பீதியின் காரணமாகவும் பல ஊர்களில் நேற்று பிற்பகலில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சென்னை நகரில், பல தனியார் நிறுவனங்களில், "இனி வேலை செய்ய வேண்டாம், வீடுகளுக்கு செல்லுங்கள்'' என்று அறிவித்தனர். இதனால் அந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அவசர அவசரமாக வீடு திரும்பினார்கள்.

திருச்செந்தூரில் கடல் சீற்றம்

திருச்செந்தூரில் வழக்கத்துக்கு மாறாக நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அதிக உயரத்துக்கு எழும்பின. சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே வெகு தூரம் வரை கடல்நீர் வந்தது.

ஆனால் தூத்துக்குடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் அமைதியாக காணப்பட்டது.

ஆபத்து நீங்கியது

பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரத்தில் சுனாமி அலைகள் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த பூகம்பம் காரணமாக சுனாமி அலைகள் உருவாகவில்லை.

இதைத்தொடர்ந்து நேற்று மாலையில், 28 நாடுகளுக்கும் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தினதந்தி


தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Empty Re: தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின

Post by சிவா Thu Apr 12, 2012 8:39 am

மாமல்லபுரத்தில் கடல் உள்வாங்கியது

தமிழ்நாட்டில் நேற்று பகல் 2ற் மணியளவில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தையொட்டி மாமல்லபுரத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மேற்பார்வையில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் சுற்றுலா பயணிகளை அவசர, அவசரமாக வெளியேற்றினர். கடற்கரையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு வெண்புருவம்- கொத்தளமேடு பகுதியில் கடல் நீர் சுமார் 50 மீட்டருக்கு உள்வாங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூரில் நில அதிர்வு உணரப்பட்டது. மேசை, நாற்காலிகள் லேசாக குலுங்கின. பள்ளிக்கூட மாணவர்கள் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காஞ்சீபுரத்திலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.


தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Empty Re: தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின

Post by சிவா Thu Apr 12, 2012 8:40 am

நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் குளத்தில் தண்ணீர் பொங்கியது குளித்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம்

சுமத்ரா தீவு பகுதியில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டபோது அதன் தாக்கம் குமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் தெரியவந்தது.

வில்லுக்குறியை அடுத்த மாடத்தட்டுவிளையில் பல்வேறு குளங்கள் அமைந்துள்ளன. அதில் சிறுதாமரைகுளமும் ஒன்று. இந்த குளத்தில் நேற்று பகல் நேரத்தில் ஏராளமான பெண்களும், ஆண்களும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று குளத்தின் ஒரு பகுதியில் தண்ணீர் அலைகள் போல எழுந்தது. அப்போது குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய் பகுதியில் அந்த தண்ணீர் பொங்கி சிதறியது. சுமார் 3 அடிவரை தண்ணீர் எழுந்ததை பார்த்ததும் அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். சிறிது நேரத்தில் குளம் பழையது போலவே மாறியது.

இதேபோல தக்கலை அருகே உள்ள கேரளபுரம் அதிசய விநாயகர் மற்றும் மகாதேவர் கோவிலில் உள்ள தெப்பக்குளம், உதயகிரி கோட்டை அருகே உள்ள தெப்பக்குளம், ஆழ்வார்கோவில் கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் ஆகிய குளங்களிலும் நிலநடுக்க நேரத்தில் திடீரென்று தண்ணீர் பொங்கி எழுந்தது. இதனால் குளத்தின் அடியில் இருந்த சகதிகள் அனைத்தும் மேலே மிதப்பதை காண முடிந்தது. சிறிது நேரத்தில் திடீரென்று உயர்ந்த நீர்மட்டம் பழைய நிலைக்கு மாறியதை காணமுடிந்தது.

இதுபோல நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள கோவில் தெப்பகுளம், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள குளங்களில் தண்ணீர் பொங்கியதை மக்கள் பார்த்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Empty Re: தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின

Post by அசுரன் Thu Apr 12, 2012 8:42 am

ஆச்சர்யம் கலந்த பயம் வருகிறது சிவா.. அரிய தகவல்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Empty Re: தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின

Post by சிவா Thu Apr 12, 2012 8:57 am

அசுரன் wrote:ஆச்சர்யம் கலந்த பயம் வருகிறது சிவா.. அரிய தகவல்கள்

மக்கள் மனிதத் தனிமையை இழந்து வருகிறார்கள். இதுதான் உலக அழிவிற்கான அறிகுறிகள்.


தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Empty Re: தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின

Post by சிவா Thu Apr 12, 2012 9:01 am

தயார் நிலையில் கப்பல்-விமானப்படைகள்

பூகம்பத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை எதிரொலியாக, இந்திய கப்பல் மற்றும் விமானப்படைகள் நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

தேசிய பேரிடர் மீட்பு அதிரடிப்படையின் 80 பிரிவுகள், மோப்ப நாய்கள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் ஹிண்டன் விமானப்படை தளத்தில் தயாராக நிறுத்தப்பட்டு இருந்தனர். அதில் 6 பிரிவுகள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மீட்பு விமானங்களில் 10 டன் மருத்துவ பொருட்களும் ஏற்றப்பட்டு இருந்தன.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்தமான் தீவில் நிறுத்தப்பட்டு இருந்த அனைத்துப் போர்க்கப்பல்களையும் கடற்படை அதிகாரிகள் உஷார் நிலையில் வைத்திருந்தனர். கிழக்கு பிராந்திய கடற்படை தலைமையகமும், மீட்புப்பணிக்கு உரிய கப்பல்களை தயார் நிலையில் வைத்திருந்தது.


தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Empty Re: தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின

Post by சிவா Thu Apr 12, 2012 9:02 am

மும்பைக்கு மேற்கே அரபிக்கடலிலும் நில நடுக்கம்

இந்தோனேஷியாவில் பூகம்பம் ஏற்படுவதற்கு சுமார் 13/4 மணி நேரத்துக்கு முன், அதாவது பகல் 12.31 மணிக்கு அரபிக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மராட்டிய தலைநகர் மும்பைக்கு மேற்கே 155 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 3.4 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக மும்பை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் ராஜீவ் நாயர் தெரிவித்தார்.

மும்பை நகரின் வட பகுதியில் சில இடங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Empty Re: தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின

Post by சிவா Thu Apr 12, 2012 9:04 am

சுனாமி பீதியால் இந்திய-அமெரிக்க கடற்படை கூட்டு பயிற்சிக்கு பாதிப்பு இல்லை

சென்னைக்கு அருகே நடைபெற்று வரும் இந்திய-அமெரிக்க கடற்படை கூட்டு போர்ப்பயிற்சி, சுனாமி பீதியால் பாதிக்கப்படவில்லை. அப்பயிற்சி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு பயிற்சி

இந்திய-அமெரிக்க கடற்படைகள், கடந்த 1992-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கூட்டு போர்ப்பயிற்சி, `மலபார்' என்ற பெயரில், கடந்த 7-ந் தேதி சென்னை அருகே வங்கக்கடலில் தொடங்கியது. இது, 10 நாட்கள் பயிற்சி ஆகும். இதில், இரு நாடுகளின் அதி நவீன போர்க் கப்பல்கள் பங்கேற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி பீதி நிலவியது. இதனால், இந்திய-அமெரிக்க கடற்படை கூட்டு பயிற்சி பாதிக்கப்பட்டு இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது.

பாதிப்பு இல்லை

ஆனால், அந்த பயிற்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

சுனாமி பீதியையும் மீறி, இந்திய-அமெரிக்க கடற்படை கூட்டு போர்ப்பயிற்சியை நடத்தினோம். தற்போது, சென்னைக்கு தெற்கே வங்கக்கடலில் இருநாட்டு கப்பல்களும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை. திட்டமிட்டபடி, எந்த கட்டுப்பாடும் இன்றி, 10 நாட்கள் பயிற்சி நடைபெறும்.

சுனாமியிலும் பயிற்சி பெற்று இருப்போம்

ஒருவேளை, சுனாமி தாக்கி இருந்தால் கூட எங்கள் கூட்டு பயிற்சியில் எந்த மாறுதலும் இருந்திருக்காது. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை கையாள்வது எப்படி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது எப்படி என்பதும் எங்கள் போர்ப்பயிற்சியில் அடங்கும்.

எனவே, சுனாமி தாக்கி இருந்தால், அதையே சாதகமாக்கி ஒத்திகை பார்த்து இருப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Empty Re: தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின

Post by அசுரன் Thu Apr 12, 2012 9:34 am

இந்த கூட்டுப்பயிற்சியை பார்த்து இலங்கையே பீதியடையவில்லை... அப்புறம் இவங்க ஏன் பயப்படனும்.

தகவலுக்கு நன்றி சிவா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Empty Re: தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின

Post by யினியவன் Thu Apr 12, 2012 9:55 am

சுனாமிக்கு பயந்து நேத்தி பதுங்கிட்டு இன்னிக்கு வந்து செய்தி தரும் சிவா - நீங்க வீரர் தானுங்கோ. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின - Page 2 Empty Re: தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum