ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் நிலநடுக்கம்.

+23
கே. பாலா
உதயசுதா
முத்துராஜ்
பூவன்
பேகன்
ந.கார்த்தி
ரேவதி
பிரசன்னா
முஹைதீன்
பாலாஜி
ராஜா
ஜாஹீதாபானு
றினா
வின்சீலன்
அருண்
கேசவன்
மகா பிரபு
balakarthik
யினியவன்
Manik
மீனா
உமா
ஹர்ஷித்
27 posters

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 14 Empty சென்னையில் நிலநடுக்கம்.

Post by ஹர்ஷித் Wed Apr 11, 2012 2:37 pm

First topic message reminder :

சென்னையில் யாராவது உணர்ந்தீர்களா...என் மனைவி எனக்கு இப்போதுதான் கூறினார்கள்....
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down


சென்னையில் நிலநடுக்கம். - Page 14 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by T.N.Balasubramanian Wed Apr 11, 2012 7:31 pm

மதியம் 2-10 மணிக்கு, ஒரு முறை உணர்ந்தேன். ஒரு வேளை மனப்ராந்தி என நினைக்கையில் மறுமுறையும் உணர்ந்தேன். நாய் ஒன்று ஊளை இட்டது. நான் இருப்பது மூன்றாம் மாடி. பால்கனி அருகே வந்து, வீதியை பார்த்தேன். எதிர் வீட்டு ஜனங்கள் வெளியே வந்து மேலும் கீழும் பார்த்துக்கொண்டிருந்தனர் . மனைவி ," வீடு ஆடின மாதிரி இல்லே" என்றாள். நில நடுக்கம் உறுதி ஆனது. மாலை 0418 மணிக்கு மீண்டும் ஒரு முறை.
தரை தள குடும்பத்தினர் உணரமுடியவில்லை என வருத்தப் பட்டுக் கொண்டு இருந்தனர்..
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 14 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by ஹர்ஷித் Wed Apr 11, 2012 8:11 pm

கன்யாகுமரியில் தண்ணி உள்ள வந்துட்டாதா கேள்வி பட்டேன்.. சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 14 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by அசுரன் Wed Apr 11, 2012 8:29 pm

ஜேன் செல்வகுமார் wrote:கன்யாகுமரியில் தண்ணி உள்ள வந்துட்டாதா கேள்வி பட்டேன்.. சோகம்

உண்மையாவா? அதிர்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 14 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by ஹர்ஷித் Wed Apr 11, 2012 8:30 pm

அசுரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:கன்யாகுமரியில் தண்ணி உள்ள வந்துட்டாதா கேள்வி பட்டேன்.. சோகம்

உண்மையாவா? அதிர்ச்சி

மச்சான் சொன்னான்... சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 14 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by ஹர்ஷித் Wed Apr 11, 2012 9:02 pm

முதல் நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தாது
இந்தோனேசியாவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தை அடுத்து 2 மணி நேரம் கழித்து மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதன் தாக்கம் தான் தமிழகத்தில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், முதலில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தும் நிலநடுக்கம் அல்ல என்றும், அடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கமே சுனாமியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அதுவும் இந்தியாவை செல்லும் அளவிற்கு பயங்கர சுனாமியாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.
http://www.dinamani.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 14 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by இளமாறன் Wed Apr 11, 2012 10:01 pm

சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னையில் நிலநடுக்கம். - Page 14 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 14 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by ஹர்ஷித் Sat Apr 14, 2012 12:11 pm

மிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை?

இந்தோனேசியாவின் பண்டா அச்சே பகுதியில் ஏற்பட்ட 8.6 ரிக்டர் நிலநடுக்கமும் அதன் பிறகு ஏற்பட்ட பின் அதிர்வு என்று வர்ணிக்கப்பட்ட 8.2 ரிக்டர் நில நடுக்கத்தினாலும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது. 2004ற்குப் பிறகு அதே பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டும் சுனாமி ஏற்படாததன் காரணம் என்ன என்பதை புவியியல் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஏற்பட்ட பூகம்பம் கண்டத் தட்டுகள் கிடைக்கோட்டு மட்டத்தில் அதாவது செங்குத்து நகர்தல் இல்லாமல், நகர்ந்ததால் கடல் நீர் எழும்புதல் குறைவாகவே இருந்தது என்று கூறியுள்ளனர்.

நேற்று ஏற்பட்டது 'ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட்' (Strike Slip Fault) என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2004-இலும் ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பூகம்பமும் சப்டக்ஷன் மண்டலம் (Subduction Zone) அல்லது இரண்டு நாடுகளின் கண்டத் தட்டுகளில் ஒன்று மற்றதன் அடியில் போய் செருகிக் கொள்ளும் செங்குத்து நகர்தலாகும், இதில் வெளியாகும் நிலநடுக்க அலை சக்தி பயங்கரமானது ஆனால் கண்டத் தட்டுக்கள் கிடைக்கோட்டு மட்டத்தில் நகர்ந்ததால் சக்தி அவ்வளவாக வெளிப்படவில்லை.

நேற்று ஏற்பட்ட முதல் பூகம்பம் பண்டா அச்சே கடற்கரையிலிருந்து 269 மைல்கள் தென் மேற்கு திசையில் மையம் கொண்டிருந்தது. இரண்டாவது 8.2 ரிக்டர் அளவு பூகம்பம் இந்த மையத்திலிருந்து மேலும் விலகி 120 மைல் தெற்கு திசையில் மையம் கோண்டிருந்தது.

இரண்டுமே கடலுக்கு அடியில் 14 மற்றும் 10 மைல்கள் ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று ஏற்பட்ட முதல் பூகம்பத்திலிருந்து வெளியாகும் சக்தியைக் காட்டிலும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்க பூகம்பத்தில் 6 மடங்கு அதிக சக்தி வெளியானது. நேற்று ஏற்பட்ட 2வது பூகம்பத்தில் வெளியான சக்தியைக் காட்டிலும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் 22 மடங்கு அதிக சக்தி வெளியானது.

இந்தோனேசிய தேசிய பூகம்ப தகவல் புவி பௌதீக விஞ்ஞானி ஆமி வான் இதைப்பற்றி கூறுகையில், 2004 டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட அந்த கடும் பூகம்பத்தின் போது இந்தியக் கண்டத் தட்டு இதைவிட சிறிய பர்மா கண்டத்தட்டுக்களுக்கு அடியில் போய் செருகியது. அப்போது சுமார் 50 அடி உயரத்திற்கு கண்டத்தட்டு நகர்ந்துள்ளது. இதனால் கடல் தரை அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட சுனாமி பேரலைகள் ஏற்பட்டது


Last edited by ஜேன் செல்வகுமார் on Sat Apr 14, 2012 12:12 pm; edited 1 time in total
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 14 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by ஹர்ஷித் Sat Apr 14, 2012 12:12 pm

ஆனால் நேற்று ஏற்பட்ட பூகம்பம் ஒரே பிளேட்டில் அதாவது ஆஸ்ட்ரேலியக் கண்டத்தட்டின் உள்ளேயே ஏற்பட்ட மாற்றம் இதனால் இரண்டு நாடுகளின் கண்டத் தட்டுகள் இதில் மோதலில் ஈடுபடவில்லை. மாறாக ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட் காரணமாக ஒன்று மற்றதிலிருந்து சற்றே கிடைக்கோட்டு மட்டத்தில் விலகியுள்ளது. இதனால் சீ ஃப்ளொர் என்று அழைக்கப்படும் கடலடித் தரையின் அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. இதனால் சுனாமி ஏற்படவில்லை.

மேலும் ஆஸ்ட்ரேலிய கண்டத்தட்டு சாதாரணமாக் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ அதே திசையில்தான் இந்த ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட் பாறை நகர்ந்துள்ளது.

நேற்று ஏற்பட்ட பூகம்பம் 2004 பூகம்பம் ஏற்பட்ட 'சப்டக்ஷன் மண்டலம்' என்று அழைக்கப்படும் இரண்டு கண்டத் தட்டுக்களில் ஒன்று மற்றதன் அடியில் சென்று நுழையும் பகுதிக்கு 100கிமீ மட்டுமே மேற்கேயிருந்துள்ளது என்கிறார் ஹைதராபாதில் உள்ள தேசிய புவி பௌதீக ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி ஆர்.கே. சத்தா கூற்கிறார்.

மேலும் 2004 சுனாமியை தீர்மானித்த சப்டக்ஷன் மண்டலத்திற்கு அருகே நேற்றைய பூகம்ப மையம் இருந்ததால் ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட், சப்டக்ஷன் மண்டலம் சந்திக்கும் மும்முனை சந்திப்பின் அருகே நேற்றைய பூகம்ப மையம் இருந்தது என்கிறார் சத்தா.

1950 - 1965ஆம் ஆண்டுகளுக்கு இடையே 8.5 ரிக்டர் அளவு கோல் பூகம்பங்கள் ஏற்பட்டது போல் தற்போது 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு இத்தகைய பெரிய பூகம்பங்கள் ஏற்படுவதற்கான புவிப்பாறை சூழல் அப்பகுதியில் நிலவுவதாக சத்தா தெரிவித்துள்ளார். அதாவது 1950- 65 ஆம் ஆண்டுகளிடையே ஏற்பட்டது போல் தற்போதும் மிகப்பெரிய நிலநடுக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக ரிக்டர் அளவு பூகம்பம் வரும் நாட்களில் ஏற்படாது என்று கூறுவதற்கில்லை என்கிறார் சத்தா.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்த மிகப்பெரிய 9 ரிக்டர் அளவு பூகம்பத்தினால் கடற்பரப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இன்னமும் அது தன்னை அட்ஜஸ்ட் செய்து கொண்டுவருகிறது என்று வான் என்ற விஞ்ஞானி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

நாடுகள் கட்டிடங்களைக் கட்டுவதில் கட்டுப்பாடுகளையும், பொதுமக்களுக்கு மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் போது பாதுகாப்பிற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தும் நேரம் வந்துவிட்டது.
http://tamil.webdunia.com/newsworld/news/environment/1204/12/1120412015_1.htm
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 14 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by ஹர்ஷித் Sun Apr 15, 2012 4:00 pm

இலங்கை அருகே புதிய புவித்தட்டு உருவாகிறது பேராசிரியர் தகவல்
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடபகுதியின் மேற்கு கரையில் அடுத்தடுத்து கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டர் அளவில் 8.9 என்ற அளவில் அது பதிவானது. இதனால் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பூமி குலுங்கியதை உணர முடிந்தது.இதனால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தினால் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணியளவில் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டது.

கடந்த 2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பேரலைகள் உருவாகி ஆயிரக்கணக்கானவர்கள் பலியாயினர். ஆனால் கடந்த புதன் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது புவி சிறு தட்டுகளில் அதிர்வு ஏற்பட்டது. இருந்த போதும் சுனாமி பேரலைகள் தோன்றவில்லை.

இதற்கு புவித்தட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதே காரணம் என இங்கிலாந்து புவியியல் நிபுணர் ரொகர் மியூசன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட பெரும்பாலான நில நடுக்கங்களால் நிலைமை மாற்றம் அடைந்துள்ளது. இதனால்தான் சுனாமி ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். புவி 12 தட்டுகளால் அமைந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது புதிதாக 13ஆவது புவித்தட்டு ஒன்று உருவாகி வருவதாக இலங்கையின் புவியியல் துறை பேராசிரியர் கபில தஹாநாயக்க தெரிவித்துள்ளார். இது இலங்கை அருகே உருவாகி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா- அவுஸ்திரேலியாவின் புவித்தட்டில் இலங்கை உள்ளது. அதே நேரத்தில் உலகில் அதிக நிலநடுக்கம் உருவாகின்ற ஜப்பான், பசிபிக் புவித்தட்டின் மீது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://nerudal.com/nerudal.45395.html
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சென்னையில் நிலநடுக்கம். - Page 14 Empty Re: சென்னையில் நிலநடுக்கம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum