Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....
+10
balakarthik
அதி
ஹர்ஷித்
பாலாஜி
இரா.பகவதி
முஹைதீன்
இளமாறன்
செந்தில்
உதயசுதா
பிரசன்னா
14 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் இனிய திங்கட்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!
மனைவியிடம் நல்லபேர் வாங்குவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லீங்கோ! அதுக்கு அசாத்தியமான திறமை + பொறுமை இதெல்லாம் அவசியம்! ”ரிஸ்க் எடுப்பது உங்களுக்கு ரஸ்க்கு சாப்பிடுவது மாதிரி” அப்டீன்னு நீங்க கருதினால், இந்த ரிஸ்க்கை நீங்கள் எடுத்துப் பார்க்கலாம்! இல்லை இது கஷ்டம்னு தோணிச்சுதுன்னா, “ எனக்கு நல்லபேரே வாணாம்! ஆளைவிடுடா சாமி” அப்டீன்னு பேசாம கம்முன்னு இருக்கலாம்!
ஆனா ஒண்ணு “ உங்களைக் கட்டி நா என்ன சுகத்தைக் கண்டேன்” அப்டீங்கற வாக்கியத்த நீங்க மணிக்கொருமுறை கேட்டுக்கிட்டே இருக்கவேண்டியதிருக்கும்! ஹி ஹி ஹி ஹி ஹி அதற்குத் தயாராக இருங்கோ! :-)
01. உங்கள் மனைவியிடம் நல்ல பேர் வாங்க முதலில் என்ன செய்யணும் தெரியுமா? - கல்யாணம் பண்ணணும்! நீங்க கல்யாணம் பண்ணினாத்தான் உங்களுக்கு ஒரு மனைவி கெடைப்பாங்க! அப்புறம் தான் நீங்கள் நல்ல பேர் வாங்குவது பற்றி சிந்திக்க முடியும்! :-)
02. கல்யாணம் பண்ணின புதுசுல, உங்களுக்கு கண்டிப்பா நல்ல பேர் இருக்கும்! வேளாவேளைக்குச் சாப்பாடு கெடைக்கும்! லேசா தலைவலிக்குதுன்னு சொன்னாலே, “ அச்சச்சோ என்னங்க இப்புடி அசால்டா சொல்றீங்க? இந்தாங்க மாத்திரை எடுத்துக்கோங்க! இந்த காப்பிய குடியுங்க! அதெல்லாம் சரியாகிடும்” அப்டீன்னு தேன் சொட்டும் வார்த்தைகள் வந்து விழுகும்! ஹி ஹி ஹி ஹி ஹி !!
அன்பான ஆண்வர்க்கமே , நாம ஏமாந்து போகும் முக்கிய இடமே இதுதான்! இந்தக் கவனிப்பும் , அன்பும் உங்களுக்கும் காலம் முழுக்க நீடிக்கும் அப்டீன்னு கனவு காணாதீங்க! இந்த நிலைமை சட்டுன்னு மாறும்! “ நீயெல்லாம் ஒரு ஆம்பளையாய்யா?” அப்டீங்கற கேள்வி, தூரத்துல லாரில வந்துகிட்டு இருக்கு அப்டீங்கறத மறக்க வாணாம்! :-))))))))))))
03. அப்புறம் முக்கிய விஷயம்! - உங்க மனைவிக்கு எது புடிக்கும்? எது புடிக்காது அப்டீன்னு நீங்க அறிஞ்சு வைச்சிருக்கணும்கற அவசியமே கெடையாதுங்க! ஆனா, எதிர்வீடு, பக்கத்து வீடு, பின் வீடு இந்த மூன்று வீடுகளையும் அடிக்கடி கவனிச்சுக்கணும்! எதிர்த்தவீட்டுல புதுஷா ஒரு ஸ்கூட்டி பெப் வாங்கியிருக்காய்ங்களா? அதை நீங்க பார்த்துட்டீங்களா? உடனே நீங்க வாலண்டரியா உங்க சம்சாரம்கிட்ட போயி, “ தோ பாரு நீ ஒண்ணுக்கும் கவலைப் படாதே, இன்னும் ஒரு மாசத்துக்குள்ள நம்மளும் ஸ்கூட்டி பெப் வாங்கிடலாம்” அப்டீன்னு அட்வாஸா சொல்லிடணும்! நல்ல பேர் கண்டிப்பா கெடைக்கும்!
“ ஏங்க நா உங்ககிட்ட பைக் வாங்கிக் குடுங்கன்னு கேட்கவே இல்லையே?” அப்டீன்னு அவ கேட்கத்தான் செய்வா! பட் நீங்க அதுக்கெல்லாம் ஏமாந்து போகக்கூடாது!
” இல்ல மா உனக்கும் ஒரு பைக் இருந்தா சௌரியமா இருக்கும்ல” அப்டீன்னுதான் சொல்லணுமே தவிர,
“ சரி சரி உனக்கு இஷ்டம் இல்லைன்னா விட்டுடலாம்” அப்டீன்னு முந்திரிக்கொட்டை மாதிரி அவசரப்பட்டு சொன்னீங்க, அவ்ளோதான்! ஏன்னா அவங்க ஒரு அஸ்திரம் வைச்சிருப்பாங்க
“ சரி நீங்க இவ்ளோதூரம் கெஞ்சினதுக்கு அப்புறமும் பைக் வாங்கலைன்னா உங்க மனசு சங்கடப்படும்” அப்டீன்னு அவங்க சொல்லுவாங்க!
“ என்னது நா கெஞ்சினேனா? “ அப்டீன்னு உங்களுக்கு கேட்கத் தோணும்! ஆனா அதை ஓபனால்லாம் கேட்கப்படாது! வேணும்னா மனசுக்குள்ள மட்டும் கேளுங்கோ! :-))))))))
04. இந்த பைக் தத்துவத்தை நீங்க சேலை, நகைகள், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் போன்ற ஏனைய பொருட்களிலும் கடைப்பிடிக்கணும்! மறுபடியும் சொல்றேன்! உங்களுக்கு மிகப்பெரிய வில்லன்களே இந்த பக்கத்து வீட்டுக்காரங்கதான்! அவங்க வீடு பாசி புடிச்சுப் போயி, மங்கலா இருந்தா நீங்க உங்கவீட்டுல நிம்மதியா இருக்கலாம்! மாறாக அவங்க வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்குறாங்கன்னு வைச்சுக்கோங்க! அப்புறம் என்ன அடுத்த 15 நாளில உங்க வீட்டுக்கும் பெயிண்ட் அடிக்கணும்! இல்லைன்னா, உங்க வீட்டு சுவர் மங்கிப்போகுதோ இல்லையோ, உங்க நல்ல பேர் மங்கிப் போய்டும் சொல்லிட்டன்!
05. உங்க மனைவி தன்னோட உறவுக்காரங்க பத்தி, உங்கிட்ட குறை நிறைகள் சொன்னா, அதெல்லாத்தையும் கேட்டுட்டு கம்முன்னு கெடக்கணும்! மாறாக, வாய வைச்சுக்கிட்டு சும்மா இருக்காமல்
“ ஆமா, இவ்ளோவிஷயம் நடந்திருக்காக? ஏன் உன்னோட சித்தப்பாக்காரன் இப்புடி இருக்கான்?” அப்டீன்னு கேட்டீங்க! அவ்ளோதான்! உங்க நல்ல பேரு டேமேஜ் ஆகிடும்!
“ எதுக்கு இப்ப அவர தப்பா பேசுறிங்க? என்ன இருந்தாலும் அவரு குடும்பத்துக்காக எவ்ளோ கஷ்டப்படுறார் தெரியுமா?” அப்டீன்னு பிட்ட மாத்திடுவாங்க! - அதாக்கப்பட்டது, அவங்களோட உறவுக்காரங்க பத்தி அவங்க என்ன வேணும்னாலும் சொல்லுவாங்க! ஆனா நீங்க ஒரு வார்த்தைகூட சொல்லிடக் கூடாது! இதுதான் ஒரு நல்ல புருஷனுக்கு அழகு! ஓகே வா?
06. ஹி ஹி ஹி ஹி ஹி இதே தத்துவத்தை நீங்களும் கடைப்பிடிக்கலாம்னு நெனைக்காதீங்க! கண்டிப்பா ஏமாந்துடுவீங்க! இப்போ உங்க சைடு உறவினர்களோட குறை நிறைகள் பத்தி, உங்க மனைவிகிட்ட ரெண்டு வார்த்தை சொல்லிப் பாருங்க!
“ ஆமா உங்க சொந்தக்காரங்கல்ல! அப்புடித்தான் இருப்பாய்ங்க! அதான் மூஞ்சியப் பார்த்தாலே தெரியுதே” அப்டீன்னுதான் பதில் வரும்! ஹி ஹி ஹி ஹி ஹி உடனே இந்த இடத்தில், அப்பாவிக் கணவர்களாகிய நீங்கள்
“ இப்ப எதுக்கு அவங்கள பத்தி தப்பா பேசுறே” அப்டீன்னு கேட்டுத் தொலைச்சுடாதீங்க! உடனே,
“ ஆமா, நா எது பேசினாலும் இவருக்கு தப்பாத்தான் தெரியுது! நானும் கொஞ்ச நாளா நோட் பண்ணிட்டுத்தான் இருக்கேன்! உங்க போக்கே சரியில்ல” அப்டீன்னு விஷயம் வேற பக்கம் டைவர்ட் ஆகிடும்! இத கேட்டு உங்களுக்கு செம அதிர்ச்சியாவும், கடுப்பாகவும் இருக்கும்! ஆனா என்ன பண்ண முடியும்? “ ஆணாகப் பொறந்து தொலைச்சுட்டோமே” அப்டீன்னு நெனைச்சுக்கிட்டு பேசாம கம்முன்னு கெடக்கணும்!
மறுபடியும் சொல்றேன்! பல விஷயங்கள மனசுக்குள்ளாரதான் நினைக்கணுமே தவிர, வாயத்தொறந்து வெளியே கொட்டக் கூடாது! :-)))
07. அப்புறம் பள்ளிக்கால நினைவுகள், பழைய கதைகள் பேசிட்டு இருக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்! அவங்க பள்ளிக்கால நினைவுகள் பத்தி பேசும் போது, “ தெரியுமா என்னோட சயன்ஸ் மாஸ்டர் ரொம்ப கெட்டிக்காரர்! பிசிக்ஸ் மாஸ்டர் ரொம்ப ஜாலியா பேசுவாரு! மேத்ஸ் மாஸ்டர் ரொம்ப நல்லா ஜோக் அடிப்பாரு” அப்டீன்னு மாஸ்டர்கள் பத்தியே பேசிட்டு இருப்பாய்ங்க!
“ ஏண்டி, உன்னோட கிளாஸ்ல டீச்சர்களே கெடையாதா? பூரா ஆம்பளை மாஸ்டர்களா?’ அப்டீன்னு உங்களுக்குக் கேட்கத் தோணும்! ஆனா நான்தான் சொன்னேனே வாயே தொறக்க கூடாதுன்னு! :-))))
ஆனா இதுல நிஜமான ஒரு விஷயம் இருக்கு! - இந்தமாதிரி உங்க மனைவி, தன்னோட வாழ்க்கைல சந்திச்ச ஆண்கள் பத்தி வெளிப்படையாவும், சிலாகிச்சும் பேசுறான்னா, அவ உங்கள 100 வீதம் நம்புறான்னு அர்த்தம்! அதுமட்டும் இல்ல அவங்க மனசுல துளியளவுகூட வஞ்சகமோ, கெட்ட எண்ணங்களோ இல்லைன்னும் அர்த்தம்!
ஆனா உங்க மேல நம்பிக்கை கெட்டுடுச்சுன்னா, அவ வாழ்க்கைல வாயே தொறக்க மாட்டா! ஸோ, உங்க மனைவி, இந்தமாதிரியெல்லாம் வெளிப்படையாகப் பேசும் போது, உங்களுக்கு எரிச்சலாக இருந்தாலும், பொறுமையா கேட்டுக்கிட்டு இருங்க! மாறாக “ யோ, மூடிக்கிட்டு இரு பார்க்கலாம்! எப்ப பாரு ஆம்பளைங்க பத்தியே பேச்சு” அப்டீன்னு ஒரு வார்த்தை விட்டீங்க, ஜென்மத்துக்கும் அந்த வார்த்தைய உங்களால மீளப் பெறமுடியாது” உங்க மனைவியோட வாய நீங்க அடைச்சா, உங்க வாழ்க்கையே இருண்டு போய்டும்! அவ்ளோதான்!
ஸோ, பெண்களின் மனதினைப் புரிந்துகொண்டு நடப்பதென்பது மிகவும் கடினமானதும், சிக்கலானதுமான விஷயமும் ஆகும்! - இந்தப் புரிந்துகொள்ளும் திறன் இல்லாத ஆம்பளைங்கதான் “ பெண் ஒரு புதிர் என்றும், பெண்ணின் மனசு ஆழம் என்றும்” புலம்பிக்கொண்டு திரிவாய்ங்க! ஆனால் கொஞ்சம் உளவியல் + வாழ்வியல் தெரிஞ்சா, பெண்களைப் புரிந்துகொள்வது சிரமமே அல்ல!
( இதுபத்தி இன்னும் இன்னும் பேசுவோம் )
ஸ்டெப்ளர் க்ளிப் இணைப்பு - ( ஹி ஹி ஹி ஹி எல்லோரும் ஊசி இணைப்புன்னு சொல்றாங்கோ! நான் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு ஸ்டெப்ளர் க்ளிப் இணைப்புன்னு, மாத்தியோசிச்சு வைச்சிருக்கேன்! :-) )
- எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.
மேலே இருக்கும் வாக்கியம் மிகவும் அழகான வாழ்க்கைத் தத்துவமாகும்! ஒரு எடத்துல இருந்திச்சுது! சுடுக்கிட்டு வந்தேன்! - நிச்சயமாக எண்ணங்கள் அழகானால், எல்லாமே அழகுதான்! :-)))))))
நன்றி - http://www.tamilaathi.com/2012/03/blog-post_12.html
வணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் இனிய திங்கட்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!
மனைவியிடம் நல்லபேர் வாங்குவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லீங்கோ! அதுக்கு அசாத்தியமான திறமை + பொறுமை இதெல்லாம் அவசியம்! ”ரிஸ்க் எடுப்பது உங்களுக்கு ரஸ்க்கு சாப்பிடுவது மாதிரி” அப்டீன்னு நீங்க கருதினால், இந்த ரிஸ்க்கை நீங்கள் எடுத்துப் பார்க்கலாம்! இல்லை இது கஷ்டம்னு தோணிச்சுதுன்னா, “ எனக்கு நல்லபேரே வாணாம்! ஆளைவிடுடா சாமி” அப்டீன்னு பேசாம கம்முன்னு இருக்கலாம்!
ஆனா ஒண்ணு “ உங்களைக் கட்டி நா என்ன சுகத்தைக் கண்டேன்” அப்டீங்கற வாக்கியத்த நீங்க மணிக்கொருமுறை கேட்டுக்கிட்டே இருக்கவேண்டியதிருக்கும்! ஹி ஹி ஹி ஹி ஹி அதற்குத் தயாராக இருங்கோ! :-)
01. உங்கள் மனைவியிடம் நல்ல பேர் வாங்க முதலில் என்ன செய்யணும் தெரியுமா? - கல்யாணம் பண்ணணும்! நீங்க கல்யாணம் பண்ணினாத்தான் உங்களுக்கு ஒரு மனைவி கெடைப்பாங்க! அப்புறம் தான் நீங்கள் நல்ல பேர் வாங்குவது பற்றி சிந்திக்க முடியும்! :-)
02. கல்யாணம் பண்ணின புதுசுல, உங்களுக்கு கண்டிப்பா நல்ல பேர் இருக்கும்! வேளாவேளைக்குச் சாப்பாடு கெடைக்கும்! லேசா தலைவலிக்குதுன்னு சொன்னாலே, “ அச்சச்சோ என்னங்க இப்புடி அசால்டா சொல்றீங்க? இந்தாங்க மாத்திரை எடுத்துக்கோங்க! இந்த காப்பிய குடியுங்க! அதெல்லாம் சரியாகிடும்” அப்டீன்னு தேன் சொட்டும் வார்த்தைகள் வந்து விழுகும்! ஹி ஹி ஹி ஹி ஹி !!
அன்பான ஆண்வர்க்கமே , நாம ஏமாந்து போகும் முக்கிய இடமே இதுதான்! இந்தக் கவனிப்பும் , அன்பும் உங்களுக்கும் காலம் முழுக்க நீடிக்கும் அப்டீன்னு கனவு காணாதீங்க! இந்த நிலைமை சட்டுன்னு மாறும்! “ நீயெல்லாம் ஒரு ஆம்பளையாய்யா?” அப்டீங்கற கேள்வி, தூரத்துல லாரில வந்துகிட்டு இருக்கு அப்டீங்கறத மறக்க வாணாம்! :-))))))))))))
03. அப்புறம் முக்கிய விஷயம்! - உங்க மனைவிக்கு எது புடிக்கும்? எது புடிக்காது அப்டீன்னு நீங்க அறிஞ்சு வைச்சிருக்கணும்கற அவசியமே கெடையாதுங்க! ஆனா, எதிர்வீடு, பக்கத்து வீடு, பின் வீடு இந்த மூன்று வீடுகளையும் அடிக்கடி கவனிச்சுக்கணும்! எதிர்த்தவீட்டுல புதுஷா ஒரு ஸ்கூட்டி பெப் வாங்கியிருக்காய்ங்களா? அதை நீங்க பார்த்துட்டீங்களா? உடனே நீங்க வாலண்டரியா உங்க சம்சாரம்கிட்ட போயி, “ தோ பாரு நீ ஒண்ணுக்கும் கவலைப் படாதே, இன்னும் ஒரு மாசத்துக்குள்ள நம்மளும் ஸ்கூட்டி பெப் வாங்கிடலாம்” அப்டீன்னு அட்வாஸா சொல்லிடணும்! நல்ல பேர் கண்டிப்பா கெடைக்கும்!
“ ஏங்க நா உங்ககிட்ட பைக் வாங்கிக் குடுங்கன்னு கேட்கவே இல்லையே?” அப்டீன்னு அவ கேட்கத்தான் செய்வா! பட் நீங்க அதுக்கெல்லாம் ஏமாந்து போகக்கூடாது!
” இல்ல மா உனக்கும் ஒரு பைக் இருந்தா சௌரியமா இருக்கும்ல” அப்டீன்னுதான் சொல்லணுமே தவிர,
“ சரி சரி உனக்கு இஷ்டம் இல்லைன்னா விட்டுடலாம்” அப்டீன்னு முந்திரிக்கொட்டை மாதிரி அவசரப்பட்டு சொன்னீங்க, அவ்ளோதான்! ஏன்னா அவங்க ஒரு அஸ்திரம் வைச்சிருப்பாங்க
“ சரி நீங்க இவ்ளோதூரம் கெஞ்சினதுக்கு அப்புறமும் பைக் வாங்கலைன்னா உங்க மனசு சங்கடப்படும்” அப்டீன்னு அவங்க சொல்லுவாங்க!
“ என்னது நா கெஞ்சினேனா? “ அப்டீன்னு உங்களுக்கு கேட்கத் தோணும்! ஆனா அதை ஓபனால்லாம் கேட்கப்படாது! வேணும்னா மனசுக்குள்ள மட்டும் கேளுங்கோ! :-))))))))
04. இந்த பைக் தத்துவத்தை நீங்க சேலை, நகைகள், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் போன்ற ஏனைய பொருட்களிலும் கடைப்பிடிக்கணும்! மறுபடியும் சொல்றேன்! உங்களுக்கு மிகப்பெரிய வில்லன்களே இந்த பக்கத்து வீட்டுக்காரங்கதான்! அவங்க வீடு பாசி புடிச்சுப் போயி, மங்கலா இருந்தா நீங்க உங்கவீட்டுல நிம்மதியா இருக்கலாம்! மாறாக அவங்க வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்குறாங்கன்னு வைச்சுக்கோங்க! அப்புறம் என்ன அடுத்த 15 நாளில உங்க வீட்டுக்கும் பெயிண்ட் அடிக்கணும்! இல்லைன்னா, உங்க வீட்டு சுவர் மங்கிப்போகுதோ இல்லையோ, உங்க நல்ல பேர் மங்கிப் போய்டும் சொல்லிட்டன்!
05. உங்க மனைவி தன்னோட உறவுக்காரங்க பத்தி, உங்கிட்ட குறை நிறைகள் சொன்னா, அதெல்லாத்தையும் கேட்டுட்டு கம்முன்னு கெடக்கணும்! மாறாக, வாய வைச்சுக்கிட்டு சும்மா இருக்காமல்
“ ஆமா, இவ்ளோவிஷயம் நடந்திருக்காக? ஏன் உன்னோட சித்தப்பாக்காரன் இப்புடி இருக்கான்?” அப்டீன்னு கேட்டீங்க! அவ்ளோதான்! உங்க நல்ல பேரு டேமேஜ் ஆகிடும்!
“ எதுக்கு இப்ப அவர தப்பா பேசுறிங்க? என்ன இருந்தாலும் அவரு குடும்பத்துக்காக எவ்ளோ கஷ்டப்படுறார் தெரியுமா?” அப்டீன்னு பிட்ட மாத்திடுவாங்க! - அதாக்கப்பட்டது, அவங்களோட உறவுக்காரங்க பத்தி அவங்க என்ன வேணும்னாலும் சொல்லுவாங்க! ஆனா நீங்க ஒரு வார்த்தைகூட சொல்லிடக் கூடாது! இதுதான் ஒரு நல்ல புருஷனுக்கு அழகு! ஓகே வா?
06. ஹி ஹி ஹி ஹி ஹி இதே தத்துவத்தை நீங்களும் கடைப்பிடிக்கலாம்னு நெனைக்காதீங்க! கண்டிப்பா ஏமாந்துடுவீங்க! இப்போ உங்க சைடு உறவினர்களோட குறை நிறைகள் பத்தி, உங்க மனைவிகிட்ட ரெண்டு வார்த்தை சொல்லிப் பாருங்க!
“ ஆமா உங்க சொந்தக்காரங்கல்ல! அப்புடித்தான் இருப்பாய்ங்க! அதான் மூஞ்சியப் பார்த்தாலே தெரியுதே” அப்டீன்னுதான் பதில் வரும்! ஹி ஹி ஹி ஹி ஹி உடனே இந்த இடத்தில், அப்பாவிக் கணவர்களாகிய நீங்கள்
“ இப்ப எதுக்கு அவங்கள பத்தி தப்பா பேசுறே” அப்டீன்னு கேட்டுத் தொலைச்சுடாதீங்க! உடனே,
“ ஆமா, நா எது பேசினாலும் இவருக்கு தப்பாத்தான் தெரியுது! நானும் கொஞ்ச நாளா நோட் பண்ணிட்டுத்தான் இருக்கேன்! உங்க போக்கே சரியில்ல” அப்டீன்னு விஷயம் வேற பக்கம் டைவர்ட் ஆகிடும்! இத கேட்டு உங்களுக்கு செம அதிர்ச்சியாவும், கடுப்பாகவும் இருக்கும்! ஆனா என்ன பண்ண முடியும்? “ ஆணாகப் பொறந்து தொலைச்சுட்டோமே” அப்டீன்னு நெனைச்சுக்கிட்டு பேசாம கம்முன்னு கெடக்கணும்!
மறுபடியும் சொல்றேன்! பல விஷயங்கள மனசுக்குள்ளாரதான் நினைக்கணுமே தவிர, வாயத்தொறந்து வெளியே கொட்டக் கூடாது! :-)))
07. அப்புறம் பள்ளிக்கால நினைவுகள், பழைய கதைகள் பேசிட்டு இருக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்! அவங்க பள்ளிக்கால நினைவுகள் பத்தி பேசும் போது, “ தெரியுமா என்னோட சயன்ஸ் மாஸ்டர் ரொம்ப கெட்டிக்காரர்! பிசிக்ஸ் மாஸ்டர் ரொம்ப ஜாலியா பேசுவாரு! மேத்ஸ் மாஸ்டர் ரொம்ப நல்லா ஜோக் அடிப்பாரு” அப்டீன்னு மாஸ்டர்கள் பத்தியே பேசிட்டு இருப்பாய்ங்க!
“ ஏண்டி, உன்னோட கிளாஸ்ல டீச்சர்களே கெடையாதா? பூரா ஆம்பளை மாஸ்டர்களா?’ அப்டீன்னு உங்களுக்குக் கேட்கத் தோணும்! ஆனா நான்தான் சொன்னேனே வாயே தொறக்க கூடாதுன்னு! :-))))
ஆனா இதுல நிஜமான ஒரு விஷயம் இருக்கு! - இந்தமாதிரி உங்க மனைவி, தன்னோட வாழ்க்கைல சந்திச்ச ஆண்கள் பத்தி வெளிப்படையாவும், சிலாகிச்சும் பேசுறான்னா, அவ உங்கள 100 வீதம் நம்புறான்னு அர்த்தம்! அதுமட்டும் இல்ல அவங்க மனசுல துளியளவுகூட வஞ்சகமோ, கெட்ட எண்ணங்களோ இல்லைன்னும் அர்த்தம்!
ஆனா உங்க மேல நம்பிக்கை கெட்டுடுச்சுன்னா, அவ வாழ்க்கைல வாயே தொறக்க மாட்டா! ஸோ, உங்க மனைவி, இந்தமாதிரியெல்லாம் வெளிப்படையாகப் பேசும் போது, உங்களுக்கு எரிச்சலாக இருந்தாலும், பொறுமையா கேட்டுக்கிட்டு இருங்க! மாறாக “ யோ, மூடிக்கிட்டு இரு பார்க்கலாம்! எப்ப பாரு ஆம்பளைங்க பத்தியே பேச்சு” அப்டீன்னு ஒரு வார்த்தை விட்டீங்க, ஜென்மத்துக்கும் அந்த வார்த்தைய உங்களால மீளப் பெறமுடியாது” உங்க மனைவியோட வாய நீங்க அடைச்சா, உங்க வாழ்க்கையே இருண்டு போய்டும்! அவ்ளோதான்!
ஸோ, பெண்களின் மனதினைப் புரிந்துகொண்டு நடப்பதென்பது மிகவும் கடினமானதும், சிக்கலானதுமான விஷயமும் ஆகும்! - இந்தப் புரிந்துகொள்ளும் திறன் இல்லாத ஆம்பளைங்கதான் “ பெண் ஒரு புதிர் என்றும், பெண்ணின் மனசு ஆழம் என்றும்” புலம்பிக்கொண்டு திரிவாய்ங்க! ஆனால் கொஞ்சம் உளவியல் + வாழ்வியல் தெரிஞ்சா, பெண்களைப் புரிந்துகொள்வது சிரமமே அல்ல!
( இதுபத்தி இன்னும் இன்னும் பேசுவோம் )
ஸ்டெப்ளர் க்ளிப் இணைப்பு - ( ஹி ஹி ஹி ஹி எல்லோரும் ஊசி இணைப்புன்னு சொல்றாங்கோ! நான் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு ஸ்டெப்ளர் க்ளிப் இணைப்புன்னு, மாத்தியோசிச்சு வைச்சிருக்கேன்! :-) )
- எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.
மேலே இருக்கும் வாக்கியம் மிகவும் அழகான வாழ்க்கைத் தத்துவமாகும்! ஒரு எடத்துல இருந்திச்சுது! சுடுக்கிட்டு வந்தேன்! - நிச்சயமாக எண்ணங்கள் அழகானால், எல்லாமே அழகுதான்! :-)))))))
நன்றி - http://www.tamilaathi.com/2012/03/blog-post_12.html
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....
இப்ப தான்யா நீ தமிழன், வாழ்க வளமுடன், futureல நீ ரொம்ப பெரியா ஆளா வருவா....
உங்கள் ஆசிகளுடன்
Re: உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....
ஆமாம் பிரசன்னா , பகவதி ...
ராஜா அண்ணா இதில் இருக்கும் உள்குத்தை நான் அறியலாமா
Re: உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....
இரா.பகவதி wrote:இன்னும் பிட் அடிப்பது மறக்கவில்லையா
படிச்சே முடிக்கலா அப்புறம் எப்படி மறக்குறது அதை மறந்துட்டா ஆர்ரிஎர்ஸ் எல்லாம் எப்படி கிளியர் பண்ட்ரது
கவலை படாதே பகவதி .. அரியர் எழுத ஒரு இங்சினியர் பொண்ணு பார்த்துடலாம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....
நான்தான் சொன்னேனே வாயே தொறக்க கூடாதுன்னு! :-)))
பொழுது போக பொது பிரசன்னா இனிமேலாவது வாய திறக்கலாமா..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....
இதெல்லாம் நமக்குத் தேவையில்லாதது..
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: உங்கள் மனைவியிடம் நல்லபேர் வாங்குவது எப்படி? பல பேருக்கு உதவுமேனு இந்த பதிவு....
கவலை படாதே பகவதி .. அரியர் எழுத ஒரு இங்சினியர் பொண்ணு பார்த்துடலாம்
அரேயர் எழுதுவதற்கா இல்லை என் தலை எழுத்தை மாற்றி எழுதுவதற்கா உண்மையை சொல்லுங்கள் ,
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தெரியுமா உங்களுக்கு…? அறிவால் இணைவோம்… !
» முட்டை வாங்குவது எப்படி?
» முட்டை வாங்குவது எப்படி?
» பென்சில் வாங்குவது எப்படி????
» எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?
» முட்டை வாங்குவது எப்படி?
» முட்டை வாங்குவது எப்படி?
» பென்சில் வாங்குவது எப்படி????
» எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|