புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
3 Posts - 7%
heezulia
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
தந்திரசாலி! Poll_c10தந்திரசாலி! Poll_m10தந்திரசாலி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்திரசாலி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 6:10 am

தந்திரசாலி! E_1333520522

சீனநாட்டு வீரங்காய் பகுதியை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தன்னை மிகுந்த அறிவுடையவன் என்று நினைத்து இருந்தான்.

வழக்கம்போல அரசவை கூடியது.

அமைச்சரைப் பார்த்து ""நம் நாட்டில் ஈபண்டி என்பவன் இருக்கிறானாமே. பிறரை ஏமாற்றுவதில் வல்லவனாமே. யாரையும் அவன் ஏமாற்றி விடுவான் என்கிறார்களே. அது உண்மையா?'' என்று கேட்டான்.

""அரசே! நீங்கள் கேள்விப்பட்டது அனைத்தும் உண்மைதான். அவன் அறிவுக்கூர்மைக்கு எல்லையே இல்லை. இதுவரை அவனுடன் மோதிய எல்லாரும் தோல்விதான் அடைந்து இருக்கிறார்கள்,'' என்றார்.

""இதை நான் நம்ப மாட்டேன்... எளிய மனிதன் அவன். என்னை விட அறிவு நிறைந்தவனா? என்னால் அவனை ஏமாற்ற முடியுமா?'' என்று கேட்டான் அரசன்.

அரசனை எதிர்த்துப் பேசினால், ஆபத்து என்பதை உணர்ந்தார் அவர், ""அரசே! உங்களைப் போலத்தான் நானும் நினைக்கிறேன். உங்களை விட அவன் அறிவு மிகுந்தவனாக இருப்பான் என்பதை நான் நம்பவில்லை. இருந்தாலும் மக்கள்...'' என்று இழுத்தார்.

""மக்கள் அவன் அறிவுக்கூர்மையை புகழ்ந்து பேசுகிறார்கள் அப்படித்தானே. அவர்கள் கருத்து தவறு என்பதை நான் நிரூபிக்கிறேன். நானே சென்று இப்பொழுதே அவனைச் சோதித்துப் பார்க்கிறேன். என்னிடம் தோற்று, அவன் அவமானப்படப் போகிறான்,'' என்றான் மன்னன்.

ஈபண்டியை பார்க்க புறப்பட்டான் மன்னன்.

அங்கே வயலில் ஒருவன் உழுது கொண்டிருந்தான். அரசன் வருவதைப் பார்த்ததும், ஓடி வந்து பணிவாக வணங்கினான்.

அவனைப் பார்த்து அரசன், ""நீ இந்த ஊரைச் சேர்ந்தவன்தானே. தந்திரங்களில் வல்ல ஈபண்டி என்பவன் எங்கே இருக்கிறான்? நீ அவனிடம் செல்... அவன் தந்திரங்களைச் சோதித்துப் பார்க்க அரசர் வந்துள்ளார் என்று சொல். அவனை உடனே இங்கு அழைத்து வா. எல்லாரும் அவனைத் தந்திரசாலி என்று புகழ்கின்றனர். அது உண்மைதானா என்று கண்டுப்பிடிக்கிறேன்,'' என்றான்.

தன்னை வணங்கியவன்தான் ஈபண்டி என்பதை அவன் அறியவில்லை.

அரசன் பேசியதைக் கேட்டான் ஈபண்டி.

இவர் வந்ததன் நோக்கம் நல்லதற்கு அல்ல என்பதைப் புரிந்துக் கொண்டான். சோதனைகள் தனக்குப் புதிதா? எது நடந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்.

""அரசே! நீங்கள் தேடும் அந்த ஈபண்டி நான்தான். தங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்,'' என்று பணிவுடன் கேட்டான்.

அவனை மேலும், கீழும் பார்த்தான் அரசன்.

கேலியாகச் சிரித்தப்படியே, ""நீதான், ஈபண்டியா? நீ மிகவும் தந்திரசாலி, யாரையும் ஏமாற்றி விடுவாய் என்று எல்லாரும் புகழ்கிறார்களே. உன்னால் என்னை ஏமாற்ற முடியுமா? இதுவரை யாரும் என்னை ஏமாற்றியது இல்லை,'' என்று பெருமையுடன் சொன்னான்.

""அரசே! உங்களை யாராவது ஏமாற்ற முடியுமா? அப்படி முயற்சி செய்தால் தோற்றுத்தான் போவர். தோல்வி உறுதி என்று தெரிந்தபின் யாராவது அந்த முயற்சியில் இறங்குவார்களா? என்னை விட்டு விடுங்கள்,'' என்றான் அவன்.

""நீ என்ன சொன்னாலும் உன்னை விடமாட்டேன். நீ என்னை ஏமாற்ற முயற்சி செய்தே ஆக வேண்டும். உன் தந்திரங்கள் என்னிடம் எடுபடுகிறதா? என பார்ப்போம்,'' என்றான் அரசன்.

""அரசே! நீங்கள் வற்புறுத்துவதால், இந்த முயற்சியில் இறங்குகிறேன். என் வீட்டில் தந்திரப் பை ஒன்று உள்ளது. அது இருந்தால்தான் என்னால் பிறரை ஏமாற்ற முடியும். நீங்கள் அந்தப் பைக்கு அஞ்சாவிட்டால், வீட்டிற்குச் செல்ல என்னை அனுமதியுங்கள். அந்தப் பையுடன் வருகிறேன். பிறகு என் திறமையைப் பாருங்கள்,'' என்றான்.

இதைக் கேட்ட அரசனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ""உன் திறமை அனைத்தும் அந்தத் தந்திரப் பையில்தான் உள்ளதா? ஒரு தந்திரப் பை என்ன? பத்து தந்திரப் பையுடன் வா. நான் அஞ்ச மாட்டேன்,'' என்று சொல்லிச் சிரித்தான்.

""அரசே! இங்கிருந்து என் வீடு தொலைவில் உள்ளது. நடந்து சென்று திரும்பி வர நீண்ட நேரம் ஆகும். பெருமை வாய்ந்த அரசர் நீங்கள். எனக்காக அவ்வளவு நேரம் இங்கே காத்திருப்பது முறையாகாது,'' என்று இழுத்தான் அவன்.

""நான் என்ன செய்ய வேண்டும்? சொல்,'' என்று கேட்டான் அரசன்.

""உங்கள் குதிரையை இரவல் தாருங்கள். நான் அதில் சென்று தந்திரப் பையுடன் உடனே திரும்புகிறேன்,'' என்றான் அவன்.

குதிரையிலிருந்து இறங்கினான் அரசன். அவனிடம் குதிரையைத் தந்தான்.

""தந்திரப் பையுடன் விரைவில் வந்து சேர். என்னால் அதிக நேரம் காத்திருக்க முடியாது,'' என்றான்.

அந்தக் குதிரையில் ஏறி அமர்ந்தான் அவன். அதை விரட்டினான். சிறிது நேரத்தில் அரசனின் கண்களிலிருந்து மறைந்தான்.

அரசன் காத்திருந்து காத்திருந்து பார்த்தான்.

மாலை நேரமும் வந்தது. கதிரவனும் மறையத் தொடங்கியது. அவன் வரவே இல்லை.

இருட்டவும் தொடங்கி விட்டது. தான் ஏமாந்தது அப்போதுதான் அரசனுக்குப் புரிந்தது.

ஐயோ! இப்படி ஏமாந்து விட்டோமே என்று, தலை கவிழ்ந்தபடியே அரண்மனைக்கு திரும்பினான் மன்னன்.

சிறுவர் மலர்



தந்திரசாலி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 11, 2012 12:07 pm

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்று சும்மாவா சொன்னார்கள்..?




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 11, 2012 12:45 pm

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்று சும்மாவா சொன்னார்கள்..?
சியர்ஸ்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Apr 11, 2012 1:06 pm

என்னை போலவே புத்திசாலி ஜாலி




தந்திரசாலி! Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 1:11 pm

பிளேடு பக்கிரி wrote:என்னை போலவே புத்திசாலி ஜாலி
உங்களப் போல நோ சான்ஸ் பக்கிரி அண்ணே புன்னகை




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 1:11 pm

கொலவெறி wrote:
பிளேடு பக்கிரி wrote:என்னை போலவே புத்திசாலி ஜாலி
உங்களப் போல நோ சான்ஸ் பக்கிரி அண்ணே புன்னகை
அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக