Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி
Page 1 of 1
16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி
தமிழ்ப்புத்தாண்டு தினமான 13-ந் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 16,564 கிராமங்களிலும் உழவர் பெருவிழா நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
தமிழக சட்டமன்றத்தில் நேற்றைய கூட்டத்தின்போது, பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2-ம் பசுமைபுரட்சி
`வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்ற மகாகவி பாரதியின் குறிக்கோள் நிறைவேற, பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதும், உணவுப்பாதுகாப்பில் நிலையான தன்மை அடைவதும் மிக மிக அவசியமாகும். இந்த குறிக்கோளை எய்தும் வகையில், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்துவதற்கான பல்நோக்கு திட்டங்களை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகின்றது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெரிய நகரங்கள் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும் வளர்ந்து வருவதால், பெரும்பாலான விவசாயத் தொழிலாளர்கள் வேறு வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயர்ந்து செல்கின்றனர். இதன் விளைவாக ஏற்படும் தொழிலாளர்கள் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில், வேளாண் எந்திரமயமாக்கலை எனது தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது. இதன்படி, வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்காக ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கும் மானியமாக 20 லட்சம் ரூபாய் வீதம் 400 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 80 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
75 சதவீதம் மானியம்
இதன் மூலம் கொள்முதல் செய்யப்படும் வேளாண் எந்திரங்கள் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதன்மூலம், விவசாயிகள், குறைந்த வேலையாட்களைக் கொண்டு, எந்திரங்கள் மூலம் அதிக சிரமமின்றி விவசாய பணிகளை விரைவாக செய்ய இயலும். மேலும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதனால் குறைந்த நிலப்பரப்பில் அதிக அளவு உணவு உற்பத்தி கிடைக்க வழிவகுக்கும்.
தமிழ்நாட்டில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயிரிடும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் எனது தலைமையிலான அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
பண்ணை சார் பயிர் மேலாண்மை
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் உணவு பொருட்களை, விலை வீழ்ச்சியடையும் காலங்களில் சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும் காலங்களில் விற்பனை செய்ய ஏதுவாக விவசாய கிடங்குகள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அதிக அளவு உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களுக்கு விருது வழங்குவதற்கும் நான் ஆணையிட்டுள்ளேன். இரண்டாம் பசுமை புரட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, வேளாண் விஞ்ஞானிகள் உருவாக்கும் புதுப்புது ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளை சென்று அடைவதில் ஏற்படும் காலதாமதத்தை களையும் வண்ணம், பல்வேறு விவசாய உத்திகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பண்ணை சார் பயிர் மேலாண்மை மென்பொருளை வேளாண்மைத்துறை வடிவமைத்துள்ளது.
உழவர் பெருவிழா
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்களை விவசாய பெருமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், உழவர் பெருவிழா எனும் விழிப்புணர்வு முகாம்களை கிராம அளவில் நடத்த எனது அரசு முடிவு செய்துள்ளது. இந்த விழிப்புணர்வு முகாம்கள், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல், விதைச்சான்று, கால்நடைப் பராமரிப்புத்துறை, மீன்வளம் மற்றும் பால் வளம் போன்ற துறை அலுவலர்கள்; தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களை சார்ந்த விஞ்ஞானிகள்; தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அந்தந்த பகுதிகளை சார்ந்த சேவை வங்கியின் பிரதிநிதிகள் மூலம் "நடமாடும் விரிவாக்க மையம்'' என்ற அணுகுமுறை மூலம் நடத்தப்படும்.
குறிப்பிட்ட கிராம சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட லாபகரமான பயிர் ரகம், தொழில்நுட்பங்கள், கால்நடை வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வேளாண் காடுகள் வளர்ப்பு, மீன்வளம் முதலான இனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பண்ணைய முறையினை பின்பற்றி, பண்ணை உற்பத்தித்திறனை உயர்த்தும் வகையில் தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துரைப்பதற்காக இவ்வலுவலர்கள் இதர இடுபொருட்கள் விநியோகிப்பாளர்களுடன் இணைந்து ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் சென்று, ஒரு நாள் முழுவதும் விவசாயிகளுடன் கலந்துரையாடுவார்கள். அந்தந்த கிராமங்களில் ஏற்படும் பண்ணை அளவிலான களப்பிரச்சினைகளுக்கு இந்த முகாம்களில் தீர்வு காணப்படும்.
தமிழ்ப்புத்தாண்டு முதல்...
தெருக்கூத்துகள், நாடகங்கள், கிராமிய பாடல்கள் மற்றும் நடனம் மூலமாக விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், தகவல்கள் இந்த முகாம்களில் அளிக்கப்படும். மேலும், பல்வேறு செயல் விளக்கங்கள், சிறு கண்காட்சிகள், வல்லுநர்கள் மற்றும் இடுபொருட்கள் விநியோகிப்பாளர்கள் உடனான கலந்துரையாடல்கள் ஆகியவையும் இந்த முகாம்களில் இடம் பெறும். இந்த முகாம்களில், விவசாயிகள் ஒருங்கிணைந்த கையேடு, விவசாயிகள் தொழில் நுட்ப வழிகாட்டி, வேளாண் இடு பொருட்கள் ஆகியவை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.
அனைத்துத்துறைகளின் பணிகள், திட்டப்பலன்கள் மற்றும் அலுவலர்களின் முயற்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்ப செய்திகள் மற்றும் திட்டப்பலன்கள் விவசாயிகளின் சொந்த கிராமத்திலேயே கிடைக்க செய்யும் வகையில் நடத்தப்படும் இந்த உழவர் பெருவிழா, எதிர்வரும் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 13-ந் தேதி அன்று தொடங்கி, தமிழகத்தில் உள்ள 16,564 வருவாய் கிராமங்களிலும் நடத்தப்படும்.
அறுசுவை விருந்து
இந்த முகாம்களில் கலந்து கொள்ளும் விவசாய பெருங்குடி மக்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்படும். நவீன வேளாண்மையில் உள்ள சவால்களை விவசாயிகள் எதிர்கொண்டு, அவர்களை வேளாண் வல்லுநர்களாக்கி, தமிழகத்தில் இரண்டாம் பசுமைப்புரட்சியை விரைவில் ஏற்படுத்த இந்த உழவர் பெருவிழா வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு இந்திய கம்ïனிஸ்டு கட்சி, புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசு கட்சி ஆகியவை வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தன.
தினதந்தி
தமிழக சட்டமன்றத்தில் நேற்றைய கூட்டத்தின்போது, பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2-ம் பசுமைபுரட்சி
`வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்ற மகாகவி பாரதியின் குறிக்கோள் நிறைவேற, பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதும், உணவுப்பாதுகாப்பில் நிலையான தன்மை அடைவதும் மிக மிக அவசியமாகும். இந்த குறிக்கோளை எய்தும் வகையில், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்துவதற்கான பல்நோக்கு திட்டங்களை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகின்றது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெரிய நகரங்கள் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும் வளர்ந்து வருவதால், பெரும்பாலான விவசாயத் தொழிலாளர்கள் வேறு வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயர்ந்து செல்கின்றனர். இதன் விளைவாக ஏற்படும் தொழிலாளர்கள் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில், வேளாண் எந்திரமயமாக்கலை எனது தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது. இதன்படி, வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்காக ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கும் மானியமாக 20 லட்சம் ரூபாய் வீதம் 400 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 80 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
75 சதவீதம் மானியம்
இதன் மூலம் கொள்முதல் செய்யப்படும் வேளாண் எந்திரங்கள் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதன்மூலம், விவசாயிகள், குறைந்த வேலையாட்களைக் கொண்டு, எந்திரங்கள் மூலம் அதிக சிரமமின்றி விவசாய பணிகளை விரைவாக செய்ய இயலும். மேலும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதனால் குறைந்த நிலப்பரப்பில் அதிக அளவு உணவு உற்பத்தி கிடைக்க வழிவகுக்கும்.
தமிழ்நாட்டில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயிரிடும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் எனது தலைமையிலான அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
பண்ணை சார் பயிர் மேலாண்மை
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் உணவு பொருட்களை, விலை வீழ்ச்சியடையும் காலங்களில் சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும் காலங்களில் விற்பனை செய்ய ஏதுவாக விவசாய கிடங்குகள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அதிக அளவு உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களுக்கு விருது வழங்குவதற்கும் நான் ஆணையிட்டுள்ளேன். இரண்டாம் பசுமை புரட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, வேளாண் விஞ்ஞானிகள் உருவாக்கும் புதுப்புது ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளை சென்று அடைவதில் ஏற்படும் காலதாமதத்தை களையும் வண்ணம், பல்வேறு விவசாய உத்திகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பண்ணை சார் பயிர் மேலாண்மை மென்பொருளை வேளாண்மைத்துறை வடிவமைத்துள்ளது.
உழவர் பெருவிழா
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்களை விவசாய பெருமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், உழவர் பெருவிழா எனும் விழிப்புணர்வு முகாம்களை கிராம அளவில் நடத்த எனது அரசு முடிவு செய்துள்ளது. இந்த விழிப்புணர்வு முகாம்கள், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல், விதைச்சான்று, கால்நடைப் பராமரிப்புத்துறை, மீன்வளம் மற்றும் பால் வளம் போன்ற துறை அலுவலர்கள்; தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களை சார்ந்த விஞ்ஞானிகள்; தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அந்தந்த பகுதிகளை சார்ந்த சேவை வங்கியின் பிரதிநிதிகள் மூலம் "நடமாடும் விரிவாக்க மையம்'' என்ற அணுகுமுறை மூலம் நடத்தப்படும்.
குறிப்பிட்ட கிராம சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட லாபகரமான பயிர் ரகம், தொழில்நுட்பங்கள், கால்நடை வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வேளாண் காடுகள் வளர்ப்பு, மீன்வளம் முதலான இனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பண்ணைய முறையினை பின்பற்றி, பண்ணை உற்பத்தித்திறனை உயர்த்தும் வகையில் தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துரைப்பதற்காக இவ்வலுவலர்கள் இதர இடுபொருட்கள் விநியோகிப்பாளர்களுடன் இணைந்து ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் சென்று, ஒரு நாள் முழுவதும் விவசாயிகளுடன் கலந்துரையாடுவார்கள். அந்தந்த கிராமங்களில் ஏற்படும் பண்ணை அளவிலான களப்பிரச்சினைகளுக்கு இந்த முகாம்களில் தீர்வு காணப்படும்.
தமிழ்ப்புத்தாண்டு முதல்...
தெருக்கூத்துகள், நாடகங்கள், கிராமிய பாடல்கள் மற்றும் நடனம் மூலமாக விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், தகவல்கள் இந்த முகாம்களில் அளிக்கப்படும். மேலும், பல்வேறு செயல் விளக்கங்கள், சிறு கண்காட்சிகள், வல்லுநர்கள் மற்றும் இடுபொருட்கள் விநியோகிப்பாளர்கள் உடனான கலந்துரையாடல்கள் ஆகியவையும் இந்த முகாம்களில் இடம் பெறும். இந்த முகாம்களில், விவசாயிகள் ஒருங்கிணைந்த கையேடு, விவசாயிகள் தொழில் நுட்ப வழிகாட்டி, வேளாண் இடு பொருட்கள் ஆகியவை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.
அனைத்துத்துறைகளின் பணிகள், திட்டப்பலன்கள் மற்றும் அலுவலர்களின் முயற்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்ப செய்திகள் மற்றும் திட்டப்பலன்கள் விவசாயிகளின் சொந்த கிராமத்திலேயே கிடைக்க செய்யும் வகையில் நடத்தப்படும் இந்த உழவர் பெருவிழா, எதிர்வரும் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 13-ந் தேதி அன்று தொடங்கி, தமிழகத்தில் உள்ள 16,564 வருவாய் கிராமங்களிலும் நடத்தப்படும்.
அறுசுவை விருந்து
இந்த முகாம்களில் கலந்து கொள்ளும் விவசாய பெருங்குடி மக்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்படும். நவீன வேளாண்மையில் உள்ள சவால்களை விவசாயிகள் எதிர்கொண்டு, அவர்களை வேளாண் வல்லுநர்களாக்கி, தமிழகத்தில் இரண்டாம் பசுமைப்புரட்சியை விரைவில் ஏற்படுத்த இந்த உழவர் பெருவிழா வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு இந்திய கம்ïனிஸ்டு கட்சி, புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசு கட்சி ஆகியவை வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தன.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![16,564 கிராமங்களில் உழவர் பெருவிழா - 2-ம் பசுமைபுரட்சி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாதணித்துவ உழவர் ஆட்சி-மே 01-
» உழவர் திருநாள் வாழ்த்துக்கள்
» முத்தமிழ்: சொல்லேர் உழவர்
» 1,428 கிராமங்களில், '3ஜி' : பி.எஸ்.என்.எல்., மும்முரம்
» அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா...
» உழவர் திருநாள் வாழ்த்துக்கள்
» முத்தமிழ்: சொல்லேர் உழவர்
» 1,428 கிராமங்களில், '3ஜி' : பி.எஸ்.என்.எல்., மும்முரம்
» அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|