ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா (வாழ்க்கை வரலாறு பாகம்-2)

3 posters

Go down

பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா (வாழ்க்கை வரலாறு பாகம்-2) Empty பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா (வாழ்க்கை வரலாறு பாகம்-2)

Post by அசுரன் Wed Apr 11, 2012 10:05 pm

பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா

பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா (வாழ்க்கை வரலாறு பாகம்-2) Che1


அசுரனின் முன்னுரை:
நண்பர்களே இவரை பற்றி எனக்கும் ஒன்றும் தெரியாது.... இவரை பற்றி நம் ஈகரையில் ஏற்கெனவே கட்டுரை இருந்தால் முதலிலேயே தெரிந்தால் இந்த கட்டுரையை பகிர்வதை நிறுத்திவிடுவேன். இவரை பற்றி தெரிந்தவர்கள் ஈகரையில் இருந்தாலும் தெரியாதவர்கள் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள், சிறந்த ஒரு வீரனை பற்றி நாம்அறிந்துக்கொள்வோமே.. கொஞ்ச கொஞ்சமா படிச்சி தெரிஞ்சிகலாம்... தினமும் போடுறேன். உங்களுடன் சேர்ந்து நானும் படித்துக்கொள்கிறேன். திரியை பார்வையிட்டதற்கு நன்றிகள்


பாகம் - 1

உலக வரலாற்றில் எத்தனையோ விடுதலை வீரர்கள் தோன்றி இருக்கின்றார்கள். ஆனால் சே குவேரா அவர்களில் இருந்து முற்றிலும் வேறு பட்டவர். ஆம் உலகில் பெரும்பாலான விடுதலை வீரர்கள் தங்கள் சொந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் ஆனால் சே குவரோ எங்கோ ஒரு தேசத்தில் பிறந்து தனக்கு தொடர்பே இல்லாத இன்னும் ஒரு தேசவிடுதலைக்காக போராடி.அங்கு விடுதலை கிடைத்ததும்.அங்கு வழங்கப்பட்ட உயர் பதவிகளைத் துறந்து இன்னும் ஒரு தேசத்திற்காக போராட சென்று.துணிச்சலாக மரணத்தை சந்தித்த மாவீரன். அவரை பற்றி முழுமையாக அறியாதவர்கள் அவருடைய வரலாற்றை தெரிந்து கொள்வதற்கான பதிவு தான் இது. வாருங்கள் வரலாற்றை புரட்டுவோம்…

செல்வந்த குடும்பத்தில் பிறந்து,ஒரு மருத்துவராக பட்டம் பெற்ற சேகுவரா நினைத்திருந்தால் தன் காலம் முழுவதும் வசதியான வாழ்க்கையை மேற்கொண்டிருக்க முடியும் ஆனால் அனைத்தையும் துறந்து ஓடுக்கப்படும் மக்களுக்காக அதுவும் வேறு நாட்டு மக்களுக்காக போராடிய இவரை என்னவென்று புகழ்வது?

1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் (Argentina) உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ் (Ernesto Guevara Lynch), சிசிலியா டெ ல செர்னா (Sisiliya de la Serna) தம்பதியர்களுக்கு முதல் மகனாக பிறக்கின்றார். அவர்கள் தங்களுக்கு பிறந்த முதல் குழந்தையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா (Ernesto Guevara de la Serna) என பெயர் சூட்டினர்.

அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை இந்தக்குழந்தை எதிர்காலத்தில் உலகவரலாற்றில் மாவீரனாகவும்,இன்னும் ஒரு தேசத்தின் விடிவை பெற்றுக்கொடுக்கும் சூரியனாக திகழ்வான் என்று.

சே குவேராவிற்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். ‘சே’வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய், ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை அழைத்துச் சென்றார். நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராடவைக்க, ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின் நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, ஆஸ்துமா அவரை இறுகப்பற்றியது. வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார்.


தொடரும்


Last edited by அசுரன் on Thu Apr 12, 2012 6:57 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா (வாழ்க்கை வரலாறு பாகம்-2) Empty Re: பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா (வாழ்க்கை வரலாறு பாகம்-2)

Post by மகா பிரபு Wed Apr 11, 2012 10:12 pm

நான் மதிக்கும் மாமனிதருள் ஒருவர் சே. இவரை பற்றிய புத்தகங்கள் சிலவற்றை படித்துள்ளேன். இருப்பினும் இத்திரியை தொடர்ந்து படிக்க முயற்சிக்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா (வாழ்க்கை வரலாறு பாகம்-2) Empty Re: பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா (வாழ்க்கை வரலாறு பாகம்-2)

Post by அசுரன் Wed Apr 11, 2012 10:15 pm

மகா பிரபு wrote:நான் மதிக்கும் மாமனிதருள் ஒருவர் சே. இவரை பற்றிய புத்தகங்கள் சிலவற்றை படித்துள்ளேன். இருப்பினும் இத்திரியை தொடர்ந்து படிக்க முயற்சிக்கிறேன்.
மிக்க நன்றி பிரபு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா (வாழ்க்கை வரலாறு பாகம்-2) Empty Re: பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா (வாழ்க்கை வரலாறு பாகம்-2)

Post by யினியவன் Wed Apr 11, 2012 10:16 pm

நல்ல திரி தொடருங்கள் வெற்றி வீரனின் கதையை. சூப்பருங்க

நம்ம செய்தாலி அவதாராக வைத்திருப்பது இவரின் படத்தைத் தானே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா (வாழ்க்கை வரலாறு பாகம்-2) Empty Re: பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா (வாழ்க்கை வரலாறு பாகம்-2)

Post by அசுரன் Wed Apr 11, 2012 10:17 pm

கொலவெறி wrote:நல்ல திரி தொடருங்கள் வெற்றி வீரனின் கதையை. சூப்பருங்க

நம்ம செய்தாலி அவதாராக வைத்திருப்பது இவரின் படத்தைத் தானே?

ஆமாம் இனியவரே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா (வாழ்க்கை வரலாறு பாகம்-2) Empty Re: பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா (வாழ்க்கை வரலாறு பாகம்-2)

Post by அசுரன் Thu Apr 12, 2012 6:56 pm

பாகம் - 2

இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். ஆடுகளத்தில் பின்னிருந்து ஆடும் தடுப்பாட்டக்காரனின் நிலையிலேயே பெரும்பாலும் விளையாடுவார்.. இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ரக்பியும் அவருக்குப் பிடித்தமான மற்றொரு விளையாட்டான சதுரங்கமும், எதிரிகளை வீழ்த்தும் தந்திரங்களைக் கொண்டு இருந்தது ஆச்சர்யமான ஒன்று. பிற்காலத்தில் போர்க்களத்துக்குத் தேவையான மன இயக்கத்தை, சிறுவயதிலிருந்தே அவருக்கே தெரியாமல் அவருக்கான சூழல்கள் உருவாக்கித் தந்திருக்கின்றன.

1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்தி ருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும், அதற்குத் தங்களால் எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்ற தேடலுமே அந்தப் பயணத்துக்கான ஆரம்பம். பெரு (Peru) நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது.

தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடித் தேடிச்சென்று, அவர்களின் தோளில் கை போட்டு உண்டு, உறங்கி, கால் பந்துவிளையாடிய ‘சே குவேராவின் உள்ளத்தில் பலவிதமான போராட்டங்கள் தொழு நோயாளர்களிடம் அவர் காட்டிய பரிவு மற்ற மனிதர்களிடம் இருந்து அவரை பிரித்துக் காட்டியது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் உடன் பயணித்த கிரனாடோவால் எழுதப்பட்ட புத்தகம் உலகப் பிரபல்யம் பெற்றது இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

சேவின் வாழ்வை முழுவதுமாக புரட்டிப் போட்ட பயணம் அது. இதுவரையும் அவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்பு, நண்பர்கள், விளையாட்டு என அவரது உலகம் உல்லாசமாக இருந்தது. ஆனால் இந்த பயணம் அவருக்கு பல படிப்பினைகளை தந்தது. தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு, வர்க்க வேறுபாடுகளுக்குக் காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் வாஷிங்டனும் அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரண மாகக் கண்டறிந்தார்.

பொதுவுடமை சமூகத்தில்,உற்பத்தி மார்க்கம், உடமைகள் என்பவற்றை அரசு மக்களின் சார்பில் பொது உடமையாக வைத்திருக்கும். எதை, எப்படி உற்பத்தி செய்வது என்பதை அரசின் வல்லுனர் குழு ஒருமையப்படுத்தப்பட்ட முறையில் தீர்மானிக்கும். மக்கள் உழைத்து தமக்குரிய பொருளாதார பங்கை பெறுவர். பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால், சமூகத்தின் வளங்களும், செல்வங்களும் தனிமனித முதலாளிகளிடம் முடக்கப்படுவது அறவே தவிர்க்கப்படுகிறது. இந்த வளங்களை கொண்டு பொதுவாக ஏகாதிபத்திய,முதலாளித்துவ சமூக கோட்பாடுகளால், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட உழைக்கும் சாமானிய வர்க்க மக்களின் வாழ்க்கைதரம் மேம்படுத்தப்படுகிறது. பொருளியல் துறை சார்ந்தவர்கள் இது தொடர்பில் அறிந்திருக்கலாம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா (வாழ்க்கை வரலாறு பாகம்-2) Empty Re: பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் – ‘சே’ குவேரா (வாழ்க்கை வரலாறு பாகம்-2)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum